கண்ணன் வரும் வேளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமதுஸ்ரீயுவன் ஷங்கர் ராஜாதீபாவளி

Kannan Varum Velai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை…
ஆடி தோற்பது…
தைமாசம் கொள்ளும் ஆசை…
கூடிப் பார்ப்பது…

பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை…
வீதி சோ்வது…
ஓா் ஈசல் கொள்ளும் ஆசை…
தீயில் வாழ்வது…

பெண் : கூறவா இங்கு எனது ஆசையை…
தோழனே வந்து உளறு வீதியை…
கோடிக் கோடி ஆசை தீரும் மாலை…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

BGM

பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே…
ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே…
தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே…
வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே…

பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே…
தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே…
நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…

பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள்…
றெக்கை விரிக்கும் ரெண்டு விழிகள்…
கூடுபாயும் குறும்புக்காரன் அவனே…

பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை…
நான் காத்திருந்தேன்…
சின்னச் சின்னத் தயக்கம் செல்ல மயக்கம்…
அதை ஏற்க நின்றேன்…


Notes : Kannan Varum Velai Song Lyrics in Tamil. This Song from Deepavali (2007). Song Lyrics penned by Yugabharathi. கண்ணன் வரும் வேளை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top