Tag Archives: ஏ.ஆர்.ரகுமான்

வாஜா எங்கள் வாஜா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மஷூக் ரஹ்மான்ஏ.ஆர்.ரகுமான்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil


ஆண் : வாஜா ஜி வாஜா…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…

ஆண் : யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா கரீப் நவாஸ்… யா கரீப் நவாஸ்…
யா மொய்னுதின்… யா மொய்னுதின்…

ஆண் : யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…
யா வாஜா ஜி… யா வாஜா ஜி…

BGM

ஆண் : ஓ வாஜா மொய்னுதின் சிஷ்டி…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா… ஆஹா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…

BGM

ஆண் : தேடி வருவோர்க்கெல்லாம் வாஜா…
ஒளி வார்க்கும் சூரியனே தேஜா…

BGM

ஆண் : உங்கள் தர் பாரிலே வாஜா…
சிரம் பணிவாரே அவ்லியா…
எங்கள் எங்கள் ஒளி வாஜா…
குத்துபே ஜிஸ்டியாவின் ராஜா…
வாஜாவே உங்கள் அன்பிலே…
நபி முஸ்தபாவை பார்த்தோம்…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

BGM

ஆண் : என் குருவின் கொடையே…
சத்குருவின் கொடையே…
சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
வாஜா ஜி…

ஆண் : சத்குரு நாதரின் கொடையே…
வாழ்வின் ஆதார தாழம் நீயே…
இருள் நீக்கும் அன்பின் பேர் ஒளியே…
நிழலாகும் கருணை கடலே…

ஆண் : உன் பாதம் சேரும் வரை…
வாழ்க்கை என்பதொரு கனவுதானே வாஜா…

{ ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா வாஜா…
என் உயிருக்குள் வா வா…
வா வா வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா… } * (2)

ஆண் : வாஜா எங்கள் வாஜா வாஜா…
எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…

ஆண் : பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…
பேதம் இன்றி கண்ணீர்…
துடைத்திடும் வினோதா…

ஆண் : வாஜா எங்கள் வாஜா…
வாஜா எங்கள் வாஜா…
என் உயிருக்குள் வா வா…
ராஜாவின் ராஜா…
அலியாரின் அன்பாளா…

ஆண் : வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…
வாஜா ஜி வாஜா ஜி வாஜா ஜி…


Notes : Khwajaa Endhan Khwaaja Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Mashook Rahman. வாஜா எங்கள் வாஜா பாடல் வரிகள்.


மன மோகனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Manmohana Song Lyrics in Tamil


பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…

பெண் : நீயின்றி சுயம் வரமா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கண்ணா கோதையின் குரலை கேளாயோ…

BGM

பெண் : துவாரகனே இருளும் ஒளியும்…
இரு விழி அருகே துரத்திடுதே…
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா…

பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்…
கால்கள் ரெண்டும் குழம்பிடுதே…
என் பாதை சொல்வாயா…

பெண் : தேவகியின் நாதலாலா…
திசை ஏது சொல்வாயா…

BGM

பெண் : பிருந்தாவன நந்தகுமாரா…
சகியின் வேண்டுதல் அறிவாயா…
நீங்காமல் வருவாயா…
நகம் போல பிரிவாயா…

பெண் : நவனீதா முரளி மனோகரா…
நங்கையின் மனதை புரிவாயா…
புறக்கணித்தே செல்வாயா…

பெண் : என் சோகங்கள் தீர்ப்பாயா…
நீ ராகங்கள் தீர்ப்பாயா…

பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…

பெண் : என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில்…
புல்லாங்குழலாய் தவழ்வேனா…
உன் சுவாச காற்றாகி…
உயிர் பெற்று வாழ்வேனா…

பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே…
பார் கடல் அமுதம் பெறுவேனா…
பசி தாகம் மறப்பேனா…
கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…
உன் கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…

BGM

பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும்…
வலையின் மேலே அலை அடிக்க…
இதயம் என்னும் படகு அதில்…
தடுமாறி மோதிடுதே…

பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு…
கரையினில் ஏற்றி விடுவாயா…
நடு கடலில் விடுவாயா…
வசீகரா மன்னவனே…
என் வேதனை தீராயோ…


Notes : Manmohana Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. மன மோகனா பாடல் வரிகள்.


