பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & மனோரமா | இளையராஜா | முத்துக்காளை |
Ereduthu Ereduthu Song Lyrics in Tamil
பெண் : வாழ இலை பரப்பி வச்சு…
குழு : ஆஆஆஹ்… பரப்பி வச்சு…
பெண் : பொரிக்கடல நெரப்பி வச்சு…
குழு : ஆஆஆஹ்… நெரப்பி வச்சு…
பெண் : வத்திகள ஏத்தி வச்சு…
குழு : ஆஆஆஹ்… ஏத்தி வச்சு…
பெண் : முழுத் தேங்கா ஒடச்சி வச்சு…
குழு : ஆஆஆஆஹ்… ஒடச்சு வச்சு…
பெண் : ஏழ மக பூச வச்சா…
ஏத்துக்கணும் நிலமகளே…
இட்ட விதை நெல்மணியா…
ஆக்கித் தரும் குலமகளே…
—BGM—
ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
ஆண் : பாடுபட்டா பொன் வெளயும்…
பூமியிது பூமியிது…
பூமியத்தான் மிஞ்சுகிற…
சாமியேது சாமியேது…
ஆண் : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல்தான் அள்ளிக் கொடுக்கும்…
ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
—BGM—
ஆண் : வெதச்சதெல்லாம் மொளச்சு வரும் நேரம் நேரம்…
பொறந்திருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம்…
ஒழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும்…
உழவனுங்க இளச்சுபுட்டா ஏது தேசம்…
ஆண் : பட்டணத்து மக்களெல்லாம்…
சோத்துதலதான் கைய வைக்க…
பட்டிக்காட்டு சுப்பன் குப்பன்…
சேத்துதலதான் கால வைப்பான்…
ஆண் : எந்நாளுமே ஏர் புடிச்சா…
எல்லாருமே சேர்ந்துழைச்சா…
வந்திடும் நெல்லுமணி…
மின்னிடும் பொன்னுமணி…
குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
குழு : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…
குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
—BGM—
ஆண் : குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம்…
கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும்…
கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து…
பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து…
ஆண் : பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு…
பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு…
தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும்…
வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி…
ஆண் : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
ஆண் : இந்தக் காணி நெலம்தான்…
நாம கேட்ட வரந்தான்…
என்றும் இல்லையென்று…
சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்…
குழு : ஏரெடுத்து ஏரெடுத்து…
பாடு படு பாடு படு…
ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம்…
சோறு கொடு சோறு கொடு…
குழு : பாடுபட்டா பொன் வெளையும்…
பூமியிது பூமியிது…
பூமியத்தான் மிஞ்சுகிற…
சாமியேது சாமியேது…
Notes : Ereduthu Ereduthu Song Lyrics in Tamil. This Song from Muthu Kaalai (1995). Song Lyrics penned by Vaali. ஏரெடுத்து ஏரெடுத்து பாடல் வரிகள்.