Category Archives: 1993 Movies

1993 Movies

தாய் உண்டு தந்தை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாகோயில் காளை

Thaayundu Thantai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

BGM

ஆண் : பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்…
போட்ட கதையைச் சொல்லவா…
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து…
விட்ட கதையைச் சொல்லவா…

ஆண் : அய்யா ஓர் துன்பம் வந்து…
தெய்வத்திடம் போய் உரைத்தால்…
கை தந்து காக்கும் அல்லவா…

ஆண் : தெய்வமே துன்பம் தந்தால்…
எங்கே சென்று போய் உரைப்போம்…
நல்லோர்க்கு காலம் இல்லையா…

ஆண் : எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே இல்லே…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

BGM

ஆண் : தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை…
மேலும் நான் என்ன சொல்லட்டும்…
யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை…
நேரத்தை என்ன சொல்லட்டும்…

ஆண் : அன்னையின் பாலை உண்டு…
ஆரீராரோ கேட்டதில்லை…
அம்மம்மா என்ன கொடுமை…

ஆண் : திண்ணையில் நான் வளர்ந்தும்…
தெருவில் தர்மம் கேட்கவில்லை…
மேலும் ஏன் இந்தச் சிறுமை…

ஆண் : தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யய்யய்யா…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…


Notes : Thaayundu Thantai Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Ilaiyaraja. தாய் உண்டு தந்தை உண்டு பாடல் வரிகள்.


சோலக் கிளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & எஸ். ஜானகிஇளையராஜாகோயில் காளை

Sola Kiligal Rendu Song Lyrics in Tamil


BGM

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு…
சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

BGM

ஆண் : வத்தாத காள ஒண்ணு…
கட்டி இழுக்க உன்னால ஆகுமா…
எட்டாத காயை எண்ணி…
எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா…

பெண் : நித்தம் நித்தம் சுத்தி வந்து…
நித்திரையைவிட்டேன் அய்யா…
உத்த சனம் யாரும் இல்ல…
உத்தமன தொட்டேன் அய்யா…

ஆண் : அடி ராங்கி ராக்கம்மா…
ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…

ஆண் : வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு…
சொன்னதென்ன வெட்கம் கெட்டு…

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதம்மா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா…

BGM

பெண் : ஊரார சாட்சி வச்சு…
உம் மேல ஆச உண்டாச்சு கேளையா…
பூ வாழை பந்தல் இட்டு…
புத்தாடை கட்டி பூ மால போடையா…

ஆண் : பெண்களுக்கு உள்ள குணம்…
உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல…
ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே…
சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல…

பெண் : அட ராசா ராசையா…
லேசா பேசையா வந்திடையா…

ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதம்மா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா…

பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு…
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு…
ஆண் : சொன்னதென்ன வெட்கம் கெட்டு…

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு…
சுத்தி சுத்தி மகிழுதையா…
கோலக் குயில்கள் ரெண்டு…
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா…


Notes : Sola Kiligal Rendu Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Gangai Amaran. சோலக் கிளிகள் பாடல் வரிகள்.


அதோ அந்த நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஏழை ஜாதி

Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil


பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வருகின்ற நேரம்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : தூது செல்லடி தோழி வான்மதி…
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி…
சேதி சொல்லடி தேனின் நாயகி…
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி…

பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது…
அலை போல மோதும் மனம் தாங்கிடாது…
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே…
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : கூடல் என்பது கூடி வந்தது…
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது…
தேகம் என்பது கோவில் போன்றது…
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது…

பெண் : சுகம் மாலை சூடும்…
தினம் ராகம் பாடும்…
சுவை நாளும் கூடும்…
துயர் யாவும் ஓடும்…

பெண் : காதல் என்ற தேகமே…
ஆளுகின்ற யோகமே…
கலைக் கோயில் தீபம் ஏற்று…
பாடிப் போற்று ஆசை ஊற்று…

குழு : கரம் தொடும் போது…
சுக வரம் தரும் மாது…
இரு கரம் தொடும் போது…
சுக வரம் தரும் பூமாது…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…


Notes : Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. அதோ அந்த நதியோரம் பாடல் வரிகள்.


காதல் என்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மலேசியா வாசுதேவன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

BGM

ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து…
பாட வைத்ததும் ஏனடியோ…
மேடையிலே பாட வந்தால்…
மூடி வைத்ததும் ஏனடியோ…

ஆண் : நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதைதானோ…
அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள்தானோ…
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

BGM

ஆண் : களங்கம் இல்லா மனதினிலே…
காலை வைத்தது யாரடியோ…
கலங்கி நின்ற போதினிலே…
கல்லெறிந்ததும் ஏனடியோ…

ஆண் : அழகாய் அகல் விளக்கை…
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்…
அலை வீசும் சுடர் ஒளியை…
திரை போட்டே மூடி வைத்தார்…

ஆண் : இந்தத் திரை விலகும்…
இன்பக் கதை தொடரும்…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…


Notes : Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. காதல் என்னும் பாடல் வரிகள்.


