Tag Archives: அனுராதா ஸ்ரீராம்

பூ விரிஞ்சாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாமுகவரி

Poo Virinjachu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

BGM

ஆண் : பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள்…
பூ பூத்து வைத்து காத்து இருங்கள்…
திருமண மாலைக்கு தேதி சொல்லி…
பறித்துக்கொள்வோம்…

பெண் : தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள்…
தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள்…
திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம்…

ஆண் : மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள்…
பெண் : நீராட பன்னீரை தான் தூவுங்கள்…

ஆண் : முத்தம் சிந்தவா…
கண்ணோடு கண்ணோடு…

பெண் : முத்து குளித்தாய்…
நெஞ்சோடு நெஞ்சோடு…

ஆண் : மொத்தத்தில் உன்னை கொடு…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

BGM

பெண் : நான் மௌனங்களில் கவிப் படித்தேன்…
நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய்…
நாணத்தின் சாயத்தை…
முத்தமிட்டு முத்தமிட்டு நீ கரைத்தாய்…

ஆண் : என் கனவுகளின் உருவங்களை…
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்…
வலைகளின் ஒலிகளில்…
வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய்…

பெண் : உன் மார்பு சுட்டாலும் குற்றாலமே…
ஆண் : உன் பேரை சொன்னாலும் சங்கீதமே…

பெண் : முத்தம் கொடுப்பேன்…
சொல்லாதே சொல்லாதே…

ஆண் : சொல்லி சொல்லியே…
கொல்லாதே கொல்லாதே…

பெண் : உன் கைகள் இடம் மாறுதே…

பெண் : பூ விரிஞ்சாச்சு…
தேன் விழுந்தாச்சு…
வருக வருக அன்பே…
வாழ்வால் ருசி கண்டேன்…

ஆண் : நீ எனக்குள்ளே…
நான் உனக்குள்ளே…
பிரிவதேது பெண்ணே…
உயிரை பரிமாறு…

ஆண் : இலையில் பசுமை போல் நீ இணைந்தாய்…
என் நெஞ்சில் தன்னாலே…
நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே…

BGM


Notes : Poo Virinjachu Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. பூ விரிஞ்சாச்சு பாடல் வரிகள்.


வானில் காயுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ, எஸ்.ஜே. சூர்யா & அனுராதா ஸ்ரீராம்தேவாவாலி

Vaanil Kaayuthe Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பேர் வாசிக்கையிலே…
புது ஓசை பிறந்ததே…
அது ஆசை ஊட்டுதே…
என் மேனி சிலிர்க்குதே…

பெண் : என்னிடம் பேசி போனது…
சில நூறு பெண்ணடி…
என்னிடம் பேச மறுத்தவள்…
நீ ஒருத்திதானடி…

பெண் : வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
நீ பேசவே ஒரு மொழி இல்லையா…
வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…

BGM

ஆண் : வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…
வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்…
உனக்கும் சேர்த்து நான்…
ஒருவன் காதல் செய்வேன்…

BGM

பெண் : நதியின் போக்கிலே…
நாணல் தலை சாயவே…

BGM

பெண் : சொல்லி செய்த நிலவு…
என் அழகு நீ குலவு நீ வா…
கண்ணை கொத்தும் அழகு…
என் அழகு பெண் அழகு நீ வா வா…

ஆண் : மின்சார பெண்ணே ஆறாக ஆனேன்…
மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன்…
யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்…

பெண் : யாரென்று என்னை நீ கேட்கவில்லை…
மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை…
ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை…

BGM

பெண் : அன்று வண்ண மின்னலாய்…
உன் கண்ணில் தோன்றினேன்…
நான் போகும் போக்கிலே…
ஒரு பூவை வீசினேன்…

ஆண் : நீ பூவை வீசியே…
என்னை சாம்பலாக்கினாய்…
நீ தீயை வீசினால்…
நான் என்ன ஆகுவேன்…

BGM

பெண் : வானில் காயுதே வெண்ணிலா…
நெஞ்சில் பாயுதே மின்னலா…

பெண் : வாய்ப்பை தந்தால்…
நான் வாய் பேசுவேன்…

பெண் : வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா…

BGM


Notes : Vaanil Kaayuthe Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. வானில் காயுதே பாடல் வரிகள்.


