பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் | ஏ.ஆர்.ரகுமான் | முத்து |
Vidukathaiya Song Lyrics in Tamil
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…
ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ…
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ…
அழுது அறியாத என் கண்கள்…
ஆறு குளமாக மாறுவதோ…
ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை…
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…
ஆண் : உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்…
நான் செய்த தீங்கு என்ன…
நான் செய்த தீங்கு என்ன…
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…
ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்…
எந்த இடம் சேரும் யார் கண்டார்…
மனிதர் கொண்டாடும் உறவுகளோ…
எந்த மனம் சேரும் யார் கண்டார்…
ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி…
அது கடல் சென்று சேர்வது காலன் விதி…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…
ஆண் : உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்…
இரண்டும் தீர்வதெப்போ…
இரண்டும் தீர்வதெப்போ…
—BGM—
ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…
ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே…
ஒதுங்க கூடாது நல்லவனே…
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்…
தொல்லை நேராது தூயவனே…
ஆண் : கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்…
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்…
ஆண் : காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…
ஆண் : வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்…
நாங்கள் போவதெங்கே…
நாங்கள் போவதெங்கே…
Notes : Vidukathaiya Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. விடுகதையா பாடல் வரிகள்.