Tag Archives: எஸ். ஏ. ராஜ்குமார்

கல்லூரி வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் & அனுராதா ஸ்ரீராம்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kalluri Vaanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
ஹை ஸ்பீட்டில் வந்தாயே…
ஐ ப்ரோவை மேல் தூக்கி…
ஐ லவ் யூ என்றாயே…

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்…
ஐ லவ் யூ என்றாயே…

BGM

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்…
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்…

BGM

ஆண் : என்றாலும் எண்ணங்கள்…
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்…

BGM

பெண் : டால்பின்கள் துள்ளாதா…
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்…

BGM

பெண் : உள்ளுக்குள் உண்டாகும்…
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்…

பெண் : பொல்லாத ஆடவா…
ஆண் : நான் பூப்பந்து ஆடவா…

பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக…
ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள்தானம்மா…

பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்…
ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா…

பெண் : பூ பூ பூ பூச்செண்டு…
புயலில் போராடும்…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…

BGM

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன…
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே…

BGM

பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்…
ஆண் : சொல்வேனே சொல்வேனே…

BGM

ஆண் : செவ்வாழை மேனிக்குள்…
பெண் : என்னையா என்னையா…
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்…
பெண் : சொல்லையா சொல்லையா…

ஆண் : நான் பார்த்தால் பாவமா…
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா…

ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற…
கேஸும் உண்டு…

பெண் : அன்பே உன் ஆசைதான்…
ஆபரேஷன் கேஸ் அல்ல…

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்…
என் நெஞ்சம் மீறும் இன்று…

பெண் : கண்ணாளா நம் காதல்…
கார்கில் வார் போர் அல்ல…

ஆண் : த த த தள்ளாதே…
இளமை ஏற்காதே…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
பெண் : ஐ லவ் யூ என்றாயே…

BGM


Notes : Kalluri Vaanil Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கல்லூரி வானில் பாடல் வரிகள்.


அடி காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : இடி ஒலி கேட்கும் போதிலும்…
வெடி ஒலி கேட்கும் போதிலும்…
காதல் மிருகம் விழிக்காது கண்மூடி தூங்குமே…

ஆண் : பூக்கள் மலரும் ஓசையில்…
புடவையின் சர சர ஓசையில்…
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பாா்க்குமே…

ஆண் : ஒரு முறை விழித்த பின் உறங்காதம்மா…
இறை தேடும் மிருகம்தான் என்னை திண்ணுமா…
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்…
கொஞ்சம் வலிமை சோ்க்க வாமா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

BGM

ஆண் : காதல் மிருகம் என்பது…
ரத்தம் சதையா கேட்குது…
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது…

ஆண் : மீண்டும் மிருகம் தூங்கவே…
காடா மலையா கேட்குது…
இடுப்பிலும் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது…

ஆண் : மிருகம் தவிக்குதே வழி சொல்லவா…
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா…

ஆண் : மடி தாங்கி கொடுக்க…
மெல்ல தடவி கொடுக்க…
அது தூங்கி போகும் அல்லவா…

ஆண் : கண்மணி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்…

BGM

ஆண் : அடி காதல் என்பது தூங்கும் மிருகம்…
மனசுக்குள் படுத்திருக்கும்…
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை…
ஒரு கண் விழித்திருக்கும்…

ஆண் : சகியே அது சாதுவான…
ஒரு சைவ பூனை போல் உள்ளே ஒளிந்திருக்கும்…
அந்த வேளை வந்ததும் விஸ்வரூபம் கொண்டு…
வெளியே குதித்துவிடும்…

ஆண் : கண்மணி காதல் மிருகம் உனக்குள் இல்லையா…

BGM


Notes : Adi Kadhal Enbathu Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. அடி காதல் பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்டிம்மி & மகாலட்சுமி ஐயர்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

BGM

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

பெண் : காதல் இனிய அறிவியல்…
நம் உயிரில் உறையும் உயிரியல்…

BGM

ஆண் : இதயம் இணைந்தால் உளவியல்…
நம் இளமை கலந்தால் களவியல்…

பெண் : விரல் தீண்டும் நேரத்தில் நுரையீரல் சுவாசத்தில்…
கலவரம் வந்தால் அங்கே காதல் விஞ்ஞானம்…

ஆண் : ஓஷோவின் தியானத்தில் ஓயாமல் யோகத்தில்…
இருவரும் சேர்ந்தால் அங்கே காதல் ஆன்மீகம்…

பெண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

ஆண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நான் செய்யவா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நான் செய்யவா…

