Category Archives: 1995 Movies

1995 Movies

ஷாக் அடிக்குது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுரேஷ் பீட்டர்ஸ் & ஜி.வி.பிரகாஷ் குமார்தேவாஆசை

Shokkadikuthu Song Lyrics in Tamil


ஆண் : ஹைய்யோ ஹையைய்யோ…
ஹைய்யோ ஹையைய்யோ…

BGM

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும்…
பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது…
தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான்…
மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது…

குழு : ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…
ஹே ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…

BGM

ஆண் : ஏன் நகங்கல கடிக்கிறா…
இடை துடிக்கிறா…
கன்னுல மின்னலை பாய்ச்சுறா…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா…
நெஞ்சை பறிக்கிறா…
பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா…

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ…
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோ ஓ…

ஆண் : அச்சா அச்சா பகுத் அச்சா…
பச்சசை கிளி…
வச்சா வச்சா கன்னில் வச்சா…
கிக்கு பொடி…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

BGM

ஆண் : நீ என்ன கொஞ்சம் விரும்பினா…
லவ் அரும்பின தடிய நொடிய திங்கிரே…

ஆண் : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : நீ ஒரு முத்தம் வழங்கினா…
தொட்டு தழுவினா…
விழிய மட்டுமே கொஞ்சுரே…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : சோரி சோரி படா சோரி…
இந்த பொன்னு…
ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி…
சொல்லும் கன்னு…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

BGM


Notes : Shokkadikuthu Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. ஷாக் அடிக்குது பாடல் வரிகள்.


முன்னேருதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.எல்.மகாராஜன் & சுவர்ணலதாஏ. ஆர். ரகுமான்இந்திரா

Munnerudhan Song Lyrics in Tamil


ஆண் : மயிலகாள மருதகாள… ஆஅஆ…
மணி கயித்துல சோடி சேரு…
வெளுத்த காள செவத்தகாள… ஆஅஆ…
இடம் வலமா சோடி சேரு…

பெண் : மாரி மாரி பொழிய வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : பூமிதாயி குளிர வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

பெண் : வானம் பார்த்த கரிசக்காடு…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
பெண் : மனசபோல இளக வேணும்…
குழு : ஏலாலங்கடி ஏலாலம்…

ஆண் : முன்னேருதான் பூட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : போற வழி நீ காட்டு…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

ஆண் : பின்னேருதான் ஓட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலேலோ…
ஆண் : சொல்லிபுடு ஒரு வாட்டி…
குழு : ஏலேலங்கடி ஏலோ…

பெண் : பொன்னேரு பூட்டி…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : வெத போட வேணும்…
குழு : போட வேணும்…

பெண் : முப்போகம் வௌஞ்சு…
குழு : ம்ம்ம்… ம்ம்ம்…
பெண் : பசியாற வேணும்…
குழு : ஆறவேணும்…

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…

{ குழு : தந்தானனா தானா ஏலாலங்கடி ஏலாலம்…
தானனதான ஏலாலங்கடி ஏலாலம்…
தனனனதானன ஏலாலங்கடி ஏலேலோ…
த ன ன ன தா ன ன ஏலாலங்கடி ஏலேலோ… } * (2)

குழு : ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…
ஏலாலங்கடி ஏலாலம்…


Notes : Munnerudhan Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. முன்னேருதான் பாடல் வரிகள்.


அரிதாரத்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாஅவதாரம்

Arithaaratha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
பொன்னம்மா பொன்னமாவ்…
பெண் : என்ன குப்புசாமி னை னைனுட்டு…

ஆண் : என்ன பொன்னம்மா…
நீயாவது வாத்தியாரு கிட்ட சொல்லி…
என்னை சேர்த்துக்க சொல்ல கூடாதா…

பெண் : எதுல சேர்க்க சொல்ல…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
பெண் : கூத்துலையா…
ஆண் : இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…
அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசைபட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹான்…

பெண் : ஹேய்… குப்பண்ணா குப்பண்ணா…
ஆண் : ஆமா…
பெண் : ரொம்ப தப்பண்ணா தப்பண்ணா…
ஆண் : சரியா போச்சு போ…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…
இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : போ பொன்னம்மா…
ஒரு நல்ல விஷயத்தை பத்தி பேசும்போது…
இப்படி சொல்லிக்கிட்டு…
த பாரு நீயே என்ன பத்தி…
வாத்தியார்கிட்ட சொல்லலைன்னா…
வேற யாரு சொல்லுவாங்க…

