பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | கே.எஸ். சித்ரா | சிற்பி | கோகுலம் |
Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
—BGM—
பெண் : சோலை பூக்கள் மாலை ஆகும் நேரம்…
நான் போகும் பாதை யாவும் ஆகும் பிருந்தாவனம்…
வாழும் தனிமை காலம் விலகி போகும்…
இனி ஆசை கிளிகள் கூடும் இன்ப சரணாலயம்…
பெண் : வார்த்தைகள் கொடி ஏற்றுமே…
வான் நிலா முடி சூட்டுமே…
நான் பாடும் பாடல் கீதை போல வாழுமே…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
—BGM—
பெண் : தானத் தந்தன தாளம் தந்தது தென்றல்…
அதை கேட்டு மூங்கில் ஆனதிங்கு புல்லாங்குழல்…
வீசும் மல்லிகை வாசம் தந்தது கீதம்…
அதை பாடும் போது நெஞ்சம் தேடும் சிறகாயிரம்…
பெண் : ஆடிடும் வெறும் காகிதம்…
ஆகுமே ஒரு காவியம்…
ஒளி மின்னல் வந்து தோரணங்கள் சூடிடும்…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
பெண் : விளக்கேற்றுதே கவி ராத்திரி…
மனம் ஓடுதே நதி மாதிரி…
சுக சந்தம் அள்ளி தந்ததிந்த பூங்கொடி…
பெண் : அந்த வானம் எந்தன் கையில் வந்து சேரும்…
புது சொர்க்கம் ஒன்று லாலி சொல்லி பாடும்…
—BGM—
Notes : Andha Vaanam Enthan Kaiyil Song Lyrics in Tamil. This Song from Gokulam (1993). Song Lyrics penned by Pazhani Bharathi. அந்த வானம் பாடல் வரிகள்.