Tag Archives: வந்தனா ஸ்ரீனிவாசன்

adiye-unna-paathida-song-lyrics-in-tamil

அடியே உன்ன பாத்திட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்யபிரகாஷ் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்வெற்றிவேல்

Adiye Unna Paathida Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…

ஆண் : பொழுதும் உன் வாசன ஆசையக்கூட்டுதே…
அடங்கா மதயானைப் போல் எனத் தாக்குதே…
உசுரே உன் ஓர பாா்வ…
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

BGM

ஆண் : அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…
அழகா… இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…

BGM

பெண் : எதுக்கு என்னை நீ…
பொறையேற ஊட்டுற…
சுருக்கு கயிற விழியால மாட்டுற…

ஆண் : முன் அழகில் நீதான்…
முறுக்கேற ஜாடை காட்டுற…
ஒத்த நொடிக்கூட ஒதுங்காம தீய மூட்டுற…

பெண் : எங்கும் ஏதும் நீயாக…
உன் நெனப்பு பேயாக…
புடிச்சேன் புடிச்சேன்…
நெஞ்சில் ஆணி அடிச்சேன்…

ஆண் : அடியே… உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே…

BGM

ஆண் : உனை நான் நினைச்சா…
திமிராகி போகுறேன்…
விளக்கு திாி நான்…
விடிவெள்ளி ஆகுறேன்…

பெண் : எத்தனையோ வாா்த்த…
தொிஞ்சாலும் வாய மூடுறேன்…
ஒத்த பன ஓல…
அத போல நானும் ஆடுறேன்…

ஆண் : சித்ததுல நோயாக…
மொத்தத்துல தாயாக…
கிடைச்ச கிடைச்ச…
என்ன ஏன்டி கலைச்ச…

ஆண் : அடியே…

பெண் : உன்ன பாத்திட பாத்திட நான்…
குலைஞ்சேனே… அழகா…

ஆண் : இந்த ஆறடி ஆம்பளையும்…
விளைஞ்சேனே…

பெண் : பொழுதும் உன் வாசன…
ஆசையக்கூட்டுதே…
அடங்கா மதயானைப் போல்…
எனத் தாக்குதே…

பெண் : உசுரே உன் ஓர பாா்வ…
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே…

BGM


Notes : Adiye Unna Paathida Song Lyrics in Tamil. This Song from Vetrivel (2016). Song Lyrics penned by Yugabharathi. அடியே உன்ன பாத்திட பாடல் வரிகள்.


பாத்து பாத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிஹர சுதன்என்.ஆர். ரகுநந்தன்மஞ்சப்பை

Paathu Paathu Song Lyrics in Tamil


BGM

பெண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

ஆண் : உன்ன பாத்துதானே…
நிழலும் வெள்ளை ஆச்சு…
ஆச கூடி போக…
அணிலும் சிங்கம் ஆச்சு…

பெண் : தாலி செய்ய சொல்லு நீயும்…
தேவையில்ல வெட்டி பேச்சு…

BGM

ஆண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

BGM

ஆண் : கோழி றெக்க உன்ன பாத்து…
வானவில்லு ஆனேன்…
கொஞ்ச நேரம் உன்ன பேசி…
கண்ணதாசன் ஆனேன்…

பெண் : கூட பந்து நீயும் தீண்ட…
பூமி பந்து ஆனேன்…
கூரு கத்தி கண்களாலே…
ஊதுவத்தி ஆனேன்…

ஆண் : நூலு கண்டு உன்னால்…
கோலி குண்டு ஆனேன்…

பெண் : பாத மண்ணில் ஏனோ…
பூசு மஞ்சள் ஆனேன்…

ஆண் : ஜோடியாக நீயும் சேர…
பட்டு பூச்சி பட்டம் ஆனேன்…

BGM

பெண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

BGM

ஆண் : நேத்து உன்ன பார்த்த பின்பு…
தூங்கலானு போனேன்…
கனவில் நீயும் துரத்தி அடிக்க…
தோற்த்துதானே போனேன்…

பெண் : தோற்த்து நீயும் போகறேனு…
கோவமாகி போன…
கொஞ்சிடாம போனியேனு…
சாப்பிடாம போனேன்…