மானூத்து மந்தையில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.எஸ். சசிரேகாஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Maanooththu Manthaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு…
நாக்கு சொட்ட சமைச்சு…
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா…

BGM

குழு : மேலு காலு வலிச்சா…
வெள்ளப்பூண்டு உரிச்சி…
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா…

ஆண் : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு…
ஆண் : மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

BGM

ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு…
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு…
குழு : காராம்பசு ஓட்டி வாராண்டி தாய்மாமன்…

ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு…
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய்மாமன்…

குழு : பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க…
ஆண் : ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு…
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… ஐயோ…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

குழு : தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி…
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி…

குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…
ஆண் : ஹோய்…
குழு : சீரு சொமந்த சாதி சனமே…
ஆறு கடந்தா ஊரு வருமே…

ஆண் : மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே… போடு…
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…


Notes : Maanooththu Manthaiyile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. மானூத்து மந்தையில பாடல் வரிகள்.


தென்கிழக்கு சீமையிலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & மலேசியா வாசுதேவன்ஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Then Kizhakku Cheemayile Song Lyrics in Tamil


BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர்விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

பெண் : தாய் வீட்டுப் பேரும்…
தாய் மாமன் சீரும்…
தெக்கத்திப் பொண்ணுக்கொரு சொத்து சுகமே…

ஆண் : சீர்கொண்டு வந்தும் பேர்கெட்டுப் போனா…
சொல்லாம துக்கப்படும் சொந்த பந்தமே…

பெண் : குத்தந்தான் பார்த்தா ஊரில் சுத்தம் இல்லையே…
ஆண் : கோழிக்கு குஞ்சு மேலே கோபம் வல்லையே…
பெண் : உம்போல அண்ணன் இந்த ஊரில் இல்லையே…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

பெண் : இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்…
ஈசானி மூலையில மேகம் இருக்கு…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

BGM

ஆண் : செங்காட்டு மண்ணும்…
நம் வீட்டுப் பொண்ணும்…
கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே…

பெண் : தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டா…
தன் மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே…

ஆண் : பந்தத்தை மீறிப் போக சக்தி இல்லையே…
பெண் : பாசத்தை பங்கு போடப் பட்டா இல்லையே…
ஆண் : வேருக்கு இளகிப் போச்சு வெட்டுப் பாறைய…

BGM

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

BGM

ஆண் : உலகம் பொய்தானா…
உறவும் பொய்தானா…
ஓடைக்கு ஓடும் தண்ணீர் சொந்தமில்லையா…

பெண் : சொந்தத்தை யாரும் சொல்லாமல் போனால்…
குந்திக்கும் கர்ணனுக்கும் பந்தம் இல்லையா…

ஆண் : சொந்தத்தை தாரை வார்த்து தந்தேன் தங்கச்சி…
பெண் : சொல்லமல் போனாள் அண்ணே இந்த ஊமச்சி…
ஆண் : உசிரு மட்டும் வெச்சிருக்கேன் தாரேன் தங்கச்சி…

பெண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…
காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…

ஆண் : தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில…
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு…

பெண் : காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா…
சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு…


Notes : Then Kizhakku Cheemayile Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்கிழக்கு சீமையிலே பாடல் வரிகள்.


