Tag Archives: இளையராஜா

amma-nee-summandha-pillai-song-lyrics

அம்மா நீ சுமந்த பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil


ஆண் : அம்மா…

BGM

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…

ஆண் : அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது….
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…

ஆண் : மீண்டும் இந்த மண்ணில் வந்து…
தோன்ற வேண்டுமே…
வாழ்க வாழ்க மகனே என்று…
வாழ்த்த வேண்டுமே…
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…


Notes : Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் வரிகள்.


என்னை தாலாட்ட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்இளையராஜாகாதலுக்கு மரியாதை

Ennai Thalatta Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

BGM

ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள்…
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்…
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்…

ஆண் : இரவும் பகலும் என்னை வாட்டினாள்…
இதயம் அவள் பெயாில் மாற்றினாள்…
காதல் தீயை வந்து மூட்டினாள்…

ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத…
நான் தூங்க மடி ஒன்று தாராத…
தாகங்கள் தாபங்கள் தீராத…
தாளங்கள் ராகங்கள் சேராத…
வழியோரம் விழி வைக்கிறேன்…

BGM

ஆண் : எனது இரவு அவள் கூந்தலில்…
எனது பகல்கள் அவள் பாா்வையில்…
காலம் எல்லாம் அவள் காதலில்…

ஆண் : கனவு கலையவில்லை கண்களில்…
இதயம் துடிக்கவில்லை ஆசையில்…
வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில்…

ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்…
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்…
நாளைக்கு நான் காண வருவாளோ…
பாதைக்கு நீரூற்றி போவாளோ…
வழியோரம் விழி வைக்கிறேன்…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
இல்லை ஏமாற்றம் தருவாளோ…

ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா…
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா…
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே…

ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ…
வருவாளோ…

ஆண் : நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ…
தருவாளோ…

ஆண் : தங்க தேராட்டம் வருவாளோ… ஓஓ…
வருவாளோ…

ஆண் : இல்லை ஏமாற்றம் தருவாளோ…
தருவாளோ…


Notes : Ennai Thalatta Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. என்னை தாலாட்ட பாடல் வரிகள்.

இது சங்கீத திருநாளோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரிணிஇளையராஜாகாதலுக்கு மரியாதை

Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil


BGM

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

பெண் : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்…
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்…

குழு (பெண்கள்) : செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள்…

பெண் : தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்…
உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள்…

குழு (பெண்கள்) : அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்…

பெண் : பூவெல்லாம் இவள் போல அழகில்லை…

குழு (பெண்கள்) : பூங்காற்று இவள் போல சுகமில்லை…

பெண் : இது போல சொந்தங்கள் இனி இல்லை…

குழு (பெண்கள்) : எப்போதும் அன்புக்கு அழிவில்லை…
இவள்தானே நம் தேவதை…

பெண் : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

BGM

பெண் : நடக்கும் நடையில் ஒரு தேர்வலம்…
சிரிக்கும் அழகில் ஒரு கீர்த்தனம்…

குழு (பெண்கள்) : கண்ணில் மின்னும் ஒரு காவியம்…

பெண் : மனதில் வரைந்து வைத்த ஓவியம்…
நினைவில் நனைந்து நிற்கும் பூவனம்…

குழு (பெண்கள்) : என்றும் எங்கும் இவள் ஞாபகம்…

பெண் : இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்…
இரு பக்கம் காக்கின்ற கரையாவேன்…
இவளாடும் பொன்னூஞ்சல் நானாவேன்…
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்…
எப்போதும் தாலாட்டுவேன்…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…

குழு (பெண்கள்) : சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்…
முத்த மழை கன்னம் விழ நனைந்தாளே…
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே…

குழு (பெண்கள்) : இது சங்கீத திருநாளோ…
புது சந்தோஷம் வரும் நாளோ…
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ… ஓஓ…
சிறு பூவாக மலர்ந்தாளோ…


Notes : Idhu Sangeetha Thirunalo Song Lyrics in Tamil. This Song from Kadhalukku Mariyadhai (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. இது சங்கீத திருநாளோ பாடல் வரிகள்.

இளங்காத்து வீசுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்இளையராஜாபிதாமகன்

Elangaathu Veesudhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

BGM

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…
வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…
புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

பெண் : பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்…
நெஞ்சை அள்ளும் வண்ணத்துணி போல…
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சி இருக்கு…
உறவு எல்லாம் அமைஞ்சி இருக்கு…

ஆண் : அள்ளி அள்ளித் தந்து உறவாடும்…
அன்னமடி இந்த நிலம் போல…
சிலருக்குத்தான் மனசு இருக்கு…
உலகம் அதில் நிலைச்சு இருக்கு…

ஆண் : நேத்து தனிமையில போச்சு…
யாரும் துணை இல்ல…
யாரோ வழித்துணைக்கு வந்தால்…
ஏதும் இணை இல்லை…

