| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | புஷ்பவனம் குப்புசாமி, மலேசியா வாசுதேவன் & அனுராதா ஸ்ரீராம் | வித்யாசாகர் | எதிரும் புதிரும் |
Kathu Pasanga Song Lyrics in Tamil
பெண் : உலகத்தை காப்பவளே செல்வ மகா காளி…
உன் பாதம் எங்க துணை செல்வ மகா காளி…
பொருள் தருவா புகழ் தருவா செல்வமகா காளி…
அடி பொன்னானா சாமியாடி எங்க செல்வமகா காளி…
—BGM—
ஆண் : காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…
—BGM—
ஆண் : காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்…
மழையும் பொசபொசங்குதே…
அடி எம்மாடி மழையும் பொசபொசங்குதே…
ஆண் : மழையும் பொசபொசங்குதே…
மடை திறக்க போயிருந்தேன்…
மீனு கொசகொசங்குதே…
அடி எம்மடி மீனு கொசகொசங்குதே…
பெண் : மீனு கொசகொசங்க…
வலை எடுக்க போயிருந்தேன்…
கௌளி மொனமொனங்குதே…
அடி எம்மடி கௌளி மொனமொனங்குதே…
பெண் : கௌளி மொனமொனங்க…
கறி சோறு ஆக்க போனேன்…
சோறு தளபுலங்குதே…
அடி எம்மடி சோறு தளபுலங்குதே…
—BGM—
ஆண் : என் கண்ணான கன்னுக்குட்டி…
கால் முளைச்ச வெல்லக்கட்டி…
கண்டாங்கி வாங்கி தரேண்டி…
நீ உடுத்திக்கிட்டு சரசரக்க நடந்து வாயேன்டி…
—BGM—
ஆண் : ஹே… கண்டாங்கி சரசரக்கும்…
கட்டியதும் கசங்குமடி…
பனாரசு வாங்கித்தறேண்டி…
நீ உடுத்திகிட்டா பளபளன்னு ஜொலிக்கும் பாரடி…
—BGM—
ஆண் : ஹே… பனாரசு பளபளக்கும்…
பட்டு ஒன்ன உடம்பில் குத்தும்…
காஞ்சிபுரம் வாங்கி தாரேண்டி…
நீ உடுத்திக்கிட்டா சிலுசில்லுன்னு சிலுக்கு பாரடி…
பெண் : ஹான்… சீலை கொடுப்பதெல்லாம்…
சீலை இழக்கதானே அறிவ இந்த பொம்பள…
உங்க மூனுபேரில் ஒருத்தனையும் சிறுக்கி நம்பள…
—BGM—
ஆண் : ஹேய்ய் ஹேய்ய் ஹே இந்தா…
ஹே இந்தா அலேக்கா…
ஹே ஹே… அப்புடி போடு… அலேக்கா…
ஜமுகஜிண்ட… அப்புடிபோடு…
ஆண் : ஹே சேலம் ஆசாரிக்கு…
சீட்டு எழுதி தந்திருக்கேன்…
கால் கொலுசு வாங்கி வாரேன்டி…
நீ போட்டுகிட்டா கலகலன்னு பேசும் பாரடி…
—BGM—
ஆண் : கொலுசு கலகலக்கு கட்டிலில சத்தம் வரும்…
கல் வளையில் வாங்கதாரேண்டி…
நீ மாட்டிகிட்டா வழ வழன்னு வழுக்கும் பாரடி…
—BGM—
ஆண் : ஹேய்… கல் வளையில் வழவழக்கும்…
கஞ்சத்தனம் அதுல இருக்கும்…
வைரத்தோடு வாங்கிதாரேண்டி…
நீ போட்டுகிட்ட தகதகன்னு ஜொலிக்கும் பாரடி…
பெண் : ஆம்ம்ம்… மொத்தநகை போடுவது…
மொத்தத்தையும் வாங்கதானே…
சங்கதி தெரியும் எனக்கு…
உங்க ஆம்பளைங்க சரித்திரமே கையில் இருக்கு…
—BGM—
ஆண் : சித்திரையில் வெயில் அடிச்சா…
சித்திரமே வேர்திடுமே…
தென்னந்தோப்பு வாங்கிதாறேண்டி…
அடி எம்மாடி சிலுசிலுன்னு வச்சுருப்பேண்டி…
ஆண் : ஹேய் என்னாடா…
ஆண் : சித்திரையில் சிலுசிலுக்கும்…
மார்கழியில் குளிரடிக்கும்…
கம்பளியால் வீடு செய்வேன்டி…
நீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி…
ஆண் : என்னடா சுதி இறங்கி போச்சு…
ஏதுடா டேய்…
ஆண் : ஹேய்… மார்கழியில் குளிர் அடிக்கும்…
கார்த்திகையில் மழை அடிக்கும்…
உனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி…
என் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி…
பெண் : குறு குறுக்கும் ஆசை வந்தா…
குறுக்குபுத்தி நூறு வரும்…
காரியத்த முடிக்க பார்பீக…
அது முடிஞ்ச பின்னே கழட்டிவிட்டு ஓடி போவீக…
ஏன்யா…
—BGM—
Notes : Kathu Pasanga Song Lyrics in Tamil. This Song from Ethirum Puthirum (1999). Song Lyrics penned by Vairamuthu. காத்து பசபசங்க பாடல் வரிகள்.

