Tag Archives: அம்மா பாடல்கள்

அன்பிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Anbile Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…

ஆண் : கருவில் சுமந்த அவளின் பாரம்…
இறக்கி வைக்க இதுவே நேரம்…
சரியும் தவறும் கடந்து போகும்…
எரியும் உலகில் எதுதான் மீதம்…
அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம்…

ஆண் : தந்தானே தானனனே…
தந்தானே தானனனே…

BGM

ஆண் : அன்னை அவள் உதிரத்திலே தோன்றுகின்ற உடல்களெல்லாம்…
வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன…
பாவம் எனும் ஒரு கரையில் நீந்துகின்ற உயிர்களெல்லாம்…
ஞானம் எனும் மறு கரையில் சேர்வது என்ன…

ஆண் : நெஞ்சிலே துறவு கொண்டால் நீ நிம்மதி தேடி வரும்…
உண்மையது தெரிந்துவிட்டால் உன் உள்ளமே போதிமரம்…

ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும்…

ஆண் : தந்தனே தானனனே… தந்தனே தானனனே…

BGM

ஆண் : நல்லதென நினைப்பதெல்லாம் அப்படியே இருப்பதில்லை…
கெட்டெதென ஒதுக்கியவை மறப்பது இல்லை…
கார் கொடுத்த முடியிருந்தும் பேச ஒரு வார்த்தையில்லை…
மூடிவிட்ட வார்த்தை எல்லாம் போவது இல்லை…

ஆண் : உள்ளமே பழுதடைந்தால் தூங்கிடவும் முடிவது இல்லை…
நாடி நின்ற உடல் மறையும் நற்கருணை அழிவது இல்லை…

ஆண் : அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம்…
அன்பினால் மனித குலம்…
கண்டதே கடவுள் முகம்…
தண்ணீரில் உடைந்த உள்ளம்…
முள்ளிலே மலர்ந்து விடும்…

ஆண் : இருட்டில்தானே ஒளியும் இருக்கும்…
அழுக்கில் கூட புனிதம் பிறக்கும்…
வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும்…
வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும்…

ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும்…

ஆண் : தந்தனே தானனனே… தந்தனே தானனனே…


Notes : Anbile Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. அன்பிலே பாடல் வரிகள்.


அம்மாவ நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Ammaava Naan Song Lyrics in Tamil


ஆண் : அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே…

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவே…

ஆண் : அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
எங்க ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

BGM

ஆண் : வானம் பொழியுது பூமி விளையுது என்றானே…
அத சொன்னவனதான் நல்லவன் என்று சொன்னானே…
வெளஞ்சதெல்லாம் எவன் ஒருத்தன் தின்னானே…
அத கேட்டவனதான் கெட்டவன் என்று சொன்னானே…

ஆண் : கட்டபொம்மன் சொன்னதெல்லாம் செய்யுறவன் கெட்டவனா…
நியாயமா நீங்க சொல்லுங்கோ…

ஆண் : அட அண்ணாச்சியே ஆளுக்கொரு நீதியில்ல… டோய்…
அட எந்நாளுமே நல்லதுக்கு ஜாதியில்ல… டோய்…

ஆண் : நா உள்ளதையும் நல்லதையும்…
சொல்லிட எனக்கு பிறவி கொடுக்கும்…

ஆண் : அம்மாவ… அம்மாவ…
குழு : அம்மாவ நான்…
ஆண் : கால தொட்டு கும்மிடனும் டோய்…
குழு : அட ஆத்தாவ நான்…
ஆண் : கோயில் கட்டி கும்மிடனும் டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே…

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

BGM

ஆண் : மச்சி ஊட்டுக்காரன் துட்டு வீட்டுக்காரன் பாக்குறியே…
சுவாமி உச்சந் தலையில வச்ச எழுத்த நீ சொல்லுறியே…

