Tag Archives: மதுஸ்ரீ

Kacheri Kacheri Song Lyrics in Tamil

கச்சேரி கச்சேரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமுகேஷ் முகமது & மதுஸ்ரீடி. இமான்கச்சேரி ஆரம்பம்

Kacheri Kacheri Song Lyrics in Tamil


BGM

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

பெண் : ஹோ… கரும்பு உடம்பும்…
ருசிக்கும் எறும்பு…
அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா…
உடம்ப கவ்வுறியே கரண்டா…
இது சரியா தப்பா…
மது போல மப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

BGM

ஆண் : உன் நடக்காட்டி…
என்ன தலையாட்டி…
பொம்மைப் போல மாத்திப்புட்ட…

பெண் : நீ பலவாட்டி…
ஒரு படம் காட்டி…
என் உசுற வாங்கிப்புட்ட…

ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி…
ரசிக்க வாயேன்டி…

பெண் : நொறுக்குத்தீனி உன் மீச…
கடிக்கத்தாயேன்னா…

ஆண் : ஏ… கஞ்சாச்செடி உடம்பழகி…
கஞ்சமான இடையழகி…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடா…

BGM

பெண் : உன் முகம் பார்த்து…
அட குளிர்க்காத்து…
தினம் சூடா மாறுதடா…

ஆண் : உன் நகம் பார்த்து…
நான் தல வாற…
அடி ஊரே கூடுதடி…

பெண் : தெருவில் நடந்து நீ போனா…
ஜன்னல் வெட்கப்படும்…

ஆண் : கோலம் போட நீ போனா…
புள்ளி ஜொல்லுவிடும்…

பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா…
பஞ்சமில்லா கொழுப்பழகா…

ஆண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா…
உடம்ப கவ்வுறியே கரண்டா…
இது சரியா தப்பா…
மது போல மப்பா…

குழு : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…
அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

BGM


Notes : Kacheri Kacheri Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Viveka. கச்சேரி கச்சேரி பாடல் வரிகள்.


வாஜி வாஜி சிவாஜி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Vaaji Vaaji Sivaji Song Lyrics in Tamil


குழு : ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…
ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…

ஆண் : பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்…
புன்னகையோ மவ்வல் மவ்வல்…

ஆண் : உன் பூவிழிப் பார்வை போதுமடி…
என் பூங்கா இலைகளும் மலருமடி…
உன் கால்கொலுசொலிகள் போதுமடி…
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

பெண் : அன்பா வாளை எடு…
அழகை சாணையிடு…
உன்ஆண் வாசனை…
என் மேனியில் நீ பூசிவிடு…

ஆண் : அடி நெட்டை நிலவே…
ரெட்டைத் திமிரே…
நெஞ்சில் முட்டிக் கொல்லு…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : பூம்பாவாய்…
குழு : ஆம்பல் ஆம்பல்…
ஆண் : புன்னகையோ…
குழு : மவ்வல் மவ்வல்…

BGM

ஆண் : ஒரு வெண்ணிலவை…
மணக்கும் மன்மதன் நான்…
என் தேன்நிலவே…
ஒரு நிலவுடன்தான்…
அவள் யாருமில்லை…
இதோ இதோ இவள்தான்…

பெண் : புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
ஆஆஹா… புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா…
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா…

ஆண் : ஓ… பெண்களிடம் சொல்வது குறைவு…
செய்வது அதிகம்…
செயல்புயல் நானடி…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : பூம்பாவாய்…
குழு : ஆம்பல் ஆம்பல்…
ஆண் : புன்னகையோ…
குழு : மவ்வல் மவ்வல்…

BGM

ஆண் : பொன் வாக்கியமே… வாய் வாத்தியமே…
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்…
வந்து ஒளிந்து கொண்டேன்…
சுகம் சுகம் கண்டேன்…

பெண் : ஆனந்த வெறியில் நான்…
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்…
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி…
வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன்…

ஆண் : அடடா குமரியின் வளங்கள்…
குழந்தையின் சிணுங்கல்…
முரண்பாட்டு மூட்டை நீ…

பெண் : வாஜி வா வா வா…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : ஓ… பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்…
புன்னகையோ மவ்வல் மவ்வல்…

ஆண் : உன் பூவிழிப் பார்வை போதுமடி…
என் பூங்கா இலைகளும் மலருமடி…
உன் கால்கொலுசொலிகள் போதுமடி…
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி…

குழு : ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…
ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…


Notes : Vaaji Vaaji Sivaji Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Vairamuthu. வாஜி வாஜி சிவாஜி பாடல் வரிகள்.


