Tag Archives: அனுராதா ஸ்ரீராம்

unmela-aasapattu-song-lyrics-in-tamil

உன்மேல ஆசப்பட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி.பி. சரண் & அனுராதா ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவாழ்த்துக்கள்

Unmela Aasapattu Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்ப பட்டு…
வாங்கி தரேன் கூர பட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : உன்மேலே ஆசைப்பட்டு…
உள்ளுக்குள்ள விருப்பபட்டு…
வாங்கி தரேன் கூரபட்டு…
கட்டிக்கிறியா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

BGM

ஆண் : கத்தரிப்பூ கண்ணால…
கத்தரிச்சு போட்டுபுட்டே…
சித்தரிச்ச அழகால…
சின்ன வேலை செஞ்சுபுட்ட…

ஆண் : தூங்கும்போது கனவில் வந்து…
தொல்ல பண்ணுற…
நீ இன்னும் என்ன செய்ய போற…
இம்ச பண்ணுற…

பெண் : ஹே… போதும் போதும் உங்க பேச்சு…
வெட்கம் வந்து வேர்த்து போச்சு…
வார்தை எல்லாம் வத்தி போச்சுதே…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

BGM

பெண் : உன்ன மட்டும் பார்க்க சொல்லி…
கண்ண ரெண்டு வச்சிருக்கேன்…
என்ன தொட்ட உன்ன தொட…
காத்துகிட்ட சொல்லிவச்சேன்…

ஆண் : உன் பார்வை உயிரை தோண்டி…
பதியம் போடுது…
ஹே… உன் வார்த்தை உள்ள குதிச்சி…
பாண்டி ஆடுது…

பெண் : அட வம்பளந்து பேச பேச…
என்ன விட்டு ஓடி போச்சு…
கொலுசு கூட ஊமையாச்சுடா…

பெண் : ஒன்னால ஒறக்கம் கெட்டு…
சோறு தண்ணி ருசியும் கெட்டு…
கெடக்கிறேன் உணர்ச்சி கெட்டு…
கிட்ட வரியா…

ஆண் : அடடா மனசுல…
மயில் ஒன்னு தோகை விரிக்குது…
ஏனோ எனக்குள்…
மின்னலுடன் மழையடிக்குதடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…

ஆண் : அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…
அடி சரிதான்டி போடி…
என் தங்க வானம்பாடி…


Notes : Unmela Aasapattu Song Lyrics in Tamil. This Song from Vaazhthugal (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உன்மேல ஆசப்பட்டு பாடல் வரிகள்.


தச்சுக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனுராதா ஸ்ரீராம் & மாதங்கிவித்யாசாகர்பொன்னியின் செல்வன் (2005)

Thaachuko Song Lyrics in Tamil


BGM

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

பெண் : கண்களிலே தீ…
கன்னத்திலே பால்…
அங்கத்திலே பூ…
ஆடையிலே தாழ்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ கோ கோ கோ தச்சுக்கோ….
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

BGM

பெண் : கண்ணை பார் தக தக தக…
அங்கம் பார் பள பள பள…
தொட்டு பார் தல தல தல அள்ள வா…

பெண் : வாராயோ வர வர வர…
தாராயோ தர தர தர…

பெண் : பேரின்பம் பெற பெற பெற…
நீயும் வா…
சுமை நான் தாங்கதான்…
சுகம் நீ வாங்கதான்…

பெண் : சுமை நான் தாங்கதான்…
சுகம் நீ வாங்கதான்…
பொன் ஊஞ்சலில் ஆட வா…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
அனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

BGM

பெண் : கிருஷ்ணா…

—BGM—

பெண் : ஏய் கிருஷ்ணா…

—BGM—

பெண் : கொலுசெல்லாம் சல சல சல…
வளையல்கள் கல கல கல…
மஞ்சத்தில் பல பல பல ஆசைகள்…

பெண் : அங்கங்கள் சுட சுட சுட…
அங்கங்கே தொட தொட தொட…
வழியெங்கும் கட கட கட ஆசைகள்…

பெண் : விண்ணில் ஒற்றை நிலா…
மண்ணில் கூடல் விழா…
விண்ணில் ஒற்றை நிலா கூடல் விழா…
கொண்டாடும் நாள் இன்றுதான்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

பெண் : கண்களிலே தீ…
கன்னத்திலே பால்…
அங்கத்திலே பூ…
ஆடையிலே தாழ்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ…


Notes : Thaachuko Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan (2005). Song Lyrics penned by Pa Vijay. தச்சுக்கோ பாடல் வரிகள்.


