ஆண் : வானில் தேடி நின்றேன் ஆழி நீயடைந்தாய்… ஆழி நான் விழுந்தால் வானில் நீ எழுந்தாய்… என்னை நட்சத்திரக்காட்டில் அலையவிட்டாய்… நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்…
ஆண் : நல்லையல்லை நல்லையல்லை… நன்னிலவே நீ நல்லையல்லை… நல்லையல்லை நல்லையல்லை… நல்லிரவே நீ நல்லையல்லை…
—BGM—
ஆண் : ஒளிகளின் தேடல் என்பதெல்லாம்… மௌனத்தில் முடிகின்றதே… மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்… ஞானத்தில் முடிகின்றதே…
ஆண் : நான் உன்னைத்தேடும் வேலையிலே… நீ மேகம் சூடி ஓடிவிட்டாய்…
ஆண் : நல்லையல்லை நல்லையல்லை… நன்னிலவே நீ நல்லையல்லை… நல்லையல்லை நல்லையல்லை… நல்லிரவே நீ நல்லையல்லை…
—BGM—
ஆண் : முகை முகில் மொட்டென்ற நிலைகளிலே… முகந்தொட காத்திருந்தேன்… மலா் என்ற நிலைவிட்டுப் பூத்திருந்தாய்… மனம் கொள்ள காத்திருந்தேன்…
ஆண் : மகரந்தம் தேடி நுகரும் முன்னே… வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்…
ஆண் : நல்லையல்லை நல்லையல்லை… நாறும்பூவே நீ நல்லையல்லை… நல்லையல்லை நல்லையல்லை… முல்லை கொள்ளை நீ நல்லையல்லை…
—BGM—
Notes : Nallai Allai Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. நல்லையல்லைபாடல் வரிகள்.
பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு… ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்… கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்… ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்… கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்… ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…
பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு… ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்…
—BGM—
பெண் : என் கனவில் எவனோ ஒருவன்… என் இரவில் ஒளியாய் தெரிவான்… வான் மழை போல் உயிரில் உயிரில் விழுவான்… தினம் நான் விரும்பும் வகையில் வந்து பொழிவான்…
பெண் : தேன் இதழை இவள் தந்து மாயாது… இனி பார்கடலில் அலை என்றும் ஓயாது…
பெண் : வந்து நான் மண்ணிலே… ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது… இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது…
குழு : மங்கை உன் கால் பட்டால்… மண்ணும் ஒரு மண்ணல்ல… வெள்ளை பொன் தேகத்தில்… வேர்வைத் துளி உப்பல்ல…
குழு : செந்தாழம் பூவுக்கு… முள்ளொன்றும் குறையல்ல… உள்ளொன்று வைத்தாலும்… உன்மீது பிழையல்ல…
பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு… ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்… கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்… ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…
பெண் : கொஞ்சம் மிருகம்… குழு : கொஞ்சம் மிருகம்… பெண் : கொஞ்சம் கடவுள்… குழு : கொஞ்சம் கடவுள்… பெண் : ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…
பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
—BGM—
குழு : பெண்ணே உன் கண்ணாளன்… பிறையேறி வருவானே… விண்கொண்ட மீனெல்லாம்… விளையாட தருவானே…
—BGM—
பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு… ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்… கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்… ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…
பெண் : கொஞ்சம் மிருகம்… குழு : கொஞ்சம் மிருகம்… பெண் : கொஞ்சம் கடவுள்… குழு : கொஞ்சம் கடவுள்… பெண் : ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்…
பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
—BGM—
Notes : Konjam Nilavu Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. கொஞ்சம் நிலவுபாடல் வரிகள்.
ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ… எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ… அழுது அறியாத என் கண்கள்… ஆறு குளமாக மாறுவதோ…
ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை… ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை… பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்… காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்… பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்… காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…
ஆண் : உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்… நான் செய்த தீங்கு என்ன… நான் செய்த தீங்கு என்ன…
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை… விடை தருவார் யாரோ…
ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்… எந்த இடம் சேரும் யார் கண்டார்… மனிதர் கொண்டாடும் உறவுகளோ… எந்த மனம் சேரும் யார் கண்டார்…
ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி… அது கடல் சென்று சேர்வது காலன் விதி… இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு… கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு… இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு… கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…
ஆண் : உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்… இரண்டும் தீர்வதெப்போ… இரண்டும் தீர்வதெப்போ…
—BGM—
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை… விடை தருவார் யாரோ…
ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே… ஒதுங்க கூடாது நல்லவனே… தொண்டுகள் செய்ய நீ இருந்தால்… தொல்லை நேராது தூயவனே…
ஆண் : கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்… இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்…
ஆண் : காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது… காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது… காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது… காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…
ஆண் : வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்… நாங்கள் போவதெங்கே… நாங்கள் போவதெங்கே…
Notes : Vidukathaiya Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. விடுகதையா பாடல் வரிகள்.
ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே எங்க நீ கூட்டி போற… என்ன எங்க நீ கூட்டி போற…
—BGM—
ஆண் : பல்லாங்குழி பாத புரியல… உன்ன நம்பி வாரேனே… இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல… உன் பின்ன சுத்துறனே…
ஆண் : பல்லாங்குழி பாத புரியல… உன்ன நம்பி வாரேனே… இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல… உன் பின்ன சுத்துறனே…
குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
ஆண் : மீன தூக்கி ரெக்க வரஞ்ச… வானம் மேல நீ வீசி எறிஞ்ச… பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ…
குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
ஆண் : கண்ணால கண்ணாடி செஞ்சு… என் அச்சத்த காட்டுறியே… என் தூசி துரும்பெல்லாம் தட்டி… உள்ளம் வெள்ளை அடிக்கிறியே…
குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
ஆண் : ஓ… பூமி விட்டு சொர்க்கத்துக்கு… நீ வானவில்லில் பாத விரிச்ச… மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ…
ஆண் : சொர்க்கம் விட்டு பூமி வந்தால்… மீண்டும் கிழக்கில் சூரியன்தான்… நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ…
குழு : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
ஆண் : அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற… அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற…
Notes : Adiye Song Lyrics in Tamil. This Song from Kadal (2013). Song Lyrics penned by Madhan Karky. அடியே அடியேபாடல் வரிகள்.
Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே…
—BGM—
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… நெசவு செய்யும் திருநாட்டில்… நீச்சல் உடையில் அலையிறியே… கணவன் மட்டும் காணும் அழகை… கடைகள் போட்டு காட்டுறியே…
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… நெசவு செய்யும் திருநாட்டில்… நீச்சல் உடையில் அலையிறியே… கணவன் மட்டும் காணும் அழகை… கடைகள் போட்டு காட்டுறியே…
—BGM—
ஆண் : எலந்த காட்டில் பொறந்தவதானே… லண்டன் மாடல் நட எதுக்கு… காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது… காத்து வாங்கும் உடை எதுக்கு…
ஆண் : உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில்… உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு… டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில்… ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு…
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… நெசவு செய்யும் திருநாட்டில்… நீச்சல் உடையில் அலையிறியே… கணவன் மட்டும் காணும் அழகை… கடைகள் போட்டு காட்டுறியே…
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… நெசவு செய்யும் திருநாட்டில்… நீச்சல் உடையில் அலையிறியே…
—BGM—
ஆண் : கற்பு என்பது பிற்போக்கு இல்ல… கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்… காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி… கனக பூக்கள் அணிஞ்சிக்கணும்…
ஆண் : பழமை வேறு பழசு வேறு… வேறுபாட்டை அறிஞ்சிக்கணும்… புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே… புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்…
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… நெசவு செய்யும் திருநாட்டில்… நீச்சல் உடையில் அலையிறியே… கணவன் மட்டும் காணும் அழகை… கடைகள் போட்டு காட்டுறியே…
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே…
ஆண் : செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே… செந்தமிழ் நாட்டு தமிழச்சியே… சேல உடுத்த தயங்குறியே…
Notes : Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics in Tamil. This Song from Vandicholai Chinraasu (1994). Song Lyrics penned by Vairamuthu. செந்தமிழ் நாட்டு தமிழச்சியேபாடல் வரிகள்.
ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்… தித்திக்கும் நினைப்பை விதைக்கும்…
ஆண் : பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தால்…
—BGM—
ஆண் : பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தால்… பூமேடை வாசல் பொங்கும் தேனாக…
ஆண் : கண்மலர் கொஞ்சம்… கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…
ஆண் : பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தால்… பூமேடை வாசல் பொங்கும் தேனாக…
ஆண் : யூ ஆர் மை டைமன்ட் கேர்ள்… மை டைமன்ட் டைமன்ட் டைமன்ட் கேர்ள்… ஐ லவ் டு சீ யூ ஸ்மைலிங் கேர்ள் யோ… ஸ்மைலிங் ஸ்மைலிங் ஸ்மைலிங் கேர்ள்…
ஆண் : யூ ஆர் மை ஹனி கேர்ள்… மை ஹனி ஹனி ஹனி கேர்ள்… மை டைமன்ட் டைமன்ட் டைமன்ட் கேர்ள் யோ… ஸ்மைலிங் ஸ்மைலிங் ஸ்மைலிங் கேர்ள்…
—BGM—
ஆண் : எவ்ரிடைம் ஐ லுக் இன்டு யுவர் ஐஸ்… ஐ கெட் பட்டர்ப்ளைஸ்… ஐ எம் சோ கிளாட் ஷி வித் மீ அண்ட்… நாட் தி அதர் காய்ஸ்… ஐ லைக் டு சீ ஹேர் இன் தி ப்ரைட்… அஸ் ஷி இஸ் மை ஒய்ப் யே யே… ஐ எம் எ லிவ்விங் எ ஹை லைப்…
ஆண் : சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்… சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்…
ஆண் : யோகமே நீ வா…
ஆண் : வைரமோ என் வசம்… வாழ்விலே பரவசம்… வீதியில் ஊர்வலம்… விழியெல்லாம் நவரசம்…
ஆண் : பொன்மகள் வந்தாள்… பொருள் கோடி தந்தால்… பூமேடை வாசல் பொங்கும் தேனாக…
ஆண் : கண்மலர் கொஞ்சம்… கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே…
ஆண் : லெட் மீ பிரேக் இட் டவுன்… ஐ எம் டாக்கிங் தி டாப் ஸ்பாட்… ஷி டஸ் நாட் நோ இட் பட்… ஐ ஹவ் கோட்டா சாப்ட்ஸ்பாட்…
ஆண் : ஐ காட் லவ் பார் தி மணி… அண்ட் ஆப் கோர்ஸ் ஹ்ம்ம் வெல் ஐ கோன்னா லவ்… பார் மை ஹனி ஷி இஸ் சோ கியூட்… ஐ கேன் நாட் வெயிட் டு ஹிட் டவுன்…
ஆண் : ஐ எம் கோன்னா த்ரோ எ பார்ட்டி… அண்ட் இன்வைட் எவ்ரிஒன் அரவுண்டு டு சீ மை ஒய்ப்… டு சீ தி லைப் தட் ஐ எம் கோன்னா லைவ்… திங் ஆப் தி பியூட்டிபுல் கிட்ஸ்… தட் ஷி இஸ் கோன்னா கிவ்…
ஆண் : ஷி இஸ் சோ பைன் இன் டைமன்ட்… நவ் எய்தர் ஹிட் தேர் கிளப் ஷி இஸ் ஒய்னிங்… ஷி இஸ் நவ் மைன் சோ பைன் இன் டைமன்ட்… நவ் எய்தர் ஹிட் தேர் கிளப் ஷி இஸ் ஒய்னிங்…
ஆண் : ஷி இஸ் மை ஒய்ப்… கோன்னா கெட் ஹேர் மணி மணி மணி… விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி… கோன்னா கெட் ஹேர் மணி மணி மணி… விஷ் ஹேர் ஹனி ஹனி ஹனி… ஷி இஸ் மை லைப்…
Notes : Ponmagal Vandaal Song Lyrics in Tamil. This Song from Azhagiya Tamil Magan (2007). Song Lyrics penned by Alangudi Somu. பொன்மகள் வந்தாள்பாடல் வரிகள்.