பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | இளையராஜா & உமா ரமணன் | இளையராஜா | ஆணழகன் |
Nilatha Vennila Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…
ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…
பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…
—BGM—
ஆண் : மான் துள்ளும் மலையாளத்தின்…
எழில் சித்திரமே சித்திரமே…
வாழையும் இளநீரையும் கொண்ட…
நன்னிலமே நன்னிலமே…
பெண் : கேரளக் குயில் கூவிடும் இசை…
தித்தித்ததோ தித்தித்ததோ…
ஆவணி திருவோணத்தில் உன்னை…
சந்தித்ததோ சந்தித்ததோ…
ஆண் : பொன்னல்லோ சிறு பூவல்லோ…
மெல்ல தொடவோ என்னைத் தரவோ…
பெண் : தேனல்லோ பசும்பாலல்லோ…
பக்கம் வரவோ நான் தரவோ…
ஆண் : செம்மீன்கள் துள்ளுதே…
இங்கும் அங்கும் கண் ஓடையில்…
பெண் : சந்தோஷம் பொங்குதே…
முன்னும் பின்னும் உன் கூடலில்…
நான் சொல்லவோ சின்ன பூவல்லவோ…
ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…
பெண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…
ஆண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…
—BGM—
பெண் : நீ வர எதிர்ப்பார்த்தது…
இந்த நந்தவனம் நந்தவனம்…
நீ தொட இங்கு பூத்தது…
இந்த செங்கமலம் செங்கமலம்…
ஆண் : காமனின் கலைக் காண்பது…
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்…
பூமரக் குயில் கூவுது…
இங்கு ஸப்தஸ்வரம் ஸப்தஸ்வரம்…
பெண் : மஞ்சமே இந்த நெஞ்சமே…
சுகம் பஞ்சமோ இனி கொஞ்சமோ…
ஆண் : உள்ளமே இன்ப வெள்ளமே…
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ…
பெண் : அன்றாடம் சேர்வது…
மன்னா மன்னா உன் பொன்மடி…
ஆண் : எந்நாளும் இன்பமே
நீயே நீயே என் பைங்கிளி…
பூ மங்கையே பொங்கிடும் கங்கையே…
பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…
ஆண் : நில்லாமலே நீ போவதேன்…
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்…
பெண் : நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் வாசலில்…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் பார்வையில்…
Notes : Nilatha Vennila Song Lyrics in Tamil. This Song from Aanazhagan (1995). Song Lyrics penned by Vaali. நில்லாத வெண்ணிலா பாடல் வரிகள்.