ஆண் : ஏழை பணக்காரன் ஸ்வாமியிலும் உண்டு பாக்கிறியா…
இந்த மேடு பள்ளத்துக்கு காரணம் யாருனு கேட்குறியா…

ஆண் : அரச மர புள்ளையாரு…
ஆண்டியாக நிக்குறாரு…
யாருடா எழுதி வச்சது…

ஆண் : அங்க வெண்ணை வடியும்…
புல்லாங்குழல் கண்ணன் முகத்துல… டோய்…
இங்க எண்ணை வடியும்…
சுப்பிரமணி அண்ணன் முகத்துல… டோய்…

ஆண் : இது மனுஷன் தானா எழுதினானு…
கண்டு புடிக்க புத்திய கொடுக்கணும்…

ஆண் : அம்மாவ நான்…
குழு : கால தொட்டு கும்மிடனும்… டோய்…
ஆண் : அட ஆத்தாவ நான்…
குழு : கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…


Notes : Ammaava Naan Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. அம்மாவ நான் பாடல் வரிகள்.


Aatha Un Selai Song Lyrics in Tamil

ஆத்தா உன் சேலை

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. ஏகாதேசிசுந்தர் நாராயண ராவ்ஜிப்ரான்குட்டிப் புலி

Aatha Un Selai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

ஆண் : ஆத்தா உன் சேலைஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

BGM

ஆண் : தொட்டிக்குள்ள நடிச்சா…
அது அழகு முத்து மாலை…
காயம் பட்ட வெரலுக்கு…
கட்டு போடும் உன் சேலை…

ஆண் : நீ கட்டியிருக்கும் சேலை…
அது கண்ணீரில் மணக்கும்…
உன் சேலை கட்டி எறச்சா…
தண்ணி சக்கரையா இனிக்கும்…

ஆண் : என் உசுருகுள்ள சேலை…
அது மயில் இறகா விரியும்…
உன் வெளுத்த சேலை திரி போட்டா…
வெளக்கு நல்லா எரியும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…

BGM

ஆண் : அக்கா கட்டி பழக…
நான் ஆடு கட்டி மேய்க்க…
ஓட்டை குடிசை வெயிலுக்கு…
ஒட்டு போட்டு மறைக்க…

ஆண் : என் கண்ணில் ஒரு தூசு பட்டா…
ஒத்தடமும் கொடுக்கும்…
அட கஞ்சி கொண்டு போனா…
சேலை சும்மாடாக இருக்கும்…

ஆண் : நான் தூங்கும்போது கூட…
அது தலையணையா பேசும்…
அட வெக்கை வரும் நேரம்…
ஒரு விசிறி போல வீசும்…

ஆண் : உன் சேலைதானே பூஞ்சோலைதானே…
ஆத்தா ஆத்தா ஆத்தா… ஆ…

ஆண் : ஆத்தா உன் சேலை ஆகாயம் போல
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…

ஆண் : தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட

ஆண் : பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்…
நான் செத்தாலும் என்ன போத்த வேணும்…
செத்தாலும் என்ன போத்த வேணும்…

BGM


Notes : Aatha Un Selai Song Lyrics in Tamil. This Song from Kutti Puli (2013). Song Lyrics penned by K.Ekadesi. ஆத்தா உன் சேலை பாடல் வரிகள்.


அம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசித் ஸ்ரீராம்ஜேக்ஸ் பெஜாய்கணம்

Amma Song Lyrics in Tamil


ஆண் : அம்மா என் அம்மா…
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா…
ஓ… அம்மா என் அம்மா…
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா…

ஆண் : ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே…
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே…

ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா…
கடவுளின் கண்கள் நீ அம்மா…
காவலில் உன் போல் ஏதம்மா…
உன் போல் அம்மா யார் அம்மா…

ஆண் : விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா…

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா…
தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா…
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா…

BGM

ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட…
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட…
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட…
எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா…

