மன மோகனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Manmohana Song Lyrics in Tamil


பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : விடை பெற்று வாராய் காசி மதுரா…
விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா…

பெண் : நீயின்றி சுயம் வரமா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கண்ணா கோதையின் குரலை கேளாயோ…

BGM

பெண் : துவாரகனே இருளும் ஒளியும்…
இரு விழி அருகே துரத்திடுதே…
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா…

பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்…
கால்கள் ரெண்டும் குழம்பிடுதே…
என் பாதை சொல்வாயா…

பெண் : தேவகியின் நாதலாலா…
திசை ஏது சொல்வாயா…

BGM

பெண் : பிருந்தாவன நந்தகுமாரா…
சகியின் வேண்டுதல் அறிவாயா…
நீங்காமல் வருவாயா…
நகம் போல பிரிவாயா…

பெண் : நவனீதா முரளி மனோகரா…
நங்கையின் மனதை புரிவாயா…
புறக்கணித்தே செல்வாயா…

பெண் : என் சோகங்கள் தீர்ப்பாயா…
நீ ராகங்கள் தீர்ப்பாயா…

பெண் : மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…
மன மோகனா… ஆஆ…

பெண் : என் உயிர் கண்ணா… ஆஹா…
கார்முகில் வண்ணா வாராயோ…
கோதையின் குரலை கேளாயோ…

பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில்…
புல்லாங்குழலாய் தவழ்வேனா…
உன் சுவாச காற்றாகி…
உயிர் பெற்று வாழ்வேனா…

பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே…
பார் கடல் அமுதம் பெறுவேனா…
பசி தாகம் மறப்பேனா…
கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…
உன் கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா…

BGM

பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும்…
வலையின் மேலே அலை அடிக்க…
இதயம் என்னும் படகு அதில்…
தடுமாறி மோதிடுதே…

பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு…
கரையினில் ஏற்றி விடுவாயா…
நடு கடலில் விடுவாயா…
வசீகரா மன்னவனே…
என் வேதனை தீராயோ…


Notes : Manmohana Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na Muthukumar. மன மோகனா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top