பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | ஆர்.குரு அய்யாதுரை | திபு நின்னன் தாமஸ் | நெஞ்சுக்கு நீதி |
Sevakkaattu Seemaiellaam Song Lyrics in Tamil
ஆண் : அரிச்சந்திர மாமன்னர் ஆட்சியில் நடந்ததென்னவோ…
சத்தியமே சோதனையாய் சரிந்து கீழே விழுந்ததென்னவோ…
சகத்தோரே உணர்ந்திடுவீர்…
சகலரும் வந்து சேரும் இடுகாட்டு மத்தியிலே…
இருக்கின்றதோ ஐயோ எங்கே தேடுவேன்…
ஆண் : ஏறாத மலை ஏறி…
இறங்காத கடல் இறங்கி…
வடிக்காத கண்ணீர் விட்டு ஓடினேன்…
தேடினேன் ஓடினேன்…
கண்ணே மணியே என்று உன்னை நாடுவேன்…
—BGM—
ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திர ராசா…
அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா…
ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல…
பொக பொகயா போனாரே…
எல்லாத்தையும் எழந்த பொறவு…
ஈம காட்ட சேந்தாரே…
ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…
—BGM—
ஆண் : பட்டாட குப்பையிலே…
பல்லாக்குமே வீதியிலே…
எட்டூரு சுத்தி வந்தோம் பட்டினிக்கு சோறுயில்லே…
—BGM—
ஆண் : கண் போக காட்சியில்லே…
கால் போக ஊருமில்லே…
மண்ணாகி போன பின்னே மானிடருக்கு சாதியில்லே…
ஆண் : பஞ்சாங்க நூலு தான் பள்ளம் தோண்டுதே…
அன்னாடங்காய்ச்சிய குத்தி சாய்க்குதே…
ஆண் : கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி…
கொட்டுன்னு தானே சொன்னாங்க…
கூரயுமில்லா வீட்டுல வாழும்…
எங்களை எதுக்கு கொன்னாங்க…
ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…
—BGM—
ஆண் : மும்மாரி பெய்யுதுங்க…
மூணு போகம் விளையுதுங்க…
ஒப்பாரி வைக்கும் சனம்…
ஒசர வழி தெரியலைங்க…
—BGM—
ஆண் : முள்ளோடு பூவிருக்கு…
முத்தத்துல நெலவிருக்கு…
கல்லான கடவுளுக்கே கருணை அது எங்கிருக்கு…
ஆண் : கற்பூரம் ஏத்தியும் கண்ண காட்டலே…
நெய் சோற போட்டுமே மண்ண காக்கல…
ஆண் : பொய்யில உண்ம பொசுங்கி போக…
எத்தன சட்டம் அம்மாடி…
நீதிய காசுக்கு வாங்குற மனுசன்…
நிக்கிறான் பாரு முன்னாடி…
—BGM—
ஆண் : செவக்காட்டு…
குழு : சீமையெல்லாம்…
ஆண் : ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…
குழு : அரிச்சந்திரா ராசா…
ஆண் : அரசாண்ட நாட்ட விட்டே…
குழு : நாட்ட விட்டே…
ஆண் : நகர்ந்தாரே செல்லா காசா…
ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல…
பொக பொகயா போனாரே…
எல்லாத்தையும் எழந்த பொறவு…
ஈம காட்ட சேந்தாரே…
—BGM—
ஆண் : அரிச்சந்திரா ராசா…
—BGM—
Notes : Sevakkaattu Seemaiellaam Song Lyrics in Tamil. This Song from Nenjuku Needhi (2022). Song Lyrics penned by Yugabharathi. செவக்காட்டு சீமையெல்லாம் பாடல் வரிகள்.