ஆண் : நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே…
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே…
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே…
உனை தாண்டி உலகம் ஏதிங்கே…

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா…
கடவுளின் கண்கள் நீ அம்மா…
காவலில் உன் போல் ஏதம்மா…
உன் போல் அம்மா யார் அம்மா…

ஆண் : உன் நினைவுகள் இருப்பதுனாலே…
இருக்கிறேன் உயிருடன்…
தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்…

BGM

ஆண் : விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…
விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…

ஆண் : விரல்களை பிடித்திடும் போது…
கிடைக்கிதே பிரபஞ்சமே…
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா…

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா…
தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா…
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா…

ஆண் : அம்மா…


Notes : Amma Song Lyrics in Tamil. This Song from Kanam (2022). Song Lyrics penned by Uma Devi. அம்மா பாடல் வரிகள்.


என் தெய்வத்துக்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுமுகேஷ் முகமதுஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

En Deivathukke Song Lyrics in Tamil


ஆண் : தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…

BGM

ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…
சொமந்த புள்ள பத்து மாசம்தான்…
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சுமா…

ஆண் : ஆராரோ சொன்ன தாய் யாரோ…
அட நான் யாரோ ஆனால் கோளாறோ…
ஆராரோ சொன்ன தாய் யாரோ…
அட நான் யாரோ ஆனால் கோளாறோ…

BGM

ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா…

ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம்…
செத்த பின்னே கொள்ளி வைப்போம்…
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா…
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா…

ஆண் : என் தேவதைக்கு மாறு வேஷமா…
சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா…
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம்தான்…
அடி என்ன முறை இப்ப நானும்தான்…

ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ…
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ…
ஆராரோ ஆரி ஆராரோ…
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ…

ஆண் : என்ன விதி என்ன விதிடா…
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா…
அட என்ன சொல்ல என்ன சொல்லடா…
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா…

பெண் : ஆராரோ ஆரி ஆராரோ…

ஆண் : பாசத்துக்கு பள்ளிக்கூடமா…
அட பாடம் கத்து பாசம் வருமா…
கல்லுக்குள்ளே சாமி வரும்டா…
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா…

ஆண் : அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா…
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா… ஆஆஅ…
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா…
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா…

ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா… ஆஆஅ…
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா…

ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம்…
செத்த பின்னே கொள்ளி வைப்போம்…
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டாடா…
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டாடா…

ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…


Notes : En Deivathukke Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. என் தெய்வத்துக்கே பாடல் வரிகள்.


அம்மா என்னும் மந்திரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்மார்க் ஆண்டனி

Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil


BGM

பெண் : முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…

பெண் : தேரு ஏறும் சாமி போல…
ஊர காக்கனும்டா…
ஆறு குள ஈரம் போல…
வேர காக்கனும்டா…

BGM

பெண் : ஆகாசம் பூமி அது சாட்சிடா…
அரங்கேறும் மகேனே உன் ஆட்சிடா…
ஆகாசம் பூமி அது சாட்சிடா…
அரங்கேறும் மகேனே உன் ஆட்சிடா…

பெண் : ரத்தத்தையே பால தெனம் ஊட்டிவிட்டேனே…
அங்கத்தையே நூலா நானும் ஆக்கிப்புட்டேனே…

பெண் : இன்னுமொரு ஜென்மத்துல…
உன் மகளா நான் பொறப்பேன்…
இந்த ஒரு ஜென்மகடன்…
அத்தனையும் நான் அடப்பேன்…

பெண் : தங்க சூரியனே…
மாங்கா பூமகனே…
தங்க சூரியனே…
மாங்கா பூமகனே…


Notes : Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil. This Song from Mark Antony (2023). Song Lyrics penned by Madhurakavi. அம்மா என்னும் மந்திரமே பாடல் வரிகள்.