பெண் : உலகத்தில் எதுவும்…
தனிச்சு இல்லையே…
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல…

ஆண் : இளங்காத்து வீசுதே…
இசை போல பேசுதே…

பெண் : வளையாத மூங்கிலில்…
ராகம் வளைஞ்சு ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…

BGM

ஆண் : ஓ… மனசுல என்ன ஆகாயம்…
தினம்தினம் அது புதிர் போடும்…
ரகசியத்தை யாரு அறிஞ்சா…
அதிசயத்தை யாரு புரிஞ்சா…

பெண் : விதை விதைக்கிற கைதானே…
மலர் பறிக்குது தினம்தோறும்…
மலர் தொடுக்க நாரை எடுத்து…
யார் தொடுத்தா மாலையாச்சு…

ஆண் : ஆலம் விழுதிலே ஊஞ்சல்…
ஆடும் கிளி எல்லாம்…
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்…
தாலாட்டு கேட்டிடாமலே…
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல…

பெண் : கரும்பாறை மனசுல…
மயில் தோகை விரிக்குதே…
மழைச்சாரல் தெரிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…

ஆண் : வானவில் குடையும் புடிக்குதே…
புல்வெளி பாதை விரிக்குதே…
வானவில் குடையும் புடிக்குதே…

ஆண் : மணியின் ஓசை கேட்டு…
மனக்கதவு திறக்குதே…

பெண் : புதிய தாளம் போட்டு…
உடல் காற்றில் மிதக்குதே…

BGM


Notes : Elangaathu Veesudhey Song Lyrics in Tamil. This Song from Pithamagan (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. இளங்காத்து வீசுதே பாடல் வரிகள்.


உன்னை விட

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & ஸ்ரேயா கோஷல்இளையராஜாவிருமாண்டி

Unna vida Song Lyrics in Tamil


பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

BGM

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒன்னும் இல்ல ஒன்னும் இல்ல…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகிட…
யாருமில்ல யாருமில்ல…

பெண் : வாக்கபட கிடச்சான் விருமாண்டி…
சாட்சி சொல்ல சந்திரன் வருவான்டி…
சாதி சனம் எல்லாமும் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

பெண் : என்னை விட உன்ன சரிவர புரிஞ்சிக்க…
யாருமில்ல எவளுமில்ல…

ஆண் : உன்னைவிட…

பெண் : என்னைவிட…

BGM

பெண் : அல்லி கொடிய காத்து அசைக்குது…
அசையும் குளத்து உடம்பு கூசுது…
புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது…

ஆண் : நிலவில் காயும் வேட்டி சேலையும்…
நம்மை பார்த்து சோடி சேருது…
சேர்த்து வச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது…

பெண் : என்ன புது தாகம்…
அனலாகுதே என் தேகம்…
யாரு சொல்லி தந்து வந்தது…
காணா கனா வந்து கொல்லுது…
இதுக்கு பேரு தான் மோட்சமா…
மோட்சமா… மோட்சமா…

BGM

ஆண் : காட்டு வழி காளைங்க கழுத்து மணி…
கேட்கையில நமக்கது கோயில் மணி…
ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி…
போர்த்திகிற நமக்கது மூடு துணி…

பெண் : உன்னைவிட…

BGM

பெண் : உன் கூட நான் கூடி இருந்திட…
எனக்கு ஜென்மம் ஒண்ணு போதுமா…
நூறு ஜென்மம் வேணும்…
அத கேட்குறேன் சாமியே…

ஆண் (வசனம்) : என்ன கேட்குற சாமிய…

பெண் (வசனம்) : நூறு ஜென்மம் உன் கூட…

ஆண் (வசனம்) : போதுமா…

ஆண் : நூறு ஜென்மம் நமக்கு போதுமா…
வேற வரம் ஏதும் கேட்போமா…
சாகா வரம் கேட்போம்…
அந்த சாமிய… அந்த சாமிய…

பெண் : காத்தா அலைஞ்சாலும்…
கடலாக நீ இருந்தாலும்…

ஆண் : ஆகாசமா ஆன போதிலும்…
என்ன உரு எடுத்த போதிலும்…
சேர்ந்தே தான் பொறக்கணும்…
இருக்கணும் கலக்கணும்…

பெண் : உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது…
ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை எவளுமில்லை…
வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி…
வாழ்த்து சொல்ல சந்திரன் வருவாண்டி…

பெண் : சாதி சனம் எல்லாம் அவன்தான்டி…
கேட்ட வரம் உடனே தந்தான்டி…

ஆண் : உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட…
யாருமில்லை…

பெண் : என்னைவிட…

ஆண் : உன்னைவிட…


Notes : Unna vida Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Kamal Haasan. உன்னை விட பாடல் வரிகள்.


