Tag Archives: மதுஸ்ரீ

வைகாசி நிலவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்உன்னாலே உன்னாலே

Vaigaasi Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…
என் ஜீவன் வாழும் வரை… ஓ…
என் செய்வாய் நாளும் எனை…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

BGM

ஆண் : தூவானம் என தூரல்கள் விழ…
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே…

பெண் : கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு…
காதல் கைக் கூடட்டும்…

ஆண் : இதோ எனக்காக விரிந்தது இதழ்…
எடுக்கவா தேனே…

பெண் : கனி எதற்காக கனிந்தது…
அணில் கடித்திடதானே…

ஆண் : ஓ… காலம் நேரம் பார்த்துக்கொண்டா…
காற்றும் பூவும் காதல் செய்யும்…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

BGM

ஆண் : நூலாடை என மேலாடை என…
பாலாடை மேனி மீது படரட்டுமா…

பெண் : நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல…
தீண்டி தீவைக்கிறாய்…

ஆண் : அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல்…
அருகினில் உண்டு…

பெண் : அன்னை நெருப்பாக இருக்கையில்…
என்னை தவிப்பது கண்டு…

ஆண் : ஓ மோகத்தீயும் தேகத்தீயும்…
தீர்த்தம் வார்த்து தீராதம்மா…

ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…

பெண் : ஓ… வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…

ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
பெண் : அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…

பெண் : என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…
என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…

BGM


Notes : Vaigaasi Nilave Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. வைகாசி நிலவே பாடல் வரிகள்.


பனி விழும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் ராஜா, மதுஸ்ரீ & பிரேம்ஜி அமரன்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil


ஆண் : பனி விழும் காலம் பூவுக்கு பரவசம்…
இலையுதிர் காலம் துளிருக்கு பரவசம்…
வான் மழை வந்ததால் பூமிக்கு பரவசம்…
நீ நிழல் கண்டதால் என் முகம் பரவசம்…
புதிதாய்…

ஆண் : உனது எனது என்ற பேதம் அழிந்ததே…
எனக்குள் நீயும் வந்து யாதுமாகிறாய்…
புதிதாய்…

BGM

ஆண் : புதிதாய் புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…
மனதில் ஒரு வெளிச்சம் வருகிறதே…
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இரண்டு மனங்கள் இணையுது அழகாய்…
என்ன நடக்குது எல்லாம் நிஜமாய்…
உனது எனது என்பது பொதுவாய்…
உலகம் முழுவதும் நமக்கின்று உறவாய்…

BGM

பெண் : இந்த நெருக்கம் ஒன்று போதும்…
வேர் என்ன வாழ்வில் வேண்டும்…
இந்த நிமிடம் நெஞ்சின் ஓரம்…
நகராமல் உறைய வேண்டும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

BGM

ஆண் : இணைந்து நடக்கும் பாதைகள் நீளும்…
இறுதி வரைக்கும் போய் வர தோன்றும்…
இரண்டு இதயங்கள் எனக்குள் துடிக்கும்…
உறங்கும் போதும் உன் குரல் ஒலிக்கும்…

BGM

பெண் : உந்தன் நிழலில் அருகில் இருந்தால்…
இந்த ஜென்மம் மோட்சம் ஆகும்…
உந்தன் விழியின் வழியில் இருந்தால்…
எந்தன் உடலில் உயிரும் வாழும்…

ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
பெண் : அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…

ஆண் : மெதுவாய் ஒரு வெளிச்சம் வருகிறதே…
பெண் : மனதில் ஒரு மாற்றம் நிகழ்கிறதே…

பெண் & ஆண் : இது எதுவரை எதுவரை ஆயுளில் இறுதி வரை…
இருவரும் ஒருவராய் இருந்திடுவோம்…

ஆண் : புதிதாய் ஒரு மாற்றம் வருகிறதே…
அதனால் ஒரு நேசம் பிறக்கிறதே…


Notes : Pani Vizhum Kaalam Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. பனி விழும் பாடல் வரிகள்.