பிடிக்கும் உன்னை பிடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாஆழ்வார்

Pidikkum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

BGM

பெண் : அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்…
அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்…
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்…
அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

BGM

பெண் : காபுல் திராட்சை போன்ற…
கண்கள் பிடிக்கும்…
காஷ்மீர் ஆப்பிள் போன்ற…
கன்னம் பிடிக்கும்…

பெண் : ரோஜாப்பூ போன்ற…
உன் தேகத்தை பிடிக்கும்…
ரேஸ் காரைப் போன்ற…
உன் வேகத்தை பிடிக்கும்

பெண் : தந்தம் போல் இருக்கும்…
உன் தோளை பிடிக்கும்…
தங்கம் போல் மின்னிடும்…
பொன் மார்பை பிடிக்கும்…

பெண் : உன்னோட பார்வை…
ஒவ்வொன்றும் பிடிக்கும்…
உன்னோட வார்த்தைகள்…
எல்லாமே பிடிக்கும்…

BGM

பெண் : சின்ன பிள்ளை போன்ற…
உள்ளம் பிடிக்கும்…
நீ கொஞ்சும் போது சொல்லும்…
பொய்கள் பிடிக்கும்…

பெண் : அன்றாடம் நீ செய்யும்…
இம்சைகள் பிடிக்கும்…
அங்கங்கே நீ வைக்கும்…
இச்சுக்கள் பிடிக்கும்…

பெண் : கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும்…
காயங்கள் சொல்லிடும்…
வேதங்கள் பிடிக்கும்…

பெண் : அப்பப்ப நேரும்…
ஊடல்கள் பிடிக்கும்…
ஊடல்கள் திறந்ததும்…
கூடல்கள் பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்…
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்…

BGM


Notes : Pidikkum Song Lyrics in Tamil. This Song from Aalwar (2007). Song Lyrics penned by Vaali. பிடிக்கும் உன்னை பிடிக்கும் பாடல் வரிகள்.


பேருந்தில் நீ எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ & தினாதினாபொறி

Perunthil Nee Enakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல்இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஹ்ம்ம்… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : பயணத்தில் வருகிற சிறு தூக்கம்…
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்…

பெண் : பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை…
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை…

ஆண் : புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை…
அன்பே அன்பே நீதானே…
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
தினமும் காலையில் எனது வாசலில்…
இருக்கும் நாளிதழ் நீதானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : தாய் மடி தருகிற அரவணைப்பு…
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு…

பெண் : தேய் பிறை போல்…
வரும் நக கணுக்கள்…
வகுப்பறை மேஜையில்…
இடும் கிறுக்கல்…

ஆண் : செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்…
அன்பே அன்பே நீதானே…
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்… எழுதும் கவிதையில்…
எழுத்து பிழைகளை…
ரசிக்கும் வாசகன் நீ தானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஆஆ ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல் இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—


Notes : Perunthil Nee Enakku Song Lyrics in Tamil. This Song from Pori (2007). Song Lyrics penned by Yugabharathi. பேருந்தில் நீ எனக்கு பாடல் வரிகள்.


சண்ட கோழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்ஆய்த எழுத்து

Sandai Kozhi Song Lyrics in Tamil


பெண் : ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா…
ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா…
ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா…
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்குமா…
ஹுமா ஹங்குமா ஹுமகும்…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : கைய வச்சா நெஞ்சுக்குள்ளே…
கையா முயா…
நீ ரெண்டு மொழதுல பாய போடயா…
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா…
ரெண்டு மொழதுல பாய போடயா…
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா…

பெண் : கொஞ்ச நேரம் என்ன கொல்லையா…
ஐயா ஆஅ…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…
ஐயா யா…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…

BGM

பெண் : வாங்கி போட்டேன் வெத்தலை…
செவக்கள சாமி…
வாயி முத்தம் குடுத்தா…
செவந்திடும் சாமி…
சொர்க்கபுரம் போவோணும்…
நல்ல வழி காமி…

பெண் : ஓ… ஒட்டுக்கின்னு மேனி…
தொடங்கட்டும் உறவு…
வட்டி கட போலே…
வளரட்டும் வயிறு…

பெண் : கொஞ்ச நேரம் என்ன கொல்லையா…
ஐயா ஆஅ…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : சண்ட கோழி கோழி…
இவ சண்ட கோழி…
கொஞ்சம் தடவு தடவு…
இவ சொந்த கோழியா…

பெண் : கைய வெச்சா நெஞ்சுக்குள்ளே…
கையா முயா…

BGM

பெண் : மச்சு வீடு வேணாம்…
மெட்டு கட்டு போதும்…
மெத்த ஏதும் வேண்டாம்…
ஒத்த பாயி போதும்…

பெண் : மூக்குத்தியின் பொன் கீத்து…
ராத்திரிக்கு போதும்…
ஓ… சைவ முத்தம் கொடுத்தா…
ஒத்து போகமாட்டேன்…
சாகசத்த காட்டு…
செத்து போகமாட்டேன்…

பெண் : கொஞ்ச நேரம் என்ன கொல்லையா…
ஐயா… ஆஅ…
கொஞ்சம் நேரம் என்ன கொல்லையா…

பெண் : ஹும்குமா ஹுமா ஹும்குமா ஹுமா…
ஹங்குமா ஹும்குமா ஹும்குமா ஹுமா…
ஹும்குமா ஹுமா ஹங்குமா ஹும்குமா…
ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்…


Notes : Sandai Kozhi Song Lyrics in Tamil. This Song from Aayutha Ezhuthu (2004). Song Lyrics penned by Vairamuthu. சண்ட கோழி பாடல் வரிகள்.


