Tag Archives: கண்ணதாசன்

தேடுகின்ற கண்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்அம்பிலிஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thedivarum Kannukalil Song Lyrics in Tamil


BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : கண்ணனும் நீ கணபதி நீ…
கந்தனும் நீயே…
எங்கள் காவல் தெய்வம் பரமசிவன்…
விஷ்ணுவும் நீயே…

பெண் : அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே…
என்மேல் அன்பு வைத்து நதி வரைக்கும் ஓடிவந்தாயே…
ஐயப்பா சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : தந்தையுண்டு அன்னையுண்டு
எந்தன் மனையிலே…
ஒரு தம்பி மட்டும் பிறக்க வேண்டும்
உந்தன் வடிவிலே…

பெண் : அன்பு கொண்டு தந்தைக்கவன்…
செய்யும் பணியிலே…
நாங்கள் ஆண்டு தோறும் வந்து நிற்போம்…
உந்தன் நிழலிலே…
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM

பெண் : தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…

BGM

பெண் : வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…

BGM

பெண் : ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி…

BGM


Notes : Thedivarum Kannukalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. தேடுகின்ற கண்களுக்குள் பாடல் வரிகள்.


சபரி மலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Sabarimalaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : பாலெனச் சொல்லுவது உடலாகும்…
அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்…
வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும்…
இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : வாசமுடைய பன்னீர் அபிஷேகம்…
எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம்…
இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம்…
அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…

BGM

ஆண் : உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து…
அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு…
உருகும் விபூதியினால் அபிஷேகம்…
ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்…

ஆண் : ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…
இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…
ஐயப்பா நீ தான் மெய்யப்பா…

ஆண் : சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

ஆண் : ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…
ஐயப்பா நீதான் மெய்யப்பா…


Notes : Sabarimalaiyil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. சபரி மலையில் பாடல் வரிகள்.


அன்பு வடிவாக

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி சுசீலாஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Anbu Vadivaaga Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…

BGM

ஆண் : பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே…
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே…
பிள்ளை ஒன்று வேண்டி நின்றேன் சிவபெருமானே…
நீ பிள்ளை வடிவாக வந்தாய் சிவபெருமானே…
கள்ளமின்றி பாடுபட்டேன் சிவபெருமானே…
நீ கை நிறைய அள்ளித் தந்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…

ஆண் : அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…

BGM

பெண் : கோகுல பாலகனே கண்ண பெருமானே…
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே…
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே…
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே…

பெண் : கோகுல பாலகனே கண்ண பெருமானே…
எங்கள் கோவிந்த நாயகனே கண்ண பெருமானே…
கோபியர் லீலை கொண்டாய் கண்ண பெருமானே…
எங்கள் குடும்பத்தை வாழ வைத்தாய் கண்ண பெருமானே…

BGM

பெண் : ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே…
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே…
ஒன்றுக்கு இரண்டு தந்தாய் கண்ண பெருமானே…
அதில் உன் முகம் காண வைத்தாய் கண்ண பெருமானே…
நன்றி என்று சொல்லுகின்றோம் கண்ண பெருமானே…
உன்னை நாள் முழுதும் பக்தி செய்வோம் கண்ண பெருமானே…

ஆண் : சிவபெருமானே…
பெண் : கண்ண பெருமானே…
ஆண் : சிவபெருமானே…
பெண் : கண்ண பெருமானே…

ஆண் & பெண் : ஹரி ஓம்… ஹரி ஓம்…
ஹரி ஓம்… ஹரி ஓம்…


Notes : Anbu Vadivaaga Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. அன்பு வடிவாக பாடல் வரிகள்.