ஆண் : உன்ன எண்ணி நானே…
ஒல்லியாகி போனேன்…

பெண் : புல்லி நீயும் வைக்க…
கோலமாகி போனேன்…

ஆண் : கூடு விட்டு கூடு பாய…
கோக்கு மாக்கு ஆகி போனேன்…

BGM

ஆண் : பாத்து பாத்து உன்ன பாத்து…
வானம் குட்டையாச்சு…
பூத்து பூத்து கண்ணும் பூத்து…
பூமி தட்டையாச்சு…

பெண் : உன்ன பாத்துதானே…
நிழலும் வெள்ளை ஆச்சு…
ஆச கூடி போக…
அணிலும் சிங்கம் ஆச்சு…

ஆண் : தாலி செய்ய போறேன் நானும்…
தேவையில்ல வெட்டி பேச்சு…

BGM


Notes : Paathu Paathu Song Lyrics in Tamil. This Song from Manjapai (2014). Song Lyrics penned by Yugabharathi. பாத்து பாத்து பாடல் வரிகள்.


மழ காத்தா நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண், வந்தனா சீனிவாசன் & மரியா ரோய் வின்சென்ட்டி. இமான்ஒரு ஊருல ரெண்டு ராஜா

Mazhakaatha Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

ஆண் : நீ சொல்லுற சொல்லுலதானே…
கடுன் கத்திரி வெயில் நானே…
ரொம்ப குளிக்கிறேன்…

பெண் : நீ செய்யுற அன்புல தானே…
பனி கொட்டுற பங்குனி நானே…
பச்ச நெருப்பானேன்…
வெறுப்பானேன் சிவப்பானேன்…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

BGM

ஆண் : மனசு சொல்லுறத ஒடம்பு கேக்க…
மறந்து போயுடுதே உன்ன நான் பாக்க…

பெண் : மூச்சு காத்த உனக்குள் புகுந்து…
காலம் பூரா இருப்பேன் சேர்ந்து…

ஆண் : அள்ளி கொடுத்திட அன்பு இருக்கையில்…
ஒலகே புதுசாச்சு…
இன்னும் எதுக்கு நீ வம்பு வளக்குற தொடவா…

பெண் : நா எனையே உனக்கே தரவா…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

BGM

பெண் : அழக புத்தகமா பொழுதும் வாசி…
கடைசி பக்கம் வர முழுசா நேசி…

ஆண் : பாவி நீதான் எதயோ பேசி…
கேள்வி கேட்டா சரியா யோசி…

பெண் : வந்தா வழியில செல்லும் வரையில…
பயணம் முடியாது…
நம்பி நடந்திட உன்ன நெழலில தொடருவேன்…

ஆண் : நீ இருந்தா பெருசா வருவ…
மழ காத்தா…

ஆண் : மழ காத்தா நீ சுத்தி அடிக்க…
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி…

பெண் : அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க…
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா…

ஆண் : நீ சொல்லுற சொல்லுலதானே…
கடுன் கத்திரி வெயில் நானே…
ரொம்ப குளிக்கிறேன்…

பெண் : நீ செய்யுற அன்புலதானே…
பனி கொட்டுற பங்குனி நானே…
பச்ச நெருப்பானேன்…
வெறுப்பானேன் சிவப்பானேன்…

ஆண் & பெண் : மழ காத்தா…


Notes : Mazhakaatha Nee Song Lyrics in Tamil. This Song from Oru Oorula Rendu Raja (2014). Song Lyrics penned by Yugabharathi. மழ காத்தா நீ பாடல் வரிகள்.


கருவகாட்டு கருவாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவந்தனா ஸ்ரீனிவாசன், ஜித்தின் ராஜ் & ஜெயமூர்த்திடி. இமான்மருது

Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil


BGM

பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…

பெண் : கால் வளந்த மன்னவனே வா…
காவலுக்கு நின்னவனே வா வா…

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…

பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…
என்ன மூச்சுமுட்ட விடுவாயா…

BGM

பெண் : தன்னந்தனி மானு…
இவ தண்ணியில்லா மீனு…
மஞ்சத்தாலி போட்ட…
நீ மட்டும்தானே ஆளு…

ஆண் : குத்தமில்லா பொண்ணு…
நீ குத்தவச்ச தேனு…
கண்ணுக்குள்ள வச்சு…
உன்ன காப்பாத்துவேன் நானு…

பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு…
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு…
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு…
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு…

ஆண் : நட்சத்திரம் எத்தனையோ…
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு…
மச்சம் மட்டும் எத்தனையோ…
இன்னும் எடுக்கல கணக்கு…

