விடுகதையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்முத்து

Vidukathaiya Song Lyrics in Tamil


ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : எனது கை என்னை அடிப்பதுவோ…
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ…
அழுது அறியாத என் கண்கள்…
ஆறு குளமாக மாறுவதோ…

ஆண் : ஏன் என்று கேட்கவும் நாதியில்லை…
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்…
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்…

ஆண் : உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்…
நான் செய்த தீங்கு என்ன…
நான் செய்த தீங்கு என்ன…

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : வந்து விழுகின்ற மழைத்துளிகள்…
எந்த இடம் சேரும் யார் கண்டார்…
மனிதர் கொண்டாடும் உறவுகளோ…
எந்த மனம் சேரும் யார் கண்டார்…

ஆண் : மலைதனில் தோன்றுது கங்கை நதி…
அது கடல் சென்று சேர்வது காலன் விதி…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு…
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு…

ஆண் : உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்…
இரண்டும் தீர்வதெப்போ…
இரண்டும் தீர்வதெப்போ…

BGM

ஆண் : விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ…

ஆண் : உனது ராஜாங்கம் இதுதானே…
ஒதுங்க கூடாது நல்லவனே…
தொண்டுகள் செய்ய நீ இருந்தால்…
தொல்லை நேராது தூயவனே…

ஆண் : கைகளில் பொன் அள்ளி நீ கொடுத்தாய்…
இன்று கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்…

ஆண் : காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…
காவியங்கள் உனைப் பாட காத்திருக்கும் பொழுது…
காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது…

ஆண் : வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்…
நாங்கள் போவதெங்கே…
நாங்கள் போவதெங்கே…


Notes : Vidukathaiya Song Lyrics in Tamil. This Song from Muthu (1995). Song Lyrics penned by Vairamuthu. விடுகதையா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top