திருப்பாற் கடலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே. ஜே. யேசுதாஸ்ஜி. தேவராஜன்சுவாமி ஜயப்பன்

Thiruppaarkadalil Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…

ஆண் : இரணியன் அகந்தை அழித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே…
ஸ்ரீமந்நாராயணா… ஆ…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே…
அறியாயோ நீயே…
அவள் கொடுமையை ஒழிக்க மறந்துவிட்டாயோ…
ஸ்ரீமந் நாராயணா…

ஆண் : தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ…
மறந்தாயோ நீயே…
உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே…
வருவாயோ நீயே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : தோளிலந்த சாரங்கம் எடுத்து…
வரவேண்டும் நீயே…
கணை தொடுத்திட வேண்டும்…
அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே…

ஆண் : அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து…
வாராய் திருமாலே…
உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து…
காப்பாய் பெருமாளே…

ஆண் : திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…

BGM

ஆண் : ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று…
வீறுடன் வாருங்கள்…
நாராயணனெனும் தலைவனின் துணையால்…
போர்க்களம் வாருங்கள்…

ஆண் : வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்…
வேல் கொண்டு வாருங்கள்…
இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம்…
தேவர்கள் வாருங்கள்…

ஆண் : ஸ்ரீமந்நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா…
வருவாய் திருமாலே…
துணை தருவாய் பெருமாளே…

BGM


Notes : Thiruppaarkadalil Song Lyrics in Tamil. This Song from Swami Ayyappan (1975). Song Lyrics penned by Kannadasan. திருப்பாற் கடலில் பாடல் வரிகள்.


தானே பாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Thane Paduthe Song Lyrics in Tamil


BGM

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : உன் ராகம் இன்று என் தாளத்தோடு…
பூபாளம்தான் பாடுதே…
பூ மீது வண்டு தேன் ஊற கண்டு…
இனிய சுகமும் பெறுதே…

பெண் : கண்ணாலே என்னோடு நீ பேச…
எந்நாளும் உன்னோடு நான் வாழ…
காலம் வரும் நேரம் வரும்…
பூ ஒன்று தேனை தரும் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

BGM

பெண் : ஆனந்த வானம் ஏன் இந்த நாணம்…
என்றென்னைதான் கேட்க்குதே…
காணாத இன்பம் தானே வந்து…
கவிதை கோடி தருதே…

பெண் : பொன் மானே பூமாலைதான் சூட…
வந்தாளோ உன்னோடுதான் வாழ…
மாலை வரும் வேலை வரும்…
என் பாடல் ஜீவன் பெரும் தினம் தினம்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…
தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…

பெண் : காதல் என்பதா…
கருணை என்பதா…
நாணம் கொண்டேன் இதயமும்…

பெண் : தானே பாடுதே…
மனம் எதையோ நாடுதே…


Notes : Thane Paduthe Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. தானே பாடுதே பாடல் வரிகள்.


விழிகளில் கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராவி.எஸ். நரசிம்மன்கண் சிமிட்டும் நேரம்

Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

BGM

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

ஆண் : இதயம் இங்கே குளிர்கிறதே…
பெண் : இனிமையிலே நனைகிறதோ…
ஆண் : உல்லாசமே…
பெண் : வந்தால் என்ன…
ஆண் : என்னாளும் என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : உறவுக்கு ஒன்றான காலம் இது…
ஆண் : உரிமைக்கு நான் தந்த பாலம் இது…

பெண் : கண்ணில் ஒரு மின்னல்…
ஆண் : புது கவிதைகள் படிக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

BGM

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

பெண் : மனம் எதிலோ அலைகிறதே…
ஆண் : மௌனத்திலே சுகம் பெறவோ…
பெண் : சொல்லாமலே…
ஆண் : சொன்னால் என்ன…
பெண் : பொன்னான என் வாழ்வில்நன்னாள் இதே…

ஆண் : ஒன்றுக்குள் ஒன்றான தேகம் இது…
பெண் : உயிருக்குள் நான் கொண்ட பாகம் இது…

ஆண் : இன்பம் இனி என்றும்…
புது சுரங்களும் பிறக்கட்டும்…

ஆண் : விழிகளில் கோடி அபிநயம்…
பெண் : மனம் பறிமாறும் அவசரம்…

ஆண் : இளங்குயில் பாடுது ராகம்…
பெண் : இசைத்திட தூண்டுது மோகம்…

ஆண் : உனதிரு விழி…
பெண் : அதில் நவரசம்…
ஆண் : மலர் புதுமுகம்…
பெண் : குளிர் பௌர்ணமி தினம் பரவசம்…

ஆண் & பெண் : விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…


Notes : Vizhigalil Kodi Abinayam Song Lyrics in Tamil. This Song from Kan Simittum Neram (1988). Song Lyrics penned by Kannadasan. விழிகளில் கோடி பாடல் வரிகள்.


