பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சினேகன் | அனுராதா ஸ்ரீராம் & கேசவ் வினோத் | எம்.எஸ்.ஸ்ரீகாந்த் | எட்டுத்திக்கும் பற |
Ushrukkul Un Pera Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வச்சேன்…
ஆண் : உன் பார்வை பட்ட நேரம்…
நான் வேர் அருந்த போனேன்…
உன் வேர்வ பட்டதால…
ஊர் அருந்த போனேனே…
பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்… ஹோ…
—BGM—
பெண் : நீ எனக்கு போதும்…
நான் நெறஞ்சு வழியுறேன்…
பூமி பந்த போல…
நான் தான சொழலுறேன்…
ஆண் : நத்த கூட்ட போல…
நான் உனக்குள் அடங்குறேன்…
சத்தமின்றி உன்ன…
நான் முழுசா முழுங்குறேன்…
பெண் : குலசாமி போலத்தான்…
என் முன்னால நிக்குற…
மரங்கொத்தி போலத்தான்…
என்ன நீ கொத்துற…
ஆண் : ஒரு கோழி குஞ்ச போல…
என்ன பொத்தி வைக்குற…
இந்த பாவி நெஞ்சுக்குள்ள…
சிறுவாட சேக்குற…
பெண் : வெள்ளந்தி பாசத்த…
வெல பேச யாருமில்லை…
பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
—BGM—
பெண் : உள்ளங்கை ரேகை…
உன் பேர சொல்லுதே…
உள்ளுக்குள்ள வெக்கம்…
என்னை குத்தி கொல்லுதே…
ஆண் : உள்ளங்காலு நிழலா…
என்ன ஒட்ட வச்சுட்ட…
உசுர மட்டும் பிச்சு…
நீ வெளிய நட்டுட்ட…
பெண் : ஆகாயம் போல நீ…
எங்கயும் நிக்குற…
அப்பப்போ என்ன நீ…
பூ பூக்க வைக்குற…
ஆண் : அடி நீயும் நானும் வாழ…
ஒரு கோவில் கட்டுவேன்…
உன்ன யாரு தீண்டினாலும்…
நான் நின்னு வெட்டுவேன்…
பெண் : என் சாமி நீதான்டா…
உன்னவிட்டு போகமாட்டேன்…
ஆண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
பெண் : உன்மேல மட்டும்தான் ஆச வச்சேன்…
என்கிட்டே என்ன நான் பேச வெச்சேன்…
ஆண் : உன் பார்வை பட்ட நேரம்…
நான் வேர் அருந்த போனேன்…
உன் வேர்வ பட்டதால…
ஊர் அருந்த போனேனே…
பெண் : உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்…
உன் மூச்சில் என் மூச்ச சேர்த்து தச்சேன்…
Notes : Ushrukkul Un Pera Song Lyrics in Tamil. This Song from Ettuthikkum Para (2019). Song Lyrics penned by Snehan. உசுருக்குள் உன் பேர பாடல் வரிகள்.