Tag Archives: எஸ். பி. பாலசுப்ரமணியம்

S. P. Balasubrahmanyam, a legendary Indian singer, actor, and music director with a versatile voice, recorded over 40,000 songs in his 5-decade career.

His contributions to the Indian music industry have won him numerous awards and accolades, making him one of the most respected and beloved figures in the industry. Though he passed away in September 2020, his rich legacy and enduring impact on Indian music will continue to be celebrated for generations to come.

thannaane-thamara-poo-song-lyrics-in-tamil

தன்னானே தாமரைப்பூ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராபரணிபெரியண்ணா

Thannaane Thamara Poo Song Lyrics in Tamil


குழு : பச்சோல கீத்துகுள்ள…
பதுங்கி நிக்குற பசங்களுக்கு…
மறைஞ்சி நிக்குற பருவம் வந்துருச்சு…
மாமனுக்கு செய்யும் சீரும் செலவும் வந்துருச்சு…

BGM

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…
ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…
தாவணி வாங்கிவாங்க…

பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வந்திடுங்க மேளம் கொட்டி…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள…
தள்ளாடும் தண்ணியில…
ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள…
தாவணி வாங்கிவாறேன்…

BGM

ஆண் : கொட்டுற பனியில நானும் உனக்கு…
கொடையா மாறட்டுமா…
உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல…
குளிரும் காயட்டுமா…

பெண் : உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சு…
ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு…

ஆண் : கையில அணைக்கிற போது…
நீ துள்ளி குதிக்கிற மானு…

பெண் : ஆத்துல குளிக்கிற போது…
நீ ஆள கடிக்கிற மீனு…

ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ…
நான் எடுத்து எடுத்து தழுவ…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…

ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள…
தாவணி வாங்கிவாறேன்…

BGM

பெண் : தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு…
அத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு…

ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி…
வெளக்கா ஏத்தட்டுமா…
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி…
வெசயம் சொல்லட்டுமா…

பெண் : மாமன் தரனும் சீரு…
ரெண்டு மாங்கா தட்டு தோடு…

ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு…
உன் தேவை என்ன கேளு…

பெண் : வெடல புள்ள நானும்…
ஒரு வெவரம் கேட்க வேணும்…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள…
தள்ளாடும் தண்ணியில…

பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே மாமா…
தாவணி வாங்கிவாங்க…

ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வருவேனே மேளம் கொட்டி…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா…
தள்ளாடும் தண்ணியில…

ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே புள்ள…
தாவணி வாங்கிவாறேன்…


Notes : Thannaane Thamara Poo Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Vasan. தன்னானே தாமரைப்பூ பாடல் வரிகள்.


என்னவென்று சொல்வதம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாராஜகுமாரன்

Ennavendru Solvathamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

BGM

ஆண் : தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்…
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி கருங்கூந்தலோ…
முத்தாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்பிறை…
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை…

ஆண் : வண்ணப் பூவின் வாசம்…
வந்து நேசம் பேசும்…
அவள் நான் பார்க்க தாங்காமல் நாணுவாள்…
புதுப் பூக்கோலம்தான் காலில் போடுவாள்…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன் நிலா… ஆஹாஹா…

BGM

ஆண் : ஆஹா… கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்…
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்…
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்…
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்…

ஆண் : அதிகாலை ஊற்று…
அசைந்தாடும் நாற்று…
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்…
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…

ஆண் : அவள் வான்மேகம் காணாத பால்நிலா…
இந்த பூலோகம் பாராத தேன்நிலா…

ஆண் : என்னவென்று சொல்வதம்மா…
வஞ்சி அவள் பேரழகை…
சொல்ல மொழி இல்லையம்மா…
கொஞ்சி வரும் தேரழகை…

ஆண் : அந்தி மஞ்சள் நிறத்தவளை…
என் நெஞ்சில் நிலைத்தவளை…
நான் என்னென்று சொல்வேனோ…
அதை எப்படிச் சொல்வேனோ…


Notes : Ennavendru Solvathamma Song Lyrics in Tamil. This Song from Rajakumaran (1994). Song Lyrics penned by R. V. Udayakumar. என்னவென்று சொல்வதம்மா பாடல் வரிகள்.