உசுருக்குள் உன் பேர

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்அனுராதா ஸ்ரீராம் & கேசவ் வினோத்எம்.எஸ்.ஸ்ரீகாந்த்எட்டுத்திக்கும் பற

Ushrukkul Un Pera Song Lyrics in Tamil


BGM

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வச்சேன்…

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்…
நான் வேர் அருந்த போனேன்…
உன் வேர்வ பட்டதால…
ஊர் அருந்த போனேனே…

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்… ஹோ…

BGM

பெண் : நீ எனக்கு போதும்…
நான் நெறஞ்சு வழியுறேன்…
பூமி பந்த போல…
நான் தான சொழலுறேன்…

ஆண் : நத்த கூட்ட போல…
நான் உனக்குள் அடங்குறேன்…
சத்தமின்றி உன்ன…
நான் முழுசா முழுங்குறேன்…

பெண் : குலசாமி போலத்தான்…
என் முன்னால நிக்குற…
மரங்கொத்தி போலத்தான்…
என்ன நீ கொத்துற…

ஆண் : ஒரு கோழி குஞ்ச போல…
என்ன பொத்தி வைக்குற…
இந்த பாவி நெஞ்சுக்குள்ள…
சிறுவாட சேக்குற…

பெண் : வெள்ளந்தி பாசத்த…
வெல பேச யாருமில்லை…

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…

BGM

பெண் : உள்ளங்கை ரேகை…
உன் பேர சொல்லுதே…
உள்ளுக்குள்ள வெக்கம்…
என்னை குத்தி கொல்லுதே…

ஆண் : உள்ளங்காலு நிழலா…
என்ன ஒட்ட வச்சுட்ட…
உசுர மட்டும் பிச்சு…
நீ வெளிய நட்டுட்ட…

பெண் : ஆகாயம் போல நீ…
எங்கயும் நிக்குற…
அப்பப்போ என்ன நீ…
பூ பூக்க வைக்குற…

ஆண் : அடி நீயும் நானும் வாழ…
ஒரு கோவில் கட்டுவேன்…
உன்ன யாரு தீண்டினாலும்…
நான் நின்னு வெட்டுவேன்…

பெண் : என் சாமி நீதான்டா…
உன்னவிட்டு போகமாட்டேன்…

ஆண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…

பெண் : உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன்…

ஆண் : உன் பார்வை பட்ட நேரம்…
நான் வேர் அருந்த போனேன்…
உன் வேர்வ பட்டதால…
ஊர் அருந்த போனேனே…

பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…


Notes : Ushrukkul Un Pera Song Lyrics in Tamil. This Song from Ettuthikkum Para (2019). Song Lyrics penned by Snehan. உசுருக்குள் உன் பேர பாடல் வரிகள்.


என்ன நெனச்ச நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்அனுராதா ஸ்ரீராம் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாசொக்க தங்கம்

Enna Nenacha Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…

BGM

ஆண் : என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…

பெண் : சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…

பெண் : குற்றால சாரல் அது…
கண்ணோரம் ஊறி வர…
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்…
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…

BGM

ஆண் : நான் தர சிற்பம்…
உன்னோட வெப்பம்…
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச…

பெண் : தீக்குச்சி வந்து…
தீக்குச்சி கிட்ட…
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்…

ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்…
என்ன நெனச்ச…

பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு…
கேக்க நெனச்சேன்…

ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில்…
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி…

