Tag Archives: ஸ்வேதா மோகன்

ஓ மஹ ஜீயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஹரிஹரன் & ஸ்வேதா மோகன்கண்ணன்தமிழ்ப் படம்

O Maha Zeeya Song Lyrics in Tamil


குழு : ஓ முஹலை… ஓ முஹலை…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

பெண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : சமபசமாலே ஹுசூசே சாயோ சாயோ…
ஹசிலி ஃபிசிலி இல்லாஹி யப்பா ஜிப்பா…

ஆண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…
பெண் : டைலமோ டைலமோ பல்லேலக்கா…

பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

ஆண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : ஏ சலசாலா இஸ்குபராரா ஒசகா முராயா…
பூம்பூம் சக்லக்கா முக்காலா மையா மையா…

பெண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…
ஆண் : லாலாக்கு லாலாக்கு டோல் டப்பிமா…

ஆண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

BGM

பெண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…

ஆண் : ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி…
மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ…
ரஹதுல்லா சோனாலி… ஓ…

ஆண் : ஓ மஹ ஜீயா ஓஓ மஹ ஜீயா…
பெண் : நாக்க முக்க நாக்கா…
ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா…


Notes : O Maha Zeeya Song Lyrics in Tamil. This Song from Thamizh Padam (2010). Song Lyrics penned by C. S. Amudhan. ஓ மஹ ஜீயா பாடல் வரிகள்.


அழகு அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்வேதா மோகன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்சங்கத்தமிழன்

Azhagu Azhagu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…

BGM

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி றெக்க விரிக்குது…

BGM

பெண் : காணும் யாவிலும் இன்பம்…
கரைந்தே போகுது நெஞ்சம்…
என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா…

பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்…
அசையும் யாவிலும் நடனம்…
என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா…

பெண் : காதோடு கதை பேசும் காற்று…
காலோடு உரையாடும் தூசு…
யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்…

பெண் : நில் என்று அழைக்கின்ற பூக்கள்…
வா என்று இழுக்கின்ற தோழன்…
யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…

பெண் : காணும் யாவிலும் இன்பம்…
கரைந்தே போகுது நெஞ்சம்…
என் உள்ளங்கையிலே என் புன்னகைகளா…

பெண் : கேட்க்கும் யாவிலும் தாளம்…
அசையும் யாவிலும் நடனம்…
என் சுவாச சாலையில் ஒரு வாச திருவிழா…

பெண் : காதோடு கதை பேசும் காற்று…
காலோடு உரையாடும் தூசு…
யாரின் பேச்சை நான் கேட்க போகிறேன்…

பெண் : நில் என்று அழைக்கின்ற பூக்கள்…
வா என்று இழுக்கின்ற தோழன்…
யாரின் பேச்சைத்தான் நான் கேட்பதோ…

BGM

பெண் : காற்பதனிக்குள்ளே ஒரு பூவை போலே வாழ்ந்தேன்…
மிச்சம் மீதி வாழ நான் வீதி வந்தேனே…
வத்தி பெட்டிக்குள்ளே ஒரு வானம் இங்கு கண்டேன்…
தோசை கல்லின் மேலே நான் பாசம் கண்டேனே…

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது…
தட்டவில்ல என் உலகமே தொறக்குது…
பிச்சிகிட்டு பறக்குதடா…

ஆண் : கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது…
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது…
தட்டவில்ல என் உலகமே தொறக்குது…
பிச்சிகிட்டு பறக்குதடா…

பெண் : வேறேதும் என் நெஞ்சிக்கு வேண்டாமடா…
கை கோர்த்து இச்சிற்றுண்டம் காண்போமடா…
வால்மீனை நான் வான் விட்டு வீழ்ந்தேனடா…
ஓர் நாளில் நான் என் ஆயுள் வாழ்ந்தேனே உன்னாலடா…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…

பெண் : தித்தின தத்தின தித்தின தத்தின…
அழகு அழகு அழகு அழகு அழைக்குது…
தித்தின தத்தின தித்தின தத்தின…
சிறகு சிறகு புதிய சிறகு முளைக்குது…


Notes : Azhagu Azhagu Song Lyrics in Tamil. This Song from Sangathamizhan (2019). Song Lyrics penned by Madhan Karky. அழகு அழகு பாடல் வரிகள்.