தூறல் நின்றாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & வடலி பிரதர்ஸ்ஹரிஹரன் & லெஸ்லேசிக்கு புக்கு

Thooral Nindralum Song Lyrics in Tamil


ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்…
நீ என்னை என்னிடம் தந்து விடு…
போதும் போதும் எனை போக விடு…

BGM

ஆண் : கண்மணி… எனை போக விடு… ஏஹேஹே…
கண்மணி… ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்…
கண்மணி…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : உயிரே…

BGM

ஆண் : உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்…
காதல் உண்டானதே…

ஆண் : எனை போக விடு… ஏ…
ஆ… கண்மணி

ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக…
காதல் உட் சென்றதே…
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு…
ஒட்டி வைப்பதா…
எனது பொருள் அல்ல நீதான் என்று…
எட்டி வைப்பதா…
விடைகள் இல்லா வினாக்கள்தானடி…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…

ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…

குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…

BGM


Notes : Thooral Nindralum Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. தூறல் நின்றாலும் பாடல் வரிகள்.


லேசா லேசா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்லேசா லேசா

Lesa Lesa Song Lyrics in Tamil


பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…

BGM

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

பெண் : காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கலா் கலா் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

பெண் : காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கலா் கலா் கனவுகள் விழிகளிலே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

BGM

பெண் : நான் தூங்கி நாளாச்சு…
நாள் எல்லாம் பாழாச்சு…
கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே…
சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே…

பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம்…
தொிகிறதே விாிகிறதே…
தனிமையில் இருக்கையில் எாிகிறதே…
பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது உறவிது உறவிது…

BGM

பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா…
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

BGM

பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல…
நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா…
உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா…

பெண் : நீ என்றால் நான்தான் என்று…
உறவறிய ஊரறிய…
ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய…
உடனடியாய் உதடுகளால் உயிலெழுது…

பெண் : லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…

BGM

பெண் : உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…
உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே…

BGM


Notes : Lesa Lesa Song Lyrics in Tamil. This Song from Lesa Lesa (2002). Song Lyrics penned by Vaali. லேசா லேசா பாடல் வரிகள்.


உன் பெயர் என்னடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Un Peyar Yennada Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

BGM

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

பெண் : எரிமலைதான் உன் பெயரோ…
இல்லை எனக்குள்ளே குளிர்கிறதே…
பனிமலைதான் உன் பெயரோ…
இல்லை எனக்குள்ளே கொதிக்கிறதே…
தென்றல்தான் உன் பெயரோ…
இல்லை பெண்மையை சாய்க்கிறதே…

பெண் : உன் பெயர் என்னடா…
அட உன் பெயர் என்னடா…
நான் கண்டு சொல்லவா…
அதை நான் கண்டு சொல்லவா…

BGM

பெண் : ஒற்றை சூரியன் நீயே நீயே…
ரெண்டு கண்களும் நீயே நீயே…
அதை நான் காணவில்லையா…

பெண் : முத்தமிழ் நான்கு வேதம் நீயே…
ஐவகை நிலம் ஆறறிவும் நீயே…
அதை நான் அறியவில்லையா…

பெண் : ஏழு ஸ்வரமும் நீயே நீயே… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : ஏழு ஸ்வரமும் நீயே நீயே…
எட்டு திசைகளும் நீயே நீயே…
அதை நான் பார்க்கவில்லையா…

பெண் : ஒன்பது கோளும் நீயே நீயே…
பத்து கட்டளை நீயே நீயே…
அதை நான் கேட்கவில்லையா…

பெண் : சொல்லுகின்றேன் உந்தன் பெயரை…
சொல்லுகின்றேன் உந்தன் பெயரை…

பெண் : உன் பெயர்… உன் பெயர்…
இந்த புதிருக்குள் விடை தேடினேன்…
இந்த புதிருக்குள் விடை தேடினேன்…

