பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | வந்தனா ஸ்ரீனிவாசன் & ஹரிசரண் | ஜி. வி. பிரகாஷ் குமார் | தாண்டவம் |
Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil
ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி… ஹே…
—BGM—
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…
ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
—BGM—
ஆண் : இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சோ்த்து விடும்…
பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…
ஆண் : இரண்டும் கை கோர்த்து சோ்ந்தது…
இடையில் பொய்பூட்டு போனது…
பெண் : வாசல் தல்லாடுதே…
திண்டாடுதே… கொண்டாடுதே…
—BGM—
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
—BGM—
ஆண் : ஓ… இடி இடித்தும் மழை அடித்தும்…
அசையாமல் நின்றிருந்தோம்…
பெண் : ஓ… இன்றேனோ நம் மூச்சும்…
மென் காற்றில் இணைந்து விட்டோம்…
ஆண் : இதயம் ஒன்றாகி போனதே…
கதவே இல்லாமல் ஆனதே…
பெண் : இனிமேல் நம் வீட்டிலே…
பூங்காற்றுதான் தினம் வீசுமே…
—BGM—
ஆண் : ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்…
சோ்த்து வைக்க காத்திருந்தோம்…
பெண் : ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திறந்தே காத்திருந்தோம்…
காற்று வீச பார்த்திருந்தோம்…
ஆண் : நீ என்பதே நான்தானடி…
நான் என்பதே நாம்தானடி…
Notes : Oru Paadhi Kadhavu Song Lyrics in Tamil. This Song from Thaandavam (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு பாதி கதவு பாடல் வரிகள்.