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…

பெண் : கருவகாட்டு கருவாயா…
கூட காலமெல்லாம் வருவாயா…
முத்தம் கொடுக்கும் திருவாயா…

BGM

ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில்…
நான் வாசம் பண்ணப் போறேன்…
வாரம் வரும் முன்னே…
உன்ன மாசம் பண்ணப்போறேன்…

பெண் : சாமக்கோழி கூவ…
உன் சங்கதிக்கு வாரேன்…
ஒத்த முத்தம் தந்தா…
நான் ரெட்டப்புள்ள தாரேன்…

ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே…
பத்து தடவ சோ்ந்திருப்போம்…
தயிரு மோரா மாறுமட்டும்…
உயிரும் உயிரும் கலந்திருப்போம்…

பெண் : உசுரையும் மானத்தையும்…
உன்கிட்ட குடுத்திட்டேன் தலைவா…
ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு…
இருக்கணும் உறவா…

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு…
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு…
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு…
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு…

பெண் : கருவகாட்டு கருவாயா…


Notes : Karuvakaatu Karuvaaya Song Lyrics in Tamil. This Song from Maruthu (2016). Song Lyrics penned by Vairamuthu. கருவகாட்டு கருவாயா பாடல் வரிகள்.


அத்தன பேர் மத்தியில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாயாசின் நிசார், வந்தனா ஸ்ரீனிவாசன்ஜஸ்டின் பிரபாகரன்இராவண கோட்டம்

Athana Per Mathiyila Song Lyrics in Tamil


பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மத்தியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

பெண் : கனக்கா சிரிக்கிறேன்…
எதுக்கோ ரசிக்கிறேன்…
ஊத்தான ஊத்துல ஒயிலா நனஞ்சேன்…

பெண் : புதுசா பிறக்குறேன்…
படுத்தே பறக்குறேன்…
கண்ணாடிய கிள்ளி கிள்ளி கிறுக்கா முழிக்குறேன்…

ஆண் : அப்ப பாத்தது உன்ன…
கட்ட தாவணி புள்ள…
இப்ப பாக்குறேன் கண்ண…
ஏறுது ஏறுது பித்தம்…

ஆண் : கட்டிப்போடுது கண்ணு…
முட்டி போடுவது நெஞ்சு…
ஆச்சு வருஷங்கள் அஞ்சு…
சீறுது சீறுது நெஞ்சு…

ஆண் : எதையோ எதையோ செஞ்ச…
உள்ள ஆங்குது ஊங்குது…
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்…

ஆண் : ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட…
உள்ள தக தக தக…
தகக்குது சிலுக்குது…

ஆண் : வெகுநாள் வெறியே…
வெரசா அனையே…
கடவா உலகம் தொறந்துருச்சே…

ஆண் : பல நாள் திருடி…
உதட்ட திறடி…
என நான் தொலைச்சேன் எடுத்துக்கறேன்…

ஆண் : உதட்டான் குளத்துல…
பெரட்ட பிடிக்குறா…
சுழட்டி துவைக்குறா…
தலுக் மலுக் மலுக் மலுக்…

ஆண் : வறட்டி மனசுல…
மழையா விழுகுறா…
கலையா புழியுறா…
தாவணி காட்டுல வெள்ளம்…

பெண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வச்ச பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

BGM

பெண் : ஊரணி தண்ணியில…

ஆண் : மீனு ரெண்டு…

பெண் : மாலைய மாத்திக்குச்சு…

ஆண் : கிட்ட நின்னு…

பெண் : ஆசையா பெத்துகிட்டு…
சுத்தி சுத்தி வருது…

ஆண் : சேதிய கூறடி கூறடி…
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு…

பெண் : பின்னிகிட்டு…

ஆண் : வானம் ஒண்ணு கட்டிகிச்சு…

பெண் : பேச்சிகிட்டு…

ஆண் : ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு…
முத்தி முத்தி விழுதே…

பெண் : பாதைய மூடிடு மூடிடு…

ஆண் : தொலைவா நானும் கிடந்தேன்…
சிறு தவக்கள தீண்டாத…
விண்மீன போல…

ஆண் : உனக்குள் இப்போ கரஞ்சேன்…
ஆடி உதிரத்தில் ஓடும்…
தாய்ப்பாலின் ஈரம் போல…

ஆண் : அழகா அதட்டுறா…
மெதுவா வெறட்டுறா…
நிலவ பொறட்டுறா…
திடுக் திடுக் திடுக்குன்னு…