தேடும் கண் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Thedum Kann Paarvai Song Lyrics in Tamil


ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ… ஓ…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு…
வரும் பாதை பார்த்திரு…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

BGM

ஆண் : காண வேண்டும் சீக்கிரம்…
என் காதல் ஓவியம்…
வாராமலே என்னாவதோ…
என் ஆசை காவியம்…

பெண் : வாழும் காலம் ஆயிரம்…
நம் சொந்தம் அல்லவா…
கண்ணாளனே நல்வாழ்த்துகள்…
என் பாட்டில் சொல்லவா…

ஆண் : கனிவாய் மலரே…
உயிர் வாடும்போது ஊடலென்ன…
பாவம் அல்லவா…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

BGM

ஆண் : தேடி தேடி பார்க்கிறேன்…
என் கால்கள் ஓய்ந்ததே…
காணாமலே இவ்வேளையில்…
என் ஆவல் தீருமோ…

பெண் : காற்றில் ஆடும் தீபமோ…
உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே…
என் மேனி வண்ணமே…

ஆண் : பிரிந்தோம்… இணைவோம்…

பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும்…
வாசல் தேடி வா…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ…

பெண் : வெறும் மாயமாகுமோ…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க…

பெண் : துடிக்க…


Notes : Thedum Kann Paarvai Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தேடும் கண் பார்வை பாடல் வரிகள்.


வா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Vaa Vennila Song Lyrics in Tamil


ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : முகம் பார்க்க நானும்…
முடியாமல் நீயும்…
திரை போட்டு உன்னை…
மறைத்தாலே பாவம்…

ஆண் : ஒரு முறையேனும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : திருமுகம் காணும்… ஏஹே… ஏஹே…

பெண் : ஏஹே… ஏஹே…

ஆண் : வரம் தரம் வேண்டும்… ஓ ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : எனக்கது போதும்…

பெண் : யே…

ஆண் : எனைச்சேர… ஆஆஆஆஆஆஆஹா…

ஆண் : எனைச்சேர எதிர்பார்த்து…
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : மலர் போன்ற பாதம்…
நடக்கின்ற போது…
நிலம் போல உன்னை…
நான் தாங்க வேண்டும்…

ஆண் : இடையினில் ஆடும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : உடையென நானும்… ஏ… ஏ…

பெண் : ஏ… ஏ…

ஆண் : இணை பிரியாமல்… ஓ… ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : துணை வர வேண்டும்… ஏ…

ஆண் : உனக்காக… ஆஆஆஆஆஆஹா…
உனக்காக பனிக் காற்றை…
தினம் தூது போக வேண்டினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…


Notes : Vaa Vennila Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. வா வெண்ணிலா பாடல் வரிகள்.


மரண மாஸ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்எஸ். பி. பாலசுப்ரமணியம் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்பேட்ட

Marana Mass Song Lyrics in Tamil


வசனம் : பாக்க தான போற…
இந்த காளியோட ஆட்டத்த…

BGM

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

BGM

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…

ஆண் : கெத்தா நடந்துவரான்…
கேட் எல்லாம் கடந்துவரான்…
தா வெடியா ஒன்ன போடு தில்லால…

ஆண் : ஸ்லீவ்வ சுருட்டிவரான்…
காலரதான் பிரட்டிவரான்…
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வுழனும்…

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடுவீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…

BGM

ஆண் : எவன்டா மேல…
எவன்டா கீழ…
எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு…

ஆண் : முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு…
தலையில் ஏத்தி வச்சு கொண்டாடும் ஊரு…

ஆண் : நியாயம் இருந்து எதிர்த்து வரியா…
உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்…
கால இழுத்து உயர நினைச்சா…
கெட்ட பையன் சார் இடியா இடிக்கும்…

ஆண் : கெத்தா நடந்துவரான்…
கேட் எல்லாம் கடந்துவரான்…
தா வெடியா ஒன்ன போடு தில்லால…

ஆண் : ஸ்லீவ்வ சுருட்டிவரான்…
காலரதான் பிரட்டிவரான்…
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
அதுக்கு அவன்தான் பொறந்து வரணும்…

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வுழனும்…

ஆண் : தட்டலாட்டம் தாங்க…
தர்லாங்க சாங்க…
உள்ளார வந்தானா பொல்லாத வேங்க…

ஆண் : திமிராமா வாங்க…
பல்பாயிடு வீங்க…
மொறப்போடு நிப்பான முட்டாம போங்க…

BGM

ஆண் : இட்டால் பத்திரி… சொல்லு புத்திரி…
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி… சல்பிலோ…

BGM

ஆண் : இட்டால் பத்திரி… சொல்லு புத்திரி…
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி… சல்பிலோ…

BGM

குழு : மரணம் மாஸ் மரணம்…
டௌப் தரணும்…
ஸ்டெப்பு முறையா வந்துவுழனும்…


Notes : Marana Mass Song Lyrics in Tamil. This Song from Petta (2019). Song Lyrics penned by Vivek. மரண மாஸ் பாடல் வரிகள்.


