Tag Archives: மு. மேத்தா

Pethu Eduthavathaan Song Lyrics in Tamil

பெத்து எடுத்தவதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமலேசியா வாசுதேவன்இளையராஜாவேலைக்காரன் (1987)

Pethu Eduthavathaan Song Lyrics in Tamil


ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

BGM

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

ஆண் : பிள்ளையின் மனசு பித்தாச்சு…
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு…
இன்னொரு மனசு என்னாச்சு…
அது முறிஞ்சுபோன வில்லாச்சு…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
தத்து கொடுத்துப்புட்டா…

BGM

ஆண் : வயித்துல வளத்த புள்ள வந்து நிக்க வாசலில்லை…
மடியில வளந்ததுக்கு இங்கிருக்க ஆசையில்லை…
மகனா பொறந்ததுக்கு தொட்டணைக்க தாயுமில்லை…
மகனா வளர்ந்த புள்ள துள்ளுறது நியாயமில்லை…

ஆண் : தொட்டிலில் நாம் கிடந்தா சோகம் வந்து சேர்வதில்லை…
தோளிலே வாழும் வரை துன்பமின்னு ஒன்னுமில்லை…
கட்டில பார்த்த பின்னே காண்பதெல்லாம் எங்கு சொல்ல…
கண்ணுல ஆறிருக்கு போவதுக்கு தோணி இல்லை…

ஆண் : சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி முடிச்சிரலாம்…
நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்…
காவிரி கங்கை ஆறுகள் போல…
கண்களும் இங்கே நீராட…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

BGM

ஆண் : தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே…
தலையில எழுதிவச்ச அந்த விரல் பார்த்தேனா…
கிளியை வளர்த்தெடுத்தா கேள்வியது கேட்காது…
புலியை வளர்த்தெடுத்தா பாசமுன்னு பார்க்காது…

ஆண் : சொல்லத்தான் வார்த்தையின்றி தாய் மனசு நோகுமங்கே…
சொல்லவே வாயுமின்றி ஓர் மனசு வாடுமிங்கே…
சொல்லிலே வேலெடுத்து வீசுகின்ற சேயுமங்கே…
மௌனத்தை பேசவிட்டா மாறிவிடும் யாவும் இங்கே…

ஆண் : ரெண்டு கிளியிருக்கு ஒன்னு தனிச்சிருக்கு…
பெத்த கிளி அதுக்கு எந்த துணையிருக்கு…
ஊர்ல எங்கே நாட்டுல எங்கே…
காட்டுங்க எங்க தாய்ப்போல…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

ஆண் : பிள்ளையின் மனசு பித்தாச்சு…
இங்க பெத்தவ மனசு கல்லாச்சு…
இன்னொரு மனசு என்னாச்சு…
அது முறிஞ்சுபோன வில்லாச்சு…

ஆண் : பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…


Notes : Pethu Eduthavathaan Song Lyrics in Tamil. This Song from Velaikaran (1987). Song Lyrics penned by Mu. Metha. பெத்து எடுத்தவதான் பாடல் வரிகள்.


தோட்டத்துல பாத்தி கட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சாய்பாபாஇளையராஜாவேலைக்காரன் (1987)

Thottathile Pathi Katti Song Lyrics in Tamil


ஆண் : தன்னனான தந்தான்னா…
தன்னனான தந்தான்னா…

BGM

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

{ ஆண் : சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே…
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி…
மனசு கெட்டிடும் கெட்டிடுமே… } * (2)

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

BGM

{ ஆண் : சிங்காரமா ஊரு…
இது சென்னையினு பேரு…
ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு… } * (2)

ஆண் : தொட்டாலும் கை மணக்கும்…
தொட்ட இடம் பூ மணக்கும்…
கூவமுன்னு பேரு சொன்னா…
சொன்னவங்க வாய் மணக்கும்…

ஆண் : கண்ணகி இங்க வந்தா…
கண்ணடிக்கும் கூட்டமுங்க…
மதுரைய எரிச்சவளே…
மனசு மாற கூடுமுங்க…

ஆண் : நித்தமும் வீதியில் ஊர்வலமா…
சத்தமும் சண்டையும் சம்மதமா…
நித்தமும் வீதியில் ஊர்வலமா…
சத்தமும் சண்டையும் சம்மதமா…

ஆண் : புத்தனும் இப்போ பட்டணம் வந்தா…
போதை மரத்துல ஏறிக்குவான்…

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

{ ஆண் : சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே…
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி…
மனசு கெட்டிடும் கெட்டிடுமே… } (2)

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

BGM

{ ஆண் : கல்லூரிக்கு போனா…
கன்னி பொண்ணு மீனா…
கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா… } (2)