ஆண் : வெயிலா தொரத்துறறா…
வெறப்பா ரசிக்குறா…
இனிப்பா இனிக்குறா…
கலுக் கலுக் கலுக் கலுக்…

ஆண் : அத்தன பேர் மத்தியில…
பொத்துகிட்ட முத்தம் பட்டு…
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு உச்சி பூத்துருச்சே…

பெண் : கத்தும் மாடு கத்தயிலே…
மத்து சத்தம் மதியிலே…
ஒத்த முத்தம் உள்ள வந்து குட்டி போட்டுறிச்சே…

BGM

ஆண் : நாக்குல சொட்டுது…

பெண் : மௌனம் ஒன்னு…

ஆண் : பார்வையும் நிக்குது…

பெண் : வேணுமின்னு…

ஆண் : ஆசையும் முத்தத்துல…
பொத்தி வச்சு தார…

பெண் : வாங்கிடு வாங்கிடு வந்து…
வீட்டுக்குள்ள சுத்துது…

ஆண் : வெளிச்சம் ஒன்னு…

பெண் : வாசலில கத்துது…

ஆண் : மனசு நின்னு…

பெண் : ஊரு கண்ண பூட்டிப்புட்டு…
ரெண்டும் ரெக்கையில…

ஆண் : தாண்டுது தாண்டுது சென்று…

ஆண் : கொடுவா மேல பனியா…
இவ திடுக்குனு பாக்குற பார்வையே போதும்…
உனக்காக நானும் இறப்பேன்…
அடி புதைக்குற நேரம் முடியாத முத்தம்தாடி…

ஆண் : கதவோ திறக்குதே…
திறந்து…
மனசோ பறக்குதே…
பறந்து…
முழுசா பிறக்குதே…

ஆண் & பெண் : அதுவா நடக்குதே…
நடக்க எதுவோ இயக்குதே…
இயக்க பொதுவா நிலைக்குதே…

ஆண் & பெண் : காதலும் சாமியும் ஒன்னு…


Notes : Athana Per Mathiyila Song Lyrics in Tamil. This Song from Raavana Kottam (2023). Song Lyrics penned by Karthik Netha. அத்தன பேர் மத்தியில பாடல் வரிகள்.


ஒரு பாதி கதவு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண்ஜி. வி. பிரகாஷ் குமார்தாண்டவம்

Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil


ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…

ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…

பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…

BGM

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…

பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…

பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…

BGM

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…

பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…

ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…


Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.


மருதாணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மணி அமுதவன்நாகாஷ் அஜீஸ், அந்தோனி தாசன் & வந்தனா ஸ்ரீனிவாசன்டி. இமான்அண்ணாத்த

Marudhaani Song Lyrics in Tamil


BGM

பெண் : மானா மதுரையில…
மாமன் குதிரையில…
மாலை கொண்டுவாரான்…

பெண் : மீனா மினுங்கையில…
மின்னி சிணுங்கயில…
மேளங்கொட்டப்போறான்…

ஆண் : ஹேய்… மலந்து மலந்து அனிச்சங்கொழுந்து…
மணமணக்குதடி…
மாப்புள மாப்புள தோளோட ஆட…

ஆண் : வளந்து வளந்து அழக சொமந்து…
மினு மினுக்குதடி…
வெத்தல வெத்தல பாக்கோட கூட…

பெண் : அஞ்சன அஞ்சனமே விழி பூச…
கொஞ்சுன்னு கொஞ்சுதம்மா வளையோசை…

ஆண் : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

குழு (ஆண் & பெண்கள்) : பொம்மி நடந்துவாரா…
கும்மி அடிங்க ஜோரா…
தாலி சூடப் போறா…

குழு (ஆண் & பெண்கள்) : அம்மி மிதிக்கப்போறா…
அன்ப விதைக்கப்போறா…
தாயி வீட்டுச் சீரா…

ஆண் : ஹேய்… தவுல அடிக்க நாயனம் ஒலிக்க…
நேரம் நெருங்குதடி…
அட்சத அட்சத உன்மேல தூவ…

ஆண் : வெரல புடிக்க விரதம் முடிக்க…
வாரந்தெரிஞ்சிக்கடி…
அங்கன இங்கன நீத்துள்ளி தாவ…