மழை மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாமூன்று பேர் மூன்று காதல்

Mazhai Mazhai Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…

ஆண் : அலை அலை என தாக்குதே…
மழை தாக்குதே மழை தாக்குதே…
நினை நினை என கேட்குதே…
மனம் கேட்குதே அய்யோ…

ஆண் : அனை அனை என கெஞ்சுதே…
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே…
அடிக்கு ஒரு முறை கொஞ்சுதே…
உனை கொஞ்சுதே அய்யோ…

BGM

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

BGM

ஆண் : முத்தம் கேட்டால்…
பெண் : வெட்கம் தருவேன்…
ஆண் : வெட்கம் கேட்டால்…
பெண் : வண்ணம் தருவேன்…

ஆண் : காத்து கிடந்தால்…
பெண் : மெல்ல வருவேன்…
ஆண் : தூக்கம் கெடுத்து…
பெண் : தொல்லை தருவேன்…

ஆண் : கனவில் தொட்டால்…
பெண் : தள்ளி விடுவேன்…
ஆண் : நேரில் தொட்டால்…
பெண் : கிள்ளி விடுவேன்…
ஆண் : நீ அடங்காத என் ராட்சசி…

BGM

ஆண் : பொய்கள் சொன்னால்…
பெண் : வாடிவிடுவேன்…
ஆண் : மீண்டும் சொன்னால்…
பெண் : ஓடிவிடுவேன்…

ஆண் : மழையில் வந்தால்…
பெண் : குடைகள் தருவேன்…
ஆண் : மடியில் வந்தால்…
பெண் : உதைகள் தருவேன்…

ஆண் : கெஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்ச வருவேன்…
ஆண் : கொஞ்சி கேட்டால்…
பெண் : கொஞ்சம் தருவேன்…
ஆண் : நீ என்னை கொல்லும் வன தேவதை…

ஆண் : நீ உன் பாதியை…
என் பார்வையில் தேடினாய்…
நான் என் மீதியை…
கண்டேன் என கூவினேன்…

ஆண் & பெண் : நெஞ்சம் என்னும் தீவுக்குள்ளே…
காதல் பூக்கள் வானும் மண்ணும்…
தீயும் நீரும் நீயும் நானும் காதலாகி மேவியாட…

BGM

ஆண் : காதல் என்றால்…
பெண் : செல்ல பார்வை…
ஆண் : ஆசை என்றால்…
பெண் : கள்ள பார்வை…

ஆண் : ஊடல் என்றால்…
பெண் : கொஞ்சம் கோபம்…
ஆண் : கோபம் என்றால்…
பெண் : மீண்டும் ஊடல்…

ஆண் : தேடல் என்றால்…
பெண் : உன்னுள் என்னை…
ஆண் : தேடி வந்தால்…
பெண் : தொலையும் பெண்மை…
ஆண் : நான் தொலைந்தாலும் சுகம் தானடி…

BGM

ஆண் : தயக்கம் என்றால்…
பெண் : இதழின் நடனம்…
ஆண் : மயக்கம் என்றால்…
பெண் : மனதின் நடனம்…

ஆண் : கிரக்கம் என்றால்…
பெண் : கண்ணின் நடனம்…
ஆண் : கலக்கம் என்றால்…
பெண் : நரம்பின் நடனம்…

ஆண் : விருப்பம் என்றால்…
பெண் : விழியின் நடனம்…
ஆண் : நெருக்கம் என்றால்…
பெண் : விரலின் நடனம்…
ஆண் : இனி நெருங்காமல் நெருப்பில்லையே…

ஆண் : நீ எனக்காகவே உருவானவள் ஸ்நேகிதி…
என் எதிர்காலத்தின் முகம்தானடி கண்மணி…

ஆண் & பெண் : நேற்றை கொன்று இன்றை வென்று…
நாளை செய்தாய் உன்னை தெட்டு என்னை தெட்டு…
காதலாகி என்ன பேசும் ஈரக்காற்று…

ஆண் : மழை மழை மழை மழை…
என்னை மட்டும் நனைக்கும் மழை…
விட்டு விட்டு துரத்தும் மழை…
பெண்ணே நீதான் என் மழை…

ஆண் : நான் உன்னை பார்த்த நாளிலே…
ஜன்னல்தாண்டி பெய்ந்தது மழை…
நீ என்னை பார்த்த நாளிலே…
மின்னல் மின்னி வந்தது மழை…


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Moondru Per Moondru Kadhal (2013). Song Lyrics penned by Na. Muthukumar. மழை மழை பாடல் வரிகள்.


