Tag Archives: புலமைப்பித்தன்

ஏதோ மயக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்வாணி ஜெயராம்சங்கர் கணேஷ்தங்க கோப்பை

Etho Mayakkam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

பெண் : அன்று தொட்டு நாளும் அந்தி வரும் போகும்…
எனக்கில்லை ராத்திரி…
அந்த காமன் அர்த்த ஜீவன்…
என்னை ஏனிங்கு பகைத்தான்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

BGM

பெண் : கன்னங்கரு வானம் மஞ்சள் நிறம் பூசும்…
அந்தி வரும் போதிலே…
அந்த ஏக்கம் என்னை தாக்கும்…
இளமை தாங்காத கொடுமை…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…

BGM

பெண் : விண்ணில் உண்டு மேகம்…
மண்ணில் இல்லை ஈரம் முகிலுக்கும் தாபமோ…
இன்று மாலை வந்த வேளை…
வருக என்றெண்ணி இருப்பேன்…

பெண் : ஏதோ மயக்கம் ஒன்று…
இதுதான் விரகம் என்று…
நானும் புரிந்துக் கொண்டேன்…
நனைந்தும் கொதித்து நின்றேன்…

பெண் : ஏதோ லாலா லலலா லாலாலாலா…
ம்ஹீம் லாலா லலலா லாலாலாலா…


Notes : Etho Mayakkam Song Lyrics in Tamil. This Song from Thanga Koppai (1984). Song Lyrics penned by Pulamaipithan. ஏதோ மயக்கம் பாடல் வரிகள்.


ஏய் மாமா ஒன்னத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஎங்கிட்ட மோதாதே

Hey Mama Unnathan Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

BGM

பெண் : என் மார்பிலே நீ சாயணும்…
முந்தானையால் நான் மூடணும்…
தாய் போல நான் தாலாட்டணும்…
கண் மூடியே நீ தூங்கணும்…

பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே…
நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன்…

பெண் : மாமா உன் கால் பட்ட…
மண்ணெல்லாம் பொன்னாச்சு…
ஒன்னோட நான் வந்தா…
நெஞ்செல்லாம் பூவாச்சே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

BGM

பெண் : தண்ணீரிலே நீராடினால்…
அங்கேயும் நீ போராடுற…
எம் பாட்டுக்கு நான் பாடினால்…
பின்பாட்டு நீ ஏன் பாடுற…

பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும்…
கையால நீ தொட்டா தேகம் என்னாகும்…
காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே…
ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே…

பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…
தெனம் ராத்திரி நான் படும் பாட்ட…
ஒரு பாட்டா கேளையா…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…

பெண் : ஒரு தேக்குல செஞ்சது போல…
ஒன் தேகம் அம்மாடி…
ஒன் தோளுல சாஞ்சது போல…
ஒரு எண்ணம் ஆத்தாடி…

பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா…
எப்பத்தான் கண்ணாலம் சொன்னா ஆகாதா…


Notes : Hey Mama Unnathan Song Lyrics in Tamil. This Song from Enkitta Mothathe (1990). Song Lyrics penned by Pulamaipithan. ஏய் மாமா ஒன்னத்தான் பாடல் வரிகள்.


தேவமல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநடிகன்

Deva Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

BGM

ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்…
பெண்ணில் தெரிகிறதே…

பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்…
கண்ணில் வருகிறதே…

ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்…
இன்பம் வழிகிறதே…

பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்…
நெஞ்சில் எழுகிறதே…

ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே…
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே…

பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே…
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே…

ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட…
அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

BGM

பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு…
என அன்னக்கிளி வருமே…

ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது…
ஆசை பனி வருமே…

பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என…
அஞ்சும் இடை வருமே…

ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென…
கொஞ்சம் கிளி வருமே…

பெண் : காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்…
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்…

ஆண் : வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்…
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்…

பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ…
இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…


Notes : Deva Malligai Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Pulamaipithan. தேவமல்லிகை பாடல் வரிகள்.


