Tag Archives: வைரமுத்து

adaiyalam-yeralam-song-lyrics

அடையாளம் ஏராளம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஅந்தோனி தாசன் & வாகு மாசான் வாகு மாசான் நாட்படு தேறல்

Adaiyalam Yeralam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—

பெண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

பெண் : கும்பி எரியுதய்யா…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதய்யா…
தோணுதய்யா பழைய கதை…

—BGM—

ஆண் : ஓஓ… மின்னல் வெட்டும் ராத்திரியில்…
சன்னல் பக்கம் நீஅழைக்க…
அந்நேரம் பாத்து…
அஞ்சாறு நாய் கொலைக்க…

ஆண் : வெறிச்சோடிப் போயிருந்த…
வீதியில நான்விழுந்து…
தெறிச்சோடிப் போனதுக்கு…
தெருவிளக்கு அடையாளம்…

பெண் : ஓஓ… சொட்டாங்கல்லு ஒண்ணு…
எந் தொடைப்பக்கம் தவறிவிழ…
கல்லெடுக்கும் சாக்குல…
நீ கள்ளத்தனம் பண்ண…

பெண் : ஆடி விழுந்ததுக்கும்…
ஆளவிடு சாமியின்னு…
ஓடி ஒளிஞ்சதுக்கும்…
ஓடைக்கரை அடையாளம்…

ஆண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—

பெண் : ஓஓ… சீலகட்டத் தெரியாத…
சிறுமியின்னு பாக்காம…
வேளகெட்ட வேளையில…
வெறிகொண்டு நீயணைக்க…

பெண் : மாமான்னு மிரண்டதுக்கும்…
மணமாலை கேட்டதுக்கு…
ஆமான்னு சொன்னதுக்கும்…
அம்மன்கோயில் அடையாளம்…

ஆண் : ஓஓ… ஊருக்கே தெரியாம…
யாருக்கோ பெண்டாகி…
குதிரைவண்டி ஏறி…
கொடிக்கால் கடக்கையில…

ஆண் : மடிவிழுந்த கண்ணீரு…
மழையாகிப் போனதுக்கு…
இடிவிழுந்த ஆலமரம்…
இன்னைக்கும் அடையாளம்…

—BGM—

பெண் : அடையாளம் ஏராளம்…
ஆளெங்க… பேரெங்க…
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்…
நீயெங்க… நானெங்க…

ஆண் : கும்பி எரியுதடி…
கொந்தளிக்கும் எம்மனசில்…
தும்பி பறக்குதடி…
தோணுதடி பழைய கதை…

—BGM—


Notes : Adaiyalam Yeralam Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. அடையாளம் ஏராளம் பாடல் வரிகள்.


ஆம்பல் பூவை சாம்பல் செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்மிதாயஷ்வந்த் நாக்நாட்படு தேறல்

Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil


பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : எரியும் தீயை உறையும் என்றாய்…
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று…
காட்சி சாட்சி உண்டா சொல்லு…

பெண் : உண்டா சொல்லு…

—BGM—

பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம்…
பெண்கள் வாழ்வை சோதிக்கும்…
ராமன் செய்த தீக்குழி…
பெண்ணை இன்னும் பாதிக்கும்…

குழு (பெண்கள்) : பெண்ணை இன்னும் பாதிக்கும்…

பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்…
அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்…
அலையும் நீரும் அலையும் போதும்…
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

குழு (பெண்கள்) : ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

—BGM—

பெண் : தேகம் என்ற கோயிலில்…
காதல் என்ற தீபத்தை…
மானம் என்ற கைகளால்…
நாளும் நாளும் காக்கிறேன்…

பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…
கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

பெண் : அசையா மனமே கற்பின் திண்மை…
அடியாள் அசையாள் அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—


Notes : Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் பாடல் வரிகள்.