ரகசிய கனவுகள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்பீமா

Ragasiya Kanavugal Song Lyrics in Tamil


பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

ஆண் : முதல் பிழை போல் மனதினிலே…
விழுந்தது உனதுருவம்…
ஓ… உதடுகளால் உனை படிப்பேன்…
இருந்திடு அரை நிமிடம்…

ஆண் : தொலைவது போல் தொலைவதுதான்…
உலகில் உலகில் புனிதம்…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } (2)

BGM

பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே…
விரல் தொட புருவமும் சிவந்தேனே…
ஓ… இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ…
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ…

ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற…
மரநிழல் போல எனை சூட…
நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு…
எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு…

பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

BGM

ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச…
உனை பேச…
இமை தொடும் நினைவுகள் அனல் வீச…
அனல் வீச…

ஆண் : ஓ… நினைச்சாலே சிவப்பாகும்…
மருதாணித் தோட்டம் நீ…
தலைவைத்து நான் தூங்கும்…
தலகாணி கூச்சம் நீ…

பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே…
நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம்…
ஓ… தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்…

ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல்…
என் இமைகளை கழுவுது சொல் சொல்…
இளமையில் இளமையில் ஜில் ஜில்…
என் இருதயம் நழுவுது செல் செல்…

பெண் : குயிலினமே குயிலினமே…
எனக்கொரு சிறகு கொடு…
முகிலினமே முகிலினமே…
முகவரி எழுதிக் கொடு…
அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு…

{ குழு : இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே…
வந்து தொடு அழகே…
தொட தொட பொழிகிற சுகம் சுகமே…
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே… } * (3)


Notes : Ragasiya Kanavugal Song Lyrics in Tamil. This Song from Bheema (2008). Song Lyrics penned by Yugabharathi. ரகசிய கனவுகள் பாடல் வரிகள்.


வாறேன் வாறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண் & மதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாபுலி வேசம்

Varaen Varaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

ஆண் : ஏ… வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : ஏ… இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

BGM

பெண் : ஏ… உன் பாசம் என் பாசம் எடை போட்டு பாத்தா…
யார் பாசம் அதிகம் சொல்லு…

ஆண் : அட உன் பாசம் என் பாசம் தாய்ப்பாசம் போல…
ஒன்னாக நிக்கும் பாரேன்…

பெண் : ஏய்… செமீனை பொன் மீனை கர்மீனை நன்றாக்க…
எந்த மீனை நீ தர்ற…

ஆண் : முள் ஏதும் இல்லாத மண் மீதும் சாகாத…
விண்மீனை நான் கொடுப்பேன்…

பெண் : ஏய்… சொந்தபந்தம் ஒண்ணும் இல்ல…
சொத்துசுகம் தேவையில்லை…
உன்னை பார்த்தால் போதும் போதும்…

ஆண் : ஏய்… ரத்தபந்தம் நீயும் இல்லை…
உன் போல் சொந்தம் யாரும் இல்லை…
வேற என்ன வேணும் வேணும்…

பெண் : உன் முரட்டு அன்பில மிதந்து நிக்கிற பாசகாரிதான்…
ஆண் : உன் விரல் சொடுக்கில பரபரக்கிற வெள்ளைக்காறன் நான்…

பெண் : இரு இரு…
ஆண் : வாறேன் வாறேன்…
பெண் : என் கூட இரு…
ஆண் : உன் கூட வாறேன்…

பெண் : ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

BGM

பெண் : சொல்லமல் கொள்ளாமல் காணாமல் போனா…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : நீ இல்லம உண்ணாம தூங்காம இருப்பேன்…
என்னைத்தேடி நீ வருவ…

பெண் : உன்னை பார்த்தாலும் பார்க்கம பேசாமல் போனால்…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : உன்னை பார்க்கத கண்ணில்லை கேட்க்காத காதில்லை…
நீ இல்லன்னா நானே இல்லை…

பெண் : ஏய்… பாதைல முள்ளிருந்து பாத்தில குத்திப்போட்ட…
என்ன செய்வ என்ன செய்வ…

ஆண் : இந்த பூமி மேல வாழுகிற முள்ளு மரம் எல்லாத்தையும்…
வேரோடதான் வெட்டி சாய்ப்பன்…

பெண் : என் பட படக்கிற துடி துடிக்கிற…
எனக்கு முல்லைதான்…

ஆண் : என் நிழல் நடக்குது நிழல் நடக்குது…
உனக்கு பின்னால…

ஆண் : ஏ வாறேன் வாறேன் உன் கூட வாறேன்…
ஏழு ஜென்மத்துக்கும் என் உசிரதாறேன்…

பெண் : இரு இரு என் கூட இரு …
ஏழு ஜென்மத்துக்கும் உன் அன்பைக்கொடு…

ஆண் : சிரி சிரி சிரி சிரி நீ…
உன் சிரிப்புக்கு அடிமை நீ…
ச ரி க ம ப த நி ச நீ…
என் பாட்டுக்கு சங்கதி நீ…