செவ்வந்தி பூக்களில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்உமா ரமணன் & தீபன் சக்ரவர்த்திஇளையராஜாமெல்ல பேசுங்கள்

Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil


பெண் : கூவின பூங்குயில்…
கூவின கோழி…
குருகுகள் இயம்பின…
இயம்பின சங்கம்…
யாவரும் அறிவரியார்…
எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி…
எழுந்தருளாயே…

BGM

பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

பெண் : நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…

பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

BGM

ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்…
வண்டு வந்து இசைக்கும் நாயனம்…

BGM

ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்…
வண்டு வந்து இசைக்கும் நாயனம்…

பெண் : தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து…
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து…
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து…
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து…

ஆண் : காதல் மனம் காண்போம்…
எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்… ஆஅ…

ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

ஆண் : நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…

BGM

பெண் : அந்தி வந்து மலரும் தாமரை…
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை…
அந்தி வந்து மலரும் தாமரை…
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை…

ஆண் : கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி…
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி…
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி…
ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி…

பெண் : நாளை வரும் காலம்…
என்றென்றும் எங்களின் கைகளில்…

ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…

பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ…
ஆரிராரோ ஆராரிராரிராரோ…


Notes : Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil. This Song from Mella Pesungal (1983). Song Lyrics penned by Pulamaipithan. செவ்வந்தி பூக்களில் பாடல் வரிகள்.


தாழம்பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகை கொடுக்கும் கை

Thaazham Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

BGM

ஆண் : நடந்தா காய்ஞ்ச நிலம் செழிக்கும்…
சிரிச்சா கோயில் மணி அடிக்கும்…
கண்ட கண்ணுபடும்…

பெண் : பேசும் போது தாய பார்த்தேன்…
தோளில் தூங்க பிள்ளை ஆனேன்…

ஆண் : நெஞ்சத்திலே… ஏஏஏஏ…
நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…
வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

பெண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

—BGM—

பெண் : இனி நான் கோடி முறை பொறப்பேன்…
உன்னை நான் பார்க்க விழி திறப்பேன்…
இது சத்தியமே…

ஆண் : நீரும் போனா மேகம் ஏது…
நீயும் போனா நானும் ஏது…

பெண் : என் உயிரே… ஏஏஏ…
என் உயிரே நீ இருக்க
உன்னுயிரும் போகுமா…

ஆண் : தாழம்பூவே வாசம் வீசு…
தாயின் தாயே கொஞ்சிப் பேசு…

பெண் : வீடேதும் இல்ல வாசலும் இல்ல…
அன்புக்கு பஞ்சம் இல்ல…
தாலேலோ தாலேலோ…

BGM


Notes : Thaazham Poove Song Lyrics in Tamil. This Song from Kai Kodukkum Kai (1984). Song Lyrics penned by Pulamaipithan. தாழம்பூவே பாடல் வரிகள்.


கல்லுக்குள்ளே வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமனிதனின் மறுபக்கம்

Kallukkulle Vandha Eeram Song Lyrics in Tamil


பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…

BGM

பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…

பெண் : நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…

பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…

BGM

ஆண் : வானத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் அந்த மேகம்…
பூமிக்கு நீரை சிந்தும் சொந்தம் என்னம்மா…
நீ அந்த வானம் இந்த பூமி இங்கு நானே…
நெஞ்சத்தின் தாகம் என்று தீரும் சொல்லம்மா…

பெண் : காலங்கள் செல்ல செல்ல ஆயுள் நின்று போகும்…
ஆனாலும் காதல் என்னும் சொந்தம் என்றும் வாழும்…

பெண் : நீலம் பூத்த கண்கள் ரெண்டும்…
உன்னை வைத்தது கொள்ளட்டும்…
நீயும் நானும் மாலை சூடும்…
காலம் எந்த காலம் இந்த…

பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…

ஆண் : நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணே என்றென்றும்…

பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…

BGM

பெண் : பூவுக்கு தாலி கட்ட போகும் தென்றல் காற்று…
போகட்டும் நீயும் இன்று வாழ்த்து சொல்லி போ…
காதுக்குள் நாளை அந்த மேள சத்தம் கேட்கும்…
கையோடு நீயும் கொஞ்சம் மாலை கட்டி தா…

ஆண் : தாளத்தை தள்ளி வைத்து ராகம் எங்கு போகும்…
பாசத்தை தள்ளி வைத்து ஜீவன் எங்கு வாழும்…