பச்சை மாமலைபோல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்திருமால் பெருமை

Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : பச்சை மாமலைபோல் மேனி…
பவள வாய் கமலச் செங்கண்…
அச்சுதா அமரர்றே…
ஆயர் தம் கொழுந்தே என்னும்…

ஆண் : இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
இச்சுவை தவிர யான் போய்…
இந்திர லோகம் ஆளும்…
அச்சுவை பெறினும் வேண்டேன்…
அரங்கமா நகர் உளானே…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : ஊரிலேன் காணி இல்லை…
உறவு மற்று ஒருவர் இல்லை…
பாரில் நின் பாதம் மூலம்…
பற்றிலேன் பரம மூர்த்தி…

ஆண் : காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…
காரொளி வண்ணனே…
கண்ணனே கதறுகின்றேன்…

ஆண் : ஆருளர் கலைஞன் அம்மா…
அரங்கமா நகர் உளானே…


Notes : Pachchai Maa Malaipol Song Lyrics in Tamil. This Song from Thirumal Perumai (1968). Song Lyrics penned by Kannadasan. பச்சை மாமலைபோல் பாடல் வரிகள்.


கல்யாணமே ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்லலிதா

Kalyaaname Song Lyrics in Tamil


பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று…
தாரை வார்க்கும்வரை…
பெண்ணின் வீடு காலகாலம்…
தலைவன் அழைக்கும் வரை…
அந்த தலைவன் அழைக்கும் வரை…

பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…
பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…

பெண் : உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

BGM

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே…
அன்னை மொழி சொன்னது…
அன்னை மொழி சொன்னது…

பெண் : இந்த விளக்கம் எதற்காக சொன்னேன்…
இன்று ஏதாவது…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : நேற்று கதையை நேற்றோடு மறப்போம்…
இன்று முதலிரவு இன்று முதலிரவு…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…


Notes : Kalyaaname Song Lyrics in Tamil. This Song from Lalitha (1976). Song Lyrics penned by Kannadasan. கல்யாணமே ஒரு பாடல் வரிகள்.


நீ வருவாய் என

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கல்யாணி மேனன்எம்.எஸ். விஸ்வநாதன்சுஜாதா

Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை…
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை…
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…

பெண் : இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு…
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு…
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…

பெண் : குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…

பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு…
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு…
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM


Notes : Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil. This Song from Sujatha (1980). Song Lyrics penned by Kannadasan. நீ வருவாய் என பாடல் வரிகள்.


வான் மேகங்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகிஇளையராஜாபுதிய வார்ப்புகள்

Vaan Meghangale Song Lyrics in Tamil


BGM

பெண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை…
வான் மேகங்களே…

BGM

பெண் : பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா…
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா…
பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா…
கூ குக்குகூ… குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்…

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…

BGM

ஆண் : தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா…
தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா…

ஆண் : தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ…
கண்ணே வா அம்மம்மா…
நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்…

பெண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…

BGM

பெண் : பள்ளியில் பாடம் சொல்லி…
கேட்க நான் ஆசைக் கொண்டேன்…

ஆண் : பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே…

பெண் : டான் டன்டன்டான்…
சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ…

ஆண் : வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்…
பெண் : நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை…
வான் மேகங்களே…


Notes : Vaan Meghangale Song Lyrics in Tamil. This Song from Puthiya Vaarpugal (1979). Song Lyrics penned by Kannadasan. வான் மேகங்களே பாடல் வரிகள்.