பெண் : ஏ… முனி முனி முனி முனியா…
உன் வார்த்தைகள் நெல் மணியா…
அதை கேட்டதும் பொடிபொடியாய்…
பசி குறையுது இப்படியாய்…

ஆண் : உன் பாதம்பட்ட மண்ணைக்கூட…
பாடல் வைக்கபோறன்…
உன் பார்வைபட்ட கல்லைக்கூட…
கும்பிடுதான் போறேன்…

BGM


Notes : Varaen Varaen Song Lyrics in Tamil. This Song from Puli Vesham (2011). Song Lyrics penned by Na. Muthukumar. வாறேன் வாறேன் பாடல் வரிகள்.


இவன் யாரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்மதுஸ்ரீசி. சத்யாநெடுஞ்சாலை

Ivan Yaaro Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…
இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை…

பெண் : கண்களே உண்மையா காக்கைதான் வெண்மையா…
நெஞ்சிலே அன்மையா நெருங்கினாய் நன்மையா…

பெண் : இவன் நீ இவன்தான் யாரோ…
இளநீரோ இவன் என் ஹீரோ…

பெண் : இவன் யாரோ இவன்தான் யாரோ புரியவில்லை…
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை…

BGM

பெண் : இவன் யாரோ இவன் யாரோ புரியவில்லை புரியவில்லை…
எதற்காக எதற்காக தெரியவில்லை…

BGM

பெண் : கண் தூங்கும் நேரம் இங்கு அறிந்தவர் யார்…
காதல் வந்த கனத்தை கனிபவர் யார்…
ஐயையோ இது தான் காதலம்மா…
என்றாலே விபத்தாய் நடக்கும்மா…


Notes : Ivan Yaaro Song Lyrics in Tamil. This Song from Nedunchalai (2014). Song Lyrics penned by Mani Amuthavan. இவன் யாரோ பாடல் வரிகள்.


நான் வரைந்து வைத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜெயம் கொண்டான்

Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
குழு : ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…
குழு : மலருகின்றதே…

BGM

ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…

பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…

ஆண் : ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு…
வெள்ளி கம்பி என்று ஆகியதே…

பெண் : கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு…
தங்க சிற்பமென்று மாறியதே…

ஆண் : பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக…
பெண் : நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக…

ஆண் : தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்…
என்னில் என் கால்களில்…

பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…

BGM

ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட் வில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…

ஆண் : பள்ளி செல்லவில்லை பாடம் கேட்கவில்லை…
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்…

பெண் : நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை…
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்…

ஆண் : ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்…
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்…

ஆண் : நொடியும் விலகாமல் கொஞ்சும்…
கொஞ்ச தங்கும் நெஞ்சே…

பெண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
ஆண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…

பெண் : நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே…
ஆண் : என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே…
பெண் : நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே…

ஆண் : நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே…
பெண் : நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே…


Notes : Naan Varaindhu Vaitha Song Lyrics in Tamil. This Song from Jayam Kondaan (2008). Song Lyrics penned by Yugabharathi. நான் வரைந்து வைத்த பாடல் வரிகள்.


Kacheri Kacheri Song Lyrics in Tamil

கச்சேரி கச்சேரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாமுகேஷ் முகமது & மதுஸ்ரீடி. இமான்கச்சேரி ஆரம்பம்

Kacheri Kacheri Song Lyrics in Tamil


BGM

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

பெண் : ஹோ… கரும்பு உடம்பும்…
ருசிக்கும் எறும்பு…
அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா…
உடம்ப கவ்வுறியே கரண்டா…
இது சரியா தப்பா…
மது போல மப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

BGM

ஆண் : உன் நடக்காட்டி…
என்ன தலையாட்டி…
பொம்மைப் போல மாத்திப்புட்ட…

பெண் : நீ பலவாட்டி…
ஒரு படம் காட்டி…
என் உசுற வாங்கிப்புட்ட…

ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி…
ரசிக்க வாயேன்டி…

பெண் : நொறுக்குத்தீனி உன் மீச…
கடிக்கத்தாயேன்னா…

ஆண் : ஏ… கஞ்சாச்செடி உடம்பழகி…
கஞ்சமான இடையழகி…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