ஆண் : நீ இப்ப அப்படி தான் பேசுவ…
அப்புறம் நான் அரிதாரம் பூசிகிட்டு…
கெந்தல கட்டிக்கிட்டு அப்படி மேடையில ஏறினா…

ஆண் : ஹா… என் பாட்ட எடுத்து உட்டா… ஹாஆஆ…
ஊரு சனம் எல்லாம் மெய் மறக்கும்…
அது உசுரோட போய் கலக்கும்…

பெண் : பாட்டுன்னு நினைப்பதெல்லாம்…
இங்கு பாட்டாக இருப்பதில்லை…
ஆண் : அது என் பாட்டு இல்ல…
பெண் : அது லேசான விஷயம் இல்ல…
ஆண் : அது யாரு இல்லைனா…

ஆண் : அதுக்காகதான் இசை அவதாரமாய்…
நான் பொறந்தேன்னு பூலோகம் பாராட்டுமே…

பெண் : ராகூத்துல வரும் சாமி எல்லாம்…
நெச சாமின்னு பாக்காது ஊர் சனமே…

ஆண் : அட காசுக்கா பேருக்கா ஆச நான் பட்டது…
வேற எதும் சொல்ல வரல…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : அப்போ ரெக்கமெண்டு பண்ணு…

BGM

பெண் : கூத்தாடி பொழப்பு எல்லாம்…
அந்த காத்தாடி படும் பாடு…
அடி ஆத்தாடி வெட்க கேடு…

ஆண் : ஹம்ம்… எல்லார்க்கும் உள்ள சுகம்…
அதில் எனக்கும் ஓர் பங்கு உண்டு…
அது எப்போதும் இங்கு உண்டு…

பெண் : கூத்தாடிக்கு சுகம் தூக்கத்தில்தான்…
உன் வாழ்நாள தூக்கத்தில் ஏன் போக்குற…

ஆண் : நம்ம முன்னோர்களின் கலை முன்னால் வைத்தால்…
சுகம் உண்டென்று அறியாமல் நீ பேசுற…

பெண் : ஊரெல்லாம் வேஷமே போடுது ஆடுது…
நீயும் ஏன்யா வேஷம் போடணும்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : அந்த சாமி நல்ல வரம் கொடுக்க போனா…
சின்ன பூசாரியே தட்டி விட வேணாம்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : அப்படி ஒத்துக்க…


Notes : Arithaaratha Song Lyrics in Tamil. This Song from Avatharam (1995). Song Lyrics penned by Vaali. அரிதாரத்த பாடல் வரிகள்.


பாட்ஷா பாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாபாட்ஷா

Baasha Paaru Song Lyrics in Tamil


BGM

குழு : பாஷா… பாஷா… பாஷா… பாஷா…

BGM

ஆண் : யே பாட்ஷா பாரு பாட்ஷா பாரு…
பட்டாளத்து நடையை பாரு…
பகை நடுங்கும் நடையை பாரு…
கோட்டு சூட்டு ரெண்டும் எடுத்து…
போட்டு நடக்கும் புலிய பாரு…

ஆண் : பற்றி எரியும் நெருப்பு போல…
சுட்டெரிக்கும் விழிய பாரு…
ரத்தம் வேர்வை ரெண்டும் கொண்ட…
ராஜாங்கத்தின் மன்னன்தானடா…

ஆண் : இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…
இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு…
உண்மைதானடா…

BGM


Notes : Baasha Paaru Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. பாட்ஷா பாரு பாடல் வரிகள்.


ஓடக்கர மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & சீர்காழி சிவசிதம்பரம்ஏ. ஆர். ரகுமான்இந்திரா

Odakara Marimuthu Song Lyrics in Tamil


ஆண் : பச்ச பாவக்கா…
பெண் : பளபளங்க…
ஆண் : பழனி பச்ச…
பெண் : மினுமினுங்க…

ஆண் : செங்கருட்டி…
பெண் : செவத்தபுள்ள…
ஆண் : கின்னாவந்தா…
பெண் : கினுகட்டி…

ஆண் : உடும்பு…
பெண் : துடுப்பு…
ஆண் : மகா…
பெண் : சுகா…

ஆண் : பா…
பெண் : பரங்கி…
ஆண் : எட்டுமண்…
பெண் : குண்டுமண்…

BGM

ஆண் : சில்… ஹே ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…
பெண் : ஹான்…

ஆண் : ஏ அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : குண்டுப் பொண்ணு கோமளவள்ளி…
என்னானா என்னானா…