பெண் : மகரி ஸநி ஸரி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : பதத மபப கமம ரிகக ஸரி ஸநி ஸரி…
உன் பெயர் என்னடா…

BGM

பெண் : பத நீதபத நீதபம கபபத நீதப மக பத…
பமகரி ஸநி ஸரி ஸரி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : கரிசரி ககரிரி ஸநிஸரி ககரி ககரி ககரிரி…
ஸநிஸரி கரிஸ ரிஸரி கரிஸ ரிஸ க…

பெண் : கரிநித நிரிகபதநி கரிநிஸரி கரிரி நிநிஸ…
நிதப கரிரிதநிதப கம கம கரி தப…
கரி ஸநி ஸரி உன் பெயர் என்னடா…

பெண் : ரித்ஸ ஸாஸ ரிரி ஸத்ஸ ஸாஸ நிஸ ரிஸ…
நிஸ ரிஸ நிஸ ரிஸ நிநிஸ நிநிஸ க…

பெண் : மக நிஸக நிரிஸக நிஸரி…
ஸநி தநி ஸரி ஸத்ஸ ஸாஸா…
நீத ரிரிக நிஸ ரீரி கநித…
கக கக ரிரி ஸநிஸரி…
கத்ரித்ஸ கரிஸநித ரித்ஸ நிஸநிதபஸ…
கரிஸநித ரிஸநிதப மகரிஷநி ஸத்ரிக்க…
ஸரிகமபதப்ப ஸரிகமபத…
ஸரிகமப ரிகமபத கமபதநி கத்ரித்ஸ…
கரிஸநித ரித்ஸ ரிஸநிதபஸ கரிஸநித…
ரிஸநிதப மகரிஸநி உன் பெயர் என்னடா…

BGM

பெண் : காவலன் என்று அழைத்தால் என்ன…
கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன…
நீ என்னை கொள்ளை கொள்கிறாய்…

பெண் : கள்வன் என்று கடிந்தால் என்ன…
கன்னம் வைத்து மறைந்தால் என்ன…
என் கற்பின் காவல் புரிகிறாய்…

பெண் : கஞ்சம் என்று சொன்னால் என்ன…
கருவி போல வாழ்ந்தால் என்ன…
கடித வரிகளில் வள்ளலாய் எரிக்கிறாய்…

பெண் : பாதி என்று மொழிந்தால் என்ன…
வாரி அன்பை பொழிந்தால் என்ன…
உன் பெயர் சொல்ல மறுக்கிறாய்…

பெண் : கண்டுகொண்டேன் உந்தன் பெயரை…
கண்டுகொண்டேன் எந்தன் உயிரை…
உன் பெயர்… உன் பெயர்…
என் உயிரின் மறு பெயரல்லவோ…
என் உயிரின் மறு பெயரல்லவோ…


Notes : Un Peyar Yennada Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. உன் பெயர் என்னடா பாடல் வரிகள்.


ஒத்தையா ரெட்டையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.பி.ஹோசிமின்புஷ்பவனம் குப்புசாமி & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிப்ரவரி 14

Othaya Retaya Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…

ஆண் : உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா…
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா…
நான் இப்ப ஒத்தடி நீ சேர்ந்துகிட்டா…
சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி…

ஆண் : ஒத்தையா… ரெட்டையா…

பெண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…

BGM

ஆண் : ரங்கு ரங்கு ராட்டினமே…
சங்கு சங்க சக்கரமே…
சுத்தி சுத்தி ஆடிடலாம் ஓடி வாடி…

BGM

பெண் : ஒய் தோள் உருச்ச சாத்துக்குடி…
முக்குளிக்கும் தூத்துக்குடி…
முத்தம் இட்டு சேந்துக்கலாம் வாடா வாடா…

