பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மு. மேத்தா | ஹரிஹரன் | இளையராஜா | காசி |
En Mana Vaanil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
—BGM—
ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
—BGM—
ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…
ஆண் : உங்களைப் போல சிறகுகள் விரிக்க…
நானும் ஆசை கொண்டேன்…
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து…
தினம் தினம் திரும்பி வந்தேன்…
ஆண் : ஒரு பாட்டு போதுமோ…
எடுத்து கூறவே…
இதயம் தாங்குமோ நீ கூறு…
ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…
—BGM—
ஆண் : இறைவனிடம் வரங்கள் கேட்டேன்…
ஸ்வரங்களை அவனே கொடுத்தான்…
மனிதரில் இதை யாரும் அறிவாரோ…
ஆண் : நான் பாடும் பாடல் எல்லாம்…
நான் பட்டபாடே அன்றோ…
பூமியில் இதை யாரும் உணர்வாரோ…
ஆண் : மனதிலே மாளிகை வாசம்…
கிடைத்ததோ மர நிழல் நேசம்…
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே…
ஆண் : ராகம் உண்டு தாளம் உண்டு…
என்னை நானே தட்டிக்கொள்வேன்…
என் நெஞ்சில் உண்மையுண்டு…
வேறென்ன வேண்டும்…
ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…
—BGM—
ஆண் : பொருளுக்காய் பாட்டை சொன்னால்…
பொருளற்ற பாட்டே ஆகும்…
பாடினேன் அதை நாளும் நாளும்…
ஆண் : பொருளில்லா பாட்டானாலும்…
பொருளையே போட்டு செல்வார்…
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்…
ஆண் : மனமுள்ளோர் என்னை பார்ப்பார்…
மனதினால் அவரை பார்ப்பேன்…
மறந்திடா ராகம் இதுதானே…
ஆண் : வாழ்க்கை எனும் மேடைதனில்…
நாடகங்கள் ஓராயிரம்…
பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி…
ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…
ஆண் : உங்களைப் போல சிறகுகள் விரிக்க…
நானும் ஆசை கொண்டேன்…
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து…
தினம் தினம் திரும்பி வந்தேன்…
ஆண் : ஒரு பாட்டு போதுமோ…
எடுத்து கூறவே…
இதயம் தாங்குமோ நீ கூறு…
ஆண் : என் மன வானில் சிறகை விரிக்கும்…
வண்ணப் பறவைகளே…
என் கதையை கேட்டால்…
உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்…
ஆண் : கலகல கலவென துள்ளி குதித்திடும்…
சின்னஞ்சிறு அலையே…
என் நிலையை கேட்டால்…
உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்…
Notes : En Mana Vaanil Song Lyrics in Tamil. This Song from Kasi (2001). Song Lyrics penned by Mu. Metha. என் மன வானில் பாடல் வரிகள்.