பெண் : ஆறேழு கட்டிலுக்கும்…
அஞ்சாறு தொட்டிலுக்கும்…
சொல்ல நெனச்சேன்…
நான் சொல்ல நெனச்சேன்…
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்…

பெண் : அள்ள நெனச்சேன்…
நான் அள்ள நெனச்சேன்…
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்…

BGM

ஆண் : மெத்தைக்கு மேல…
உன்னோட சேல…
என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச…

பெண் : எப்போதும் போல…
உன்னோட வேலை…
ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்…

ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…

பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்…

ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்…
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா…

பெண் : கல்யாண சொர்கத்துல…
கச்சேரி நேரமுன்னு…
கட்டி புடிச்சேன்…
நான் கட்டி புடிச்சேன்…
என் வெட்கம்விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்…

ஆண் : சொக்கி தவிச்சேன்…
சொக்கி தவிச்சேன்…
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்…

ஆண் : சொக்கி தவிச்சேன்…
சொக்கி தவிச்சேன்…
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்…

பெண் : குற்றால சாரல் அது…
கண்ணோரம் ஊறி வர…
உன்ன நெனச்சேன்…
நான் உன்ன நெனச்சேன்…
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…

BGM


Notes : Enna Nenacha Nee Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by R. V. Udayakumar. என்ன நெனச்ச நீ பாடல் வரிகள்.


மீனம்மா அதிகாலையிலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஆசை

Meenamma Athikalayilum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

பெண் : அம்மம்மா… முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை…
எல்லாம் ஒரு காவியமே…

ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…

பெண் : ஊடல் வந்து மோதல் வந்து…
முட்டிக் கொண்டபோதும்…
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்…

ஆண் : இரு மாதங்கள் நாட்கள் செல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

BGM

ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில்…
ஒளி சிந்தும் ராத்திாியில்…
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்…
புது வித்தை காட்டிடவா…

பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு…
தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு…
அதை மூடாமல் தாழ் போடாமல்…
எனைத் தொட்டுத் தீண்டுவதா…

ஆண் : மாமன்காரன்தானே மாலை போட்ட நானே…
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்…
மீனம்மா… மழை உன்னை நனைத்தால்…
இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்…

பெண் : அம்மம்மா… வெயில் உன்னை அடித்தால்…
இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்துவிடும்…

BGM

ஆண் : அன்று காதல் பண்ணியது…
உந்தன் கன்னம் கிள்ளியது…
அடி இப்போதும் நிறம் மாறாமல்…
இந்த நெஞ்சில் நிற்கிறது…

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்…
நகை நட்டு பாத்திரமும்…
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே…
அது கண்ணில் நிற்கிறது…

ஆண் : ஜாதிமல்லிப் பூவே…
தங்க வெண்ணிலாவே…
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு…

BGM

ஆண் : மீனம்மா… உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும்…
தென்றல் காத்திருக்கு…

பெண் : அம்மம்மா… உன்னை காதலித்து புத்தி பேதலித்து…
புஷ்பம் பூத்திருக்கு…

BGM


Notes : Meenamma Athikalayilum Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்.


நிலவை கொண்டு வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாவாலி

Nilavai Konduva Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவை கொண்டு வா…
கட்டிலில் கட்டி வை…
மேகம் கொண்டு வா…
மெத்தை போட்டு வை…

ஆண் : நிலவை பிடித்தேன்…
கட்டிலில் கட்டினேன்…
மேகம் பிடித்தேன்…
மெத்தை விரித்தேன்…

பெண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டி வை…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை காவல் வை…

ஆண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டினேன்…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை நம்பினேன்…

பெண் : இன்று முதல் இரவு…

ஆண் : இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…
இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…

ஆண் : கிள்ளவா…
உன்னை கிள்ளவா…
இல்லை அள்ளவா நீ வா…

BGM

ஆண் : வரவா வந்து தொடவா…
உன் ஆடைக்கு விடுதலை தரவா…

பெண் : அவசரம் கூடாது…
அனுமதி தரும் வரையில்…
பொதுவா நான் சொன்னா…
நீ சொன்ன படி கேட்கும் காது…