BGM

ஆண் : ஏ… வால் இல்லா காத்தாடி நீதானடி…
வால் உள்ள கூத்தாடி நான்தானடி…

பெண் : பச்ச புல்ல நீ மேய பாக்குற…
பச்ச புள்ளைய காயம் ஆக்குற…

ஆண் : உன்னோட நான் ஆட…
என்னோடு நீ ஆட…

பெண் : ஒத்தையா ஹோய் ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…

BGM

ஆண் : ஒத்தையா ரெட்டையா…
பெண் : ஒத்தையா ரெட்டையா ரெட்டையா ஒத்தையா…
ஆண் : ரெட்டையா ஒத்தையா…

BGM

ஆண் : கண்ணு ரெண்டும் மீன் கொழம்பு…
உதடு ரெண்டும் தேன் கொழம்பு…
தித்திக்கிற சண்டை போட தேடி வாடி…

BGM

பெண் : ஓ… பச்ச தண்ணி நான்தானே…
பச்ச தண்ணி நீதானே…
வெந்நீர கொதிக்க வைக்க ஓடி வாடா…

BGM

ஆண் : அடி என்னோட ஒப்பந்தம் ஆனாயடி…
நான் தித்திக்கும் தீப்பந்தம் ஆனேன்னடி…

பெண் : அச்சு வெல்லமே எச்சில் ஊறுமே…
கொள்ளை ஆசையா எல்லை மீறுமே…

ஆண் : ஈரெட்டு பதினாறே வேணாண்டி தகராறு…

ஆண் : ஒத்தையா… ஆஅ…
பெண் : ஹோ ரெட்டையா…

ஆண் : ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…
ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பின்னல் என்ன ஒத்தையா ரெட்டையா…

ஆண் : உன்னோட நாடி என்ன ஒத்தையா ரெட்டையா…
உன்னோட இடுப்பு மடிப்பு ஒத்தையா ரெட்டையா…
நான் இப்ப ஒத்தடி நீ சேர்ந்துகிட்டா…
சேர்ந்துகிட்டா ரெட்டைடி ரெட்டைடி…

ஆண் : ஒத்தையா… ரெட்டையா…

பெண் : ஹோய்… ஒத்தையா ரெட்டையா ஒத்தையா ரெட்டையா…
உன்னோட பொறந்தவங்க ஒத்தையா ரெட்டையா…


Notes : Othaya Retaya Song Lyrics in Tamil. This Song from February 14 (2005). Song Lyrics penned by S.P. Hosimin. ஒத்தையா ரெட்டையா பாடல் வரிகள்.


ஒல்லி ஒல்லி இடுப்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்ஆதி

Olli Olli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

ஆண் : ஹே ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

BGM

ஆண் : ரெட்ட ஜட பல்லக்கொன்னு…
நடக்குதே நடிக்குதே இடிக்குதே…

பெண் : அட மந்திரிச்ச கோழி ஒன்னு…
எந்திரிச்சி வந்து நின்னு…
தந்திரிச்சி முத்தம்னு நெஞ்சில் துள்ளுதே…

BGM

ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே அல்லே அல்லே…

ஆண் : ஹே கமர்கட்டு கன்னங்கல கடிக்கட்டா…
கடிச்சிதான் கரைக்கட்டா…

பெண் : புள்ளப்பூச்சி ஒன்னு வந்து பட்டுப்பூச்சி கைய தொட்டு…
கிச்சி கிச்சி பண்ணிவிட்டு ஓடிப் போகுது…

ஆண் : ஹே மக்காச்சோளம் கலரில் பொறந்தியே எப்படி…
பெண் : மகசூல் பண்ணத்தானா அவசரம் இப்படி…

ஆண் : ஹே திரியும் தீயும் என்ன செய்யும்…
எரியும் இதுதான் தப்பா அடங்கப்பா…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே…
பெண் : சிக்கி முக்கி நெருப்பே…

