பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். ஜானகி | இளையராஜா | கோயில் புறா |
Sangeethamey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : சங்கீதமே… சங்கீதமே என் தெய்வமே…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…
பெண் : சங்கீதமே என் தெய்வமே…
—BGM—
பெண் : மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்…
மனதினில் ஆயிரம் இன்பம்…
மாலையில் தீபங்கள் மணி தரும் நாதங்கள்…
மனதினில் ஆயிரம் இன்பம்…
பெண் : பார்த்தது பொய்யாக பழங்கதை என்றாக…
எனக்கின்று ஏனிந்த துன்பம்…
எனக்கின்று ஏனிந்த துன்பம்…
பெண் : அந்த தமிழிசை கேட்டு…
இள நெஞ்சில் எழுந்தது பாட்டு…
அந்த கவிதைகள் எங்கே…
என் ஆசை கனவுகள் எங்கே…
பெண் : அது வருமோ சுகம் தருமோ…
இனி ஒரு முறை உயிரும் துணை வருமோ…
இனி அதுவரை ஆதாரமென நான் தேடியது…
ஆகாததென ஏன் ஆகியது…
—BGM—
பெண் : நிலவிலும் எனதுடல் அனுதினம் முழுவதும்…
தண்ணீரில் ஆறாது கண்ணீரும் மாறாது…
பெண் : இனிய சங்கீதமே என் தெய்வமே…
—BGM—
பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்…
தவித்தது பெண் மனம் ஒன்று…
—BGM—
பெண் : ஏழிசை கேட்காமல் எழில் முகம் பார்க்காமல்…
தவித்தது பெண் மனம் ஒன்று…
—BGM—
பெண் : நாயனம் காதோடு தரிசனம் கண்ணோடு…
கிடைத்தது நிம்மதி இன்று…
கிடைத்தது நிம்மதி இன்று…
பெண் : வெள்ளம் தமிழிசை வெள்ளம்…
அதில் துள்ளும் உருகிய உள்ளம்…
—BGM—
பெண் : கல்லும் கனியென ஆகும்…
ஒரு முள்ளும் மலரென மாறும்…
உனை மறவேன் தினம் வருவேன்…
இசை மழையில் நனைவேன்…
கவி புனைவேன் இனி உலகினில்…
பெண் : ஆனந்தலய நாதங்களுடன்…
நீ தந்த இசை பேரின்ப சுகம்…
—BGM—
பெண் : ஒரு முறை மறுமுறை பெறுவதில் தவறேது…
ஒன்றான உள்ளங்கள் என்றென்றும் சந்திக்க…
அழைக்கும் சங்கீதமே… என் தெய்வமே…
பெண் : நிம்மதி வானம் விடிந்திடும் நேரம்…
ஓடி வந்தேன் உன்னை நான் பாட…
பெண் : சங்கீதமே… சங்கீதமே… சங்கீதமே…
Notes : Sangeethamey Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. சங்கீதமே பாடல் வரிகள்.