பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி.உதயகுமார் | சந்தியா | இளையராஜா | காக்கைச் சிறகினிலே |
Oor Oora Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
—BGM—
பெண் : ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு…
வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு…
காரணம் கேளு அது பாடுது பேரு…
தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு…
பெண் : உன்னுடன் தானா இல்லை…
நான் மட்டும் தானா…
வேதம் கேட்கும் காதுக்குள்ளே…
ஏழை நாதம் கேட்காதா…
பெண் : மாதம் தேதி நாட்கள் எல்லாம்…
இன்று நியாயம் கூறாதா…
காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே…
அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே…
பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
—BGM—
பெண் : தோளில் கருகாமணி விம்மி ஆடுது…
தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது…
பெண் : நான் படும் பாடு அதை யார் அறிவாரோ…
நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது…
நீ போகும் பாதை அதுதான் தேடுது…
நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா…
பெண் : காப்புக் கட்டி கரகம் ஆட…
அம்மன் அருளைத் தருவாளா…
சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே…
காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே…
பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
பெண் : செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்…
உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
என் ராசாவே உன்னை விட்டு வேறெங்கும் போகாது…
பெண் : ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு…
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு…
Notes : Oor Oora Song Lyrics in Tamil. This Song from Kakkai Siraginilae (2000). Song Lyrics penned by R. V. Udayakumar. ஊர் ஊரா போகும் பாடல் வரிகள்.