ஆண் : கட்சிகளும் வாங்கி இங்கே…
கட்டிடங்கள் வச்சிருக்கு…
கஷ்ட படும் ஏழைக்கெல்லாம்…
கட்டாந்தரை தான் இருக்கு…

ஆண் : கல்யாண மண்டபங்கள் கட்டி வச்சு காத்திருக்கு…
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு…

ஆண் : இன்னமும் கதைய சொல்லட்டுமா…
குப்பைய கூடையில் அள்ளட்டுமா…
இன்னமும் கதைய சொல்லட்டுமா…
குப்பைய கூடையில் அள்ளட்டுமா…

ஆண் : சொல்வது ஒன்னு…
செய்வது ஒன்னு…
பட்டணம் கைகளை சுட்டதானே…

ஆண் : தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…
தோட்டத்துல பாத்தி கட்டி…
பாத்திருக்கேன் பாத்திருக்கேன்…

{ ஆண் : சோத்துக்குள்ள பாத்திய கட்டுற…
பட்டணம் பட்டணமே…
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி…
மனசு கெட்டிடும் கெட்டிடுமே… } (2)

BGM


Notes : Thottathile Pathi Katti Song Lyrics in Tamil. This Song from Velaikaran (1987). Song Lyrics penned by Mu. Metha. தோட்டத்துல பாத்தி கட்டி பாடல் வரிகள்.


காத்திருந்தாளே ராஜகுமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாசுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்சுயம்வரம்

Kathirunthaalea Rajakumari Song Lyrics in Tamil


BGM

பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி…
காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு…
பட்டாடை இங்கே தவமிருக்கு…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

BGM

பெண் : மனம் போலவே மாங்கல்யமா…
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு…
வலை வீசுவார் விலை பேசுவார்…
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு…

பெண் : திருமண சந்தை கூடி இருக்குது…
தேவனும் வருவானா…
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே…
உள்ளத்தை பார்ப்பானா…

பெண் : பூமாலை நாளை யாரிடமோ…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

BGM

பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்…
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை…
எழில் வானிலே இளம் வெண் புறா…
பறந்தாட பாதை இன்றி போனதில்லை…

பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே…
அடி உன்னிடம் குறை இல்லையா…
கண்மணிக்காக மின்மினி பூச்சி…
தன்னொளி தரவில்லையா…

பெண் : யாரோடு யாரோ யாரறிவார்…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…

பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு…
பட்டாடை இங்கே தவமிருக்கு…
காவலன் நாளை வருவானா…
காவலன் நாளை வருவானா…


Notes : Kathirunthaalea Rajakumari Song Lyrics in Tamil. This Song from Suyamvaram (1999). Song Lyrics penned by Mu. Metha. காத்திருந்தாளே ராஜகுமாரி பாடல் வரிகள்.


பாடு நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉதய கீதம்

Paadu Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…
உன் பாடலை நான் தேடினேன்…
கேட்காமலே நான் வாடினேன்…
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர…

BGM

பெண் : நீ போகும் பாதை என் பூங்காவனம்…
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்…
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ…
என் வீடு வாராமல் ஏன் போகுமோ…

பெண் : கைதான போதும் கை சேர வேண்டும்…
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்…
என் ஜென்மமே ஈடேறவே…

ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
உன் பாடலை நான் கேட்கிறேன்…
பாமாலையை நான் கோர்க்கிறேன்…
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…

BGM

ஆண் : ஊரெங்கும் போகும் என் ராகங்களே…
உன் வீடு தேடும் என் மேகங்களே…
பூ மீது தேன் தூவும் காதல் வரம்…
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்…

ஆண் : காவேரி வெள்ளம் கை சேர துள்ளும்…
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்…
காதல் நிலா தூதாகுமே…

ஆண் : பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே…
பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்…
ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்…

பெண் : பாடும் நிலாவே…
ஆண் : தேன் கவிதை…
பெண் : பூ மலரே…


Notes : Paadu Nilave Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Mu. Metha. பாடு நிலாவே பாடல் வரிகள்.