இதயம் இடம் மாறியதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்கே.எஸ். சித்ரா & கார்த்திக்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : இந்த பூமி முழுவதும் அழகாய்…
மாறி போனதேனோ…
என் வானின் மீது புதிதாய்…
ஒரு மேகம் மிதப்பதேனோ…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

ஆண் : ஓஹோ… மனமே மனமே…
எதனால் இத்தனை கொண்டாட்டம்…
கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…

BGM

ஆண் : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

BGM

பெண் : ஹ்ம்ம்… அலைபாயும் காதலே அணையாத தீயா…
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா…

பெண் : இசையோடு சேரும் தாளம்…
சுதியோடு பாடும் ராகம்…
அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே…

பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம்…
தந்ததும் தீயா தந்ததும் தீயா…
தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா…

ஆண் : ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்…
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே…
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்…
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே…

{ குழு : புது யுகமே பிறந்ததோ…
பரிமாற்றம் நிகழ்ந்ததோ…
இரு துருவம் இணைந்ததோ…
இரு விழிகள் தொலைந்ததோ… } * (2)

குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…

ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…

ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…


Notes : Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. இதயம் இடம் மாறியதே பாடல் வரிகள்.


கத்தாழங்காட்டு வழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஏ.ஆர்.ரகுமான்கிழக்குச் சீமையிலே

Kathaazha Kaattu Vazhi Song Lyrics in Tamil


ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

BGM

{ ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா… } * (2)

ஆண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா…
உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா…
தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு…
கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா…

ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

பெண் : கத்தாழங்காட்டு வழி…
கள்ளிப்பட்டி ரோட்டு வழி…
வண்டி கட்டிப் போறவளே…
வாக்கப்பட்டுப் போறவளே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

BGM

பெண் : அண்ணே போய் வரவா…
அழுது போய் வரவா…
மண்ணே போய் வரவா…
மாமரமே போய் வரவா…

பெண் : அணில்வால் மீச கொண்ட…
அண்ணே ஒன்ன விட்டு…
புலிவால் மீச கொண்ட…
புருஷனோட போய் வரவா…

பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே…
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : வண்டிமாடு எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
வாக்கப்பட்ட பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…

ஆண் : எட்டுமேல எட்டு வச்சு…
முன்னே போகுதம்மா…
பொட்டு வெச்ச பொண்ணு மனம்…
பின்னே போகுதம்மா…


Notes : Kathaazha Kaattu Vazhi Song lyrics in Tamil. This Song from Kizhakku Cheemayile (1993). Song Lyrics penned by Vairamuthu. கத்தாழங்காட்டு வழி பாடல் வரிகள்.


அசீம் ஓ ஷான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா முத்துக்குமார்முகமது அஸ்லாம் & போனி சக்கரவர்த்திஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil


BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ்சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

BGM

ஆண் : பல நேரங்களில் உன் கொடி பறக்கும்…
பல அரண்மனைகள் உன் புகழ் உரைக்கும்…

BGM

பெண் : கருணையின் வடிவம்…
ஆண் : நீயே ராஜா…
பெண் : எங்கள் உள்ளத்தின் வீட்டிலும்…
நீயே ராஜா…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

BGM

ஆண் : மண்ணில் தோன்றிடும் இறைவனின் நிழல் எது…
அன்புள்ள மனிதனின் இதயம்தான் அது…
உன் திரு நாட்டில் வறுமைகள் இல்லை…
நெஞ்சம் தோறும் தங்கத்தின் மழைதான்…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…

BGM

ஆண் : அகிலம் முழுவதும் உந்தன் இனமே…
அன்பின் மனம் தான் உந்தன் மனமே…

BGM

ஆண் : அரசவை திறனை அனைவரும் போற்ற…
வார்த்தைகள் இல்லை உன்னை வாழ்த்த…

BGM

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…

ஆண் : அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
அசீம் ஓ ஷான் ஷஹென்ஷா…
வாழ்க வாழ்க வாழ்கவே…

ஆண் : அன்பாளன் பண்பாளன் அஸ் சலாம் அழைக்கும்…
பொன்னாகும் ஹிந்துஸ்தான் உன் பாதம் பட்டதாலே…
கொண்டாடும் ஹிந்துஸ்தான் உன் அன்பை கண்டதாலே…

குழு : மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…
மர்ஹபா ஓஓ மர்ஹபா…


Notes : Azeem O Shaan Shahehshah Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. அசீம் ஓ ஷான் பாடல் வரிகள்.