ஆண் : பொன்னில் பாதி பூவில் பாதி…
பெண்ணின் வண்ணம் நான் கண்டேன்…
காதல் வேதம் கண்ணில் ஓதும்…
கண்ணே கட்டி பொன்னே இந்த…

ஆண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…

பெண் : நீயென்ன மாயம் செய்தாய்…
நீருக்குள் தீயை வைத்தாய்…
நீ தந்த காதல் சொந்தம்…
வாழட்டும் கண்ணா என்றென்றும்…

பெண் : கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன…
ஆண் : நெஞ்சுக்குள்ளே அன்பின் பாரம் என்ன…


Notes : Kallukkulle Vandha Eeram Song Lyrics in Tamil. This Song from Manithanin Marupakkam (1986). Song Lyrics penned by Pulamaipithan. கல்லுக்குள்ளே வந்த பாடல் வரிகள்.


வேதம் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகோயில் புறா

Vedham Nee Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…

BGM

ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…

BGM

ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
எதிலும் உந்தன் நாதங்களே…
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…

BGM

ஆண் : அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…
அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…

ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…
தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…

ஆண் : மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே…
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே…

ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என…
உனைத்தினம் நினைத்தது…

BGM

ஆண் : நித்தம் ஒரு புத்தம் புது…
இசைத்தமிழ் வடித்தது…

BGM

ஆண் : ஒருமுறை தரிசனமும் தருக…
இசையில் உனது இதயம் இசையும்…
மனம் குணம் அறிந்தவள்…

BGM

ஆண் : குழலது சரியுது சரியுது…
குறுநகை விரியுது விரியுது…
விழிக்கருணை மழை அதில் நனைய வரும்…
ஒரு மனம் பரவும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…

ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…


Notes : Vedham Nee Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. வேதம் நீ பாடல் வரிகள்.


சங்கீதமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாகோயில் புறா

Sangeethamey Song Lyrics in Tamil


BGM

பெண் : சங்கீதமே… சங்கீதமே என் தெய்வமே…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…

பெண் : சங்கீதமே என் தெய்வமே…

BGM

பெண் : மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்…
மனதினில் ஆயிரம் இன்பம்…
மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்…
மனதினில் ஆயிரம் இன்பம்…

பெண் : பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக…
எனக்கின்று ஏனிந்த துன்பம்…
எனக்கின்று ஏனிந்த துன்பம்…

பெண் : அந்த தமிழிசை கேட்டு…
இள நெஞ்சில் எழுந்தது பாட்டு…
அந்த கவிதைகள் எங்கே…
என் ஆசை கனவுகள் எங்கே…

பெண் : அது வருமோ சுகம் தருமோ…
இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ…
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது…
ஆகாததென ஏன் ஆகியது…

BGM

பெண் : நிலவிலும் எனதுடல் அனுதினம் முழுவதும்…
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது…

பெண் : இனிய சங்கீதமே என் தெய்வமே…

BGM

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்…
தவித்தது பெண் மனம் ஒன்று…

BGM

பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்…
தவித்தது பெண் மனம் ஒன்று…

BGM

பெண் : நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு…
கிடைத்தது நிம்மதி இன்று…
கிடைத்தது நிம்மதி இன்று…

பெண் : வெள்ளம் தமிழிசை வெள்ளம்…
அதில் துள்ளும் உருகிய உள்ளம்…

BGM

பெண் : கல்லும் கனியென ஆகும்…
ஒரு முள்ளும் மலரென மாறும்…
உனை மறவேன் தினம் வருவேன்…
இசை மழையில் நனைவேன்…
கவி புனைவேன் இனி உலகினில்…

பெண் : ஆனந்தலய நாதங்களுடன்…
நீ தந்த இசை பேரின்ப சுகம்…

BGM

பெண் : ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது…
ஒன்றான உள்ளங்கள் என்றென்றும் சந்திக்க…
அழைக்கும் சங்கீதமே… என் தெய்வமே…

பெண் : நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…

பெண் : சங்கீதமே… சங்கீதமே… சங்கீதமே…


Notes : Sangeethamey Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. சங்கீதமே பாடல் வரிகள்.