ராசாத்தி உன்ன

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Rasathi Unna Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

ஆண் : பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : கண்ணுக்கொரு வண்ணக்கிளி…
காதுக்கொரு கானக்குயில்…
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா…

ஆண் : தத்தித் தவழும் தங்கச் சிமிழே…
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே…
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்…
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு…
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு…
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…

BGM

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : மங்கை ஒரு கங்கை என…
மன்னன் ஒரு கண்ணன் என…
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன…

ஆண் : அத்தை மகளோ… மாமன் மகளோ…
சொந்தம் எதுவோ… பந்தம் எதுவோ…
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட…
அம்மாடி நீதான் இல்லாத நானும்…
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்…
தாங்காத ஏக்கம் போதும் போதும்…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு…
பொன்மானே ஒன்னத் தேடுது…

ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு…
காத்தாடி போலாடுது…
காத்தாடி போலாடுது…


Notes : Rasathi Unna Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. ராசாத்தி உன்ன பாடல் வரிகள்.


மண்ணில் இந்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பாவலர் வரதராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகேளடி கண்மணி

Mannil Indha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

BGM

ஆண் : வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி…
சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்…
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…

ஆண் : கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்…
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

BGM

ஆண் : முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்…
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்…
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்…
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்…

ஆண் : எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி…
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி…
முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்…
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…


Notes : Mannil Indha Song Lyrics in Tamil. This Song from Keladi Kannmani (1990). Song Lyrics penned by Pavalar Varadarajan. மண்ணில் இந்த பாடல் வரிகள்.


என்ன சத்தம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுன்னகை மன்னன்

Enna Satham Intha Neram Song Lyrics in Tamil


ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…

ஆண் : கன்னியின் கழுத்தை பார்த்தால்…
மணமாகவில்லையே…
காதலன் மடியில் பூத்தாள்…
ஒரு பூ போலே…

ஆண் : மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு…
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு…
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள்…
ஒரு கோலம் போடுதோ…
தன்னிலை மறந்த பெண்மை…
அதை தாங்காதோ…

ஆண் : உதட்டில் துடிக்கும் வார்த்தை…
அது உலர்ந்து போனதோ…
உள்ளங்கள் துடிக்கும் ஓசை…
இசை ஆகாதோ…

ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்…
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்…
இளம் காதல் மான்கள்…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…


Notes : Enna Satham Intha Neram Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. என்ன சத்தம் இந்த நேரம் பாடல் வரிகள்.


நிலாவே வா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமௌன ராகம்

Nilavae Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…

BGM

ஆண் : காவேரியா கானல் நீரா…
பெண்ணே என்ன உண்மை…
முள்வேலியா முல்லைப்பூவா…
சொல்லு கொஞ்சம் நில்லு…

ஆண் : அம்மாடியோ நீ தான்…
இன்னும் சிறு பிள்ளை…
தாங்காதம்மா நெஞ்சம்…
நீயும் சொன்ன சொல்லை…

ஆண் : பூந்தேனே நீ தானே…
சொல்லில் வைத்தாய் முள்ளை…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…

BGM

ஆண் : பூஞ்சோலையில் வாடைக்காற்றும் வாட…
சந்தம் பாட…
கூடாதென்று கூறும் பூவும் ஏது…
மண்ணின் மீது…

ஆண் : ஒரே ஒரு பார்வை…
தந்தால் என்ன தேனே…
ஒரே ஒரு வார்த்தை…
சொன்னால் என்ன மானே…

ஆண் : ஆகாயம் தாங்காத…
மேகம் ஏது கண்ணே…

ஆண் : நிலாவே வா செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…
எனை நீ தான் பிரிந்தாலும்…
நினைவாலே அணைப்பேன்…

ஆண் : நிலாவே வா…
செல்லாதே வா…
எந்நாளும் உன்…
பொன்வானம் நான்…


Notes : Nilavae Vaa Song Lyrics in Tamil. This Song from Mouna Ragam (1986). Song Lyrics penned by Vaali. நிலாவே வா பாடல் வரிகள்.


என் இனிய பொன் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூடு பனி

Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…

—BGM—

ஆண் : பன்னீரைத் தூவும் மழை…
ஜில்லென்ற காற்றின் அலை…
சேர்ந்தாடும் இந்நேரமே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : என் நெஞ்சில் என்னென்னவோ…
எண்ணங்கள் ஆடும் நிலை…
என் ஆசை உன்னோரமே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம்…
ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்…
புரியாதோ என் எண்ணமே அன்பே…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…

—BGM—

ஆண் : பொன்மாலை நேரங்களே…
என் இன்ப ராகங்களே…
பூவான கோலங்களே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : தென் காற்றின் இன்பங்களே…
தேனாடும் ரோஜாக்களே…
என்னென்ன ஜாலங்களே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : கண்ணோடு தோன்றும்…
சிறு கண்ணீரில் ஆடும்…
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்…
இது தானே என் ஆசைகள் அன்பே…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…


Notes : Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil. This Song from Moodu Pani (1980). Song Lyrics penned by Gangai Amaran. என் இனிய பொன் நிலாவே பாடல் வரிகள்.