BGM

குழு : லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…
லவ் லவ் லவ் லவ் லவ் இஸ் எ பென்டாசி…
பீலிங் பீலிங் பீலிங் எக்ஸடசி…

BGM

ஆண் : உனக்குள் பிறக்கும் நறுமணம்…
என் உணர்வை மெதுவாய் தோன்றிடும்…

BGM

பெண் : ஆஹா… அளக்கும் இதழ்கள் அசைத்திடும்…
என் திசுக்கள் அனைத்தும் உசுப்பிடும்…

ஆண் : புவி ஈர்ப்பு விசை போல்…
உயிர் ஈர்ப்பு விசைதான்…
எனை தினம் ஈர்க்கும் கண்ணில் கண்டேனே…

பெண் : ஒளி கீற்று இல்லாமல் தாவரங்கள் வாழாதே…
உன்னை தினம் காணா விட்டால் இதயம் இயங்காதே…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…

பெண் : சின்ன சின்ன சில்மிஷங்கள் நீ செய்யடா…
கண்ணை கட்டும் மெஸ்மெரிசம் நீ செய்யடா…

ஆண் : உடலின் நரம்பை உரசிடும் நேரம்…
சுகங்கள் சுரக்கும் சுரப்பிகள் ஊரும்…

பெண் : நினைவு அலைகள் நெருங்கிடும் நேரம்…
இதய அறையில் பிரளயம் தோன்றும்…

ஆண் : சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…
சம்வேர் இன் தி ஸ்கை…
ஐ வான்னா வான்னா ப்ளை…

ஆண் : இட் இஸ் சச் எ பீலிங் லவ்விங் சம் ஒன் ஓ யே…
ஐ நோ ஐ நோ யூ லவ் மீ லவ் மீ ஓ யே…

BGM


Notes : Chinna Chinna Silmishangal Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சின்ன சின்ன பாடல் வரிகள்.


சிக்குலெட்டு சிக்குலெட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.ஏ. ராஜ்குமாா்மனோஎஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Chiclet Chiclet Song Lyrics in Tamil


ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…

BGM

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

BGM

ஆண் : எம் டிவி பிகரு எல்லாம்…
எதிரில் வந்து நின்னா நியாயமா…
எல்.கே.ஜி யூ.கே.ஜி படிக்கும்…
பையனுக்கு தாங்குமா…

ஆண் : ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா…
சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா…

BGM

ஆண் : ரெட்ட ஜெட பறக்குது…
மொட்ட தல மொளைக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

BGM

ஆண் : உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான்…
ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது…
சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா…
மனசு சாட்டிலைட்டா மாறுது…

ஆண் : பாப்பா இடுப்புல கதகலி நடக்குது…
பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது…

BGM

ஆண் : முக்காபுலா நடக்குது…
கொக்க கோலா குடிக்குது…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி…
கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி…
காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி…

ஆண் : நீ சிரிச்சதும் இப்ப எனக்கு…
பீர் அடிச்சது போல இருக்கு…

ஆண் : கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…
கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான்…
குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்…

ஆண் : சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி…
ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி… ஹே…


Notes : Chiclet Chiclet Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by S.A. Rajkumar. சிக்குலெட்டு சிக்குலெட்டு பாடல் வரிகள்.


சிங்காரி சிங்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கார்த்திக்எஸ். ஏ. ராஜ்குமார்ராஜா

Singari Singari Song Lyrics in Tamil


குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா…
தீ தூவி போறியா…
கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா…
நீர்வீழ்ச்சி தாரியா…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…

BGM

ஆண் : ஓயே யே… சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : ஒரு வசிய மருந்தையே…
உன் பேச்சில் வைத்தாயே…
உயிர் கொளுத்தும் அனலையே…
உன் மூச்சில் வைத்தாயே…

ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி…
உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி…
மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி…
கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு…

ஆண் : உன் சிரிப்பை பார்த்து…
நான் சிறை சேதம் ஆயாச்சி…
என்னை பிடித்து ஆட்டிடும்…
பெண் பேயும் நீயாச்சு…

BGM

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

குழு : உயிர் தத்தளிக்கும் முத்தங்களை…
தந்திடு கிளியே…
சங்கு சக்கரமாய் சுற்றிடுவார்…
காதலர் முறையே…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி…
சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி…

ஆண் : உன் ஊசி பார்வையில்…
நான் பஞ்சர் ஆனேன்டி…
என் ஓ.சி மது கடை…
உன் உதட்டில் கண்டேன்டி…

ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும்…
உன்னை தேடி…
என் இதழும் டாவடிக்கும்…
உன்னை பாடி…

ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி…
போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி…
உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி…
உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி…

BGM

ஆண் : சிங்காரி சிங்காரி…
சிங்காரி சிங்காரி…


Notes : Singari Singari Song Lyrics in Tamil. This Song from Raja (2002). Song Lyrics penned by Pa. Vijay. சிங்காரி சிங்காரி பாடல் வரிகள்.