ஆராரோ ஆரிரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிகரன் & முத்து வீராஅமலிமுரளி கிருஷ்ணன்வென்று வருவான்

Aaraaro Aaraaro Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

பெண் : கண்ணுமில்லை மண்ணுமில்லை…
கருவிலை சுமந்தேன் உன்னை…
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்…
கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்…
என் கண்ணாகத்தான் உன்னை வளர்த்தேன்…

பெண் : உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்…
என் மகனே…
உன் உசுரு போகிறத உணர வந்தேன் நான்…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

BGM

பெண் : கருவறை கடந்தவனே…
சிறையறை போகையிலே…
நான் சிந்திய கண்ணீரு…
கடல் நீரா போனதடா…
கடல் நீரா போனதடா…

பெண் : சிலையாட்டம் என் புள்ளை…
சிறைப்படும் சேதி கேட்டு…
சாகாம நிக்குறேன் சாகாம நிக்குறேனே…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

பெண் : என் மகனே…
சாமிக்கும் கண்ணில்லையா…

BGM

பெண் : வயித்தில சொமந்த புள்ள…
கயித்தில தொங்கும் முன்னே…
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்…
தாலாட்டு பாடிடவா நான் வந்தேன்…

பெண் : ஒத்த மகனா பொறந்ததால…
உனக்கிந்த நிலைமையடா…
ஊரு சனம் கலங்குதடா…
ஊரு சனம் கலங்குதடா…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

BGM

பெண் : ஊருக்கே பாடியிருக்கேன்…
யார் யாருக்கோ பாடியிருக்கேன்…
உனக்கு பாடயில…
நான் பாடயில போகலையே…
என் உசிரு போகலையே… மகனே…

பெண் : இந்த குருட்டு பாவி வாழ்கை…
இருட்டா போனதடா…
ஈர கொலை நடுங்குதடா…
பெத்த வயிறு எரியுதடா…
பெத்த வயிறு எரியுது…
அது பத்தித்தான் எரியுதடா…

பெண் : ஆராரோ ஆராரோ… ஆராரோ ஆராரோ…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…

பெண் : கண்ணான கண்மணியே…
கண் மூடும் வேளையிலே…
கல்லறையில் நானிருப்பேன்…
நீ ஆறடியில் ஏறும் முன்னே…
உன் காலடியில் நான் இருப்பேன்…


Notes : Aaraaro Aaraaro Song Lyrics in Tamil. This Song from Vendru Varuvaan (2016). Song Lyrics penned by Nigaran & Muthu Veera. ஆராரோ ஆரிரோ பாடல் வரிகள்.


ஈர் உறவுகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிரவி. ஜி & நித்யாஸ்ரீ வெங்கடரமணன்ரமேஷ் தமிழ்மணிலெட்ஸ் கெட் மேரீட்

Eer Uravugal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…
நான் நிலவுகள்…
ரெண்டுவோர் இரவிலே…

பெண் : கண்கள் நான்கில் என்னை கண்டாய்…
கைகள் நான்கில் ஏந்தி கொண்டாய்…
என்னென்று நான் உன்னை சொல்வேன்…
நீயின்றி நான் எங்கே செல்வேன்…

பெண் : ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…

BGM

பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

பெண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

பெண் : குத்தாதே… குத்தாதே…
குத்தாதே… குத்தாதே…

ஆண் : உன் கண்ணீர் முழுதாய்…
ஏன் உன்னுள் புதைதாய்…
நான் றெக்கை விரிக்க…
உன் வானம் இழந்தாய்…

ஆண் : உனக்குள் உனக்காக ஒரு ஆசையும் கிடையாதே…
எனக்காய் நீ வாழும் கனவில் வசிக்க…
ஒரு நாள் ஒரு வேளை உனக்காய் வாழ்ந்தாயா…
விழிகள் நான்தானே எனை நீ ரசிக்க…

ஆண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

ஆண் : இருமடங்காய் இன்பம் சிந்தும்…
ஒரு இதயம் பத்தாதே…
இரு முகமாய் முத்தம் தந்தும்…
மீசை என்னை குத்தாதே…

ஆண் : ஈர் உறவுகள்…
இங்கு ஓர் உருவிலே…

BGM


Notes : Eer Uravugal Song Lyrics in Tamil. This Song from LGM-Let’s Get Married (2023). Song Lyrics penned by Madhan Karky. ஈர் உறவுகள் பாடல் வரிகள்.