சீனி சில்லாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்வேதா மோகன் & யாசின் நிசார்தமன் எஸ்ஸ்கெட்ச்

Cheeni Chillaallee Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…
தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…

ஆண் : உன் முத்த துளி ஏந்த பள்ளம் ஆனேன்…
வெள்ளை இடை பார்க்க குள்ளம் ஆனேன்…
கொள்ளை வாழை பேச்சில் வெள்ளம் ஆனேன்… அம்மு…

ஆண் : ஹே… கோடி பெண்கள் பேரழகை…
சேர்த்து வைத்தேன் ஓரிடம்…
சேர்த்து உன்னில் பாதி இல்லை பார்…

பெண் : என் மாய பூக்கள் தேடி கொண்டு போ…
உன் தாடி குள்ளே மூடி கொண்டு போ…

பெண் : நான் கேட்கும் போது கனவில் வந்து போ…
உன் வாசம் மட்டும் எனக்கே தந்து போ…

ஆண் : தென்றல் தின்றாய் என் சீனி சில்லாலே…
மூச்சே இல்லை என் தேனீ கண்ணாலே…

BGM

பெண் : மரபணு வரை மகரந்த மழை…
இதமாய் தூவுதே…
இவனது வழி இதயத்தின் ஒளி…
இசையாய் தாவுதே…

ஆண் : உன் காதில் நிழல் என் மாறி…
என் காலம் அதில் இளை பாறி…
உன் பேர் மழைதான் நாட்குறிப்பில்… ஓஓஓஓ…

பெண் : என் கூட வந்து நீயும் வாழ வா…
என் காதல் கூட்டி பெண்மை ஆள வா…

ஆண் : நீ தீட்டி செல்லும் பெண்மை ஆளவா…
என் கூட வந்து நீயும் சேரவா…

BGM


Notes : Cheeni Chillaallee Song Lyrics in Tamil. This Song from Sketch (2018). Song Lyrics penned by Vivek. சீனி சில்லாலே பாடல் வரிகள்.


ஊஞ்சல் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாயுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாலத்தி

Oonjal Manam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

BGM

பெண் : எது ஆனால் என்ன…
உன்னை விட்டு தர மாட்டேன்…
சிறு கண்ணில் வைத்து…
கண்ணில் வைத்து காத்து கிடப்பேன்…

பெண் : அட காலம் வந்து உனை காயம் செய்யும் போது…
என் காதல் என்னும் மாயம் தந்து தேற்றிடுவேன்…

பெண் : வயதானால் கூட உன்னைவிட்டு…
தள்ளி செல்ல மாட்டேன்…
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்…

பெண் : பலநூறு கதை பேச எண்ணி…
அன்பு முகம் ஏந்தி…
காதோரம் மூச்சில் காதல் உரைப்பேன்…

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே…
பேரன்பின் தூதே…
நீ என்னும் தூரம் வரை…
நானும் நடப்பேன்…

ஆண் : அன்பே அன்பே அன்பே…
நீ உள்ள வாழ்வில்…
தோற்றாலும் மீண்டும் மீண்டும்…
நானே ஜெயிப்பேன்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

BGM


Notes : Oonjal Manam Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Karthik Netha. ஊஞ்சல் மனம் பாடல் வரிகள்.


ஏலி ஏலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர் தாஸ்சத்ய பிரகாஷ் & ஸ்வேதா மோகன்ஜஸ்டின் பிரபாகரன்ஒரு நாள் கூத்து

Yaeli Yaeli Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏலி ஏலி என் காதலி…
ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி…
இனியும் நீயும் நானும் நாம் இல்லையே…
என்றாலும் காதல் பொய் இல்லையே…

ஆண் : இருப்பது ஒன்றை இழக்கின்ற வரை…
எதுவும் தோன்றுவது இல்லையே…
மழை அது வந்தால் விழுவது உணவதை தாங்க…
எறும்பிடம் பலமில்லையே…

BGM

பெண் : ஓஹோ ஓஹோ… ஏலா ஏலா என் காதலா…
நாம் பிாிந்தும் இன்னும் ஓா் காதலா…
எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே…
என்னாகும் பூவும் சூட்டிலே…

பெண் : மெழுகென்று நானும்…
நெருப்பென்று நீயும்…
உருகுவதே முறையானதே…

பெண் : மறுபடி வந்தாய்…
அருகினில் நின்றாய்…
வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே…

BGM


Notes : Yaeli Yaeli Song Lyrics in Tamil. This Song from Oru Naal Koothu (2016). Song Lyrics penned by Sankar Dass. ஏலி ஏலி பாடல் வரிகள்.


