பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | இதயத் தாமரை |
Kanne Kadhavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…
பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
தனிமையோ… இனிமையோ…
புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…
—BGM—
ஆண் : இன்பமென்னும் புத்தகம்…
இங்கு எங்கு உள்ளதோ…
குழு : தேடு கொஞ்சம் தேடு…
பெண் : காமன் சொன்ன சூத்திரம்…
உன்னிடத்தில் உள்ளது…
குழு : பாடு அளவோடு…
ஆண் : பள்ளி இது பிறர்க்கு…
பள்ளியறை நமக்கு…
பெண் : இன்பமிது உனக்கு…
துன்பமிது எனக்கு…
ஆண் : அடி பட்டிமன்ற வாதமிங்கு கூடாது…
பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
ஆண் : தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…
—BGM—
பெண் : உண்மையில்லை என்பதால் ஊருலகம் நம்புமா…
குழு : நாளை அதிகாலை…
ஆண் : உண்மையென்று சொல்லுவேன்…
மாலைக் கட்டிக் கொள்ளுவேன்…
நாளை இந்த வேளை…
பெண் : தப்பு இந்த நெருக்கம்…
தாங்கவில்லை எனக்கும்…
ஆண் : காலை வரும் வரைக்கும்…
காதலுக்கு வணக்கம்…
பெண் : அட கட்டழகன் தொட்ட இடம் பூப்பூக்கும்…
ஆண் : கண்ணே கதவு திறந்திடும் முன்னே…
கதைகள் படிக்கணும் பெண்ணே…
தனிமைதான்… இனிமைதான்…
காதலென்னும் புத்தகத்தில் முத்தமென்னும் பக்கம் எடு…
பெண் : கண்ணா கதவு திறக்கட்டும் கண்ணா…
மனசு நடுங்குது மன்னா…
தனிமையோ… இனிமையோ…
புத்தனவன் சொல்லி வைத்த புத்தகத்தை மெல்ல எடு…
—BGM—
Notes : Kanne Kadhavu Song Lyrics in Tamil. This Song from Idhaya Thamarai (1990). Song Lyrics penned by Vairamuthu. கண்ணே கதவு பாடல் வரிகள்.