ஆண் : ரெட்டப்புள்ள பொறந்ததுமே…
நூலானா நூலானா…

ஆண் : குள்ள வாத்து டீச்சர் கனகா…
ஆண் : ஐயோ… பார்வையில பச்ச மொளகா…

ஆண் : மேல்படிப்பு படிக்கப் போனா…
மேற்கொண்டு என்ன ஆனா…

ஆண் : மொத்தத்துல மூணு மார்க்கில்…
பெயிலானா பெயிலானா…

ஆண் : ஒல்லிக்குச்சி ராஜமீனா…
ஓடிப்போனா என்ன ஆனா…

ஆண் : பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

BGM

ஆண் : அம்மன் கோயில் வேப்பமரம்…
என்னாச்சு என்னாச்சு…

ஆண் : சாதிச் சண்ட கலவரத்துல…
ரெண்டாச்சு ரெண்டாச்சு…

ஆண் : மேலத்தெரு கருப்பையாவும்…
கீழத்தெரு செவத்தம்மாளும்…
சோளக்காட்டு மூலையில…
ஜோடி சேர்ந்த கதையென்னாச்சு…

ஆண் : மூத்த பொண்ணு வயசுக்குத்தான்…
வந்தாச்சு வந்தாச்சு…

ஆண் : மத்த கதை எனக்கெதுக்கு…
எங்குருவி எப்படி இருக்கு…

b: தாவிச்செல்லும் குருவி…
இன்னிக்கு தாவணி போட்டிருக்கு…

ஆண் : ஹே… ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…

ஆண் : பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…
பழைய பாக்கி இருக்குதா…
பையன் மனசு துடிக்குதா…

ஆண் : பட்டணத்து ஸ்டைலக்கண்டா…
பட்டிக்காடு கசந்திடுமா…
பள்ளிக்கூட நெனப்பிருக்கே…
பாவி மனம் மறந்திடுமா…

ஆண் : பட்டுப்பாவாடைக்கு நெஞ்சு துடிக்குது…
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது…

ஆண் : ஓடக்கார மாரிமுத்து…
ஓட்டவாயி மாரிமுத்து…
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா…

ஆண் : ஒய் அரிசிக்கட ஐய்யாவு பொண்ணு…
ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு…
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா…


Notes : Odakara Marimuthu Song Lyrics in Tamil. This Song from Indira (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓடக்கர மாரிமுத்து பாடல் வரிகள்.


ஏரெடுத்து ஏரெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மனோரமாஇளையராஜாமுத்துக்காளை

Ereduthu Ereduthu Song Lyrics in Tamil


பெண் : வாழ இலை பரப்பி வச்சு…
குழு : ஆஆஆஹ்… பரப்பி வச்சு…
பெண் : பொரிக்கடல நெரப்பி வச்சு…
குழு : ஆஆஆஹ்… நெரப்பி வச்சு…

பெண் : வத்திகள ஏத்தி வச்சு…
குழு : ஆஆஆஹ்… ஏத்தி வச்சு…
பெண் : முழுத் தேங்கா ஒடச்சி வச்சு…
குழு : ஆஆஆஆஹ்… ஒடச்சு வச்சு…

பெண் : ஏழ மக பூச வச்சா…
ஏத்துக்கணும் நிலமகளே…
இட்ட விதை நெல்மணியா…
ஆக்கித் தரும் குலமகளே…

BGM

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

ஆண் : பாடுபட்டா பொன் வெளயும்…
பூமியிது பூமியிது…
பூமியத்தான் மிஞ்சுகிற…
சாமியேது சாமியேது…

ஆண் : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல்தான் அள்ளிக் கொடுக்கும்…

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

BGM

ஆண் : வெதச்சதெல்லாம் மொளச்சு வரும் நேரம் நேரம்…
பொறந்திருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம்…
ஒழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும்…
உழவனுங்க இளச்சுபுட்டா ஏது தேசம்…

ஆண் : பட்டணத்து மக்களெல்லாம்…
சோத்துதலதான் கைய வைக்க…
பட்டிக்காட்டு சுப்பன் குப்பன்…
சேத்துதலதான் கால வைப்பான்…

ஆண் : எந்நாளுமே ஏர் புடிச்சா…
எல்லாருமே சேர்ந்துழைச்சா…
வந்திடும் நெல்லுமணி…
மின்னிடும் பொன்னுமணி…

குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

குழு : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

BGM

ஆண் : குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம்…
கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும்…
கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து…
பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து…

ஆண் : பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு…
பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு…
தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும்…
வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி…

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

ஆண் : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

குழு : பாடுபட்டா பொன் வெளையும்…
பூமியிது பூமியிது…
பூமியத்தான் மிஞ்சுகிற…
சாமியேது சாமியேது…


Notes : Ereduthu Ereduthu Song Lyrics in Tamil. This Song from Muthu Kaalai (1995). Song Lyrics penned by Vaali. ஏரெடுத்து ஏரெடுத்து பாடல் வரிகள்.