பெண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடா…

BGM

பெண் : உன் முகம் பார்த்து…
அட குளிர்க்காத்து…
தினம் சூடா மாறுதடா…

ஆண் : உன் நகம் பார்த்து…
நான் தல வாற…
அடி ஊரே கூடுதடி…

பெண் : தெருவில் நடந்து நீ போனா…
ஜன்னல் வெட்கப்படும்…

ஆண் : கோலம் போட நீ போனா…
புள்ளி ஜொல்லுவிடும்…

பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா…
பஞ்சமில்லா கொழுப்பழகா…

ஆண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி…
கண்ணால என்ன நீ பார்த்தா…
உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா…
யூத்தாக மாறுவான் காத்தா…

ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா…
உடம்ப கவ்வுறியே கரண்டா…
இது சரியா தப்பா…
மது போல மப்பா…

குழு : அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…
அய்யய்யோ பரபரப்பா…
மனசு தவிக்குதப்பா…

BGM


Notes : Kacheri Kacheri Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Viveka. கச்சேரி கச்சேரி பாடல் வரிகள்.


வாஜி வாஜி சிவாஜி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்சிவாஜி

Vaaji Vaaji Sivaji Song Lyrics in Tamil


குழு : ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…
ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…

ஆண் : பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்…
புன்னகையோ மவ்வல் மவ்வல்…

ஆண் : உன் பூவிழிப் பார்வை போதுமடி…
என் பூங்கா இலைகளும் மலருமடி…
உன் கால்கொலுசொலிகள் போதுமடி…
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

பெண் : அன்பா வாளை எடு…
அழகை சாணையிடு…
உன்ஆண் வாசனை…
என் மேனியில் நீ பூசிவிடு…

ஆண் : அடி நெட்டை நிலவே…
ரெட்டைத் திமிரே…
நெஞ்சில் முட்டிக் கொல்லு…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : பூம்பாவாய்…
குழு : ஆம்பல் ஆம்பல்…
ஆண் : புன்னகையோ…
குழு : மவ்வல் மவ்வல்…

BGM

ஆண் : ஒரு வெண்ணிலவை…
மணக்கும் மன்மதன் நான்…
என் தேன்நிலவே…
ஒரு நிலவுடன்தான்…
அவள் யாருமில்லை…
இதோ இதோ இவள்தான்…

பெண் : புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
ஆஆஹா… புன்னகை பேர் அரசே…
தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா…
விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா…
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா…

ஆண் : ஓ… பெண்களிடம் சொல்வது குறைவு…
செய்வது அதிகம்…
செயல்புயல் நானடி…

பெண் : வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : பூம்பாவாய்…
குழு : ஆம்பல் ஆம்பல்…
ஆண் : புன்னகையோ…
குழு : மவ்வல் மவ்வல்…

BGM

ஆண் : பொன் வாக்கியமே… வாய் வாத்தியமே…
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்…
வந்து ஒளிந்து கொண்டேன்…
சுகம் சுகம் கண்டேன்…

பெண் : ஆனந்த வெறியில் நான்…
ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்…
விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி…
வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன்…

ஆண் : அடடா குமரியின் வளங்கள்…
குழந்தையின் சிணுங்கல்…
முரண்பாட்டு மூட்டை நீ…

பெண் : வாஜி வா வா வா…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…
வாஜி வாஜி வாஜி…
என் ஜீவன் சிவாஜி…

ஆண் : ஓ… பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்…
புன்னகையோ மவ்வல் மவ்வல்…

ஆண் : உன் பூவிழிப் பார்வை போதுமடி…
என் பூங்கா இலைகளும் மலருமடி…
உன் கால்கொலுசொலிகள் போதுமடி…
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி…

குழு : ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…
ஆம்பல் ஆம்பல்…
மவ்வல் மவ்வல்…


Notes : Vaaji Vaaji Sivaji Song Lyrics in Tamil. This Song from Sivaji (2007). Song Lyrics penned by Vairamuthu. வாஜி வாஜி சிவாஜி பாடல் வரிகள்.