சத்தம் இல்லாத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்பரத்வாஜ்அமர்க்களம்

Satham Illatha Song Lyrics in Tamil


பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

BGM

ஆண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

ஆண் : உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்…
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்…
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்…
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்…

ஆண் : இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்…
இளமை கெடாத மோகம் கேட்டேன்…
பறந்து பறந்து நேசம் கேட்டேன்…
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்…

ஆண் : புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்…
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்…
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்…
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்…

ஆண் : நிலவில் நனையும் சோலை கேட்டேன்…
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்…
நடந்து போக நதிக்கரை கேட்டேன்…
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்…

ஆண் : தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்…
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்…
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்…
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்…

ஆண் : பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்…
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்…
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்…
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்…

ஆண் : உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்…
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்…
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்…
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்…

ஆண் : எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்…
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்…
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்…
காமம் கடந்த யோகம் கேட்டேன்…

ஆண் : சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்…
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்…
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்…
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்…

ஆண் : பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்…
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்…
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்…
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்…

ஆண் : மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்…
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்…
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்…
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்…

ஆண் : விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்…
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்…
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்…
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்…

ஆண் : பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்…
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்…
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்…
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்…

ஆண் : பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்…
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்…
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்…
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்…

ஆண் : சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்…
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்…
மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன்…
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்…
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்…

ஆண் : இடியைத் தாங்கும் தோளை கேட்டேன்…
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்…
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்…
தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன்…

ஆண் : சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்…
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்…
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்…
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்…

ஆண் : சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்…
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்…
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்…
போலியில்லாத புன்னகை கேட்டேன்…

ஆண் : தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்…
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்…
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்…
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்…

ஆண் : காசே வேண்டாம் கருணை கேட்டேன்…
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்…
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்…
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்…

ஆண் : இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை…
இதிலே எதுவும் நடக்கவில்லை…
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று…
மரணம் மரணம் மரணம் கேட்டேன்…


Notes : Satham Illatha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சத்தம் இல்லாத பாடல் வரிகள்.


தில் தில் தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Dhil Dhil Dhil Song Lyrics in Tamil


ஆண் : தில் தில் தில் தில்… மனதில்…
ஒரு தல் தல் தல் தல்… காதல்…

ஆண் : தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

BGM

பெண் : வளர்ந்த நாள் முதல் கார்குழலும்…
அழைக்குதே உன்னை பூச்சூட…

ஆண் : மயக்கம் ஏனடி பூங்குயிலே…
தவிக்கிறேன் அடி நான் கூட…

பெண் : விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்…
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்…

ஆண் : கைகள் படாத இடம்தான் இப்போது…
ஆசை விடாத சுகம்தான் அப்போது…

பெண் : ஏக்கம் ஏதோ கேட்கும்…

ஆண் : தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

BGM

ஆண் : மழைக்கு ஏங்கிய மாந்தளிரே…
உனக்கு நான் சிறு தூறல்தான்…

பெண் : வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க…
உனக்கு நான் மலைச்சாரல்தான்…

ஆண் : அடுத்த கட்டம் நடப்பதெப்போ…
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ…

பெண் : மாலை இடாமல் வசந்தம் வராது…
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது…

ஆண் : போதும் போதும் ஊடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

ஆண் : ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

பெண் : ஆடல் பாடல் கூடல்…


Notes : Dhil Dhil Dhil Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தில் தில் தில் பாடல் வரிகள்.


வளையோசை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & லதா மங்கேஷ்கர்இளையராஜாசத்யா

Valai Osai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

BGM

ஆண் : ஒரு காதல் கடிதம் விழி போடும்…
உன்னை காணும் சபலம் வர கூடும்…

பெண் : நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்…
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்…

ஆண் : கண்ணே என் கண்பட்ட காயம்…
கை வைக்க தானாக ஆறும்…

பெண் : முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்…
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

BGM

பெண் : உன்னை காணாதுருகும் நொடி நேரம்…
பல மாதம் வருடம் என மாறும்…

ஆண் : நீங்காத ரீங்காரம் நான்தானே…
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே…

பெண் : ராகங்கள் தாளங்கள் நூறு…
ராஜ உன் பேர் சொல்லும் பாரு…

ஆண் : சிந்தாமல் நின்றாடும் செந்தேனே…
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…

ஆண் : சின்ன பெண் பெண்ணல்ல…
வண்ண பூந்தோட்டம்…

பெண் : கொட்டட்டும் மேளம்தான்…
அன்று காதல் தேரோட்டம்…

ஆண் : வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது…
குளு குளு தென்றல் காற்றும் வீசுது…

பெண் : சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது…
எங்கும் தேகம் கூசுது…


Notes : Valai Osai Song Lyrics in Tamil. This Song from Sathya (1988). Song Lyrics penned by Vaali. வளையோசை பாடல் வரிகள்.