பாதி நிலா இன்று

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாகே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஏ. ராஜ்குமார்காமராசு

Paadhi Nilaa Indru Song Lyrics in Tamil


BGM

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

BGM

பெண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

BGM

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

ஆண் : கோகுல வாசமோ…
ராதையின் ஸ்வாசமோ…
துவாரகை வீதியில்…
மலர்களும் பேசுமோ…

பெண் : மௌனமே மயங்குமோ…
இது என்ன மாயமோ…

ஆண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…
ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

BGM

ஆண் : மிதிலையில் நான் அன்று வில்லை முறித்தது…
சீதை தோளில் சேரவே…

BGM

ஆண் : மிதிலையில் நான் அன்று வில்லை முறித்தது…
சீதை தோளில் சேரவே…

பெண் : தீயினில் மூழ்கி என் தேகம் ஜொலித்தது…
ராமன் பெருமை கூறவே…

ஆண் : அக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி…
சந்தான தேர் நான வந்த சலீம் நானடி…

பெண் : ஏதெனின் தோட்டத்தில் எவளும் நானாக…
ஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக…

ஆண் : இரவும் பகலும் இணைந்து கலந்த…
ஞாபகம் இருக்குதா…
இதயமும் சிவக்குதா…

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

ஆண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

BGM

பெண் : தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய…
ஷாஜஹானின் பைங்கிளி…

BGM

பெண் : தங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய…
ஷாஜஹானின் பைங்கிளி…

ஆண் : ஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்…
சித்திரம் பேசும் தமிழ் மொழி…

பெண் : மன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி…
நெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி…

ஆண் : லைலாவே நான் காதல் பைத்தியம் ஆனேனே…
மஜ்னுவின் மனசுக்கு வைத்தியம் ஆவாயா…

பெண் : கனவில் மலர்ந்த காதல் கதைகள்…
ஆயிரம் உலகிலே…
அனைத்தும் நம் கதைகளே…

ஆண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

பெண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

ஆண் : கோகுல வாசமோ…
ராதையின் ஸ்வா சமோ…

பெண் : துவாரகை வீதியில்…
மலர்களும் பேசுமோ…

ஆண் : மௌனமே மயங்குமோ…
இது என்ன மாயமோ…

பெண் : பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு…
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு…

ஆண் : ஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு…
புல்லாங்குழல்தனில் போதை உண்டாச்சு…

BGM


Notes : Paadhi Nilaa Indru Song Lyrics in Tamil. This Song from Kamarasu (2002). Song Lyrics penned by Mu. Metha. பாதி நிலா இன்று பாடல் வரிகள்.


என் மன வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஹரிஹரன்இளையராஜாகாசி

En Mana Vaanil Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

BGM

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

BGM

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

ஆண் : உங்களைப் போல சிறகுகள் விரிக்க…
நானும் ஆசை கொண்டேன்…
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து…
தினம் தினம் திரும்பி வந்தேன்…

ஆண் : ஒரு பாட்டு போதுமோ…
எடுத்து கூறவே…
இதயம் தாங்குமோ நீ கூறு…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

BGM

ஆண் : இறைவனிடம் வரங்கள் கேட்டேன்…
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்…
மனிதரில் இதை யாரும் அறிவாரோ…

ஆண் : நான் பாடும் பாடல் எல்லாம்…
நான் பட்டபாடே அன்றோ…
பூமியில் இதை யாரும் உணர்வாரோ…

ஆண் : மனதிலே மாளிகை வாசம்…
கிடைத்ததோ மர நிழல் நேசம்…
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…

ஆண் : ராகம் உண்டு தாளம் உண்டு…
என்னை நானே தட்டிக்கொள்வேன்…
என் நெஞ்சில் உண்மையுண்டு…
வேறென்ன வேண்டும்…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

BGM

ஆண் : பொருளுக்காய் பாட்டை சொன்னால்…
பொருளற்ற பாட்டே ஆகும்…
பாடினேன் அதை நாளும் நாளும்…

ஆண் : பொருளில்லா பாட்டானாலும்…
பொருளையே போட்டு செல்வார்…
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்…

ஆண் : மனமுள்ளோர் என்னை பார்ப்பார்…
மனதினால் அவரை பார்ப்பேன்…
மறந்திடா ராகம் இதுதானே…

ஆண் : வாழ்க்கை எனும் மேடைதனில்…
நாடகங்கள் ஓராயிரம்…
பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…

ஆண் : உங்களைப் போல சிறகுகள் விரிக்க…
நானும் ஆசை கொண்டேன்…
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து…
தினம் தினம் திரும்பி வந்தேன்…

ஆண் : ஒரு பாட்டு போதுமோ…
எடுத்து கூறவே…
இதயம் தாங்குமோ நீ கூறு…

ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…

ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…


Notes : En Mana Vaanil Song Lyrics in Tamil. This Song from Kasi (2001). Song Lyrics penned by Mu. Metha. என் மன வானில் பாடல் வரிகள்.


