Tag Archives: Amma Sentiment Song Lyrics

Amma Sentiment Song Lyrics

kangal-neeye-song-lyrics

கண்கள் நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித்தாராஜி. வி. பிரகாஷ்குமார்முப்பொழுதும் உன் கற்பனைகள்

Kangal Neeye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…

பெண் : பல நாள் கனவே ஒரு நாள் நனவே…
ஏக்கங்கள் தீா்த்தாயே…

பெண் : எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்…
நான் தான் நீ வேறில்லை…

பெண் : முகம் வெள்ளைதாள் அதில் முத்தத்தால்…
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே…
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்ததால்…
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே…

பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…

—BGM—

பெண் : இந்த நிமிடம் நீயும் வளா்ந்து…
என்னை தாங்க ஏங்கினேன்…
அடுத்தக்கணமே குழந்தையாக என்றும்…
இருக்க வேண்டினேன்…

பெண் : தோளில் ஆடும் சேலை…
தொட்டில்தான் பாதிவேளை…

பெண் : பலநூறு மொழிகளில் பேசும்…
முதல் மேதை நீ…
இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன்…
ஈடில்லா என்மகன்…

—BGM—

பெண் : எனைத்தள்ளும் முன் குழி கன்னத்தில்…
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்டேன்…
எனைக்கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்…
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே…

—BGM—

பெண் : என்னை விட்டு இரண்டு எட்டு…
தள்ளிப் போனால் தவிக்கிறேன்…
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து…
கருவில் வைக்க நினைக்கிறேன்…

பெண் : போகும் பாதை நீளம்…
கூரையாய் நீலவானம்…

பெண் : சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ…
பசி என்றால் தாய் இடம் தேடும் மானிட மா்மம் நீ…
நான் கொள்ளும் கா்வம் நீ…

—BGM—

பெண் : கடல் ஐந்தாறு மலை ஐநூறு…
இவை தாண்டித் தானே பெற்றேன் உன்னை…

பெண் : உடல் செவ்வாது பிணி ஒவ்வாது…
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை…

பெண் : கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…

—BGM—


Notes : Kangal Neeye Song Lyrics in Tamil. This Song from Muppozhudhum Un Karpanaigal (2012). Song Lyrics penned by Thamarai. கண்கள் நீயே பாடல் வரிகள்.


அம்மா அம்மா எந்தன் ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉழைப்பாளி

Amma Amma (Male) Song Lyrics in Tamil


ஆண் : அம்மா அம்மா…
எந்தன் ஆருயிரே…
கண்ணின் மணியே…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…

—BGM—

ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
நானும் நீயும் என்றும் ஓருயிரே…
இரு கண்ணின் மணியே… ஓ… ஓ… ஓ… ஓ…
தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…

ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…

—BGM—

ஆண் : பூவிழி ஓரம்…
ஓர் துளி நீரும்…
நீ வடித்தால் மனம் தாங்காது…

ஆண் : பொன்முகம் கொஞ்சம்…
வாடி நின்றாலும்…
நான் துடிப்பேன் வலி தாளாது…

ஆண் : பத்து மாசம் சுமந்து…
பட்ட பாடும் மறந்து…
பிள்ளைச் செல்வம் பிறக்க…
அள்ளிக்கையில் எடுத்த…

ஆண் : தாயும் நீயே…
தவமிருந்தாயே…
வாடுதம்மா பிள்ளையே…
வாட்டுவதோ என்னை நீயே…

ஆண் : அம்மா அம்மா எந்தன் ஆருயிரே…
நானும் நீயும் என்றும் ஓருயிரே…

—BGM—

ஆண் : பாதைகள் மாறி…
ஓடிய கன்றை…
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா…

ஆண் : கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்…
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா…

ஆண் : நல்ல காலம் பிறக்க…
உன்னை நானும் அறிந்தேன்…
உந்தன் கண்கள் திறக்க…
இங்கு பாடல் படித்தேன்…

ஆண் : போதும் போதும்…
பிரிந்தது போதும்…
வாடுதம்மா பிள்ளையே…

—BGM—

ஆண் : வாட்டுவதோ என்னை நீயே…

—BGM—


Notes : Amma Amma (Male) Song Lyrics in Tamil. This Song from Uzhaippali (1993). Song Lyrics penned by Vaali. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே பாடல் வரிகள்.


