பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | சின்ன பசங்க நாங்க |
Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…
பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
—BGM—
ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு…
வைக்கின்ற முத்தம் எல்லாம்…
கல்வெட்டு போலே நிற்கும்…
கண்ணே நம் காலம் எல்லாம்…
பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம்…
யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்…
ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம்…
வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்…
பெண் : மை விழியோரம் ஐவகை பாணம்…
ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம்…
பெண் : பொன் மாலைப் பொழுதினிலே…
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ…
—BGM—
பெண் : உள்ளத்தின் உண்டியலில்…
உன் ஆசை எண்ணங்களை…
சேமித்து வைத்த கன்னி…
சிந்தித்தாள் உன்னை எண்ணி…
ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க…
சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க…
பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்…
போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்…
ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட…
பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட…
ஆண் : சங்கீத மயக்கத்திலே… ஏ…
பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராஜனே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ…
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
Notes : Mayilaadum Thoppil Manada Song Lyrics in Tamil. This Song from Chinna Pasanga Naanga (1992). Song Lyrics penned by Vaali. மயிலாடும் தோப்பில் பாடல் வரிகள்.