பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | சித்தி |
Kalamithu Kalamithu Song Lyrics in Tamil
பெண் : பெண்ணாகப் பிறந்தவர்க்கு…
கண்ணுறக்கம் இரண்டு முறை…
பிறப்பில் ஒரு தூக்கம்…
இறப்பில் மறு தூக்கம்…
பெண் : இப்போது விட்டுவிட்டால்…
எப்போதும் தூக்கம் இல்லை…
என்னரிய கண்மணியே…
கண்ணுறங்கு கண்ணுறங்கு…
பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ…
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ…
ஆரி ராரிரிரோ…
—BGM—
பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…
—BGM—
பெண் : நாலு வயதான பின்னே…
பள்ளி விளையாடல்…
நாலு வயதான பின்னே…
பள்ளி விளையாடல்…
நாள் முழுதும் பாடச் சொல்லும்…
தெள்ளுத் தமிழ் பாடல்…
பெண் : எண்ணிரண்டு வயது வந்தால்…
கண்ணுறக்கம் இல்லையடி…
எண்ணிரண்டு வயது வந்தால்…
கண்ணுறக்கம் இல்லையடி…
ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி…
தீராத தொல்லையடி…
பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…
—BGM—
பெண் : மாறும் கன்னி மனம் மாறும்…
கண்ணன் முகம் தேடும்…
ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது…
பெண் : தான் நினைத்த காதலனை…
சேர வரும் போது…
தான் நினைத்த காதலனை…
சேர வரும் போது…
தந்தை அதை மறுத்து விட்டால்…
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது…
பெண் : மாலையிட்ட தலைவன் வந்து…
சேலை தொடும் போது…
மங்கையரின் தேன் நிலவில்…
கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது…
பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…
—BGM—
பெண் : ஐயிரண்டு திங்களிலும்…
பிள்ளை பெறும் போதும்…
அன்னை என்று வந்த பின்னும்…
கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும்…
பெண் : கை நடுங்கி கண் மறைந்து…
காலம் வந்து தேடும்…
கை நடுங்கி கண் மறைந்து…
காலம் வந்து தேடும்…
காணாத தூக்கம் எல்லாம்…
தானாக சேரும் தானாக சேரும்…
பெண் : காலமிது காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவற விட்டால்…
தூக்கமில்லை மகளே…
தூக்கமில்லை மகளே…
பெண் : ஆரிராரிரி ஆரிர ராரோ…
ஆரி ராரிராரோ…
ஆரிராரிரி ஆரிரி ஆரோ…
ஆரி ராரிரிரோ ஆரி ராரிரிரோ…
Notes : Kalamithu Kalamithu Song Lyrics in Tamil. This Song from Chitthi (1996). Song Lyrics penned by Kannadasan. காலமிது காலமிது பாடல் வரிகள்.