ஆண் : இது போன்ற விசயத்தில்…
உன் பேச்சி உதவாது…

பெண் : மெல்ல இடையினை தொடுவாயா…
மெல்ல உடையினை களைவாயா…
நான் துடிக்கையில் வேடிக்கையில்…
முத்தங்கள் தருவாயா…

ஆண் : போதுமா அது போதுமா…
ஆசை தீருமா… வாம்மா…

பெண் : மாமா…

BGM

பெண் : மாமா என் மாமா…
இந்த நிலவை ஊதி அணைப்போமா…

ஆண் : காணாத உன் கோலம்…
கண்கொண்டு காண்கின்றதே…

பெண் : இதழால் உன் இதழால்…
என் வெட்கம் துடைத்துவிடுவாயா…

ஆண் : அங்கத்தில் வெட்கங்கள்…
எங்கெங்கு சொல்வாயா…

பெண் : தேன் எங்கெங்கு உண்டு என்று…
பூ வண்டுக்கு சொல்லாவிட்டால்…
அதுதான் தேடி உண்ணாமல்…
பேரின்பம் வாராதுதான்…

ஆண் : இன்பமா பேரின்பமா…
அது வேண்டுமா வாமா…

பெண் : மாமா…

பெண் : நிலவை கொண்டு வா…
கட்டிலில் கட்டி வை…
மேகம் கொண்டு வா…
மெத்தை போட்டு வை…

ஆண் : நிலவை பிடித்தேன்…
கட்டிலில் கட்டினேன்…
மேகம் பிடித்தேன்…
மெத்தை விரித்தேன்…

பெண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டி வை…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை காவல் வை…

ஆண் : காயும் சூரியனை…
கடலுக்குள் பூட்டினேன்…
இரவு தொடர்ந்திட…
இந்திரனை நம்பினேன்…

பெண் : இன்று முதல் இரவு…

ஆண் : இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…
இன்று முதல் இரவு…
நீ என் இளமைக்கு உணவு…

ஆண் : கிள்ளவா…
உன்னை கிள்ளவா…
இல்லை அள்ளவா நீ வா…

ஆண் : கிள்ளவா…

பெண் : கிள்ளவா…

ஆண் : உன்னை கிள்ளவா…

பெண் : கிள்ளவா…

ஆண் : இல்லை அள்ளவா நீ வா…

பெண் : அள்ளவா…

ஆண் & பெண் : நீ வா…


Notes : Nilavai Konduva Song Lyrics in Tamil. This Song from Vaali (1999). Song Lyrics penned by Vairamuthu. நிலவை கொண்டு வா பாடல் வரிகள்.


நதியே நைல் நதியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்சுக்விந்தர் சிங் & அனுராதா ஸ்ரீராம்எஸ். ஏ. ராஜ்குமார்வானத்தைப் போல

Nadhiye Niel Nadhiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…
ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…

ஆண் : நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…

BGM

ஆண் : மின்னல் கொஞ்சம் காந்தம் கொஞ்சம் ஒன்று கூடியே…
கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா…

குழு (பெண்கள்) : கண்கள் ஆச்சா கண்கள் ஆச்சா…

பெண் : நட்பு கொஞ்சம் ஆசை கொஞ்சம் ஒன்று கூடியே…
காதலாச்சா காதலாச்சா…

குழு (பெண்கள்) : காதலாச்சா காதலாச்சா…

ஆண் : பாபிலோனின் தொங்கும் தோட்டம்…
உன்னை பார்த்தால் அதிசயிக்கும்…
அடி ஹீட்டர் போட்டு வந்த…
புது வாட்டர் பால்ஸ் நீயா…

பெண் : எனை இன்பலோகம் சேர்க்கும்…
ஒரு சேட்லைட்டும் நீயா…

ஆண் : ஓ நதியே… அடி நைல் நதியே…

பெண் : னனனன னா…

ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே…

BGM

பெண் : உந்தன் பேரை சொல்லிச் சொல்லி வாய் வலிப்பதே…
இன்பமாகும் இன்பமாகும்…

குழு (பெண்கள்) : இன்பமாகும் இன்பமாகும்….

