பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | நடிகன் |
Deva Malligai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…
பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…
ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
—BGM—
ஆண் : தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்…
பெண்ணில் தெரிகிறதே…
பெண் : திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம்…
கண்ணில் வருகிறதே…
ஆண் : அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம்…
இன்பம் வழிகிறதே…
பெண் : அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம்…
நெஞ்சில் எழுகிறதே…
ஆண் : ஆடைக்கட்டி ஆட வந்த வானவில்லே…
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே…
பெண் : காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே…
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே…
ஆண் : இனி நானும் நீயும் நாளும் கூட…
அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…
ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…
பெண் : இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
—BGM—
பெண் : அள்ளிக் கொடுத்ததை சொல்லிக் கொடு…
என அன்னக்கிளி வருமே…
ஆண் : அந்திக் கதையிது சிந்தைக்கினியது…
ஆசை பனி வருமே…
பெண் : எட்டிப்பிடி எனைக் கட்டிப்பிடி என…
அஞ்சும் இடை வருமே…
ஆண் : என்றும் புதுசுகம் பொங்கும் வழியென…
கொஞ்சம் கிளி வருமே…
பெண் : காமன் அம்பை கண்ணிரெண்டில் பூட்டுகின்றாய்…
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்…
ஆண் : வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்…
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்…
பெண் : என் ராஜா சூடும் ரோஜா பூவோ…
இம்மானின் மானின் ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
ஆண் : நீ காதல் சித்திரமா…
என் கண்ணின் சொப்பனமா…
பெண் : இது மோக மந்திரமா…
எனை ஏய்க்கும் தந்திரமா…
ஆண் : அடி மானே மானே ஆசை தேனே…
வா என் விழிகளின் வழியே…
பெண் : பூவில் ஆடிடும் காற்றே காற்றே…
சிந்து செந்தமிழ் பாட்டே…
ஆண் : தேவமல்லிகை பூவே பூவே…
தேனில் ஊறிடும் தீவே…
Notes : Deva Malligai Song Lyrics in Tamil. This Song from Nadigan (1990). Song Lyrics penned by Pulamaipithan. தேவமல்லிகை பாடல் வரிகள்.