அந்த வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராசிற்பிகோகுலம்

Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…

பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM

பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…

பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…

பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…

BGM


Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.


வான்மதியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅரண்மனை கிளி

Vanmathiye Song Lyrics in Tamil


பெண் : வான்மதியே வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

பெண் : மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…

பெண் : காதலன் வாசல் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : வைகை வந்து கை அணைக்க…
வெள்ளி அலை மெய் அணைக்க…
வாடி நின்ற தென் மதுரை நான்தானோ…

பெண் : தென்றலுக்கு ஆசை இல்லை…
தேம்பிடுதே வாச முல்லை…
அம்மம்மா அன்புத் தொல்லை ஏன்தானோ…

பெண் : வண்ணப்பூவும் என்னைக் கண்டு…
வாய் இதழை மூடிக் கொண்டு…
புன்னகைக்க மாட்டேன் என்று போராடுது…

பெண் : அந்தி மாலை வரும் நோய் கொண்டு…
தன்னந்தனி நான் என்று…
பாவை நிதம் வாடும் விதம் பாராய்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே கொட்டி வைத்து…
நித்தம் நித்தம் நான் அளக்கும்…
என்னுடைய ஆசைகளை கூறாயோ…

பெண் : உன்னைப்போல நானும் மெல்ல…
தேய்வதிங்கு நியாயம் அல்ல…
வெண்ணிலவே தூது செல்ல வாராயோ…

பெண் : எத்தனையோ சொல்லி வைத்தேன்…
எண்ணங்களை அள்ளிவிட்டேன்…
இன்னும் அந்த மன்னன் மனம் மாறாதது ஏன்…

பெண் : உயிர்க் காதல் துணை வராமல்…
கண்ணை இமை சேராமல்…
பாவை நித்தம் வாடும் விதம் பாராய்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…

பெண் : மாளிகை பொன் மாடம்…
மல்லிகை பூ மஞ்சம்…
யாவுமே இந்நேரம்…
ஏற்குமோ என் நெஞ்சம்…

பெண் : காதலன் வாசல் வர வேண்டும்…
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்…

பெண் : வான்மதியே ஓ வான்மதியே…
தூது செல்லு வான்மதியே…


Notes : Vanmathiye Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. வான்மதியே பாடல் வரிகள்.


எங்கிருந்தோ என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஐ லவ் இந்தியா

Engiruntho Ennai Azhaithathu Song Lyrics in Tamil


BGM

பெண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

பெண் : என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…

BGM

பெண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
என தேவன் தழுவிடவே…
இந்த ஜீவன் தவித்திடவே…

பெண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம் தானா…

BGM

பெண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

BGM

ஆண் : சில்லென்று தென்றல் ஒன்று…
என்னோடு ஒட்டிக்கொண்டு…
பொன்னூஞ்சல் ஆடாதோ… ஓஓ…

ஆண் : மின்சார மின்னல் ஒன்று…
மேலோடு கீழும் இன்று…
சொல்லாமல் பாயோதோ… ஓஓ…

குழு : தண்ணீரிலே…
பெண் : செம்மீனும் ஆடுகின்ற சந்தோஷமோ…
குழு : உல்லாசமே…
பெண் : உண்டாக கூடுகின்ற சல்லாபமோ…

பெண் : காம்போடு நீ கிள்ள…
காபூலின் திராட்சைகள்…
வந்தாடும் நேரத்தில் வேறென்ன தேவைகள்…

குழு : தேனாற்றில் தாகம் தீர நீராடலாம்…

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : என் மனதில் அன்பை விதைத்ததென்ன…
உந்தன் மோகம்தானா…

BGM

ஆண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…

ஆண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

BGM

பெண் : வற்றாத கங்கை நதி…
போல் இந்த மங்கை நதி…
உன் மீது சாய்ந்தாட… ஆஆ…

பெண் : இன்னேரம் நானும் தொட…
பொன்மேனி நீயும் தொட…
நாணங்கள் தான் ஓட… ஆஆ…

ஆண் : உல்லாடியே உற்சாகம் ஊற்றெடுக்கும் நன்னாளிது…
செம்மாங்குயில் பெண்ணாகி பாட்டெடுக்கும் பொன்னாளிது…