அம்மா என்றழைக்காத

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமன்னன்

Amma Endrazhaikatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி…
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா…
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்…
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா…

ஆண் : பொருளோடு புகழ் வேண்டும்…
மகனல்ல தாயே…
உன் அருள் வேண்டும் எனக்கென்றும்…
அது போதுமே…

ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று…
அமைந்தாலும் நான் உந்தன்…
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே…
அதை நீயே தருவாயே…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

—BGM—

ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி…
மாணிக்கம் மணிவைரம்…
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா…

ஆண் : விலை மீது விலை வைத்துக்…
கேட்டாலும் கொடுத்தாலும்…
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா…

ஆண் : ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி…
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா…

ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்…
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா…
உன்னாலே பிறந்தேனே… ஏ…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…

ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…


Notes : Amma Endru Song Lyrics in Tamil. This Song from Mannan (1992). Song Lyrics penned by Vaali. அம்மா என்றழைக்காத பாடல் வரிகள்.


தீயில் விழுந்த தேனா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

—BGM—

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : மழையின் நீர் வாங்கி மலையே அழுவது போல்…
தாயின் உயிர் தாங்கி தனயன் அழுவானோ…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : தங்கம் போலே இருந்தவள்தான்…
சருகை போலே ஆனதனால்…
சிங்கம் போலே இருந்த மகன்…
செவிலியை போலே ஆவானா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

—BGM—

ஆண் : ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா… அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…

ஆண் : நீ சுமந்த பிள்ளையாய் நான் இருந்தேன் அம்மா…
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா…
எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு…
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை…
கண்ணில் மணியாய் சுமந்தவளை…
மண்ணில் விட்டு விடுவானா…
மனதில் மட்டும் சுமப்பானா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்…
தாயின் காலடியே உலகம் முடியும் இடம்…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : கருணை தாயின் நினைவினிலே…
கல்லும் கொஞ்சம் அழுது விடும்…
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே…
கண்ணின் மணியும் விழுந்துவிடும்…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…


Notes : Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தீயில் விழுந்த தேனா பாடல் வரிகள்.


அம்மா ஐ லவ் யூ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஸ்ரேயா கோஷல் & பேபி ஷ்ரேயாஅம்ரிஷ்பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Amma I Love You Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஓ… அம்மா அம்மா அம்மா நீயே…
அன்பின் உருவம் நீயே…
உலகில் உலகில் உன் போல் சொந்தம்…
யாரும் இல்லையே…

பெண் : அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…
அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…

—BGM—

பெண் : என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே…
உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா…
எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா…

பெண் : நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன்…
நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே…

பெண் : அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…
அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…

—BGM—

பெண் : நான் செய்யும் குறும்புகள் ரசிக்கிறியே…
நான் தரும் வலியிலும் சிரிக்கிறியே…
பொய் கோபத்தை கொட்டும் போது…
கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறியே… ஏ ஏ ஏ…

பெண் : இசை நீ என்னில் கண்ணீர் துளி நீ…
முன் பகல் ஒளி நீ…
உயிர் நீ எந்தன் புன்முறுவலும் நீ…
யார் நீ எந்தன் தோள் நீயே…

பெண் : அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…
அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…

—BGM—

பெண் : ஆஹா… ஆஆ… ஆஆ…
ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…
ஆஹா… ஆஆ… ஆஆ…
ஆஹா… ஆஆ… ஆஆ… ஆஆ…

—BGM—

பெண் : வா மம்மி பேரி டேல் ஸ்டோரி சொல்ல…
வானவில் கூடவே வாக்கிங் செல்ல…
நாம் சேர்ந்திங்கு போடுற லூட்டிக்கு எல்லை இல்ல… அ அ அ…

பெண் : ஹனிமா இன்னும் நீ சொல்லடியம்மா…
நீ இன்னும் சுகமா அதட்டி கொஞ்சி நீ சிரிக்கயில…
சேயா நீ தாயா சொல்…