அத்தினி சித்தினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன், சித்ரா சிவராமன் & கமல்ஹாசன்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Athini Sithini Song Lyrics in Tamil


BGM

ஆண் : தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…
தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா… யே ஹே யே ஹே…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

BGM

பெண் : அடை மழை தாளாது போடா…
என் கண்ணா என் கண்ணா…

ஆண் : மதன காமராசன் கொஞ்ச…
அழைக்கிறேன் உன்னை…

பெண் : வளையலால் கொஞ்சி மிஞ்சி…
கேட்டேன்… ஹோ ஓஓ…
ஆண் : உன் கால் கொலுசினில் கெஞ்சல்…
கண்டேன் பெண்ணே…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா…

BGM

ஆண் : குன்றினில் குறிஞ்சி கண்டேன்…
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்…
பெண் : ஹா ஆஆ ஆஆ…

ஆண் : கண்களில் நெய்தல் கண்டேன்…
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்…

பெண் : குரு மொழி இல்லாத கலை கற்று…
பார்போம் வா…
நீ கூடி பிரிகையில் சூரியன்…
பார்ப்போம் வா…

BGM

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே நீ வருவாயா…

ஆண் : தகிடு தத்த…
பெண் : வல்லினம் கலங்கினம்…
ஆண் : தகிடு தத்த…
பெண் : இடையினம் ஒடிந்தனம்…

ஆண் : ஓ அடி…
பெண் : வல்லினம் இடையினம் மெல்லினம்…
அட வல்லினம் இடையினம் மெல்லினம்…
நாணம் கூச்சல் இட சிவன்தனம்…

BGM


Notes : Athini Sithini Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Arivumathi. அத்தினி சித்தினி பாடல் வரிகள்.


தொட்டால் பூ மலரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிணி & ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்நியூ

Thottal Poomalarum Song Lyrics in Tamil


BGM

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…
ஹே… காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…
ஆசை விடுவதில்லை…

பெண் : தொட்டால் பூ மலரும்…
தொடாமல் நான் மலர்ந்தேன்…
சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…
ஆண் : பூ மலரும்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
சுடாமல் கண் சிவந்தேன்…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

பெண் : இருவர் ஒன்றானால்…
ஒருவர் என்றானால்…

ஆண் : இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்…
இருவர் ஒன்றானால் இளமை முடிவதில்லை…

பெண் : இளமை முடிவதில்லை…
எடுத்து கொண்டாலும் கொடுத்து சென்றாலும்…

ஆண் : எடுத்து கொண்டாலும்…
கொடுத்து சென்றாலும்…

பெண் : பொழுதும் விடிவதில்லை…
ஆண் & பெண் : பொழுதும் விடிவதில்லை…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

BGM

ஆண் : பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்…
பாவை முகமல்லவா…
ஹோ பாவை முகமல்லவா…

பெண் : அழகிய தோள்கள் பழகிய நாட்கள்…
அழகிய தோள்கள்…
ஆண் & பெண் : பழகிய நாட்கள்…

பெண் : ஆயிரம் சுகமல்லவா…
ஆண் : சுகமல்லவா…
பெண் : ஆயிரம் சுகமல்லவா…

ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : சுட்டால் பொன் சிவக்கும்…
பெண் : சுடாமல் கண் சிவந்தேன்…

பெண் : தொட்டால் பூ மலரும்…
ஆண் : தொட்டால் பூ மலரும்…
பெண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…
ஆண் : தொடாமல் நான் மலர்ந்தேன்…

பெண் : சுட்டால் பொன் சிவக்கும்…
ஆண் : சுட்டால் கண் சிவந்தேன்…

ஆண் : கண்கள் படாமல் கைகள் தொடாமல்…
காதல் வருவதில்லை…

பெண் : இல்லை இல்லை இல்லை…
ஹே காதல் வருவதில்லை…

பெண் : நேரில் வராமல் நெஞ்சை தராமல்…
ஆசை விடுவதில்லை…
ஆண் : ஆஹான்…
பெண் : ஆசை விடுவதில்லை… ஆசை விடுவதில்லை…

BGM


Notes : Thottal Poomalarum Song Lyrics in Tamil. This Song from New (2004). Song Lyrics penned by Vaali. தொட்டால் பூ மலரும் பாடல் வரிகள்.


