| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| நா முத்துக்குமார் | கே.எஸ். சித்ரா & கார்த்திக் | ஏ.ஆர்.ரகுமான் | ஜோதா அக்பர் |
Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
ஆண் : இந்த பூமி முழுவதும் அழகாய்…
மாறி போனதேனோ…
என் வானின் மீது புதிதாய்…
ஒரு மேகம் மிதப்பதேனோ…
ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
ஆண் : ஓஹோ… மனமே மனமே…
எதனால் இத்தனை கொண்டாட்டம்…
கண்ணுக்குள் கனவுகள் குடியேற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
—BGM—
ஆண் : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…
குழு : சென் சூரியன் ஜோதியில்…
சந்திரன் ஒளி சேர்ந்ததோ…
அசைந்தாடும் ஆழியில்…
அழகிய நதி கலந்ததோ…
குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…
ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
—BGM—
பெண் : ஹ்ம்ம்… அலைபாயும் காதலே அணையாத தீயா…
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா…
பெண் : இசையோடு சேரும் தாளம்…
சுதியோடு பாடும் ராகம்…
அதைப்போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே…
பெண் : உள்ளம் சாய்ந்ததே காதலின் கால்தடம்…
தந்ததும் தீயா தந்ததும் தீயா…
தீயை தொட்டு ரசித்தால் வந்ததும் நீயா…
ஆண் : ஹ்ம்ம்… எந்தன் கனவில் பூந்தோட்டம்…
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே…
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்…
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே…
{ குழு : புது யுகமே பிறந்ததோ…
பரிமாற்றம் நிகழ்ந்ததோ…
இரு துருவம் இணைந்ததோ…
இரு விழிகள் தொலைந்ததோ… } * (2)
குழு : காலம் என்னும் நதியில் விழுந்து…
இரவும் நகர்ந்தது பகலும் நகர்ந்தது…
இதயம் நகர்ந்தது… ஓ…
ஆண் : இதயம் இடம் மாறியதே…
விழிகள் வழி மாறியதே…
இதுதானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே…
ஆண் : மனமே மனமே…
எதனால் இத்தனை உற்சாகம்…
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ…
Notes : Idhayam Idam Maariyadhe Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. இதயம் இடம் மாறியதே பாடல் வரிகள்.