ஆண் : தீயப்போல நீயும் வந்தா தீக்குளிப்பதே…
சொர்கமாகும் சொர்கமாகும்…

குழு (பெண்கள்) : சொர்கமாகும் சொர்கமாகும்…

பெண் : நூறு கிராம்தான் இதயம் அதிலே…
நூறு டன்னாய் உன் நினைவு…

ஆண் : அந்த உலக அழகி யாரும்…
உந்தன் அழகில் பாதி இல்லை…

பெண் : உன் கண்ணின் ஈர்ப்பை பார்க்க…
அந்த நியூட்டன் இன்று இல்லை…

ஆண் : நதியே… அடி நைல் நதியே…

பெண் : லலல லா…

ஆண் : நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…

ஆண் : ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…
ஓ நிலா உன் ஊர்வலமா…
உன் முகம் பனி பூவனமா…

பெண் : ஓ நிலா என் ஊர்வலமா…
என் முகம் பனி பூவனமா…
லா லா லால லால லா லால லா…

BGM


Notes : Nadhiye Niel Nadhiye Song Lyrics in Tamil. This Song from Vaanathaippola (2000). Song Lyrics penned by . நதியே நைல் நதியே பாடல் வரிகள்.


அன்பே அன்பே கொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்ஜீன்ஸ்

Anbe Anbe Kollathe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…

BGM

ஆண் : பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்…
அடடா பிரம்மன் கஞ்சனடி…
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்…
ஆஹா… அவனே வள்ளலடி…

ஆண் : மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து…
ரவிவர்மன் எழுதிய வதனமடி…
நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்…
சிற்பிகள் செதுக்கிய உருவமடி…

ஆண் : இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்…
நீதான் நீதான் அழகியடி…
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து…
என்னை வதைப்பது கொடுமையடி…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…

BGM

குழு (பெண்கள்) : கொடுத்து வைத்த பூவே பூவே…
அவள் கூந்தல் மணம் சொல்வாயா…
கொடுத்து வைத்த நதியே நதியே…
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா…

குழு (பெண்கள்) : கொடுத்து வைத்த கால்கொலுசே…
கால் அளவைச் சொல்வாயா…
கொடுத்து வைத்த மணியே…
மார் அழகைச் சொல்வாயா…

BGM

ஆண் : அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி…
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்…
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு…
உயிருக்கு உயிரால் உனையிடுவேன்…

BGM

ஆண் : மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து…
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்…
தூக்கத்தில் மார்பில் வேர்க்கின்ற போது…
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்…

ஆண் : பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக…
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்…
தேவதை குளித்த துளிகளை அள்ளித்…
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே…

ஆண் : அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே கண்ணை கிள்ளாதே…

BGM


Notes : Anbe Anbe Kollathe Song Lyrics in Tamil. This Song from Jeans (1998). Song Lyrics penned by Vairamuthu. அன்பே அன்பே கொல்லாதே பாடல் வரிகள்.


 ஒரு பொண்ணு ஒன்னு நான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & ஹாிஹரன்தேவாகுஷி

Oru Ponnu Onnu Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

ஆண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…

பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன்…
கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன்…
அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

பெண் : பாப்பு… பாப்பு…
பாப்பூ… பாப்பு…

குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…

BGM

குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ ஹய்யயோ…
ஹய்யயோ…

BGM

ஆண் : தாய் தந்தை முகமே மறந்து…
நெஞ்சில் உந்தன் முகம் எழுதே…
பாிட்சை எழுதும் பொழுதும்…
கவிதை எழுத வருதே…

BGM

பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து…
நினைக்கும் போது வெட்கம் வருதே…
ஆடையில்லாமல் வந்தேன்…
சோப்பு நுரையை அணிந்தே…