இதயங்கள் நழுவுது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : அன்பில் நெஞ்சை அள்ளி தந்தாள்…
காயங்கள் எல்லாம் பூக்கள் ஆனது…
சின்ன சின்ன வார்த்தை சொன்னாள்…
துன்பங்கள் கூட பாடல் ஆனது…

பெண் : இரவுக்கு நிலவாய் நீதான் வந்தாய்…
உறவுக்கு முகவரி நீதான் தந்தாய்…
நீதானே அன்பே என்றும் எந்தன் ஆகாயம்…
நீயின்றி போனால் இங்கே வாழ்வே பொய்யாகும்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

BGM

பெண் : என் வாசலில் நீ வந்ததால்…
புள்ளிகள் எல்லாம் கோலம் ஆனது…
என் வாழ்விலே நீ வந்ததால்…
எல்லைகள் எல்லாம் வாசல் ஆனது…

பெண் : உன்னுடன் வாழும் ஓர் நாள் போதும்…
காலங்கள் யாவும் காதல் வாழும்…
நீ தந்த அன்பில் வாழ்வேன் இங்கே எப்போதும்…
வாழ்வினில் என்றும் உந்தன் நினைவே சங்கீதம்…

பெண் : இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…
இதயங்கள் நழுவுது இது என்ன மாயம்…
சுகமாய் வலிக்குது இது என்ன காயம்…

பெண் : நாளும் இங்கே அதிசய உலகம்…
உள்ளங்கையில் பூமிகள் சுழலும்…

BGM


Notes : Idhayangal Naluvuthu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. இதயங்கள் நழுவுது பாடல் வரிகள்.


சின்ன சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கிருஷ்ணராஜ்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil


குழு : சையா சக்கா சையா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சம்மா சக்கா சையா சக்கா…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

ஆண் : எந்த பூவிலும் தேன் துளி உண்டு…
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு…
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை…

BGM

ஆண் : இருட்டை பார்த்து மலைப்பது மடமை…
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை…
ஆதவன் செய்யும் பேரை தன்னை…
அகலும் செய்து விடும்…

ஆண் : மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்…
பட்டாம்பூச்சி அழுவது கிடையாது…
உன் நெஞ்சிலே சாந்தி கொள்…
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது…

ஆண் : வாழும் ஆளை சார்ந்தது…
வாழ்க்கை என்பது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

BGM

குழு : சையா சக்கா சையா சக்கா சம்மா சக்கா…
சம்மா சக்கா சையா சக்கா சை…

ஆண் : பூத்து சிரிக்கும் பூக்களினோடு…
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு…
வானம் பொழியும் மழையின் ஷவரில்…
நாளும் நீராடு…

BGM

ஆண் : உன்னை கடந்து போகிற போது…
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு…
பூவை உடைக்கும் காற்றை போல…
புகுந்து விளையாடு…

ஆண் : இந்த ஜீவிதம் ஆனந்தம்…
கவலைகள் என்று ஒன்று கிடையாது…
வெண்ணிலா தேயலாம்…
வெளிச்சத்தை வெட்டி கொல்ல முடியாது

ஆண் : மனித ராசி ஒன்றுதான்…
சிரிக்க தெரிந்தது…

BGM

ஆண் : சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே…
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு…
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்…
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு…

ஆண் : புயல் வந்து மையம் கொண்டாலும்…
பூவின் இதழில் புன்னகை இருக்கு…
உள்ளம் பார்க்கும் பார்வைதானே…
இன்பம் என்பது…

BGM


Notes : Chinna Chinna Sugangal Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. சின்ன சின்ன பாடல் வரிகள்.