தாலாட்டு நாட்படு தேறல் – 08

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துபி. சுசீலா, கே.எஸ். சித்ரா & ஹரினிஎன்.ஆர்.ரகுணந்தன்ஆல்பம்

Thalaattu – Naatpadu Theral – 08 Song Lyrics in Tamil


பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : வண்ணவண்ணக் கோமளமே…
வலதுகை மாம்பழமே…
இனம்பெருத்த வம்சத்தில்…
சனம்பெருத்த குடும்பத்தில்…
ஆறாம் திருமகனாய்…
ஆளவந்த சோழமன்னா…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

பெண் : புள்ளிமான் கோம்பையில…
புலிவந்து போகுதின்னு…
பொன்வேல் கைவாங்கி…
புலியெறிய வந்தவனே…

பெண் : சித்தெறும்பு கடிச்சாலும்…
சித்தப்பா வருவாக…
தாங்கித் தோள்மாத்த…
தாய்மாமன் வருவாக…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

பெண் : தாத்தாமார் தூக்கிவச்சா…
தாடிமுடி குத்துமின்னு…
அள்ளி அள்ளி மார்பணைக்க…
ஐத்தமார் வருவாக…

பெண் : பாட்டுப் பலபடிச்சு…
பால்சோறு ஊட்டிவிடும்…
கூட்டுக் குடும்பமடா…
குலவிளக்கே கண்ணுறங்கு…
குலவிளக்கே கண்ணுறங்கு…

பெண் : ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…
ஆராரோ ஆரிரோ ஆணழகே ஆரிரோ…

—BGM—

பெண் : சின்னஞ்சிறு பிறையே…
சிவப்புக்கல் ரத்தினமே…
எண்ணக் களஞ்சியமே…
ஏலம்பூ வாசகமே…

—BGM—

பெண் : அப்பன் வெளியூரு…
ஆத்தா தனியாளு…
கூட்டுக் குடும்பம் இப்போ…
குடைசாஞ்சு போனதடா…

பெண் : தாய்மாமன் பொழப்புக்கு…
தாராவி போயிட்டாக…
சித்தப்பா எல்லாரும்…
சீமையில இருக்காக…

—BGM—

பெண் : உம்போலச் செல்வந்தன்…
உலகத்தில் கண்டதில்ல…
எம்போல ஏழையை நீ…
எங்காச்சும் கண்டதுண்டா…

பெண் : எச்சிப்பால் தீந்ததடா…
இருந்தவரை ஊட்டிவிட்டேன்…
மிச்சப்பால் ஊறும்வரை…
மின்மினியே கண்ணுறங்கு…
மின்மினியே கண்ணுறங்கு…

—BGM—

பெண் : மாணிக்க மாமணியே…
மார்க்கண்டன் புத்திரனே…
சோறூட்டச் சொந்தமில்ல…
தொட்டிலிட பந்தமில்ல…
நாதியத்த குடும்பத்தில்…
நாயகமா வந்தவனே…

—BGM—

பெண் : ஆத்தா ஒரு மூலையில…
அப்பன் ஒரு மூலையில…
காத்தாப் பறக்குறாக…
கவர்மெண்ட்டு வேலையில…

பெண் : வீடியோ பார்த்தபடி…
வேலைக்காரி தூளியாட்ட…
ஆடியோ கேட்டபடி…
ஆதவனே கண்ணுறங்கு…

—BGM—

பெண் : ஒத்தையில பொறந்தவனே…
உனக்காரும் துணையில்ல…
வித்தையெல்லாம் கத்துக்கிட்டு…
வெளிநாடு போமகனே…

பெண் : லண்டன் திருமகளோ…
லாஸ்ஏஞ்சல்ஸ் மருமகளோ…
பெத்ததாய் தகப்பனுக்கு…
பத்திரிகை கொடுமகனே…
பத்திரிகை கொடுமகனே…

—BGM—


Notes : Thalaattu – Naatpadu Theral – 08 Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டு – நாட்படு தேறல் – 08 பாடல் வரிகள்.


தீயில் விழுந்த தேனா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

—BGM—

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : மழையின் நீர் வாங்கி மலையே அழுவது போல்…
தாயின் உயிர் தாங்கி தனயன் அழுவானோ…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : தங்கம் போலே இருந்தவள்தான்…
சருகை போலே ஆனதனால்…
சிங்கம் போலே இருந்த மகன்…
செவிலியை போலே ஆவானா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

—BGM—

ஆண் : ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…
ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா… அம்மா…
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா…

ஆண் : நீ சுமந்த பிள்ளையாய் நான் இருந்தேன் அம்மா…
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா…
எனக்கு ஏதும் ஆனதுனா உனக்கு வேறு பிள்ளை உண்டு…
உனக்கு ஏதும் ஆனதுனா எனக்கு வேறு தாய் இருக்கா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை…
கண்ணில் மணியாய் சுமந்தவளை…
மண்ணில் விட்டு விடுவானா…
மனதில் மட்டும் சுமப்பானா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தாயின் மடிதானே உலகம் தொடங்கும் இடம்…
தாயின் காலடியே உலகம் முடியும் இடம்…
உயிரை தந்தவளின் உயிரை காப்பானா…
கடனை தீர்ப்பானா…