பொல்லா பையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிசரண் & ஸ்வேதா மோகன்டி. இமான்றெக்க

Pollapaiyya Song Lyrics in Tamil


பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன் டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…

BGM

பெண் : யே… பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

ஆண் : ஒன்னும் புரியாம ஒரு ஆச…
அருவாள தூக்குது…
தன்ன தனி ஆளா என நாளும்…
பொலி போட பாக்குது…

பெண் : மொத்த உசுரும்…
உன்ன வந்து சேர ஏங்க…
சித்தம் கலங்கி…
நிக்குறேனே மூச்சு வாங்க…

ஆண் : பக்கத்துல பாசம் வர பல்லாக்கு…
உன்னால மல்லாந்து போறேன்…

பெண் : உள்ளத்துல நானும் கெட வம்பேதும் இல்லாம…
உன்கூட வாரேன் தாரேன்…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

BGM

பெண் : உன்ன நெனச்சாலே…
பசி தூக்கம் பகையாகி போகுது…
சொல்ல நெனச்சாலும் வரும் வார்த்த…
கொட சாஞ்சு ஓடுது…

ஆண் : தொண்ட குழியில்…
முள்ள வச்சு போகும் ஆச…
உள்ள வரையில்…
முத்தம் வைக்க ஏங்கும் மீச…

பெண் : வெக்கத்துல தேகம் பட…
பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட…

ஆண் : ரத்தத்துல வேகம் தொட…
உன்னோட கை ரெண்டும் என்னாத்த மூட கூட…

பெண் : பொல்லா பையா பொல்லா பையா…
ஏன்டா என்ன பாத்த…
சொல்லாமலே சொல்லாமலே…
நீதான் உள்ள பூத்த…

ஆண் : நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி…
ஏன்டி நித நித்தம் அல்லாடுற…
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா…
தட்டு கிட்டு தள்ளாடுற…

பெண் : துள்ள துள்ள உன்ன அள்ள…
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ…


Notes : Pollapaiyya Song Lyrics in Tamil. This Song from Rekka (2016). Song Lyrics penned by Yugabharathi. பொல்லா பையா பாடல் வரிகள்.


பூப்பறிக்க சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகார்த்திக் & ஸ்வேதா மோகன்மணி சர்மாமலை மலை

Pooparikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

BGM

ஆண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…

ஆண் : மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
கை வழி வராதோ பைங்கிளி…
கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் ஆடி…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

ஆண் : புன்னகை பூவை வீசி என்னை பூமியில் சாய்தாயே…
மண் மடி சேரும் முன்னே என்னை உன் மடி சேர்தாயே…

பெண் : என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாளாச்சு…
கண்ணிமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு…

ஆண் : யார் யார்க்கு யாரோ யார் சொல்வாரோ…
பெண் : செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ…

ஆண் : கனவில் நினைக்கவில்லை…
கால்கள் நடக்கும் முல்லை…
எனக்கு கிடைக்கும் என நான்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டா…

ஆண் : அன்பான சிநேகிதி சொல்லை நான் தாண்ட மாட்டேனே…
ஆனாலும் சுள்ளென உன்னர்சியை தூண்ட மாட்டேனே…

BGM

பெண் : காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்கிரதே…
மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்கிரதே…

ஆண் : வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீயேறு…
எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு…

பெண் : நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்…
ஆண் : நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்தாதோ ஊர்தான்…

பெண் : எனக்கு எனக்கு என்று…
இருக்கும் அழகு மொத்தம்…
உனக்கு உனக்கு இனி மேல்…

பெண் : அன்பான சிநேகிதா சின்னதாய் சேட்டை செய்யேண்டா…
ஆண் : அச்சாரம் என்பதை இப்பவே போட்டு வையேண்டி…

பெண் : பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நீ பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…


Notes : Pooparikka Song Lyrics in Tamil. This Song from Malai Malai (2009). Song Lyrics penned by Vaali. பூப்பறிக்க சொல்லி பாடல் வரிகள்.