 எப்போ நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்மதுஸ்ரீஜி. வி. பிரகாஷ் குமார்காளை

Eppo Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…

BGM

பெண் : எப்போ நீ என்னை பாப்ப…
எப்போ என் பேச்ச கேப்ப…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : எப்போடா கோவம் கொறையும்…
எப்போடா பாசம் தெரியும்…
எப்போ நான் பேச கெட்ட பையா…

பெண் : நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்…
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்…
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன்…
உன் செயலை எல்லாம் தூரம் நின்று பாராட்டுறேன்…
என்னை ஒரு முறை நீயும் திரும்பி பார்ப்பாயா…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

BGM

பெண் : கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால்…
காலம் முழுவதும் வருவேனே…
உந்தன் பாதையில் பயம் இல்லை… நீ வா…

பெண் : மலையை சுமக்கிற பலம் உனக்கு…
மலரை ரசிக்கிற மனம் உனக்கு…
இனிமேல் எப்போதும் நீ எனக்கு… நீ வா…

பெண் : உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா…
உன் கோபம் கூட நியாயம் என்று ரசிதேனேடா…

பெண் : நீ தீயாய் இரு…
எனை திரியாய் தொடு…
நான் ஒளி பெற்றே வாழ்வேனடா…

பெண் : அட என்னை தவிர எல்லா பெயரும் ஆனை ஆனாலும்…
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் என்ன ஆனாலும்…
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா…

பெண் : எரிமலை கண்கள் ரெண்டு…
பனிமழை இதயம் ஒன்று…
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா…

பெண் : பூமியில் ஆம்பளை என்று…
உன்னைதான் சொல்வேன் இன்று…
வேறென்ன சொல்ல கெட்ட பையா…

பெண் : உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்…
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்…
இந்த பூமி பந்தை தாண்டிப் போக முடியாதுடா…
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா…
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

பெண் : ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ…
ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ…

BGM


Notes : Eppo Nee Song Lyrics in Tamil. This Song from Kaalai (2008). Song Lyrics penned by Snehan.  எப்போ நீ பாடல் வரிகள்.


கள்ளூறும் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிசரத் சந்தோஷ் & மதுஸ்ரீவிஜய் ஆண்டனிபிச்சைக்காரன் 2

Kalloorum Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : கள் ஊறும் பூவே…
கள்ளூறும் பூவே…
முந்தானை தீவில்…
சிறிதாய் இடம் கொடு…

பெண் : சொல்லூறும் நாவே…
சொல்லூறும் நாவே…
முந்தானை தீவில்…
மெதுவாய் நுழைந்திடு…

ஆண் : கால் கொண்ட பேயோ…
நீ காமன் சிலையோ…

பெண் : நீ வந்த நேரம்…
என் காட்டில் மழையோ…

BGM

ஆண் : கள் ஊறும் பூவே…
கள்ளூறும் பூவே…
முந்தானை தீவில்…
சிறிதாய் இடம் கொடு…

BGM

ஆண் : உன்னைப் பார்த்து சூடானவன்…
உன் பேரைக் கேட்டு மூடானவன்…
ஆடைப் போரில் தோற்பான் இவன்…
உன்னால் இனி செத்தான் இவன்…

பெண் : தேவை எல்லாம் தீர்ப்பான் இவன்…
என்னை தூக்கும் தேர்தான் இவன்…
என் கண்ணால் கைதானவன்…
செத்தான் இவன் செத்தான் இவன்…

ஆண் : என்னுள்ளே வேதாளம்…
ஏக்கங்கள் ஏராளம்…

பெண் : ஆசைகள் தீரட்டும்…
வெட்கங்கள் துணை போகட்டும்…

BGM

ஆண் : கள் ஊறும் பூவே…
கள்ளூறும் பூவே…
முந்தானை தீவில்…
சிறிதாய் இடம் கொடு…


Notes : Kalloorum Poove Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran 2 (2023). Song Lyrics penned by Arun Bharathi. கள்ளூறும் பூவே பாடல் வரிகள்.


