பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஜப்பான் |
Anbile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…
ஆண் : கருவில் சுமந்த அவளின் பாரம்…
இறக்கி வைக்க இதுவே நேரம்…
சரியும் தவறும் கடந்து போகும்…
எரியும் உலகில் எதுதான் மீதம்…
அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம்…
ஆண் : தந்தானே தானனனே…
தந்தானே தானனனே…
—BGM—
ஆண் : அன்னை அவள் உதிரத்திலே தோன்றுகின்ற உடல்களெல்லாம்…
வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன…
பாவம் எனும் ஒரு கரையில் நீந்துகின்ற உயிர்களெல்லாம்…
ஞானம் எனும் மறு கரையில் சேர்வது என்ன…
ஆண் : நெஞ்சிலே துறவு கொண்டால் நீ நிம்மதி தேடி வரும்…
உண்மையது தெரிந்துவிட்டால் உன் உள்ளமே போதிமரம்…
ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும்…
ஆண் : தந்தனே தானனனே… தந்தனே தானனனே…
—BGM—
ஆண் : நல்லதென நினைப்பதெல்லாம் அப்படியே இருப்பதில்லை…
கெட்டெதென ஒதுக்கியவை மறப்பது இல்லை…
கார் கொடுத்த முடியிருந்தும் பேச ஒரு வார்த்தையில்லை…
மூடிவிட்ட வார்த்தை எல்லாம் போவது இல்லை…
ஆண் : உள்ளமே பழுதடைந்தால் தூங்கிடவும் முடிவது இல்லை…
நாடி நின்ற உடல் மறையும் நற்கருணை அழிவது இல்லை…
ஆண் : அத்தனைக்கும் பெரிதன்றோ அன்னையவள் பாதம்…
அன்பினால் மனித குலம்…
கண்டதே கடவுள் முகம்…
தண்ணீரில் உடைந்த உள்ளம்…
முள்ளிலே மலர்ந்து விடும்…
ஆண் : இருட்டில்தானே ஒளியும் இருக்கும்…
அழுக்கில் கூட புனிதம் பிறக்கும்…
வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும்…
வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும்…
ஆண் : தெருக்களிலே ஒருநாள் தெய்வம் சிரிக்கும்…
ஆண் : தந்தனே தானனனே… தந்தனே தானனனே…
Notes : Anbile Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. அன்பிலே பாடல் வரிகள்.