ஆம்பல் பூவை சாம்பல் செய்தாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர் ஆல்பம்
வைரமுத்துஸ்மிதாயஷ்வந்த் நாக்நாட்படு தேறல்

Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil


பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

பெண் : எரியும் தீயை உறையும் என்றாய்…
ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : ஏனோ என்மேல் களங்கம் கண்டாய்…

பெண் : கற்பு கடவுள் ரெண்டும் ஒன்று…
காட்சி சாட்சி உண்டா சொல்லு…

பெண் : உண்டா சொல்லு…

—BGM—

பெண் : ஆண்கள் செய்த ஆதிக்கம்…
பெண்கள் வாழ்வை சோதிக்கும்…
ராமன் செய்த தீக்குழி…
பெண்ணை இன்னும் பாதிக்கும்…

குழு (பெண்கள்) : பெண்ணை இன்னும் பாதிக்கும்…

பெண் : ஆற்றின் வெள்ளம் ஆண்கள் உள்ளம்…
அலையும் நீர்போல் சலனம் கொள்ளும்…
அலையும் நீரும் அலையும் போதும்…
ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

குழு (பெண்கள்) : ஆற்றின் கரைபோல் பெண்கள் உள்ளம்…

—BGM—

பெண் : தேகம் என்ற கோயிலில்…
காதல் என்ற தீபத்தை…
மானம் என்ற கைகளால்…
நாளும் நாளும் காக்கிறேன்…

பெண் : கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…
கற்பு என்றும் உடலில் இல்லை…
கடவுள் ஒன்றும் கல்லில் இல்லை…

பெண் : அசையா மனமே கற்பின் திண்மை…
அடியாள் அசையாள் அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…
அதுவே உண்மை…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—

பெண் : ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்…
அய்யோ என்மேல் அய்யம் கொண்டாய்…

—BGM—


Notes : Aambal Poovai Saambal Seithaai Song Lyrics in Tamil. This Song from Album (2021). Song Lyrics penned by Vairamuthu. ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading