ஏரெடுத்து ஏரெடுத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மனோரமாஇளையராஜாமுத்துக்காளை

Ereduthu Ereduthu Song Lyrics in Tamil


பெண் : வாழ இலை பரப்பி வச்சு…
குழு : ஆஆஆஹ்… பரப்பி வச்சு…
பெண் : பொரிக்கடல நெரப்பி வச்சு…
குழு : ஆஆஆஹ்… நெரப்பி வச்சு…

பெண் : வத்திகள ஏத்தி வச்சு…
குழு : ஆஆஆஹ்… ஏத்தி வச்சு…
பெண் : முழுத் தேங்கா ஒடச்சி வச்சு…
குழு : ஆஆஆஆஹ்… ஒடச்சு வச்சு…

பெண் : ஏழ மக பூச வச்சா…
ஏத்துக்கணும் நிலமகளே…
இட்ட விதை நெல்மணியா…
ஆக்கித் தரும் குலமகளே…

BGM

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

ஆண் : பாடுபட்டா பொன் வெளயும்…
பூமியிது பூமியிது…
பூமியத்தான் மிஞ்சுகிற…
சாமியேது சாமியேது…

ஆண் : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல்தான் அள்ளிக் கொடுக்கும்…

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

BGM

ஆண் : வெதச்சதெல்லாம் மொளச்சு வரும் நேரம் நேரம்…
பொறந்திருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம்…
ஒழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும்…
உழவனுங்க இளச்சுபுட்டா ஏது தேசம்…

ஆண் : பட்டணத்து மக்களெல்லாம்…
சோத்துதலதான் கைய வைக்க…
பட்டிக்காட்டு சுப்பன் குப்பன்…
சேத்துதலதான் கால வைப்பான்…

ஆண் : எந்நாளுமே ஏர் புடிச்சா…
எல்லாருமே சேர்ந்துழைச்சா…
வந்திடும் நெல்லுமணி…
மின்னிடும் பொன்னுமணி…

குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

குழு : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

BGM

ஆண் : குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம்…
கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும்…
கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து…
பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து…

ஆண் : பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு…
பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு…
தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும்…
வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி…

ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

ஆண் : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…

குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…

குழு : பாடுபட்டா பொன் வெளையும்…
பூமியிது பூமியிது…
பூமியத்தான் மிஞ்சுகிற…
சாமியேது சாமியேது…


Notes : Ereduthu Ereduthu Song Lyrics in Tamil. This Song from Muthu Kaalai (1995). Song Lyrics penned by Vaali. ஏரெடுத்து ஏரெடுத்து பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top