Tag Archives: ஆர்.வி.உதயகுமார்

முகம் என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிவித்யாசாகர்சுபாஷ்

Mugam Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

பெண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

ஆண் : விடை என்ன விளக்கம் என்ன…
விரல் பின்ன நாணம் என்ன…

பெண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

பெண் : முகம் என்ன மோகம் என்ன…
ஆண் : விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

BGM

பெண் : விரல்கள் தீண்ட மெழுகாய் ஆனேன்…
விலகி இருந்தால் என்ன…

ஆண் : உறவை தேடும் உயிரை நானும்…
உருகி கிடந்தால் என்ன…

பெண் : இது ஆசை பேச்சா என்ன…
நான் வாங்கும் மூச்சா என்ன…

ஆண் : இள வேனில் காற்றா என்ன…
இவள் தேனின் ஊற்றா என்ன…

பெண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

பெண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

BGM

ஆண் : மார்பில் நீந்தும் நிலவே உன்னை…
வானம் மறந்தால் என்ன…

பெண் : இதய கதவை திறந்தேன் மெல்ல…
நானும் கரைந்தால் என்ன…

ஆண் : வரும் கால வரலாற்றிலே…
இனி நாமும் கலந்தால் என்ன…

பெண் : இதை மீறும் காதல் இல்லை…
என பாடம் உரைத்தால் என்ன…

ஆண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

பெண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…

ஆண் : சுகம் என்ன யோகம் என்ன…
மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன…

பெண் : விடை என்ன விளக்கம் என்ன…
விரல் பின்ன நாணம் என்ன…

ஆண் : இனி என்ன கேள்வி என்ன…
என்னை தந்தேன் வேறு என்ன…

ஆண் : முகம் என்ன மோகம் என்ன…
விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன…


Notes : Mugam Enna Song Lyrics in Tamil. This Song from Subash (1966). Song Lyrics penned by R. V. Udayakumar. முகம் என்ன பாடல் வரிகள்.


சின்ன கிளி வண்ண கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன கவுண்டர்

Chinnakili Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…

பெண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…

பெண் : யாரு யாரு அது யாரு…
அவர் பேரு பேரு என்ன பேரு…
யாரு யாரு அது யாரு…
அவர் பேரு பேரு என்ன பேரு…

பெண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…

BGM

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே…

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே…

ஆண் : யாரு யாரு அது யாரு…
அவ பேரு என்ன அத கூறு…
யாரு யாரு அது யாரு…
அவ பேரு என்ன அத கூறு…

ஆண் : சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே…


Notes : Chinnakili Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. சின்ன கிளி வண்ண கிளி பாடல் வரிகள்.


கூண்டுக்குள்ள என்ன வச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசின்ன கவுண்டர்

Koondukulla Enna Vachu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

ஆண் : அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

BGM

பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா…
ஏதோ நடக்குமின்னு பேச்சு…

ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு…
வீணா கதை முடிஞ்சு போச்சு…

பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம்…
மாமன் பேரை சொல்லி பேசுது…

ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு…
ஊரும் சேந்து என்னை ஏசுது…

பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி…
நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

பெண் : கூண்டுக்குள்ள உன்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே…

ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்…
அடி மானே உன்னை தினம் பாடும்…

பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்…
இந்த மாமன் கதையை தினம் பேசும்…

ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில…
சாயம் இன்னும் விட்டு போகல…

பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில…
நேர்ந்து முடிச்ச கடன் தீரல…

ஆண் : மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

பெண் : கூண்டுக்குள்ள உன்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…

பெண் : என் மாமா மாமா உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…

ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…


Notes : Koondukulla Enna Vachu Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. கூண்டுக்குள்ள என்ன வச்சு பாடல் வரிகள்.