BGM

பெண் : நெஞ்சிக்குள்ள ஊசி வெடி வெடிச்சியே…
சில்லு சில்லா சிரிச்சியே…

ஆண் : அடி உன் மனசில் வீடு கட்டி…
வீட்டுக்குள்ள கூடு கட்டி…
கூட்டுக்குள்ள என்னக் கட்டி அடச்சிட்டியே…

BGM

பெண் : ஆக மொத்தம் என்னை நீயும் விக்க வச்ச…
திக்கி திக்கி சிக்க வச்ச…

ஆண் : ஓ வானத்திலே ரெக்கக் கட்டி…
தண்ணியில தக்கக்கட்டி…
என்ன நீயும் கண்ண கட்டி மெதக்க வச்ச…

பெண் : ரயிலே ரயிலே ரயிலே…
நிக்க வேணாம் மோதவா…

ஆண் : மயிலே மயிலே மயிலே…
இறகு வேணாம் தோகதான்…

பெண் : நோட்டம் போட்டா தோட்டம் போட்டு…
கூட்டம் போடும் ஆளு என் ஆளு…

ஆண் : ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு…
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு…

பெண் : சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு…
சுண்டி விட்டா போதும் பத்திக்குமே இடுப்பு…

ஆண் : ரெட்ட ரெட்ட தவிலு அடிச்சது எதுக்கு…
கிட்ட கிட்ட ஆட்டம் போடனுமே அதுக்கு…

பெண் : வட்ட வட்ட பாற பூத்திருக்கு எதுக்கு…
முட்ட முட்ட முயலு காத்திருக்கு அதுக்கு…

ஆண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…
பெண் : அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே அல்லே…

பெண் : அல்லே…
ஆண் : அல்லே…
பெண் : அல்லே…
ஆண் : அல்லே…


Notes : Olli Olli Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. ஒல்லி ஒல்லி இடுப்பே பாடல் வரிகள்.


கடலையின்னா கடலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமாணிக்க விநாயகம், விஎன்பி & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பிறப்பு

Kadalaina Kadala Song Lyrics in Tamil


BGM

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய்… எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : கொஞ்ச வந்த பஞ்சு முட்டாயி…
ஊரு கும்பகோணம் பேரு குப்பாயி…
ஆமாம்… சிங்கரான மாமன் பட்டாபி…
ரொம்ப சிலுத்துகிறான் பழைய சிப்பாயி…

ஆண் : கிறுக்கு புடிக்கும் நொறுக்கு தீனி…
இறுக்கி பிடிக்கும் துடுப்பு தோணி…
கருக்கள் வரையில் தரைய தேடும்…
கரைக்கு வந்து படக தேடும்…

ஆண் : கந்து வட்டி கண் அழகிடா…
இவ கல்லுபட்டி ஸ்பீடு வட்டிடா…
சந்தனத்தில் சாந்து பொட்டுடா…
இதில் கந்தகமும் கலந்திருக்குடா…

பெண் : ஹேய் கும்பகோணம் செம்புக்குள்ள…
குடிக்க குடிக்க கல்லு வரும்…
தெம்பில்லாத பூச்சிக்கெல்லாம்…
தேள போல வீரம் வரும்…

ஆண் : தம்மாததூண்டு எடத்துல…
கும்மாங் குத்து கும்மலாம்…
ரம் அடிச்சா ஏறுது…
தம் அடிச்சா ஆடுது…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

BGM

பெண் : எல்லா கண்ணும் என்ன பாக்குது…
அட என் கண்ணு உன்ன பாக்குது…
பல்லாக்குல பயணம் பண்ணுடா…
இந்த பஞ்சாரத்தில் பதுங்கி கொள்ளடா…

ஆண் : சொரங்கம் முழுதும் சொர்ண இருக்கு…
அரங்கம் முழுதும் ஆசை இருக்கு…
தரங்கம்பாடி கடலில் ஆடு…
மூச்ச அடக்கி முத்த தேடு…

ஆண் : பெரிய வீடு உள்ளவன் எல்லாம்…
ஒரு சின்ன வீடு பண்ண பாக்குறான்…
யெஹ்… சரக்கு அடிச்சு சாஞ்சி நிக்குறான்…
உன் சம்பளத்த விவரம் கேட்குறான்…