பிடிக்கும் உன்னை பிடிக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமதுஸ்ரீஸ்ரீகாந்த் தேவாஆழ்வார்

Pidikkum Song Lyrics in Tamil


BGM

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

BGM

பெண் : அழகாய் இருப்பாய் எனக்கு பிடிக்கும்…
அழகான சிரிப்பாய் உலகுக்கு பிடிக்கும்…
அழகாய் அணைப்பாய் எனக்கு பிடிக்கும்…
அழகா உன் தமிழை உலகுக்கு பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

BGM

பெண் : காபுல் திராட்சை போன்ற…
கண்கள் பிடிக்கும்…
காஷ்மீர் ஆப்பிள் போன்ற…
கன்னம் பிடிக்கும்…

பெண் : ரோஜாப்பூ போன்ற…
உன் தேகத்தை பிடிக்கும்…
ரேஸ் காரைப் போன்ற…
உன் வேகத்தை பிடிக்கும்

பெண் : தந்தம் போல் இருக்கும்…
உன் தோளை பிடிக்கும்…
தங்கம் போல் மின்னிடும்…
பொன் மார்பை பிடிக்கும்…

பெண் : உன்னோட பார்வை…
ஒவ்வொன்றும் பிடிக்கும்…
உன்னோட வார்த்தைகள்…
எல்லாமே பிடிக்கும்…

BGM

பெண் : சின்ன பிள்ளை போன்ற…
உள்ளம் பிடிக்கும்…
நீ கொஞ்சும் போது சொல்லும்…
பொய்கள் பிடிக்கும்…

பெண் : அன்றாடம் நீ செய்யும்…
இம்சைகள் பிடிக்கும்…
அங்கங்கே நீ வைக்கும்…
இச்சுக்கள் பிடிக்கும்…

பெண் : கன்னத்தில் செய்யும்
காயங்கள் பிடிக்கும்…
காயங்கள் சொல்லிடும்…
வேதங்கள் பிடிக்கும்…

பெண் : அப்பப்ப நேரும்…
ஊடல்கள் பிடிக்கும்…
ஊடல்கள் திறந்ததும்…
கூடல்கள் பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் உன்னை பிடிக்கும்…
அழகா உன்னை பிடிக்கும்…
ஆகாய வெண்ணிலாவே பிடிக்கும்…
ரொம்ப பிடிக்கும்…

பெண் : பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்…
பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்…

BGM


Notes : Pidikkum Song Lyrics in Tamil. This Song from Aalwar (2007). Song Lyrics penned by Vaali. பிடிக்கும் உன்னை பிடிக்கும் பாடல் வரிகள்.


பேருந்தில் நீ எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ & தினாதினாபொறி

Perunthil Nee Enakku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல்இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஹ்ம்ம்… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : பயணத்தில் வருகிற சிறு தூக்கம்…
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்…

பெண் : பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை…
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை…

ஆண் : புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை…
அன்பே அன்பே நீதானே…
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
தினமும் காலையில் எனது வாசலில்…
இருக்கும் நாளிதழ் நீதானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—

ஆண் : தாய் மடி தருகிற அரவணைப்பு…
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு…

பெண் : தேய் பிறை போல்…
வரும் நக கணுக்கள்…
வகுப்பறை மேஜையில்…
இடும் கிறுக்கல்…

ஆண் : செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்…
அன்பே அன்பே நீதானே…
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும்…
அன்பே அன்பே நீதானே…

பெண் : ஹ்ம்ம் ம்ம்… எழுதும் கவிதையில்…
எழுத்து பிழைகளை…
ரசிக்கும் வாசகன் நீ தானே…

ஆண் : பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

பெண் : ஆஆ ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

ஆண் : விடுமுறை நாட்களில்…
பள்ளிக்கூடம்…
விளையாட்டு பிள்ளைகளின்…
செல்ல கோபம்…

பெண் : ஆள் இல்லா நல் இரவில்…
கேட்கும் பாடல்…
அன்பே அன்பே நீயே…

ஆண் : ஆஆ… பேருந்தில் நீ எனக்கு…
ஜன்னல் ஓரம்…
பின் வாசல் முற்றத்திலே…
துளசி மாடம்…

—BGM—


Notes : Perunthil Nee Enakku Song Lyrics in Tamil. This Song from Pori (2007). Song Lyrics penned by Yugabharathi. பேருந்தில் நீ எனக்கு பாடல் வரிகள்.