இன்னும் என்னை என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசிங்காரவேலன்

Innum Ennai Song Lyrics in Tamil


BGM

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
இன்பம் இன்பம் சிங்கார லீலா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

BGM

ஆண் : பாடி வரும் வான் மதியே…
பார்வைகளின் பூம்பனியே…
தேவ சுக தேன் கனியே…
மோக பரி பூரணியே…

பெண் : பூவோடுதான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு…

ஆண் : புது புது விடுகதை தொடதொட தொடர்கிறதே…

BGM

பெண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…
என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

பெண் : உன்னை சேர்ந்தாள் பாவை…
இன்னும் அங்கு ஏதோ தேவை…
சொல்லு சொல்லு சிங்கார வேலா…

BGM

பெண் : தேன் கவிதை தூது விடும் நாயகனே மாயவனே…
நூல் இடையை ஏங்க விடும் வான் அமுத சாகரனே…

ஆண் : நீதானே நான் பாடும் சுகமான ஆகாசவாணி…
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்கார தேனீ…

பெண் : தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திட வா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே…

பெண் : ஆஹா… என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே…

ஆண் : கைகள் தானாய் கோர்தாய்…
கட்டி முத்தம் தேனாய் வார்தாய்…
பெண் : சொல்லு சொல்லு சிங்காரவேலா…

ஆண் : இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்…
அன்பே அன்பே அன்பே அன்பே…

பெண் : என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய்…
முன்பே முன்பே அன்பே…


Notes : Innum Ennai Song Lyrics in Tamil. This Song from Singaravelan (1992). Song Lyrics penned by RV Udayakumar. இன்னும் என்னை என்ன பாடல் வரிகள்.


ஊர் ஊரா போகும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்சந்தியாஇளையராஜாகாக்கைச் சிறகினிலே

Oor Oora Song Lyrics in Tamil


BGM

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

BGM

பெண் : ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு…
வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு…
காரணம் கேளு அது பாடுது பேரு…
தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு…

பெண் : உன்னுடன் தானா இல்லை…
நான் மட்டும் தானா…
வேதம் கேட்கும் காதுக்குள்ளே…
ஏழை நாதம் கேட்காதா…

பெண் : மாதம் தேதி நாட்கள் எல்லாம்…
இன்று நியாயம் கூறாதா…
காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே…
அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…

BGM

பெண் : தோளில் கருகாமணி விம்மி ஆடுது…
தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது…

பெண் : நான் படும் பாடு அதை யார் அறிவாரோ…
நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது…
நீ போகும் பாதை அதுதான் தேடுது…
நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா…

பெண் : காப்புக் கட்டி கரகம் ஆட…
அம்மன் அருளைத் தருவாளா…
சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே…
காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…

பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…


Notes : Oor Oora Song Lyrics in Tamil. This Song from Kakkai Siraginilae (2000). Song Lyrics penned by R. V. Udayakumar. ஊர் ஊரா போகும் பாடல் வரிகள்.


நெனவு தெரிஞ்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாகாக்கைச் சிறகினிலே

Nenavu Therinja Song Lyrics in Tamil


ஆண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…

BGM

ஆண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

ஆண் : அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…
அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…

ஆண் : கண்ணே கண்ணம்மா…
நீ கோயில் குயிலம்மா…
நீ கோயில் குயிலம்மா…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

BGM

பெண் : தாய் நீ சேய் போல் தாலாட்டினாய் என்னை
பாராட்டினாய் என்னை…
தவமாய்க் கிடந்தேன் சீராட்டினாய் என்னை…
நான் பாடுவேன் உன்னை…

பெண் : இந்தக் குயில் சந்தோஷமாய்…
கண் உறங்கத்தானே…
பட்ட துயர் ஒண்ணா ரெண்டா…
நீயும் எந்தன் தாயே…

பெண் : பாடும் பாட்டு லாலி…
பாசம் என்னும் வேலி…
பாடும் பாட்டு லாலி…
பாசம் என்னும் வேலி…

பெண் : உந்தன் மடி தாயின் மடிதானே…
அன்பில் தினம் தந்தேன் எனை நானே…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

ஆண் : அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…
அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…

ஆண் : கண்ணே கண்ணம்மா…
நீ கோயில் குயிலம்மா…
நீ கோயில் குயிலம்மா…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

BGM

ஆண் : தீபம் எரிய திரியாகியே…
நானும் ஒளி காட்டுவேன் நாளும்…
உயிரை கரைத்தே உறவாகியே…
நானும் வளமாக்குவேன் உன்னை…

ஆண் : பொன் நகையும் வெட்கம் கொள்ளும்…
புன்னகையை காமி…
மண்ணில் உன்னை தத்தெடுத்தான்…
இந்த வெள்ளைச்சாமி…