பெண் : செவ்வானம் எங்கேயும் என்னென்ன கோலங்கள்…
பொன்மாலை வெயில்தான் செய்கின்ற ஜாலங்கள்…
குழு : போவோமா கல்யாண ஊர்கோலம்தான்…

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : என் மனதில் அன்பை விதைத்தென்ன…
உந்தன் மோகம்தானா…

BGM

ஆண் : அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…
அடிமானே மரகதமே…
மலைத்தேனே திரவியமே…

ஆண் : தொலைவினில் எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
உந்தன் கானம்தானா…

BGM

ஆண் : எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன…
அழைத்ததென்ன…

BGM


Notes : Engiruntho Ennai Azhaithathu Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. எங்கிருந்தோ என்னை பாடல் வரிகள்.


அன்ப சுமந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபொன்னுமணி

Anba Sumanthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

BGM

ஆண் : வான் மழையில் தான் நனைந்தால்…
பால் நிலவும் கரைந்திடுமா…
தீயினிலே நீயிருந்தால் நிலவொளிதான்…
சுகம் தருமா…

ஆண் : மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே…

BGM

ஆண் : அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

BGM

ஆண் : நீ அரைச்ச சந்தனமே…
வாசனைதான் மாறலையே…
நேசமென்னும் கோட்டையிலே…
காவல் இன்னும் தீரலையே…

ஆண் : பேசாமல் போனதென்ன பாச புறா விண்ணிலே…

BGM

ஆண் : வீசாமல் வீசும் இங்கே பாசப்புயல் மண்ணிலே…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…
அல்லும் பகலும் நினைந்து…
இன்பம் சுமக்க வைத்த மாமா…
என்னை தவிக்க விடலாமா…
என்னை தவிக்க விடலாமா…

ஆண் : அன்ப சுமந்து சுமந்து…


Notes : Anba Sumanthu Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. அன்ப சுமந்து பாடல் வரிகள்.


மானூத்து மந்தையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Maanooththu Manthaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு…
நாக்கு சொட்ட சமைச்சு…
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா…

BGM

குழு : மேலு காலு வலிச்சா…
வெள்ளப்பூண்டு உரிச்சி…
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா…

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு…
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு…
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு…
குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்…

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு…
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்…

குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு…
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… ஐயோ…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…
ஆண் : ஹோய்…
குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… போடு…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…


Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையில பாடல் வரிகள்.


அடி ஆடிவரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஐ லவ் இந்தியா

Adi Aadivarum Pallaakku Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

BGM

பெண் : பாட்டுச்சந்தம் எங்கேயும் என்னானந்தம்…
தன தம்தம் தன தம்தம்…
நெஞ்சில் நித்தம் தித்திக்கும் பஞ்சாமிர்தம்…
அமிர்தம் தம் தம் அமிர்தம் தம் தம்…

பெண் : எட்டு திக்கும் எட்டும் இந்த நாதம்…
எண்ணம் எல்லாம் நாளும் பாடும் கீதம்…
நீர் கொண்ட மேகம் பூத்தூவும் நேரம்…
ஓர் ஆனந்தம் அம்மம்மா என் சொல்ல…

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

BGM

பெண் : வெள்ளி அலை துள்ளி எழுந்திட பாரு…
பனி ஆறு பனி ஆறு…
நெஞ்சை அள்ளுவதை கட்டுப்படுத்துவது யாரு…
இங்கு யாரு இங்கு யாரு…

பெண் : உன்னை என்னை கேட்டா பூக்கள் பூக்கும்…
மண்ணில் நின்று கண்கள் தன்னை ஈர்க்கும்…
நிலமோடு நீரும் நீரோடு சோறும்…
யார் தந்தது சொல்லடி பைங்கிளி…

பெண் : அடி ஆடிவரும் பல்லாக்கு…
இது சாமி வரும் தேரு…
நம்ம ஆதிசனம் எல்லார்க்கும்…
அருள் கூடிவரும் பாரு…

பெண் : சஞ்சலம் சஞ்சலம்…
ஓடட்டும் ஓடட்டும்…
நெஞ்சிலும் நெஞ்சிலும்…
நிம்மதி வந்தே கைகூடும்…

BGM

குழு : ஐ லவ் இந்தியா…
ஐ லவ் இந்தியா…
ஐ லவ் இந்தியா…
ஐ லவ் லவ் லவ் இந்தியா…

BGM


Notes : Adi Aadivarum Pallaakku Song Lyrics in Tamil. This Song from I Love India (1993). Song Lyrics penned by Vaali. அடி ஆடிவரும் பாடல் வரிகள்.