பூப்பூவா பூப்பூவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாசுரேஷ் பீட்டர்ஸ்கூலி

Poo Poova Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

பெண் : பூவும் உண்டு அதில் நாகம் உண்டு…
போராடி வெல்கின்ற வீரம் உண்டு…
வீரம் கொண்டு நீ வெற்றி கண்டால்…
கொண்டாடி வரவேற்கும் முதலில் வந்து வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…

BGM

ஆண் : எந்த நெஞ்சில் நஞ்சென்று…
கண்களும் உரைக்காது…

BGM

ஆண் : ஓய்…. எந்த புற்றில் பாம்.பென்று…
ஜோதிடம் கணிக்காது…

BGM

பெண் : நீ காற்றே பிடிக்காமல்…
உன் கண்கள் மூடாது…

ஆண் : சுற்றும் பூமி ஓய்ந்தாலும்…
இந்தப் போர்தான் ஓயாது…

பெண் : வா மன்மதா ரதி நான் அல்லவா…
நீ தொட்டாலே உப்பெல்லாம் தேன் அல்லவா…
வா மன்னவா நீயும் தீ அல்லவா…
நெய்யோடு ஈக்கூட்டம் ஒட்டாது வா வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா… ஹோய்…

BGM

ஆண் : சிங்க வேட்டை ஆட வந்தால்…
தூண்டில் ஒன்றும் உதவாது…
ஹேய்… தந்திரங்கள் இல்லாமல்…
வஞ்சகங்கள் சாயாது… ஹா ஹாஹா…

BGM

பெண் : தர்மம் விழுந்தாலும் தவறியும் உடையாது…
ஆண் : பல கோடி தந்தாலும் என் பாதை மாறாது…

பெண் : நீ மோதினால் பகை தூள் அல்லவா…
விரல் எல்லாம் எப்போதும் வேல் அல்லவா…
போராடி வா பின்பு பூச்சூட வா…
இனி வரலாறும் உன் பேரை வாசிக்கும் வா வா வா…

ஆண் : பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா… ஹா…
பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

ஆண் : அடப் பூப்பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி…
பூவப் பறிக்கவே நேரம் இருக்கா…
ஹே… பூநாகம் பூநாகம் படமெடுக்கும் சாமி…
பார்த்துப் பறிக்கவே ஞானம் இருக்கா…

BGM


Notes : Poo Poova Song Lyrics in Tamil. This Song from Coolie (1995). Song Lyrics penned by Vairamuthu. பூப்பூவா பூப்பூவா பாடல் வரிகள்.


நில்லாத வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & உமா ரமணன்இளையராஜாஆணழகன்

Nilatha Vennila Song Lyrics in Tamil


BGM

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…

BGM

ஆண் : மான் துள்ளும் மலையாளத்தின்…
எழில் சித்திரமே சித்திரமே…
வாழையும் இளநீரையும் கொண்ட…
நன்னிலமே நன்னிலமே…

பெண் : கேரளக் குயில் கூவிடும் இசை…
தித்தித்ததோ தித்தித்ததோ…
ஆவணி திருவோணத்தில் உன்னை…
சந்தித்ததோ சந்தித்ததோ…

ஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ…
மெல்ல தொடவோ என்னைத் தரவோ…

பெண் : தேனல்லோ பசும்பாலல்லோ…
பக்கம் வரவோ நான் தரவோ…

ஆண் : செம்மீன்கள் துள்ளுதே…
இங்கும் அங்கும் கண் ஓடையில்…

பெண் : சந்தோஷம் பொங்குதே…
முன்னும் பின்னும் உன் கூடலில்…
நான் சொல்லவோ சின்ன பூவல்லவோ…

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

பெண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…

BGM

பெண் : நீ வர எதிர்ப்பார்த்தது…
இந்த நந்தவனம் நந்தவனம்…
நீ தொட இங்கு பூத்தது…
இந்த செங்கமலம் செங்கமலம்…

ஆண் : காமனின் கலைக் காண்பது…
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்…
பூமரக் குயில் கூவுது…
இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்…

பெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே…
சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ…

ஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே…
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ…

பெண் : அன்றாடம் சேர்வது…
மன்னா மன்னா உன் பொன்மடி…

ஆண் : எந்நாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி…
பூ மங்கையே பொங்கிடும் கங்கையே…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…

ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…

பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…


Notes : Nilatha Vennila Song Lyrics in Tamil. This Song from Aanazhagan (1995). Song Lyrics penned by Vaali. நில்லாத வெண்ணிலா பாடல் வரிகள்.


