என் தெய்வத்துக்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுமுகேஷ் முகமதுஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

En Deivathukke Song Lyrics in Tamil


ஆண் : தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…

BGM

ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…
சொமந்த புள்ள பத்து மாசம்தான்…
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சுமா…

ஆண் : ஆராரோ சொன்ன தாய் யாரோ…
அட நான் யாரோ ஆனால் கோளாறோ…
ஆராரோ சொன்ன தாய் யாரோ…
அட நான் யாரோ ஆனால் கோளாறோ…

BGM

ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா…

ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம்…
செத்த பின்னே கொள்ளி வைப்போம்…
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா…
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா…

ஆண் : என் தேவதைக்கு மாறு வேஷமா…
சின்னராணிக்கிங்கே ஏழை வேஷமா…
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம்தான்…
அடி என்ன முறை இப்ப நானும்தான்…

ஆண் : ஆராரோ ஆரி ஆராரோ…
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ…
ஆராரோ ஆரி ஆராரோ…
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ…

ஆண் : என்ன விதி என்ன விதிடா…
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா…
அட என்ன சொல்ல என்ன சொல்லடா…
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா…

பெண் : ஆராரோ ஆரி ஆராரோ…

ஆண் : பாசத்துக்கு பள்ளிக்கூடமா…
அட பாடம் கத்து பாசம் வருமா…
கல்லுக்குள்ளே சாமி வரும்டா…
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா…

ஆண் : அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா…
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா… ஆஆஅ…
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா…
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா…

ஆண் : செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா… ஆஆஅ…
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா…
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா…

ஆண் : அவ வாழும் போது தள்ளி வைப்போம்…
செத்த பின்னே கொள்ளி வைப்போம்…
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டாடா…
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டாடா…

ஆண் : என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…


Notes : En Deivathukke Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. என் தெய்வத்துக்கே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top