பெண் : அக்கறஅக்கறையா இருப்பான்டி…
சக்கர சக்கரையா இனிப்பான்டி…

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

ஆண் : மண்ணுதான் விதை ஒன்னுதான்…
அது நூறா மாத்தி நீட்டுமே…
நின்னுதான் எங்க பொண்ணுதான்…
மறு வீட்டை ஏத்தி காட்டுமே…

குழு (ஆண்கள்) : நெட்டையில்ல குட்டையில்ல…
ரெண்டு கரையும் நேராக…
கொட்டும் மழை கொட்டையில…
தாங்கி பிடிக்கும் ஆறாக…

ஆண் : யாரு பெருசுன்னு எண்ணாத விட்டுத்தள்ளு…
வண்ணம் இணைஞ்சு நின்னாதான் வானவில்லு…

ஆண் : ஆணும் பொண்ணும் ஒன்னுக்கொன்னு…
சேர்ந்து வாழ வேணும் கண்ணு…
உள்ளத உள்ளத நல்லத நல்லத கேட்டு…

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…

BGM

குழு (ஆண் & பெண்கள்) : மருதாணி செவப்பு செவப்பு…
மகாராணி சிரிப்பு சிரிப்பு…
மருதாணி செவப்பு செவப்பு…
மணமேட நெனப்பு நெனப்பு…


Notes : Marudhaani Song Lyrics in Tamil. This Song from Annaatthe (2021). Song Lyrics penned by Mani Amuthavan. மருதாணி பாடல் வரிகள்.


அவத்த பையா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயாசின் நிசார் & வந்தனா ஸ்ரீனிவாசன்ஜி. வி. பிரகாஷ்குமார்பரதேசி

Avatha Paiyya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அவத்த பையா… செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…
கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங்குஞ்சு நானடா…
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல…
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க…

பெண் : கஞ்சியில் கரைஞ்ச உப்புக்கல்ல போல…
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க…
நம்ம பூமி வறண்டிருக்கு…
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைசிருக்கு…

ஆண் : ஓஓஓ… அவத்த பொண்ணே…
செவத்த பொண்ணே…
அலிச்சாட்டியம் ஏனடி…

—BGM—

பெண் : வெண்ணி தண்ணி காச்சவா…
உன் மேலு காலு ஊத்தவா…
காச்சு போன கையில…
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா…

ஆண் : கொட்டான் குச்சியில் மேலு தேச்சி…
குளிக்க வையடி…
என் அக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே…
நீ தள்ளி நில்லடி…
வராதடி… தொடாதடி…

பெண் : ஓஓஓ… அவத்த பையா…
செவத்த பையா…
அலிச்சாட்டியம் ஏனடா…

—BGM—

ஆண் : கூத்து பாக்க போகலாம்…
கூட மாட வாரியா…
சொல்லு பேச்சு கேக்குறேன்…
கொஞ்சம் நெல்லு சோறு தாறியா…

பெண் : எள்ளு போட்ட ஈசல் தாரேன்…
உன்ன தருவியா…
நான் முந்தி போட்டு மூடி வச்சு பூக்கள…
நீ மோந்து பாத்தியா…
முத்தாடையா… முட்டா பையா…

ஆண் : அவத்த பொண்ணே…
செவத்த பொண்ணே…
அலிச்சாட்டியம் ஏனடி…
இலுத்துவச்சு கழுத்தறுக்க…
இலிச்சவாயன் நானடி…

ஆண் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல…
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்…
கருவா சிறுக்கி சீலையில் இருக்கி…
கட்டி போட்டு சிரிக்கிறியே…
உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே…
நெல்லு சோத்து பானைக்குள்ளே…
பூனை விழுந்திருச்சே…

—BGM—


Notes : Avatha Paiyya Song Lyrics in Tamil. This Song from Paradesi (2013). Song Lyrics penned by Vairamuthu. அவத்த பையா பாடல் வரிகள்.