கேளடி கண்மணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுது புது அர்த்தங்கள்

Keladi Kanmani Song Lyrics in Tamil


BGM

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

ஆண் : நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…

BGM

ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது…
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்…
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா…
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்…

ஆண் : கானல் நீரால் தீராத தாகம்…
கங்கை நீரால் தீர்ந்ததடி…
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை…
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…

BGM

ஆண் : நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்…
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்…
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா…

ஆண் : ஏதோ ஏதோ ஆனந்த ராகம்…
உன்னால்தானே உண்டானது…
கால்போன பாதைகள் நான் போன போது…
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்…
ஓர் கதையை உனக்கென நான் கூற…

ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி…
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…


Notes : Keladi Kanmani Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. கேளடி கண்மணி பாடல் வரிகள்.


சிப்பி இருக்குது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்வறுமையின் நிறம் சிவப்பு

Sippi Irukkuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : தந்தன தத்தன தையன தத்தன…
தனன தத்தன தான தையன தந்தானா…

ஆண் : ஆஹான்… சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி…

பெண் : லல லலலல லல லலலல லல…
லாலல லாலல லலலா லாலாலா…

ஆண் : சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி…

ஆண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி…

பெண் : ம்ம்ம்…

ஆண் : சந்தங்கள்…

பெண் : நானா னா…

ஆண் : நீயானால்…

பெண் : ரி ச ரி…

ஆண் : சங்கீதம்…

பெண் : ம்ம்ம் ஹம்ம் ஹ்ம்ம்…

ஆண் : நானாவேன்…
சந்தங்கள் நீயானால்…
சங்கீதம் நானாவேன்…

ஆண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி ஹாஹா…

BGM

பெண் : நனன நானா…

ஆண் : கம் ஆன் சே இட் ஒன்ஸ் அகைன்…

பெண் : நனன நானா…

ஆண் : ம்ம்ம்… சிரிக்கும் சொர்க்கம்…

பெண் : தர நன தரர நானா…

ஆண் : தங்க தட்டு எனக்கு மட்டும்… ஓகே…

பெண் : தானே தானே தானா…

ஆண் : அப்படியா… தேவை பாவை பார்வை…

பெண் : தத்தன தன்னா…

ஆண் : நினைக்க வைத்து…

பெண் : நான லல லலல லாலா…

ஆண் : நெஞ்சில் நின்று நெருங்கி வந்து…

பெண் : நநன நநனனா…
தன னா லல லா தன னா…

ஆண் : பியூட்டிபுல்… மயக்கம் தந்தது யார்…
தமிழோ அமுதோ கவியோ…

ஆண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி…

ஆண் : சந்தங்கள்…

பெண் : ஆஹாஹா…

ஆண் : நீயானால்…

பெண் : ஆஹாஹா…

ஆண் : சங்கீதம்…

பெண் : ஆஹாஹா…

ஆண் : நானாவேன்…

பெண் : ஆஹாஹா…

BGM

பெண் : இப்போ பார்க்கலாம்…
தனன தனன நானா…

ஆண் : ம்ம்ம்… மழையும் வெயிலும் என்ன…

பெண் : தன்ன நானா தனன நன்னா நன்னா…

ஆண் : உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன…

பெண் : தனன நான தனன நான தன்னா…

ஆண் : அம்மாடியோ…
தனன நானா தனன நானா தானா… ஆ…
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்…

பெண் : சபாஷ்…

ஆண் : கவிதை உலகம் கெஞ்சும்…
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்…

பெண் : ம்ம்ஹ்ம்ம்…

ஆண் : கொடுத்த சந்தங்களில்…
என் மனதை நீ அறிய…
நான் உரைத்தேன்…

ஆண் : கொடுத்த சந்தங்களில்…
என் மனதை நீ அறிய…
நான் உரைத்தேன்…

BGM

பெண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை…
பாடி கலந்திருப்பது எப்போது…

பெண் : சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை…
பாடி கலந்திருப்பது எப்போது…

ஆண் : ம்ம் ஆஹாஹா…
லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்… ஆஹாஹா

ஆண் & பெண் : லலலா லலலா…
லலலா லலலா…


Notes : Sippi Irukkuthu Song Lyrics in Tamil. This Song from Varumayin Niram Sivappu (1980). Song Lyrics penned by Kannadasan. சிப்பி இருக்குது பாடல் வரிகள்.