ஆண் : ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்… ஏஹ் ஏஹ் ஏஹ்…

ஆண் : கருணை தாயின் நினைவினிலே…
கல்லும் கொஞ்சம் அழுது விடும்…
கண்ணீர் துளிகள் விழுந்த பின்னே…
கண்ணின் மணியும் விழுந்துவிடும்…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…

ஆண் : தீயில் விழுந்த தேனா…
இவன் தீயில் வடிந்த தேனா…
தாயை காக்கும் மகனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…
இல்லை தாயும் ஆனவனா…


Notes : Theeyil Vizhuntha Thaena Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தீயில் விழுந்த தேனா பாடல் வரிகள்.


கண்டாங்கி கண்டாங்கி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்ஜில்லா

Kandaangi Kandaangi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

—BGM—

ஆண் : ஏ… கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…
அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி…
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தாரேன்டி…
முத்தம் தரியா… ஆ… ஒஹோ…

பெண் : ஓ… கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும்…கஞ்சா வச்சக் கண்ணு…
இந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது…
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது…
தள்ளி நில்லையா… ஆ…

ஆண் : அடி உன் வீடு தல்லாக்குளம்…
என் வீடு தெப்பக்குளம்…
நீரோடு நீரு சேரட்டுமே…

ஆண் : அழகா் மலகோயில் யான வந்து…
அல்வாவத் திண்பதுப் போல்…
என் ஆச உன்னத் திண்ணட்டுமே… ஏ…

—BGM—

ஆண் : ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு…
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது…
புத்திக்குள்ள அரிக்குது…
நெத்திக்குள்ள துடிக்குது…

பெண் : வெள்ள முழி வெளியத் தெரிய…
கள்ள முழி முழிக்கும் பொழுது…
என் உசுரு ஒடுங்குது…
ஈரக்கொழ நடுங்குது…

ஆண் : சின்னச் சின்ன பொய்யும் பேசுற… அ…
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற…

பெண் : நீ பாத்தாக்க தென்னமட்ட…
பாஞ்சாக்க தேகம் கட்ட…
பாசாங்கு வேணாம் சுந்தரரே… ஏ…

ஆண் : நீ தேயாத நாட்டுக் கட்ட…
தெரியாம மாட்டிக்கிட்டேன்…
என் ராசி என்றும் மன்மதனே…

பெண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

—BGM—

ஆண் : கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி…
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி…
என் உசுரப் பறிக்கிற…
என்ன செய்ய நினைக்குற…

பெண் : அம்பு விட்டு ஆள அடிக்கிற… அ… அ…
தும்பு விட்டு வாலப் புடிக்கிற…

ஆண் : தாலி இல்லாத சம்சாரமே…
தடையில்லா மின்சாரமே…
விளக்கேத்த வாடி வெண்ணிலவே…

பெண் : எந்தன் மார்போட சந்தனமே…
மாராப்பு வைபோகமே…
முத்தாட வாயா முன்னிரவே… ஏ…

ஆண் : கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு…
கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு…

பெண் : இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது…
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தீராது…
தள்ளி நில்லையா… ஆ…

பெண் : கண்டாங்கி… கண்டாங்கி…

ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : கண்டாலேக் கிறுகேத்தும்…

ஆண் : கஞ்சா வச்சக் கண்ணு…


Notes : Kandaangi Kandaangi Song Lyrics in Tamil. This Song from Jilla (2014). Song Lyrics penned by Vairamuthu. கண்டாங்கி கண்டாங்கி பாடல் வரிகள்.


மலா்களே மலா்களே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்லவ் பேர்ட்ஸ்

Malargaley Malargaley Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

பெண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

பெண் : மேகம் திறந்து கொண்டு…
மண்ணில் இறங்கி வந்து…
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா…

ஆண் : மார்பில் ஒளிந்து கொண்டால்…
மாறன் அம்பு வரும்…
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா…

பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும்…
பள்ளி அறையா அறையா…
மலா் சூடும் வயதில் என்னை…
மறந்து போவதுதான் முறையா…

ஆண் : நினைக்காத நேரமில்லை…
காதல் ரதியே ரதியே…
உன் பேரை சொன்னால் போதும்…
நின்று வழி விடும் காதல் நதியே…