உள்ளம் உருகுதய்யா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார், வந்தனா ஸ்ரீனிவாசன் & பிருந்தா மாணிக்கவாசகன்டி. இமான்எதற்கும் துணிந்தவன்

Ullam Urugudhaiya Song Lyrics in Tamil


பெண் : அழகா… அழகா…

BGM

பெண் : அழகா… அழகா…
உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ…
திண்ணை பேச்சென மாறிடவோ…

ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…
கையில் நானுனை ஏந்திடவோ…
சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர…
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…

பெண் : உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

BGM

பெண் : அழகா… கவன் வீசும் பயலே…
உனை நான் மனதோடு மறைத்தே…
மல்லாந்து கிடப்பதுவோ…

பெண் : அவனோடு பொறியாய் எனை நீ…
விரலோடு பிசைந்தே…
முப்போதும் ரசிப்பதுவோ…

ஆண் : உச்சி தலை முதல் அடி வரை எனை இழுத்தே…
முத்தம் பதித்திட முனைவதும் ஏனடி…

பெண் : கற்றை அவிழ்ந்திட அறுபது கலைகளையும்…
கற்று கொடுத்திட நிறைந்திடும் பூமடி…

ஆண் : கலித்தொகையாய் இருப்பேன் நானே…
கலைமானே கரம் சேரடி…

குழு (ஆண்கள்) : வங்கக் கடெலனும் சங்கத் தமிழினில் மூழ்கடி…

பெண் : உள்ளம் உருகுதய்யா…
உன்ன உத்து உத்து பாக்கயில…
உள்ளம் உருகுதய்யா…
நீ கொஞ்சி கொஞ்சி பேசயில…

பெண் : தின்ன மாங்கனி நான் தரவோ…
திண்ணை பேச்சென மாறிடவோ…

ஆண் : கன்னக்கோலும் நீ இடவே…
கையில் நானுனை ஏந்திடவோ…

ஆண் & பெண் : சுகம் ஒன்றல்ல இரண்டல்ல நூறு தர…
ஒரு நன்னாள் நன்னாள் உன்னால் விளையுமே…

BGM

பெண் : உள்ளம் உருகுதய்யயா…


Notes : Ullam Urugudhaiya Song Lyrics in Tamil. This Song from Etharkum Thuninthavan (2022). Song Lyrics penned by Yugabharathi. உள்ளம் உருகுதய்யா பாடல் வரிகள்.


ஆலங்காலங்குருவி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மணியமுதன்வந்தனா ஸ்ரீனிவாசன் & லிஜேஷ்குமார்என்.ஆர்.ரகுணந்தன்புலிக்குத்தி பாண்டி

Alangalankuruvi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…
கிட்ட கிட்ட வந்து நீயும்…
என்ன கொல்லுறியே…

பெண் : நிக்க வச்சு பாக்குறியே…
நீயும் என்ன கேக்குறியே…
கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : உன் கூட பேசுறேன்…
உன்ன பத்தி பேசுறேன்…
வேறேதும் தெரியல…
இப்ப ஒன்னும் புரியல…

பெண் : உன் கூட நடக்குறேன்…
உன்ன சுத்தி நடக்குறேன்…
வேறேதும் தோனல…
இப்ப நானும் நான் இல்ல…

ஆண் : எத்தனை எத்தனை நட்சத்திரம்…
எண்ணிதானே பாக்கனுமே…
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்…
வாழ்ந்த காட்டுன்னுமே…

பெண் : அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே…
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே…

ஆண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

—BGM—

ஆண் : எந்த பக்கம் தொட்டாலும்…
கற்கண்டு இனிக்குமே…
அது போல உன் நெனப்பு…
நெஞ்சுக்குள்ள இருக்குமே…

பெண் : என்ன நீ சொன்னாலும்…
கேக்கனும்னு தோணுமே…
என்ன சொல்ல இந்த பந்தம்…
ஆயிசுக்கும் வேணுமே…

ஆண் : நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்…
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்…
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே…
அது கையுல நான் கொடுப்பேன்…

பெண் : நெசமா வாழ்க்கை அழகா இருக்கு…
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…
உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…

ஆண் : கொட்ட கொட்ட பாக்குறியே…
கொண்டையத்தான் ஆட்டுறியே…

பெண் : கண்ணாலதான் ஜாட காட்டி…
என்ன கொல்லுறியே…

ஆண் : காத்த விட யாக்கை…
எடை குறைஞ்சி போச்சி…
நேத்து விட வாழ்க்கை…
இப்ப இனிப்பா ஆச்சி…

பெண் : ஆலங்காலங்குருவி…
அடி ஆகாசத்து அருவி…

ஆண் : உன் கால கால தழுவி…
வாழ வாங்கி வந்தேன் பிறவி…


Notes : Alangalankuruvi Song Lyrics in Tamil. This Song from Pulikkuthi Pandi (2021). Song Lyrics penned by Maniamudhan. ஆலங்காலங்குருவி பாடல் வரிகள்.