தொப்புள் கொடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாவேல்

Thoppul Kodi Song Lyrics in Tamil


ஆண் : ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு…
ஓரம் போனதே…
அண்ணன் தம்பி பாசம் அது…
சோரம் போனதே…

ஆண் : பாதையில தென்னம்புள்ள…
பார்க்க யாருமில்ல…
வேலியில நட்ட செடி…
பூவ தேட நாதியில்ல…

ஆண் : கண்ணுக்குள்ள விழுந்த தூசி…
ஊசியானதே…
பச்சை நெல்லு நாத்து இப்போ…
பாசியானதே…

ஆண் : இவன் நெஞ்சுக்குள்ள வீரம்…
கொறஞ்சு போனதே…
அட ரெட்ட புள்ள…
ஒத்தையா பிரிஞ்சு போனதே…

ஆண் : கட்டுத்தறி காள ஒன்னு…
கலங்கி போனதே…
கட்டுபட்ட உள்ளம் எல்லாம்…
நொறுங்கி போனதே…

ஆண் : பாசத்துல வந்த சொந்தம்…
பாதியில போவதென்ன…
நேசத்துல வந்த புள்ள…
நெஞ்சம் இப்போ ஆனதென்ன…

ஆண் : நம்பி வந்த மனசு இப்போ…
நஞ்சு போனதே…

ஆண் : தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு…
தொலைஞ்சி போனதே…
அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே…

ஆண் : யாரு செஞ்ச பாவம் இது…
எந்த நெஞ்சு தாங்குறது…
தாய் புள்ள பாசம் இது…
எந்த சாமி சேக்குறது…

ஆண் : கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம்…
உண்மை ஆனதே…
காஞ்சுபோன கண்ணீர் தடம் ஈரமானதே…

ஆண் : பெத்த தாய்க்கு பிள்ள பாசம்…
மறந்து போனதே…
அட காலம் செஞ்ச…
கோலம் மாறிப்போனதே…

BGM


Notes : Thoppul Kodi Song Lyrics in Tamil. This Song from Vel (2007). Song Lyrics penned by Hari. தொப்புள் கொடி பாடல் வரிகள்.


சோல் ஆஃப் வாரிசு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கே.எஸ். சித்ராதமன் எஸ்வாரிசு

Soul Of Varisu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…

பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள் தோரணம் சூடுதம்மா…
நெஞ்சம் ஆனந்த மேகத்தில் ஊஞ்சலும் ஆடுதம்மா…

பெண் : என் உயிரில் இருந்து பிரிந்த பகுதி இங்கே…
நான் இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் மீண்டும் இங்கே…

குழு (பெண்கள்) : இந்த நொடி நேரம்…
என்னுயிரில் ஈரம்…
கண்ணெதிரில் காலம்…
நின்று விடுமா…

குழு (பெண்கள்) : என் இதழின் ஓரம்…
புன்னகையின் கோலம்…
இந்த வரம் யாவும்…
தங்கி விடுமா…

BGM

குழு (பெண்கள்) : பால் முகம் கானவே நான் தவித்தேன்…
இன்று நீ வர கேட்டதேன் ஆரோ…
கால் தடம் வீழவே நான் துடித்தேன்…
உனை தாய் மடி ஏந்துதே தாலோ…


Notes : Soul Of Varisu Song Lyrics in Tamil. This Song from Varisu (2023). Song Lyrics penned by Vivek. சோல் ஆஃப் வாரிசு பாடல் வரிகள்.