ராஜ ராஜ சோழன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாரெட்டை வால் குருவி

Raja Raja Chozhan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
பெண்ணாக ஆனதே…
உல்லாச பூமி இங்கு உண்டானதே…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

BGM

ஆண் : கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே…
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே…
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்…
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்…

ஆண் : இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்…
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்…
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்…
செந்தாமரை செந்தேன் மழை…
என் ஆவி நீயே தேவி…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

BGM

ஆண் : கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே…
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே…
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே…
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே…

ஆண் : முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே…
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே…
தேனோடை ஓரமே நீராடும் நேரமே…
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…

ஆண் : மண் மீது சொர்க்கம் வந்து…
பெண்ணாக ஆனதே…
உல்லாச பூமி இங்கு உண்டானதே…

ஆண் : ராஜ ராஜ சோழன் நான்…
எனை ஆளும் காதல் தேசம் நீதான்…
பூவே காதல் தீவே…


Notes : Raja Raja Chozhan Song Lyrics in Tamil. This Song from Rettai Vaal Kuruvi (1987). Song Lyrics penned by Mu. Metha. ராஜ ராஜ சோழன் பாடல் வரிகள்.


நட்சத்திர ஜன்னலில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாமனோ & சுனந்தாஎஸ். ஏ. ராஜ்குமார்சூர்யவம்சம்

Natchathira Jannalil Song Lyrics in Tamil


BGM

பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
சிறகை விரித்துப் பறப்போம்…
நம் உறவில் உலகை அளப்போம்…
விளையாடலாம் நிலாவிலே…
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே…
வானைப் புரட்டிப்போடு…
புது வாழ்வின் கீதம் பாடு…

ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…
சிறகை விரித்துப் பறப்போம்…
நம் உறவில் உலகை அளப்போம்…

BGM

ஆண் : சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்…
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்…

பெண் : புத்தகங்களில் முத்தெடுக்கலாம்…
பொன்னாடை இமயத்துக்குப் போட்டுவிடலாம்…

ஆண் : பூமிக்குப் பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்…
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா…

பெண் : சூரியத் தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்…
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா…

ஆண் : வானம்பாடி வாழ்விலே…
வருந்தி அழுவதில்லை…
வணங்கி விழுவதில்லை…

BGM

பெண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…

ஆண் : சிறகை விரித்துப் பறப்போம்…
நம் உறவில் உலகை அளப்போம்…

BGM

பெண் : சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்…
சந்தோஷ முல்லை இங்கே வீட்டில் முளைக்கும்…

ஆண் : சந்தனமழை நம்மை நனைக்கும்…
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்…

பெண் : சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி…
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ…

ஆண் : மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்…
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா…

பெண் : ஓங்கும் உந்தன் கைகளால்…
வானைப் புரட்டிப்போடு…
புது வாழ்வின் கீதம் பாடு…

BGM

ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…

பெண் : சிறகை விரித்துப் பறப்போம்…
நம் உறவில் உலகை அளப்போம்…

ஆண் : விளையாடலாம் நிலாவிலே…
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே…

பெண் : வானைப் புரட்டிப்போடு…
புது வாழ்வின் கீதம் பாடு…

ஆண் : நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது…

பெண் : லாலா லாலா… லா லா…

BGM


Notes : Natchathira Jannalil Song Lyrics in Tamil. This Song from Suryavamsam (1997). Song Lyrics penned by Mu. Metha. நட்சத்திர ஜன்னலில் பாடல் வரிகள்.


கற்பூர பொம்மை ஒன்று

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாபி. சுசீலாஇளையராஜாகேளடி கண்மணி

Karpoora Bommai Ondru Song Lyrics in Tamil


பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

—BGM—

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

—BGM—

பெண் : பூந்தேரிலே நீ ஆடவே…
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்…
ராஜாங்கமே ஆனந்தமே…
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்…

பெண் : மானே உன் வார்த்தை ரீங்காரம்…
மலரே என் நெஞ்சில் நின்றாடும்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

—BGM—

பெண் : தாய் அன்பிற்கு ஈடேதம்மா…
ஆகாயம் கூட அது போதாது…
தாய் போல் யார் வந்தாலுமே…
உன் தாயை போலே அது ஆகாது…

பெண் : என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்…
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…
கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…

பெண் : கலந்தாட கை கோர்க்கும் நேரம்…
கண்ணோரம் ஆனந்த ஈரம்…
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல்…
நீ பாடம்மா நீ பாடம்மா…

பெண் : கற்பூர பொம்மை ஒன்று…
கை வீசும் தென்றல் ஒன்று…


Notes : Karpoora Bommai Ondru Song Lyrics in Tamil. This Song from Keladi Kanmani (1990). Song Lyrics penned by Mu. Metha. கற்பூர பொம்மை ஒன்று பாடல் வரிகள்.