பெண் : என்னை என்னை கொஞ்சி பார்க்கும் அழகே…
உன்னை உன்னை கொஞ்சி தீர்க்கவா…
எந்தன் கையில் இன்று நீயும் குழந்தை போல மாறிட வா…

பெண் : நீ பிறந்ததில் நானும் இங்கே தாயாய் பிறந்தேன்…
நீ ஆடிடும் ஊஞ்சலாக எந்தன் நெஞ்சம் ஏங்குதே…

பெண் : அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…
அம்மா ஐ லவ் யூ…
மம்மி ஐ லவ் யூ…

—BGM—


Notes : Amma I Love You Song Lyrics in Tamil. This Song from Bhaskar Oru Rascal (2018). Song Lyrics penned by Pa Vijay. அம்மா ஐ லவ் யூ பாடல் வரிகள்.


அம்மா அம்மா நீ எங்க அம்மா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ் & எஸ்.ஜானகிஅனிருத் ரவிசந்தர்வேலையில்லா பட்டதாரி

Amma Amma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…
தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன…
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில…

ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…
என்ன தனியே தவிக்க விட்டாயே…
இன்று நீ பாடும் பாட்டுக்கு…
நான் தூங்க வேண்டும்…
நான் பாடும் பாட்டுக்கு…
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

—BGM—

ஆண் : நான் தூங்கும் முன்னே…
நீ தூங்கி போனாய்…
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்…
கண்ணான கண்ணே என் தெய்வ பெண்ணே…
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்…
ஐயோ ஏன் இந்த சாபம்…
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்…

ஆண் : பகலும் இரவாகி பயமானதே அம்மா…
விளக்கின் துணையின்றி இருளானதே…
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா…
தனிமை நிலையானதே…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

—BGM—

பெண் : நான் போன பின்னும்…
நீ வாழ வேண்டும்…
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு…
வானெங்கும் வண்ணம்…
பூவெல்லாம் வாசம்…
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு…

பெண் : நீ என் பெருமையின் எல்லை…
உந்தன் தந்தை போ் சொல்லும் பிள்ளை…
ஊரும் பெரிதில்லை களங்காதே என் கண்ணே…
உலகம் விளையாட உன் கண்முன்னே…
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் கரைசேரும்…
மீண்டும் நான் உன் பிள்ளை…

ஆண் : அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…

பெண் : எங்க போனாலும் நானும் வருவேன்…
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்…

ஆண் : தாயே உயிர் பிரிந்தாயே…

பெண் : கண்ணே நீயும் என் உயிர்தானே…

ஆண் : இன்று நீ பாடும் பாட்டுக்கு…
நான் தூங்க வேணும்…

பெண் : நான் பாடும் தாலாட்டு…
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேட்கும்…

—BGM—


Notes : Amma Amma Song Lyrics in Tamil. This Song from Velai Illa Pattadhaari (2014). Song Lyrics penned by Dhanush. அம்மா அம்மா நீ எங்க அம்மா பாடல் வரிகள்.


கருவினில் எனை சுமந்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரா கவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 1

Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கருவினில் எனை சுமந்து…
தெருவினில் நீ நடந்தால்…
தேரினில் ஊர்வலமே அம்மா…

பெண் : பூச்சாண்டி வரும் போது…
முந்தானை திரை போர்த்தி…
மன பயம் தீர்த்தாயே அம்மா…

பெண் : காணாத கடவுளுக்கு…
என் கைகள் வணங்காது…
உனக்கே என் உயிரே ஆரத்தி…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

—BGM—

பெண் : வெள்ளம் வந்த ஊரினிலே…
சிறைபட்ட ஊமைகளோ…
காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்…

பெண் : ரத்த கண்ணீர் சிந்தி மனம்…
தினம் தினம் கலங்குதம்மா…
கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா…

பெண் : உயிருள்ள கடவுளை…
உன்னிருவில் பார்கிறேன்…
நீதான் நம்பிக்கை என்றுமே…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…

ஆண் : தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…
தந்தானே நானே தானிந்ததன…
தானே நானே நா…


Notes : Karuvinil Enai Sumanthu Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 1 (2018). Song Lyrics penned by Madhura Kavi. கருவினில் எனை சுமந்து பாடல் வரிகள்.