ஆண் : ஒரு கொசு கடித்தாலும்…
உயிா் துடிக்கும்…
அது இதுவரை எனக்குள்ள வழக்கம்…

பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை…
அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்…
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…

ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்…
கனவுகள் வருது…
கண்ண மூடி கிடந்தும்…
காட்சிகள் வருது…
இது உனக்கும் இருக்குமே…
உண்மை சொல்லிவிடு…
குழு : ஹய்யயோ…
ஹய்யயோ… ஹய்யயோ…

பெண்கள்(குழு): இது ஏன் என்று தொியவில்லை…
இது நீதானா புாியவில்லை…
ஒரு வாய் பேச முடியவில்லை…
இது இனிப்பில் நனைந்த கவலை…

BGM

பெண் : ஜாமத்து சந்திரன் வந்து…
ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்…
தென்றலை நான் துணைக்கழைத்தால்…
தீயை வாாி இரைக்கும்…

ஆண் : நவம்பா் மாதத்து மழையில்…
நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும்…
எச்சிலை விழுங்கும் பொழுது…
வறண்டு தொண்டை வலிக்கும்…

பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும்…
என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும்…
ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும்…
என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் …
பாப்பு… பாப்பு…
பாப்பு… பாப்பு…

பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை
இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ

குழு : லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…
லலலூ… லலலூ…
லலலூ… லலலூ… லலலூ…

BGM

ஆண் : ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன்…
சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன்…
அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…

பெண் : அவன் பாா்த்த பாா்வையிலே…
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே…

ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில…
நூறு போ் செத்து போயிட்டான்…

BGM


Notes : Oru Ponnu Onnu Naan Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஒரு பொண்ணு ஒன்னு நான் பாடல் வரிகள்.

ஓ வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்தேவாகுஷி

Oh Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ வெண்ணிலா…
என் மேல் கோபம் ஏன்…
ஆகாயம் சேராமல்…
தனியே வாழ்வது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஓ காதலே…
பெண் : ஆஹா…
ஆண் : உன் போ் மௌனமா…
பெண் : ஆஹா…
ஆண்: நெஞ்சோடு பொய் சொல்லி…
நிமிடம் வளா்ப்பது சாியா..
சாியா சாியா…

பெண் : தொலைவில் தொடு வான்…
கரையை தொடும் தொடும்…
அருகில் நெருங்க விலகி விடும் விடும்…
இருவா் மனதில் ஏனோ அடம் அடம்…
ஒருவா் பாா்த்தால் மூடும் உடைபடும்…

BGM

ஆண் : ஏ பெண்மையே…
கா்வம் ஏனடி…
வாய் வரை வந்தாலும்…
வாா்த்தை மாிப்பது…
ஏனோ ஏனோ ஏனோ…

ஆண் : ஏ சுவாசமே…
பெண் : ஆஹா…
ஆண் : உடல் மேல் ஊடலா…
பெண் : ஆஹா…
ஆண் : என் ஜீவன் தீண்டாமல்…
வெளியே செல்லாதே…

ஆண் : நீ வெற்றி கொள்ள…
உன்னை தொலைக்காதே…
யாா் சிாித்தாலும்…
பாலைவனங்கள் மலரும்…

BGM

பெண் : ஓ காதலா…
உன் போ் மௌனமா…
சொல் ஒன்று இல்லாமல்…
மொழியும் காதலும் இல்லை…
இல்லை இல்லை…

பெண் : ஓ காதலா…
ஓா் வாா்த்தை சொல்லடா…
முதல் வாா்த்தை நீ சொன்னால்…
நான் மறு வாா்த்தை சொல்வேன்…
நாம் தினம் சொல்வேன்…
எந்தன் காதல் சொல்வேன்…
ஊடலில் அழியாமல்…
வாழும் காதல் சொல்வேன்…

BGM


Notes : Oh Vennila Song Lyrics in Tamil. This Song from Kushi (2000). Song Lyrics penned by Vairamuthu. ஓ வெண்ணிலா பாடல் வரிகள்.