ஆண் : நிலவில்லாமல் வானா…
நீ இல்லாமல் நானா…
நிலவில்லாமல் வானா…
நீ இல்லாமல் நானா…

ஆண் : வேதம் எங்கும் உந்தன் மொழிதானே…
வாழ்க்கை எல்லாம் இன்னும் ஒளிதானே…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…

ஆண் : அன்பை பொழிந்து வரும் கங்கையம்மா…
பெண் : நனா நன நானன்னன்னா…
ஆண் : நீ மஞ்சள் நிலவுக்கொரு தங்கையம்மா…
பெண் : நானா நன நானன்னன்னா…

ஆண் : கண்ணே கண்ணம்மா…
நீ கோயில் குயிலம்மா…
நீ கோயில் குயிலம்மா…

பெண் : நெனவு தெரிஞ்ச நாள் முதலா…
நீதான் எனக்கு சாமி…
கனவில் கூட நீதானே…
கண்ணில் தெரியும் சாமி…


Notes : Nenavu Therinja Song Lyrics in Tamil. This Song from Kakkai Siraginilae (2000). Song Lyrics penned by R. V. Udayakumar. நெனவு தெரிஞ்ச பாடல் வரிகள்.


முத்து மணி மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி. உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஇளையராஜாசின்ன கவுண்டர்

Muthumani Malai Song Lyrics in Tamil


BGM

ஆண் : முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட…

ஆண் : உள்ளத்தில நீதானே…
உத்தமி உன் பேர்தானே…
ஒரு நந்தவனப் பூதானே…
புது சந்தனமும் நீதானே…

ஆண் : முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…

BGM

பெண் : கொலுசுதான் மெளனமாகுமா…
மனசுதான் பேசுமா…

ஆண் : மேகம்தான் நிலவை மூடுமா…
மவுசு தான் குறையுமா…

பெண் : நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு…
காசிப்பட்டு தந்த ராசாவே…

ஆண் : வாக்கப்பட்டு வந்த வாசமலரே…
வண்ணம் கலையாத ரோசாவே…

பெண் : தாழம்பூவுல வீசும் காத்துல…
வாசம் தேடி மாமா வா…

ஆண் : முத்து மணி மாலை…
பெண் : என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…

ஆண் : வெட்கத்துல சேலை…
பெண் : கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட…

BGM

ஆண் : காலிலே போட்ட மிஞ்சிதான்…
காதுல பேசுதே…

பெண் : கழுத்துல போட்ட தாலிதான்…
காவியம் பாடுதே…

ஆண் : நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்…
பொட்டுவச்சதாரு நான்தானே…

பெண் : அத்திமரப்பூவும் அச்சப்படுமா…
பக்கத்துணையாரு நீதானே…

ஆண் : ஆசை பேச்சுல பாதி மூச்சுல…
லேசா தேகம் சூடேற…

பெண் : முத்து மணிமாலை…
என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட…

பெண் : உள்ளத்தில நீதானே…
உத்தமனும் நீதானே…
இது நந்தவனப் பூதானே…
புது சந்தனமும் நீதானே…

ஆண் : ஒரு நந்தவனப் பூதானே…
புது சந்தனமும் நீதானே…


Notes : Muthumani Malai Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. முத்து மணி மாலை பாடல் வரிகள்.


ஆத்து மேட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபொன்னுமணி

Aathu Mettula Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

பெண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…
கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

பெண் : அட ஆத்து மேட்டுல…

ஆண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

BGM

ஆண் : வெட்டி கதையில வேகம் கொறையல…
வீண் பேச்சி ஏன் மானே…
தட்டி கேட்டுக்க கிட்ட ஆளில்ல…
நீ ஒன்னு தா மானே…

BGM

பெண் : கட்டாந்தரையில கட்டில் இருக்குது…
காத்தாட வா மாமா…
கட்டி புடிச்சிக்கோ வட்டம் அடிச்சிக்கோ…
கேப்பாரு யார் மாமா…

ஆண் : வெத்தலைய போட்டு போட்டு…
முத்த கரை நீ போட…

பெண் : நித்தம் அத பாத்து பாத்து…
பித்ததுல நீ ஆட…

ஆண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…

பெண் : கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

பெண் : அட ஆத்து மேட்டுல…

ஆண் : ஹே ஹோய்… ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

BGM

பெண் : காட்டு குயிலொன்னு கானம் படிக்குது…
கேட்டோடி வா மாமா…
ஏட்டில் இருக்கிற பாடம் புடிக்கல…
நீ பேச வா மாமா…