பெண் : ஹோ… இரவும் பகலும் மறந்து போச்சு…
இடியும் மழையும் பயந்து போச்சு…
கொடியை தாங்கும் கொம்பு கூட…
கொடி இடையில் மடங்கி போச்சு…

ஆண் : கவுத்துபுட்டா பொம்பள…
துரை இருக்கும் தெம்புல…
முடிஞ்சு போச்சு இரவு தான்…
முடியவில்ல உறவுதான்…

ஆண் : போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா… ஹஹா…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

பெண் : கடலையின்னா கடலை…
இது கரிச காட்டு கடலை…
இந்த வெடலை எதையும் விடலை…
என்ன யாரும் இன்னும் தொடலை…

ஆண் : ஏய் எத்தனை புள்ள பெத்த…
அடி யாரு உனக்கு அத்தை…
தேஞ்சு போன பத்தை…
நீ ஓஞ்சு போன மெத்தை…

ஆண் : அடி போடி அம்மா ஓட்ட காலனா…
அட உன்கிட்ட நான் மாட்டிக்குவேனா…

பெண் : அட அம்மாவாசை அழகு மன்மதா…
இந்த சுண்டெலிதான் கிண்டல் பண்ணுதா…


Notes : Kadalaina Kadala Song Lyrics in Tamil. This Song from Pirappu (2007). Song Lyrics penned by Pazhani Bharathi. கடலையின்னா கடலை பாடல் வரிகள்.


செல்லகிளியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரஞ்சித் & அனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Chella Kiliyo Song Lyrics in Tamil


BGM

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஓ… திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்…
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்…
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்…

ஆண் : நம்ம கட்டில் சூடு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : இப்போ ஆறி போச்சு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : நாம் சிக்கி முக்கி…
கல்லாய் மாறி பற்ற செய்வோமா…

பெண் : என் சோகம் போக…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : என் மோகம் தீர…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : அட ரெட்டை சேவை செய்ய போகும்…
கெட்டிக்காரா கிட்ட வா வா…

ஆண் : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள…
குழு : ஓஒ ஓஓ…
ஆண் : வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள…
பெண் : ஓ… என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

BGM

பெண் : ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்…
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்…
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்…

ஆண் : இனி ஒவ்வொரு இரவு…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : முதல் இரவாய் செய்வோம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : அடி சூரியனுக்கே சுவரை கட்டி…
இரவை நீட்டிப்போம்…

பெண் : இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்…
நாம் தழுவும் போது சிதறும் துளியில்…
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

ஆண் : ஓஓ… ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே ஓமெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

BGM


Notes : Chella Kiliyo Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. செல்லகிளியோ பாடல் வரிகள்.


காத்து பசபசங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபுஷ்பவனம் குப்புசாமி, மலேசியா வாசுதேவன் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்எதிரும் புதிரும்

Kathu Pasanga Song Lyrics in Tamil


பெண் : உலகத்தை காப்பவளே செல்வ மகா காளி…
உன் பாதம் எங்க துணை செல்வ மகா காளி…
பொருள் தருவா புகழ் தருவா செல்வமகா காளி…
அடி பொன்னானா சாமியாடி எங்க செல்வமகா காளி…

BGM

ஆண் : காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…

BGM

ஆண் : காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…

ஆண் : மழையும் பொசபொசங்குதே…
மடை திறக்க போயிருந்தேன்…
மீனு கொசகொசங்குதே…
அடி எம்மடி மீனு கொசகொசங்குதே…

பெண் : மீனு கொசகொசங்க…
வலை எடுக்க போயிருந்தேன்…
கௌளி மொனமொனங்குதே…
அடி எம்மடி கௌளி மொனமொனங்குதே…

பெண் : கௌளி மொனமொனங்க…
கறி சோறு ஆக்க போனேன்…
சோறு தளபுலங்குதே…
அடி எம்மடி சோறு தளபுலங்குதே…