இததானே எதிர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்வேதா மோகன்டோனி பிரிட்டோJ. பேபி

Idha Thane Ethir Paathen Song Lyrics in Tamil


பெண் : அம்மா… அம்மா… அம்மா…

பெண் : இதத்தானே எதிர் பார்த்தேன்…
மனேசாடு அட காத்தேன்…

பெண் : தினந்தோறும் காத்தோட குயிலாக திரிஞ்சேனே…
அடஞ்சாச்சு என் கூட்டையே…
திச தேடி அலையோட படகோட அலஞ்சேனே…
கிடச்சாசே என் வாழ்க்கையே…

பெண் : நீ வாழ நான் பாக்கனும்…
வாயாற நான் வாழ்த்தனும்…
எனக்காக வேண்டாம உனக்காக வரம் கேப்பேனே…
அம்மா…

பெண் : அழுதாலும் விழ வேணும் என் மேலதான்…
தொடச்சாலும் என் சேலதான்…
என் தோளில் உன் கைகள் பூமாலதான்…
அடையாளம் உன்னாலதான்…

பெண் : கையோடு கைகோர்த்து ஊர்கோலமாய்…
சிறு பிள்ளை ஆவோம் வா…
மனம் விட்டு நான் பேச நீ தேற்றினாய்…
இருப்பேனே சந்தோஷமா…

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காம…
உன் நேரம் எனக்காகுமா…
ஓஓ… நான் செய்த நன்மைகள்…
உன் மேல மழையாகுமா…

BGM

பெண் : என் காலம் பூரா நீ கூட வேணும்…
என் ஆயுள் கூட நீ வாழ வேணும்…
உயிரெல்லாம் வெவ்வேறுதான்…
அன்பெனற ஒரு நூலுதான் கதை மாலையாய்…

பெண் : எனக்குள்ள உன பாத்து…
உனக்குள்ள என பாப்பதேன்…
அம்மா…

பெண் : ஓஓ… கடிகாரம் பாக்காம…
உன் நேரம் எனக்காகுமா…
ஓஓ… நான் செய்த நன்மைகள்…
உன் மேல மழையாகுமா…


Notes : Idha Thane Ethir Paathen Song Lyrics in Tamil. This Song from J Baby (2024). Song Lyrics penned by Vivek. இததானே எதிர் பாடல் வரிகள்.


தொலையுறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பவன் மித்ராஸ்வேதா மோகன் & ஷபீர்ஷபீர்நீயா 2

Tholaiyuren Song Lyrics in Tamil


BGM

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ…

BGM

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ…

BGM

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

BGM

பெண் : முத்தம் வச்ச இடங்கள…
தொட்டு தொட்டு ரசிப்பேன்…
மிச்சம் வச்ச இடம் எது…
உள்ளுக்குள்ள நினைப்பேன்…

ஆண் : உன் உடலோடு சூட்டில்…
முழு இரவும் கழிப்பேன்…

பெண் : வெக்கம் பூரா சூராடி…
என்னுள் தீய வச்சிட்ட…
எல்லை மீறி ஊடாடி…
என்னை ஏதோ செஞ்சிட்ட…

ஆண் : காதல் கொண்டு என்னை…
நீ வாழ வச்ச தெய்வம் நீயா கண்ணே…
பெண் : நீதான்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…

BGM

பெண் : முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன்…
மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்…

ஆண் : ஹே… உரையாட போறேன் இரு உதடுகளாலே…

பெண் : சொல்லும் பேச்சு மீறாம…
உந்தன் காலாய் நடப்பேன்…
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்…
காதல் சுமப்பேன்…

ஆண் : நானும் நீயும் இன்னும்…
ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள…
பெண் : வாழ்வோம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : ஆஆஅ… மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ… ஹ்ம்ம்ம்ம்…

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ… ஒஓஹோஹோ… ம்ம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

BGM


Notes : Tholaiyuren Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by S. Anuratha. தொலையுறேன் பாடல் வரிகள்.