பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிசரண் & மதுஸ்ரீ | ஹாரிஸ் ஜெயராஜ் | உன்னாலே உன்னாலே |
Vaigaasi Nilave Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…
—BGM—
பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…
ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…
என் ஜீவன் வாழும் வரை… ஓ…
என் செய்வாய் நாளும் எனை…
ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…
—BGM—
ஆண் : தூவானம் என தூரல்கள் விழ…
தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே…
பெண் : கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு…
காதல் கைக் கூடட்டும்…
ஆண் : இதோ எனக்காக விரிந்தது இதழ்…
எடுக்கவா தேனே…
பெண் : கனி எதற்காக கனிந்தது…
அணில் கடித்திடதானே…
ஆண் : ஓ… காலம் நேரம் பார்த்துக்கொண்டா…
காற்றும் பூவும் காதல் செய்யும்…
ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…
பெண் : வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…
—BGM—
ஆண் : நூலாடை என மேலாடை என…
பாலாடை மேனி மீது படரட்டுமா…
பெண் : நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல…
தீண்டி தீவைக்கிறாய்…
ஆண் : அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல்…
அருகினில் உண்டு…
பெண் : அன்னை நெருப்பாக இருக்கையில்…
என்னை தவிப்பது கண்டு…
ஆண் : ஓ மோகத்தீயும் தேகத்தீயும்…
தீர்த்தம் வார்த்து தீராதம்மா…
ஆண் : வைகாசி நிலவே வைகாசி நிலவே…
மைபூசி வைத்திருக்கும் கண்ணில்…
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன…
பெண் : ஓ… வெட்கத்தை உடைத்தாய்…
கைக்குள்ளே அடைத்தாய்…
தண்ணீரை ஊற்று குளிர்ந்திட…
நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்…
ஆண் : விழியில் இரண்டு விலங்கு இருக்கு…
பெண் : அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு…
பெண் : என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…
என் ஜீவன் வாழும் வரை…
ஓ… என் செய்வாய் நாளும் எனை…
—BGM—
Notes : Vaigaasi Nilave Song Lyrics in Tamil. This Song from Unnale Unnale (2007). Song Lyrics penned by Vaali. வைகாசி நிலவே பாடல் வரிகள்.