BGM

ஆண் : மாமன் வெரப்புல மீசை முறுக்குனா…
தாங்காது உன் தேகம்…
ஏதோ கணக்குல நானும் தவிக்கிறேன்…
ஏன் இன்னும் சந்தேகம்…

பெண் : வெட்கம் என்ன விட்டு விட்டு…
ரொம்ப தூரம் போகாதா…

ஆண் : பச்சரிசி அச்சு வெள்ளம்…
ரெண்டும் ஒன்னு சேராதா…

பெண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…

ஆண் : கட்டி வச்ச கட்ட வந்து…
இச்சி இச்சி கிஸ் ஆச்சி…

ஆண் : ஆத்து மேட்டுல…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

ஆண் : பட்டி தொட்டி பக்கம் எல்லாம்…
லவ்வு லவ்வு லவ் ஆச்சி…
கட்டி வச்ச கட்ட வந்து…
ஹ்ம்ம் ம்ம் கிஸ் ஆச்சி…

ஆண் : அட ஆத்து மேட்டுல… ஹோய்…

பெண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…

ஆண் : ஆத்து மேட்டுல முத்தம் ஒன்னு கொடுத்தா…
மொத்த கடன் தீராது…
காத்து வாக்குல கண்ணடிச்சி கவுத்தா…
கெட்ட மனம் தேறாது…


Notes : Aathu Mettula Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. ஆத்து மேட்டுல பாடல் வரிகள்.


நெஞ்சுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபொன்னுமணி

Nenjukkule Innarendru Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

BGM

பெண் : ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே…
ஆண் : ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா…

பெண் : ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே…
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோஹோ ஹோய்…

ஆண் : தூக்கம் கெட்டு கெட்டு…
துடிக்கும் முல்லை மொட்டு…
தேக்கு மர தேகம் தொட்டு…
தேடி வந்து தாளம் தட்டு…

பெண் : என் தாளம் மாறாதைய்யா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

பெண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் சிந்தாமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

BGM

ஆண் : காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே…
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓ ஹோய் ஹோய்…

ஆண் : காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே…
பெண் : ஹாஹாஹா ஹாஹா ஹாஹா… ஆஆ ஆஆ…

பெண் : மாமன் உன்னை கண்டு…
ஏங்கும் மல்லி சண்டு…
தோளில் என்னை அள்ளிக்கொண்டு…
தூங்க வைப்பாய் அன்பே என்று…

ஆண் : என் கண்ணில் நீ தானம்மா…
உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா…
பெண் : அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…
பெண் : உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே…

ஆண் : உண்ணாமல் உறங்காமல்…
உன்னால் தவிக்கும் பொன்னுமணி…

பெண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா…
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா…


Notes : Nenjukkule Innarendru Song Lyrics in Tamil. This Song from Ponnumani (1993). Song Lyrics penned by R. V. Udayakumar. நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள்.


Paadi Parantha Song Lyrics in Tamil

பாடிப் பறந்த கிளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிழக்கு வாசல்

Paadi Parantha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

BGM

ஆண் : ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…
ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி…
அந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி…

ஆண் : கண்ட கனவு அது கானா ஆச்சு…
கண்ணு முழிச்சா அது வாழாது…
வட்ட நிலவு அது மேலே போச்சு…
கட்டியிழுத்தா அது வாராது…
வீணாச தந்தவரு யாரு யாரு…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

BGM

ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…

ஆண் : சொல்லெடுத்து வந்த கிளி…
நெஞ்செடுத்துப் போனதடி…
நெல்லறுக்கும் சோலை ஒன்னு…
நெல்லரிச்சிப் போனதடி…

ஆண் : கல்லிலடிச்சா அது காயம் காயம்…
சொல்லிலடிச்சா அது ஆறாது…
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்…
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது…
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…

ஆண் : ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே…
கேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே…

ஆண் : பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…
பாடிப் பறந்த கிளி…
பாத மறந்ததடி பூமானே…


Notes : Paadi Parantha Song Lyrics in Tamil. This Song from Kizhakku Vaasal (1990). Song Lyrics penned by R. V. Udayakumar. பாடிப் பறந்த கிளி பாடல் வரிகள்.