தேவமல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநடிகன்

Deva Malligai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

BGM

ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்…
பெண்ணில் தெரிகிறதே…

பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்…
கண்ணில் வருகிறதே…

ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்…
இன்பம் வழிகிறதே…

பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்…
நெஞ்சில் எழுகிறதே…

ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே…
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே…

பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே…
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே…

ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட…
அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

BGM

பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு…
என அன்னக்கிளி வருமே…

ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது…
ஆசை பனி வருமே…

பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என…
அஞ்சும் இடை வருமே…

ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென…
கொஞ்சம் கிளி வருமே…

பெண் : காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்…
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்…

ஆண் : வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்…
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்…

பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ…
இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…

பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…

ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…

பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…

ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…


Notes : Deva Malligai Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Pulamaipithan. தேவமல்லிகை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top