ரா ரா ரா ராஜகுமாரா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துராஜேஷ் கிருஷ்ணன் & சுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமார்என்னவளே

Ra Ra Rajakumara Song Lyrics in Tamil


குழு : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
பெண் : ரா ரா உன் ரசிகையின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
காமன் என்பது நீ கொண்ட பேரா…

ஆண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஓடோடி வாராய் பேதை மீரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா ரா ராஜகுமாரி ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…
ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

BGM

பெண் : பேரின்பம் வேண்டாம் மோட்சங்கள் வேண்டாம்…
பெண்ணின் உணர்வுகள் மதிப்பாயா…
குழு : ஓயே ஓயே…

ஆண் : பெண்ணே உன் நிழலும் தரை விழும் முன்னே…
மடியில் ஏந்திட மாட்டேனா…
குழு : ஓயே ஓயே…

பெண் : ஒரு ரோஜா மலரானேன் செடி முள்ளே…
என்னை குத்தும் குத்தும்…

ஆண் : கண்ணே நான் வைப்பேன்…
உன் காயத்தின் மேல் முத்தம் முத்தம்…

பெண் : உன்னால்தான் கண்டேன் கண்ணில் ஈரம்…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : என்னவளே நீ வானம் விட்டு வந்ததேன்…
என்னவளே என் நெஞ்சை வந்து தொட்டதேன்…
குழு : ராஜகுமாரா… ராஜகுமாரா…

BGM

பெண் : ஒவ்வொரு பெண்ணுக்கும் கனவுகள் உண்டு…
கண்டுபிடிப்பது ஆண்களின் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

ஆண் : ஹே உனது உறக்கத்தில் நான் விழித்திருந்து…
கனவு காண்பது என் பொறுப்பு…
குழு : ஓயே ஓயே…

பெண் : பொதுவாக ஒரு பெண்ணில்…
சிறு பிள்ளை உள்ளம் உண்டு உண்டு…

ஆண் : கண்ணே அதை கண்டு…
நான் நாளும் செய்வேன் தொண்டு தொண்டு…

பெண் : உன் வார்த்தை போதும் வாழ்வேன் இன்று…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : ரா ரா ரா ராஜகுமாரா ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

ஆண் : ரா ரா உன் ரசிகனின் வாசல் ரா ரா…
குழு : ரா ரா ரா ரா…

பெண் : காதல் என்பது நீ வாழும் ஊரா…
ஆண் : காமன் என்பது நீ கொண்ட பேரா…

பெண் : உன் சாலை ஓரம் காதல் தேரா…
ஆண் : ஓடோடி வாராய் பேதை மீரா…

குழு : ரா ரா ரா ரா ராஜகுமாரா…
ரா ரா ராஜகுமாரா ரா ரா…


Notes : Ra Ra Rajakumara Song Lyrics in Tamil. This Song from Ennavale (2000). Song Lyrics penned by Vairamuthu. ரா ரா ரா ராஜகுமாரா பாடல் வரிகள்.


மார்கழி மாசத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜாதா & பி.உன்னி கிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Margazhi Maasathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…
தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

குழு : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… தினாக்குதின…

BGM

குழு : சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே
சய்யா சய்யாரே…
ஹரே ஹாயிஹாயிஹாயிரே…

BGM

ஆண் : நாடு நகரம் யாவும் இங்கே…
எங்கும் நம் பேச்சு…

ஆண் : தேதி பார்த்து நேரம் குறித்து…
தேதியும் வச்சாச்சு…

பெண் : வாழை மரங்கள் வாங்கி வரவே…
ஆளும் போயாச்சா…

பெண் : வானவில்லை தூக்கி வந்து…
தோரணம் போட்டாச்சா…

ஆண் : கல்யாண நாளன்று ஊரில்…
விடுமுறை விடுவோமா…
கச்சேரி கேட்பதற்கே நாம்…
கிளின்டனை அழைப்போமா…

ஆண் : நேற்று உன்னை பார்த்த…
பார்வைகள் நேர்மையானது…

பெண் : இன்று என்னை பார்க்கும்…
பார்வையில் ஏதோ இருக்கிறது…

ஆண் : ஊரிலெங்கும் கேட்கணும் நாதஸ்வரம்…
காதலுக்கு ஏழல்ல நூறு ஸ்வரம்…

BGM

குழு : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

ஆண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி… ஹே ஹேய்…

BGM

பெண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து…
பொண்ணு வரவேணும்…

ஆண் : அருந்ததி இப்போ வரவில்லை…
என்றால் பாரதி வரவேணும்…

ஆண் : காலை மாலை காதல் கடலில்…
மூழ்கி பார்ப்போமா…
மூழ்கி எடுக்கும் முத்து அதற்கே…
முத்தமும் கொடுப்போமா…

பெண் : கண்ணாலே பிறக்கிற காதல்…
கண்ணுக்கு தெரியாது…
பெண்ணாக பிறந்தவர் இதயம்…
பிறருக்கு புரியாது…

BGM

பெண் : சிங்கம் போல வந்து நின்று…
சேர்த்துக்கோ பாவா…

ஆண் : இதயத்தில் நைல் நதி பாய்கிறது…
மனசுக்குள்ளே ரயில் வண்டி ஓடியது…

பெண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு
மாலையில் சேருதடி
மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்
ஆனந்தம் பாடுதடி..