BGM

ஆண் : என் கண்ணான கன்னுக்குட்டி…
கால் முளைச்ச வெல்லக்கட்டி…
கண்டாங்கி வாங்கி தரேண்டி…
நீ உடுத்திக்கிட்டு சரசரக்க நடந்து வாயேன்டி…

BGM

ஆண் : ஹே… கண்டாங்கி சரசரக்கும்…
கட்டியதும் கசங்குமடி…
பனாரசு வாங்கித்தறேண்டி…
நீ உடுத்திகிட்டா பளபளன்னு ஜொலிக்கும் பாரடி…

BGM

ஆண் : ஹே… பனாரசு பளபளக்கும்…
பட்டு ஒன்ன உடம்பில் குத்தும்…
காஞ்சிபுரம் வாங்கி தாரேண்டி…
நீ உடுத்திக்கிட்டா சிலுசில்லுன்னு சிலுக்கு பாரடி…

பெண் : ஹான்… சீலை கொடுப்பதெல்லாம்…
சீலை இழக்கதானே அறிவ இந்த பொம்பள…
உங்க மூனுபேரில் ஒருத்தனையும் சிறுக்கி நம்பள…

BGM

ஆண் : ஹேய்ய் ஹேய்ய் ஹே இந்தா…
ஹே இந்தா அலேக்கா…
ஹே ஹே… அப்புடி போடு… அலேக்கா…
ஜமுகஜிண்ட… அப்புடிபோடு…

ஆண் : ஹே சேலம் ஆசாரிக்கு…
சீட்டு எழுதி தந்திருக்கேன்…
கால் கொலுசு வாங்கி வாரேன்டி…
நீ போட்டுகிட்டா கலகலன்னு பேசும் பாரடி…

BGM

ஆண் : கொலுசு கலகலக்கு கட்டிலில சத்தம் வரும்…
கல் வளையில் வாங்கதாரேண்டி…
நீ மாட்டிகிட்டா வழ வழன்னு வழுக்கும் பாரடி…

BGM

ஆண் : ஹேய்… கல் வளையில் வழவழக்கும்…
கஞ்சத்தனம் அதுல இருக்கும்…
வைரத்தோடு வாங்கிதாரேண்டி…
நீ போட்டுகிட்ட தகதகன்னு ஜொலிக்கும் பாரடி…

பெண் : ஆம்ம்ம்… மொத்தநகை போடுவது…
மொத்தத்தையும் வாங்கதானே…
சங்கதி தெரியும் எனக்கு…
உங்க ஆம்பளைங்க சரித்திரமே கையில் இருக்கு…

BGM

ஆண் : சித்திரையில் வெயில் அடிச்சா…
சித்திரமே வேர்திடுமே…
தென்னந்தோப்பு வாங்கிதாறேண்டி…
அடி எம்மாடி சிலுசிலுன்னு வச்சுருப்பேண்டி…

ஆண் : ஹேய் என்னாடா…

ஆண் : சித்திரையில் சிலுசிலுக்கும்…
மார்கழியில் குளிரடிக்கும்…
கம்பளியால் வீடு செய்வேன்டி…
நீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி…

ஆண் : என்னடா சுதி இறங்கி போச்சு…
ஏதுடா டேய்…

ஆண் : ஹேய்… மார்கழியில் குளிர் அடிக்கும்…
கார்த்திகையில் மழை அடிக்கும்…
உனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி…
என் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி…

பெண் : குறு குறுக்கும் ஆசை வந்தா…
குறுக்குபுத்தி நூறு வரும்…
காரியத்த முடிக்க பார்பீக…
அது முடிஞ்ச பின்னே கழட்டிவிட்டு ஓடி போவீக…
ஏன்யா…

BGM


Notes : Kathu Pasanga Song Lyrics in Tamil. This Song from Ethirum Puthirum (1999). Song Lyrics penned by Vairamuthu. காத்து பசபசங்க பாடல் வரிகள்.