காலையில் தினமும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Kalayil Dhinamum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

ஆண் : நிறைமாத நிலவே வா வா…
நடை போடு மெதுவா மெதுவா…
அழகே உன் பாடு அறிவேன் அம்மா…

ஆண் : மசக்கைகள் மயக்கம் கொண்டு…
மடி சாயும் வாழைத்தண்டு…
சுமையல்ல பாரம் சுகம்தான் அம்மா…

ஆண் : தாயான பின்புதான் நீ பெண்மணி…
தோள் மீது தூங்கடி கண்மணி… கண்மணி…

ஆண் : காலையில் தினமும் கண் விழித்தால்…
நான் கை தொழும் தேவதை அம்மா…
அன்பென்றாலே அம்மா…
என் தாய் போல் ஆகிடுமா…

ஆண் : இமை போல் இரவும் பகலும்…
எனை காத்த அன்னையே…
உனதன்பு பார்த்த பின்பு…
அதை விட வானம் பூமி யாவும் சிறியது…

—BGM—

பெண் : ஒரு பிள்ளை கருவில் கொண்டு…
ஒரு பிள்ளை கையில் கொண்டு…
உறவாடும் யோகம் ஒரு தாய்கென்று…

பெண் : மழலை போல் உந்தன் நெஞ்சம்…
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்…
தாய்க்கு பின் தாரம் நான்தானே அய்யா…

பெண் : தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா…
தாயாக்கி வைத்ததே நீயடா… நீயடா…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…

பெண் : நிலவோ நிலத்தில் இறங்கி…
உன்னை கொஞ்ச எண்ணுதே…
அதிகாலை சேவல் கூவும் அதுவரை…
பஞ்சு நெஞ்சில் நீயும் உறங்கிடு…

பெண் : தலைவா நீதான் எந்தன் தலைச்சன்பிள்ளை…
பாடுகிறேன் நான் தாலோ…
தனிசை பூவே தாலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…
பொன்மணி தாலேலோ…

—BGM—


Notes : Kalayil Dhinamum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. காலையில் தினமும் பாடல் வரிகள்.


நூறு சாமிகள் இருந்தாலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாந்தராஜ்விஜய் ஆண்டனி & சுஜய் எஸ்.கே.விஜய் ஆண்டனிபிச்சைக்காரன்

Nooru Samigal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

—BGM—

ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…

—BGM—

ஆண் : மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை…
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை…
மெழுகாக உருகி தருவாளே ஒளியை…
குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை…
நடமாடும் கோயில் நீதானே…

ஆண் : நூறு சாமிகள் இருந்தாலும்…
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா…
கோடி கோடியாய் கொடுத்தாலும்…
நீ தந்த அன்பு கிடைத்திடுமா…

ஆண் : ரத்தத்தை நான் தந்தாலுமே…
உன் தியாகத்துக்கு ஈடாகுமா…
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்…
ஓா் ஜென்மம் போதாதம்மா…
நடமாடும் கோயில் நீதானே…


Notes : Nooru Samigal Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran (2016). Song Lyrics penned by Eknathraj. நூறு சாமிகள் பாடல் வரிகள்.


சின்னத் தாயவள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.ஜானகிஇளையராஜாதளபதி

Chinna Thayaval Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

பெண் : சொல்லவா ஆராரோ…
நம் சொந்தங்கள் யாராரோ…
உந்தன் கண்ணில் ஏன்தான் நீரோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…

—BGM—

பெண் : தாயழுதாளே நீ வர…
நீ அழுதாயே தாய் வர…
தேய்பிறை காணும் வெண்ணிலா…
தேய்வது உண்டோ என் நிலா…
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட…
மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட…
விழி மூடாதோ…

பெண் : சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
சின்னத் தாயவள் தந்த ராசாவே…
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…


Notes : Chinna Thayaval Song Lyrics in Tamil. This Song from Thalapathi (1991). Song Lyrics penned by Vaali. சின்னத் தாயவள் பாடல் வரிகள்.