BGM

பெண் : காதல் கூட்டணி போட்டிப் போட்டு…
கோட்டைய புடிச்சாச்சு…

ஆண் : அட மன்மதன் கட்சியை எதிர்த்தவர்…
எல்லாம் மீசைய எடுத்தாச்சு…

ஆண் : காதல் ரதமே நாளை தினமே…
ஊரில் வலம் வருமே…

பெண் : எங்கள் தவமே தந்த வரமே…
ஒன்பது சுயம்வரமே…

ஆண் : ஊர்கோலம் போகும் பாதைக்கு…
அனுமதி கேட்டாச்சா…

பெண் : அரசாங்க வாசலில் காதல்…
அனுமதி கேட்பதில்லை…

ஆண் : காலம் முழுதும் காதல் வீதியில்…
காவல் நானிருப்பேன்…
ஆயுள் கைதியாக உனது நெஞ்சில்…
சிறை இருப்பேன்…

ஆண் : தியேட்டரிலே டிக்கெட்டு தீர்ந்திடுச்சி…
வீடு இப்போ ஹௌஸ்புல் ஆயிடுச்சி… ஹே ஹேய் ஹேய்…

ஆண் : மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு…
மாலையில் சேருதடி…

பெண் : மாடப் புறாக்களும் ஜோடிப் புறாக்களும்…
ஆனந்தம் பாடுதடி…

ஆண் : முத்தெடுக்கும் துறைமுகம் தூத்துக்குடி…
ரத்தத்துல போடுது சாத்துக்குடி…

BGM

ஆண் : பெண்ணுக்கு சீதனம் உண்டு…
பேசிய பேச்சுப்படி…

பெண் : தலையணை மந்திரம் என்றால்…
என்னன்னு கேட்டுக்கடி…

ஆண் : திருமணம் நிலவில வச்சுக்கடி…
தேனிலவு காதலர் இஷ்ட்டப்படி…

BGM


Notes : Margazhi Maasathu Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. மார்கழி மாசத்து பாடல் வரிகள்.


செக்க செவந்தவளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Sekka Sivanthavalea Song Lyrics in Tamil


BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : வெட்ட வெளிதனிலே…
வெட்ட வெளிதனிலே…
நான் பனியில் நனைந்தாலும்…
உன் மூச்சில் வெந்தேனே…

BGM

ஆண் : காதல் மழையினிலே…
காதல் மழையினிலே…
நான் குடையை மறந்தேனே…
என்னுயிரும் நனைந்தேனே…

பெண் : காதல் சொல்லத்தான் பூக்கள் மலர்கிறது…

ஆண் : சில ரோஜா மலர்களும்…
உன்னை கண்டதும்…
கன்னம் சிவக்கிறது…
கன்னம் சிவக்கிறது…

BGM

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM

பெண் : காதல் நெஞ்சத்தை…
காற்றில் விட்டேனே…
அந்த காற்றே எரிந்தாலும்…
என் காதல் எரியாதே…

BGM

ஆண் : செவ்வாய் கிரகத்தில்…
நீ போய் வாழ்ந்தாலும்…
நான் உன்னை சேர்வேனே…
என் காதல் தீராதே…

பெண் : உலகம் அழகியது…
காதல் சொல்லியது…

ஆண் : அடி அதனால்தானடி ஏவாள் ஆப்பிள்…
இன்னும் இனிக்கிறது…
இன்னும் இனிக்கிறது…

BGM

ஆண் : செக்க செவந்தவளே செக்க செவந்தவளே…
எனைக் கொல்லும் அழகினிலே…
நான் கொள்ளை போனேனே…
நான் கொள்ளை போனேனே…

பெண் : வெட்கம் தந்தவனே வெட்கம் தந்தவனே…
உன் தீண்டும் விரல்களிலே…
நான் கரைந்தே போனேனே…
நான் கரைந்தே போனேனே…

BGM


Notes : Sekka Sivanthavalea Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செக்க செவந்தவளே பாடல் வரிகள்.