சோலை மலரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபாட்டு வாத்தியார்

Solai Malare Song Lyrics in Tamil


BGM

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…

BGM

ஆண் : வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழர் நாடு…
வத்தாத பாட்டுச் செல்வம் வாழ்ந்திடும் வீடு…

ஆண் : தென்னாட்டு கிராமம் எங்கும்…
தென்றல் எனும் காற்று…
தெம்மாங்கு பாடிச் செல்லும்…
தாளமும் போட்டு…

ஆண் : ஏத்தம் இட்டுப் பாட பாட்டும் இருக்கு…
ஏரு கட்டி பாட பாட்டும் இருக்கு…
நாத்து நட்டுப் பாட பாட்டும் இருக்கு…
பாட்டுத்தானே பாட்டன் சொத்து நமக்கு…
இந்நாளும் எந்நாளும் நம் செல்வங்கள்… ஓ…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…

BGM

ஆண் : செவ்வானம் பூமியெல்லாம் நல்வரவு கூறும்…
சங்கீதம் பாடி கொண்டு நான் வரும் நேரம்…

ஆண் : சில்லென்று வாடை வந்து என்னைத் தொட்டு ஓடும்…
சிங்காரச்சோலை என் மேல் பூ மழைத் தூவும்…

ஆண் : மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது…
மோகம் கொண்ட மண்ணை முத்தமிடுது…
முத்தம் கொண்டதாலே முத்து வருது…
மொட்டுகளை பார்த்தால் மெட்டு வருது…
சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல் என் எண்ணங்கள்… ஓஓ…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே…
ஞானம் உண்டு பாட கானக்குயிலே…
உன்னைப் போல நானும் கூவி திரிவேன்…
உச்சி மலை மீது தாவி திரிவேன்…

ஆண் : சோலை மலரே…
நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே…
சோலை மலரே…


Notes : Solai Malare Song Lyrics in Tamil. This Song from Pattu Vaathiyar (1995). Song Lyrics penned by Vaali. சோலை மலரே பாடல் வரிகள்.


ஓ ராகினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாமருமகன்

Oh Ragini Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…
ஓ ராகினி நீலாம்பரி என்ராகமோ நீதானடி…
மனமே உன்னையே நின்னையே எண்ணியே…

ஆண் : என் சுவாசம் யாவும் நீயே…
என் வாசல் வழி வருவாயே…
மௌனம் ஏன்…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…

BGM

ஆண் : கண்மணி போலே பொம்மையைச் செய்து…
கனவினில் காதலித்தேஎஎஏன்…

பெண் : தலைவனை நினைத்து தலையணை அணைத்து…
தனிமையில் நான் தவித்தேன்…

ஆண் : வேட்கை நெஞ்சில் வேட்கை…
அதை சொல்லாமல் ஏன் இந்த வாழ்க்கை…

பெண் : நேரம் வரும் போது…
இது நீரோடு நீர் சேரும் சேர்க்கை…

ஆண் : இதோ இதோ செந்தாமரை…
வந்தாடுதே என் தோள்வரை…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி…
பெண் : உன் ராகமே நான்தான் கண்ணா…

BGM

பெண் : நீ ஒரு பாதி நான் ஒரு பாதி…
சேர்வதில் பேதம் என்ன…

ஆண் : கங்கையும் நீர்தான் காவிரி நீர்தான்…
சேர்வதில் பேதம் என்ன…

பெண் : தூரம் இருந்தாலும் உன்னைத் தொட வேண்டும்…
கைநீட்டி நானே…

ஆண் : காலம் கடந்தாலும் என்றும் புளிக்காது…
மலைக்காட்டுத் தேனே…

பெண் : என்னோடு சேர்ந்த தேவனே…
உன்னோடு போகும் ஜீவனே…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீ தானடி…
பெண் : மனமே உன்னையே நின்னையே எண்ணியே…

பெண் : என் சுவாசம் யாவும் நீயே…
என் வாசல் வழி வருவாயே மன்னவா…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி…
பெண் : உன் ராகமே நான்தான் கண்ணா…

BGM


Notes : Oh Ragini Song Lyrics in Tamil. This Song from Marumagan (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓ ராகினி பாடல் வரிகள்.