எனக்கென ஒருவரும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜாஇளையராஜாதாலாட்டு

Enakena Oruvarum Song Lyrics in Tamil


BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…

BGM

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

ஆண் : பூமிதான்டா நம்ம தாயி…
வீதிதான்டா நம்ம வீடு…
இது போதும் போதும் கண்ணே நீ தூங்கு…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…
உனக்கென நான் இருப்பேன்…
உனக்கென வாழ்வதில் உண்டாகும் சந்தோஷம்…
பெரிதென வாழ்ந்திருப்பேன்…

BGM

ஆண் : பாற மேல மஞ்சள் நாத்த யாரு நட்டு வச்சது…
பாவம் இந்த பச்ச மண்ணு என்ன தப்பு செஞ்சது…
தொட்டில் போட்டு ஆட்டும் கையே விட்டு விட்டு போவதா…
தொண்டை கெட்ட அன்னக்குஞ்சு கத்தி கத்தி சாவதா…

ஆண் : அடி அம்மா அடி அம்மா…
நீ பேசும் தெய்வமா…
இது பாவம் பெரும் பாவம்…
இத தெய்வம் செய்யுமா…
இது நியாயம்தானா நீயே சொல்லம்மா…

ஆண் : எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

BGM

பெண் : பள்ளமுள்ள பூமி எல்லாம் ஆத்து வெள்ளம் பாயுது…
பாசமுள்ள கண்ணில் எல்லாம் அன்னை முகம் தோணுது…
ஆறு காய்ஞ்சி போன பின்னும் பூமி இங்கு வாழுது…
அன்பு காய்ஞ்சி போயிருந்தா வாழ்க்கை என்னஆவது…

பெண் : அனுதாபம் அபிமானம் அது இன்னும் சாகலே…
அது போல ஒரு தெய்வம் அத யாரும் பார்க்கலே…
நல்ல காலம் வந்து சேரும் வாடாதே…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…

பெண் : பூமி எங்கும் நம்ம வீடு…
கண்ணில் என்ன நீரின் கோடு…
இனி நாளை காலம் என்றும் நம்மோடு…

பெண் : நமக்கென இருக்கிற ஆகாயம் பூலோகம்…
அது எங்கும் போகவில்லே…
நதியுண்டு கடலுண்டு எல்லாமும் நம் சொந்தம்…
கலங்கிட தேவையில்லே…


Notes : Enakena Oruvarum Song Lyrics in Tamil. This Song from Thalattu (1993). Song Lyrics penned by Pulamaipiththan. எனக்கென ஒருவரும் பாடல் வரிகள்.


அமுதே தமிழே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்பி. சுசீலா & உமா ரமணன்இளையராஜாகோயில் புறா

Amuthe Tamizhe Song Lyrics in Tamil


பெண் : சா… சா…
ரீ… ரீ…
கா… கா…
பா… பா…
சரிக… சரிக…

பெண் : சரிசரி கபகரி சரிகா…
சரிசரி கபகரி சரிகா…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா…
சுகம் பல தரும் தமிழ்ப்பா…

பெண் : சுவையோடு கவிதைகள் தா…
சுவையோடு கவிதைகள் தா…

பெண் : தமிழே நாளும் நீ பாடு…
தமிழே நாளும் நீ பாடு…

ஆண் : தமிழே நாளும் நீ பாடு…

பெண் : தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

BGM

பெண் : தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்…
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்…

பெண் : தமிழிசையே… தனியிசையே…

பெண் : தரணியிலே… முதலிசையே…

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்…
அதில் உலகம் மறந்து போகும்…

பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்…
அதில் உலகம் மறந்து போகும்…

பெண் : பூங்குயிலே என்னோடு…
தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

BGM

பெண் : பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்…
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்…

பெண் : கலை பலவும்… பயில வரும்…
அறிவு வளம்… பெருமை தரும்…

பெண் : என் கனவும் நினைவும் இசையே…
இசையிருந்தால் மரணமேது…

பெண் : என் கனவும் நினைவும் இசையே…
இசையிருந்தால் மரணமேது…

பெண் : என் மனதில் தேன் பாய…
தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…

பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா…
தமிழ்ப்பா…

பெண் : சுவையோடு கவிதைகள் தா…
கவிதைகள் தா…

பெண் : தமிழே நாளும் நீ பாடு…

பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…


Notes : Amuthe Tamizhe Song Lyrics in Tamil. This Song from Koyil PuraA (1981). Song Lyrics penned by Pulamaipithan. அமுதே தமிழே பாடல் வரிகள்.