பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்… இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்… உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
—BGM—
பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்… காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது… சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்… துன்பங்கள் கூட பாடல் ஆனது…
பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்… உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்… நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்… நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
—BGM—
பெண் : என் வாசலில் நீ வந்ததால்… புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது… என் வாழ்விலே நீ வந்ததால்… எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…
பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்… காலங்கள் யாவும் காதல் வாழும்… நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்… வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…
பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்… இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்… சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்… உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…
—BGM—
Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுதுபாடல் வரிகள்.
{ ஆண் : இரவு பகலை தேட… இதயம் ஒன்றைத் தேட… அலைகள் அமைதி தேட… விழிகள் வழியை தேட… } * (2)
ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்… எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ… விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்… எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ… அச்சச்சோ… அச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட… இதயம் ஒன்றைத் தேட… அலைகள் அமைதி தேட… விழிகள் வழியை தேட…
—BGM—
ஆண் : வாழ்க்கை என்னும் பயணம் இங்கே… தூரம் தூரம்… எங்கே மாறும் எங்கே சேரும்… சொல்லும் காலம்…
ஆண் : தென்றல் வந்து பூக்கள் ஆடும்… அதுவொரு காலம்… மண்ணில் சிந்தி பூக்கள் வாடும்… இலையுதிர் காலம்…
ஆண் : கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும்… தனியாக அழகில்லையே… கடலைச் சேரா நதியைக் கண்டால்… தரையில் ஆடும் மீனைக் கண்டால்… ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால்… அச்சச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட… இதயம் ஒன்றைத் தேட… அலைகள் அமைதி தேட… விழிகள் வழியை தேட…
—BGM—
ஆண் : வீசும் காற்று ஓய்வைத் தேடி… எங்கே போகும்… பூக்கள் பேச வாயிருந்தால்… என்ன பேசும்…
ஆண் : மாலை நேரம் பறவைக் கூட்டம்… கூட்டைத் தேடும்… பறவை போனால் பறவைக் கூடு… யாரைத் தேடும்…
ஆண் : நாடோடி மேகம் ஓடோடி இங்கே… யரோடு உறவாடுமோ… அன்னையில்லா பிள்ளை கண்டால்… பிள்ளையில்லா அன்னை கண்டால்… அன்பேயில்லா உலகம் கண்டால்… அச்சச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட… இதயம் ஒன்றைத் தேட… அலைகள் அமைதி தேட… விழிகள் வழியை தேட…
ஆண் : சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்… எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ… விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்… எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ… அச்சச்சோ… அச்சச்சோ…
ஆண் : இரவு பகலை தேட… இதயம் ஒன்றைத் தேட… அலைகள் அமைதி தேட… விழிகள் வழியை தேட…
—BGM—
Notes : Iravu Pagalai Theda Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவு பகலைபாடல் வரிகள்.
ஆண் : எந்தன் குயிலெங்கே… என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்…
—BGM—
ஆண் : எந்தன் குயிலெங்கே… என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்… கொஞ்சும் குயிலோசை… என்று கேட்பேன் என்று கேட்பேன்…
ஆண் : கண்ணிலோர் ஓவியம்… நெஞ்சிலோர் ஞாபகம்… சொல்வது யாரிடம்… புரிந்ததா என் மனம்…
ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று… சொல் சொல் சொல் கண்மணி…
ஆண் : எந்தன் குயிலெங்கே… என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்… கொஞ்சும் குயிலோசை… என்று கேட்பேன் என்று கேட்பேன்…
—BGM—
ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்… படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி… பெண் : ஓஹோஹோ…
ஆண் : கனவினிலும் என் நினைவினிலும்… கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி… பெண் : ஓஹோஹோ…
பெண் : அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்… அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்… வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை…
பெண் : எந்தன் குயிலெங்கே… இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்… கொஞ்சும் குயிலோசை… இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…
ஆண் : கண்ணிலோர் ஓவியம்… நெஞ்சிலோர் ஞாபகம்… சொல்வது யாரிடம்… புரிந்ததா என் மனம்…
ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று… சொல் சொல் சொல் கண்மணி…
ஆண் : எந்தன் குயிலெங்கே… என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்… கொஞ்சும் குயிலோசை… என்று கேட்பேன் என்று கேட்பேன்…
—BGM—
பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும்… கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே… ஆண் : ஓஹோஹோ…
பெண் : அழகழகாய் இனி பூ மலரும்… ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்… ஓஹோஹோ…
ஆண் : என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்… என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்… என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு…
பெண் : எந்தன் குயிலெங்கே… இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன்… கொஞ்சும் குயிலோசை… இன்று கேட்டேன் இன்று கேட்டேன்…
ஆண் : கண்ணிலோர் ஓவியம்… நெஞ்சிலோர் ஞாபகம்… சொல்வது யாரிடம்… புரிந்ததா என் மனம்…
ஆண் : எந்நிலையில் கொஞ்சம் நின்று… சொல் சொல் சொல் கண்மணி…
ஆண் : எந்தன் குயிலெங்கே… என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன்… கொஞ்சும் குயிலோசை… என்று கேட்பேன் என்று கேட்பேன்…
Notes : Endhan Kuyil Engey Song Lyrics in Tamil. This Song from Kannukkul Nilavu (2000). Song Lyrics penned by Pazhani Bharathi. எந்தன் குயிலெங்கேபாடல் வரிகள்.
ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே… எனைக் கொல்லும் அழகினிலே… நான் கொள்ளை போனேனே… நான் கொள்ளை போனேனே…
—BGM—
பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே… உன் தீண்டும் விரல்களிலே… நான் கரைந்தே போனேனே… நான் கரைந்தே போனேனே…
—BGM—
பெண் : வெட்ட வெளிதனிலே… வெட்ட வெளிதனிலே… நான் பனியில் நனைந்தாலும்… உன் மூச்சில் வெந்தேனே…
—BGM—
ஆண் : காதல் மழையினிலே… காதல் மழையினிலே… நான் குடையை மறந்தேனே… என்னுயிரும் நனைந்தேனே…
பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…
ஆண் : சில ரோஜா மலர்களும்… உன்னை கண்டதும்… கன்னம் சிவக்கிறது… கன்னம் சிவக்கிறது…
—BGM—
பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே… உன் தீண்டும் விரல்களிலே… நான் கரைந்தே போனேனே… நான் கரைந்தே போனேனே…
—BGM—
பெண் : காதல் நெஞ்சத்தை… காற்றில் விட்டேனே… அந்த காற்றே எரிந்தாலும்… என் காதல் எரியாதே…
—BGM—
ஆண் : செவ்வாய் கிரகத்தில்… நீ போய் வாழ்ந்தாலும்… நான் உன்னை சேர்வேனே… என் காதல் தீராதே…
பெண் : உலகம் அழகியது… காதல் சொல்லியது…
ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்… இன்னும் இனிக்கிறது… இன்னும் இனிக்கிறது…
—BGM—
ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே… எனைக் கொல்லும் அழகினிலே… நான் கொள்ளை போனேனே… நான் கொள்ளை போனேனே…
பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே… உன் தீண்டும் விரல்களிலே… நான் கரைந்தே போனேனே… நான் கரைந்தே போனேனே…
—BGM—
Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளேபாடல் வரிகள்.
பெண் : ஹேய்… வெட்ட வெளியில் கொட்டும் நிலவில்… தாஜ்மஹால் நானா…
ஆண் : என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே… தாஜ்மஹால் நீனே…
பெண் : நிலவுக்கு சேலை தந்து… குளிரை மறந்து தூங்க சொல்வோம்…
ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
ஆண் : ஓஒஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே… அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
பெண் : பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை… வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…
ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி… ஆண் & பெண் : அது இப்படி… அது இப்படி… அது இப்படி…
Notes : Kathi Vaitha Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கத்தி வைத்து பாடல் வரிகள்.
பெண் : ஹ… செல்லாது உன் குறும்பு… ஹ… ஆகாது இந்த வம்பு…
ஆண் : அட அம்மாடி என்னை நம்பு… ஆகாது இந்த வம்பு…
பெண் : குயில் பாடுதே பாடுதே… பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…
ஆண் : அடி பாடுதே பாடுதே… பூஞ்சோலைக் குயில் ஒன்னு… பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய் ஹோய்…
—BGM—
பெண் : காதலாம் நந்தவனச் சோலையில்… பூக்கள் இனி கிள்ளக்கூடாது…
ஆண் : பூவே நீ அபிநயத்தில் அழைக்கிறாய்… பக்கம் வந்தால் தள்ளக்கூடாது…
பெண் : கண்ணா குறும்பான விரல்களை… எங்கே தண்டிப்பது…
ஆண் : அன்பே என் கொள்கை என்பது… எல்லாம் மன்னிப்பது…
பெண் : வரம்பை மீறாதே… குறும்பை வீசாதே… அழகை கொள்ளையிடாதே…
ஆண் : ஹேய்… அம்மாடி என்னை நம்பு… ஆகாது இந்த வம்பு…
பெண் : ஹஹா… செல்லாது உன் குறும்பு… ஹ… ஆகாது இந்த வம்பு…
ஆண் : அடி பாடுதே பாடுதே… பூஞ்சோலைக் குயில் ஒன்னு… பாட்டுக்கு அர்த்தம் சொல்லு… ஹோய்…
பெண் : குயில் பாடுதே பாடுதே… பாட்டுக்கு அர்த்தங்கள் புரியாது விட்டுத் தள்ளு…
ஆண் : அடி குக்கூனா பக்கம் வா… அடி குக்கூனா முத்தம் தா…
பெண் : இது நீ சொல்லும் பாஷை… குயில் சொல்லாத பாஷை… நீ என் காதில் பூ சுத்தாதே…
ஆண் : ஹோய் ஹோய் ஹோய்… அம்மாடி என்னை நம்பு… ஆகாது இந்த வம்பு…
பெண் : ஹை… செல்லாது உன் குறும்பு… ஹா… ஆகாது இந்த வம்பு…
Notes : Adi Paaduthea Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. அடி பாடுதே பாடல் வரிகள்.