உன் பேரே தொியாது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மதுஸ்ரீசி. சத்யாஎங்கேயும் எப்போதும்

Un Perae Theriyathu Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…

பெண் : அந்த பேரை அறியாது…
அட யாரும் இங்கேது…
அதை ஒருமுறை சொன்னாலே…
தூக்கம் வாராது…

பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி…
உன்னை கொஞ்சுவேன்…
நான் அடங்காத அன்பாலே…
உன்னை மிஞ்சுவேன்…

BGM

பெண் : ஹோ… சூடான பேரும் அதுதான்…
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்…
சூாியனை நீயும் நினைத்தால்…
அது இல்லையே…

பெண் : ஹோ… ஜில்லென்ற பேரும் அதுதான்…
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்…
நதியென்று நீயும் நினைத்தால்…
அது இல்லையே…

பெண் : சிலிா்க்கவைக்கும் தெய்வமில்லை…
மிரளவைக்கும் மிருகம் இல்லை…
ஒளிவட்டம் தொிந்தாலும்…
அது பட்டப்போில்லை…
என் போின் பின்னால் வரும் போ்…
நான் சொல்லவா…

BGM

பெண் : பொிதான பேரும் அதுதான்…
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்…
எத்தனை எழுத்துக்கள் என்றால்…
விடையில்லையே…

பெண் : சிறிதான பேரும் அதுதான்…
சட்டென்று முடிந்தே போகும்…
எப்படி சொல்வேன் நானும்…
மொழி இல்லையே…

பெண் : சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்…
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்…
அது சுத்த தமிழ் போ்தான்…
அயல் வாா்த்தை அதில் இல்லை…
என் போின் பின்னால் வரும் போ்…
நான் சொல்லவா…

BGM

பெண் : உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…

பெண் : அந்த பேரை அறியாது…
அட யாரும் இங்கேது…
அதை ஒருமுறை சொன்னாலே…
தூக்கம் வாராது…

பெண் : அட தினம்தோறும் அதை சொல்லி…
உன்னை கொஞ்சுவேன்…
நான் அடங்காத அன்பாலே…
உன்னை மிஞ்சுவேன்…


Notes : Un Perae Theriyathu Song Lyrics in Tamil. This Song from Engaeyum Eppothum (2011). Song Lyrics penned by Na. Muthukumar. உன் பேரே தொியாது பாடல் வரிகள்.


மல்லிப்பூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைமதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்வெந்து தணிந்தது காடு

Mallipoo Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

பெண் : மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்து தல பாம்பா வந்து முத்தம் தர போற…

பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்…
தினம் சொப்பனத்தில் மட்டும்தான்…
உன்ன நான் சந்தித்தேன்…

பெண் : ஹேய் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
பத்தமடை பாயில் வந்து சொக்கி விழ போற…

BGM

பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்…
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்…
சோலி தேடி போன காணாத தூரம்…
கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்…

பெண் : காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்…
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்…

BGM

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…

பெண் : மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…

குழு (ஆண்கள்) : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா…
முத்தம் தர போற போற போற…
பத்து தல பாம்பா…
ஒய்… முத்தம் தர போற மச்சான்…

குழு (ஆண்கள்) : ஹே… மச்சான் மச்சான் மச்சான்…
மச்சான் மச்சான் மச்சான்…
மச்சான் எப்போ போக போற…

குழு (ஆண்கள்) : மச்சான் எப்போ போக போற…
மச்சான் எப்போ எப்போ…
மச்சான் எப்போ போக போற…

பெண் : தூரமா போனது துக்கமா மாறும்…
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்…
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்…
கோழி கூவும் போதும் தூங்காம வேகும்…

பெண் : அங்கு நீயும் இங்கு நானும்…
என்ன வாழ்க்கையோ…
போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும்…

பெண் : ஹேய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே…
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
உத்தரத்த பாத்தே நானும் விக்கி விடப்போறேன்…

பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது…
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே…
துணி காயுதே…

பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்…
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்…
மச்சான் எப்போ வர போற…
மச்சான் எப்போ வர போற…
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப்போற…


Notes : Mallipoo Song Lyrics in Tamil. This Song from Vendhu Thanindhathu Kaadu (2022). Song Lyrics penned by Thamarai. மல்லிப்பூ பாடல் வரிகள்.


கண்ணன் வரும் வேளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமதுஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Kannan Varum Velai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை…
ஆடி தோற்பது…
தைமாசம் கொள்ளும் ஆசை…
கூடிப் பார்ப்பது…

பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை…
வீதி சோ்வது…
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை…
தீயில் வாழ்வது…

பெண் : கூறவா இங்கு எனது ஆசையை…
தோழனே வந்து உளறு வீதியை…
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே…
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே…
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே…
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே…

பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே…
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே…
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…


Notes : Kannan Varum Velai Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Yugabharathi. கண்ணன் வரும் வேளை பாடல் வரிகள்.