வருகிறாய் தொடுகிறாய்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Varugiraai Song Lyrics in Tamil


ஆண் : போ போ…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…

BGM

ஆண் : வர வர வரத்தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிற…
காதல் கடன்காரி…
அடி உலகில்எவளும் உனைப்போல் இல்லையே…
அழகிய கொலைகாரி…

பெண் : குளிர் நிலவினில் நெருப்பாய் நினைக்கிற வெறுப்பாய்…
நீ ஒரு அசடில்லடா…
அட உனக்கு ஒரு உயில்தான் எழுதிய மயில்தான்…
நீ இதை அனுபவிடா…

ஆண் : அய்யோ அம்மா நீ பொல்லாத ராட்சசி…
ஏன்டி என் கற்போடு தோணுகிறாய்…
நானா உனை வாவென்று கூறினேன்…
நீயாய் வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்…

பெண் : உயிர் விடச்சொன்னால் உயிர் விடுகின்றேன்…
உனை விடச்சொன்னால் உனை விட மாட்டேன்…
இறுதி வரைக்கும் இருப்பவன் என்று…
உறுதியை தந்து உதருவதென்ன…

ஆண் : ஓ… தவித்து போதும் தனிமையில் என்னை…
இருக்கவிடு என்னை இருக்கவிடு…
இருக்கவிடு அன்பே இருக்கவிடு…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலே சுடுகிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

BGM

ஆண் : விடை கொடுத்தேன் விடு விடு விலகிடு…
தினம் தினம் எனை ஏன் துரத்துகிறாய்…
அடி இதயக்கதவை இறுக்கி அணைத்தேன்…
எதிர் காத்தை கொளுத்துகிறாய்…

பெண் : நம்ம கடற்கரை மணலில் மடியினில் கிடந்த…
நாட்களை மறந்தாச்சா…
உயிர் காதலை வளர்த்து பேசிய பேச்சு…
காத்துல பறந்தாச்சா…

ஆண் : ஏதோ ஏதோ நான் கேட்டேனோ பேசினேன்…
தூண்டில் நீ போட்டாய் நான்மாட்டினேன்…
இன்று நான் விடுதலை அடைந்தவன்…
அப்பாடா என் சுமைகளை இறக்கினேன்…

பெண் : தழுவிடும் இமையை தனக்கொரு சுமையாய்…
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லையே…
கடலென்ற நினைப்பு கலக்கின்ற நடிப்பு…
உனையன்றி இங்கே உறுதுணை இல்லையே…

ஆண் : ஓ… காதல் செய்தேன்நான் காதல் செய்தேன்…
மறக்கவிடு உன்னை மறக்கவிடு…
மறக்கவிடு அன்பே மறந்துவிடு…
மறக்கவிடு…

BGM

ஆண் : வருகிறாய் தொடுகிறாய்…
எனை வெந்நீர் போலேசுடுகிறாய்…

ஆண் : போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…
போ போ என்கிறேன்…
போகாமல் நீ நிற்கிறாய்…

பெண் : வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…
வருகிறேன் தொடுகிறேன்…
நான் பன்னீர் போலே விழுகிறேன்…

பெண் : நீ போ போ என்கிறாய்…
ஆனால் பொய் சொல்கிறாய்…

ஆண் : போ போ…


Notes : Varugiraai Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. வருகிறாய் தொடுகிறாய் பாடல் வரிகள்.