பெண் : என் சுவாசம் உன் மூச்சில்…
உன் வார்த்தை என் பேச்சில்…

ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்…
என் வாழ்வே வா…

ஆண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…
விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…
கண்ணோடும் நீதான் வா…

—BGM—

ஆண் : பூவில் நாவிருந்தால்…
காற்று வாய் திறந்தால்…
காதல் காதல் என்று பேசும்…

பெண் : நிலா தமிழ் அறிந்தால்…
அலை மொழி அறிந்தால்…
நம் மேல் கவி எழுதி வீசும்…

ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே…
வண்ண நிலவே நிலவே…
வானோடு நீலம் போலே…
இளைந்து கொண்டது இந்த உறவே…

பெண் : உறங்காத நேரம் கூட…
உந்தன் கனவே கனவே…
ஊனோடு உயிரை போல…
உறைந்து போனதுதான் உறவே…

ஆண் : மறக்காது உன் ராகம்…
மரிக்காது என் தேகம்…

பெண் : உனக்காக உயிர் வாழ்வேன்…
வா என் வாழ்வே வா…

பெண் : மலா்களே மலா்களே…
இது என்ன கனவா…
மலைகளே மலைகளே…
இது என்ன நினைவா…

ஆண் : உருகியதே எனதுள்ளம்…
பெருகியதே விழிவெள்ளம்…

பெண் : விண்ணோடும் நீதான்…
மண்ணோடும் நீதான்…

ஆண் : கண்ணோடும் நீதான் வா…

—BGM—


Notes : Malargaley Malargaley Song Lyrics in Tamil. This Song from Love Birds (1996). Song Lyrics penned by Vairamuthu. மலா்களே மலா்களே பாடல் வரிகள்.


நறுமுகையே நறுமுகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & பாம்பே ஜெயஸ்ரீஏ. ஆர். ரகுமான்இருவர்

Narumugaye Narumugaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

—BGM—

ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…

பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…

ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…

பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…

ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

—BGM—

பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…

ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…

பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…

ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…

பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…

பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…

பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…

ஆண் : நீயா…


Notes : Narumugaye Narumugaye Song Lyrics in Tamil. This Song from Iruvar (1997). Song Lyrics penned by Vairamuthu. நறுமுகையே நறுமுகையே பாடல் வரிகள்.


கண்ணாளனே எனது கண்ணை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்பம்பாய்

Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil


—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலையதேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கரநிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்திரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

பெண் : உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்…
தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம்…
எந்தன் நுாலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்…
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்…

பெண் : ரத்தம் கொதிகொதிக்கும்…
உலை கொதித்திடும் நீா்க்குமிழ் போல…
சித்தம் துடிதுடிக்கும்…
புயல் எதிர்த்திடும் ஓா் இலை போல…
பனித்துளிதான் என்ன செய்யுமோ…
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது…
மூங்கில் காடென்று ஆயினள் மாதல்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

—BGM—

குழு (பெண்கள்) : சல சல சல சோலை கிளியே…
சோலைய தேடிக்க…
சிலு சிலு சிலு சா்க்கர நிலவே…
மாலைய மாத்திக்க…
மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

குழு (பெண்கள்) : மாமன்காரன் ராத்தரி வந்தா…
மடியில கட்டிக்க…
மாமன் தந்த சங்கதி எல்லாம்…
மனசுள வச்சுக்க…

பெண் : ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்…
உன்னோடு நான் கண்டுகொண்டேன்…
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்…
என்னோடு நான் கண்டுகொண்டேன்…

பெண் : என்னை மறந்துவிட்டேன்…
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை…
உன்னை இழந்துவிட்டால்…
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை…
இது கனவா… இல்லை நினைவா…
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்…
உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டு…
ஏனின்னும் பேசவில்லை…
ஆளான ஒரு சேதி அறியாமலே…
அலைபாயும் சிறு பேதை நானோ…

பெண் : உன் பேரும் என் பேரும் தெரியாமலே…
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ…
வாய் பேசவே வாய்ப்பில்லையே…
வலி தீர வழி என்னவோ…

பெண் : கண்ணாளனே எனது கண்ணை…
நேற்றோடு காணவில்லை…
என் கண்களைப் பறித்துக்கொண்டும்…
ஏனின்னும் பேசவில்லை…
கண்ணாளனே…


Notes : Kannalanae enadhu kannai Song Lyrics in Tamil. This Song from Bombay (1995). Song Lyrics penned by Vairamuthu. கண்ணாளனே எனது கண்ணை பாடல் வரிகள்.


புன்னகையே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிச்சரன் & ஷாஷா திருப்பதிஏ. ஆர். ரகுமான்24

Punnagaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…

பெண் : புன்னகையே…
பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ… ஓ…
கான மழையோ ஏழு ஸ்வரமே…
காதல் மழையோ நூறு ஸ்வரமே…
உன் சின்னத் திமிரோ நாதஸ்வரமே…
நீ என்னுள் கலந்தால் ஜீவ ஸ்வரமே…

பெண் : மறக்காமலே நான்…
நன்றி சொல்வேன்…
மழை துளியால் மாலை கட்டுவேன்…

ஆண் & பெண் : புன்னகையே…
பள பள பள பளவென ஒளிகளின் துளிகளில் விழுகிறதே…
கனவுகள் கனவுகள் அடிமன கனவுகள் பலிக்கிறதே…

ஆண் & பெண் : இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…
இது கடவுள் எழுதும் கவிதை வரிகள் தானோ…

பெண் : மழை சாதுவான இசையென சாதுவான இசையென…
என்னோடு இசைக்கிறதே…
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை…
என்னோடு இசைக்கிறதே…

ஆண் : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

குழு (ஆண்கள்) : அடி ஆத்தி மழை சாத்தி…
துளி மண்ணில் தெறிக்கும் நமக்காக…

ஆண் : அந்த வானமே…
பல துண்டானதே…

குழு (ஆண்கள்) : அது மண்ணில் விழுந்து…
நம்மைக் கொண்டாடுதே…
இனி கல்லும் முள்ளும் சொல்லும்…
மழையின் ரகசியமே…


Notes : Punnagaye Song Lyrics in Tamil. This Song from 24 (2016). Song Lyrics penned by Vairamuthu. புன்னகையே பாடல் வரிகள்.


குறுக்கு சிறுத்தவளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்ஏ. ஆர். ரகுமான்முதல்வன்

Kurukku Chiruththavale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

—BGM—

குழு (பெண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…
ஹே ஹே ஹே ஹே ஹே…

பெண் : கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே…
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே…

ஆண் : கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே…
ஒரு மொழியில் சிரிச்சு பேசறியே…

பெண் : வாயி மேல வாய வச்சு…
வார்த்தைகளை உறிஞ்சிபுட்ட…
விரல வச்சு அழுத்திய கழுத்துல…
கொளுத்திய வெப்பம் இன்னும் போகல…

ஆண் : அடி ஒம்போல செவப்பு இல்ல…
கணுக்கால் கூட கருப்பு இல்ல…
நீ தீண்டும் இடம் தித்திக்குமே…
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

—BGM—

ஆண் : ஒரு தடவ இழுத்து அணைச்சபடி…
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே…

பெண் : ஒம்முதுக தொலைச்சி வெளியேற…
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே…

ஆண் : மழையடிக்கும் சிறு பேச்சு…
வெயிலடிக்கும் ஒரு பார்வை…
ஒடம்பு மண்ணில் புதையிற வரையில்…
உடன் வரக் கூடுமோ…

பெண் : உசிர் என்னோட இருக்கயில…
நீ மண்ணோட போவதெங்கே…
அட உன் ஜீவனில் நானில்லையா…
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…
என்னக் கொஞ்சம் பூசு தாயே…
உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம் மாத்து தாயே…

பெண் : ஒரு கண்ணில் நீா் கசிய…
உதட்டு வழி உசிர் கசிய…
உன்னாலே சில முறை இறக்கவும்…
சில முறை பிறக்கவும் ஆனதே…

பெண் : அட ஆத்தோட விழுந்த இலை…
அந்த ஆத்தோட போவது போல்…
நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே…
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே…

ஆண் : குறுக்கு சிறுத்தவளே…
என்னை குங்குமத்தில் கரைச்சவளே…
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்…

பெண் : உன்ன கொஞ்சம் பூசுவேன்யா…

ஆண் : உன் கொலுசுக்குள் மணியாக…
என்னக் கொஞ்சம்…

பெண் : மாத்துவேன்யா…

ஆண் : ஒஹோ… ஓஓஓ…
ஒஹோ… ஓஓஓ…

பெண் : ஆஆ… ஆஆஆ…
ஆஆ… ஆஆஆ…


Notes : Kurukku Chiruththavale Song Lyrics in Tamil. This Song from Mudhalvan (1999). Song Lyrics penned by Vairamuthu. குறுக்கு சிறுத்தவளே பாடல் வரிகள்.