Tag Archives: வாலி

மாமனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ்.சித்ரா & மனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Maamanukkum Song Lyrics in Tamil


பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…

பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…
பாக்கறதென்ன மாமா… ஹோய்…
நான் கேக்கறதென்னதாம்மா…

பெண் : ஹாமாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…
காதலுக்கும் கச்சேரிக்கும்… ஹேய்…
வந்திருச்சி வேளை நமக்கு…

BGM

ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன…
ஆள் புடிக்க வெட்கம் விட்டு…
ஆளா பறந்து நிக்கிற…
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…

பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு…
ஆசைகளை பொங்க விட்டு…
பாடாபடுத்தி வைக்கிற…
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற…

ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்…
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்…

பெண் : பின்னால வருகிற இளமாது…
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…

ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட…
தொட்டாட நான் முட்டாளும் இல்லை…

பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்…
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்…

ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா…
ஏண்டி உனக்குத்தான்…
இப்ப என் மேல கிறுக்குத்தான்…

பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் என்ன இருக்கு…

ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு…

பெண் : பாக்கறதென்ன மாமா…
நான் கேக்கறதென்னதாம்மா…

ஆண் : பாக்கறதென்ன பாமா… ஹேய்…
நீ கேக்கறதென்ன போம்மா…

ஆண் : மாமனுக்கும் மச்சானுக்கும்… ஹேய்…
வித்தியாசம் ரொம்ப இருக்கு…
காதலுக்கும் கன்றாவிக்கும்… ஹேய்…
வெவ்வேறு அர்த்தம் இருக்கு… ஹேய்… ஆஅ…


Notes : Maamanukkum Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. மாமனுக்கும் பாடல் வரிகள்.


தப்பு தண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜாவேத் அலி & பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாஆதலால் காதல் செய்வீர்

Thappu Thanda Vayasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தப்பு தண்டா பன்னும் வயசு…
ஒப்புக்கொண்டா என்ன தவறு…
வயசுக்கு ஏத்த விளையாட்டு…

ஆண் : தொட்டா மோகம் விட்டாப் போகும்…
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்…
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…

ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும்…
உன் மெய்யில் இருக்கிறது…
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்…
இன்னும் பசிக்கிறதே…
உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென…
என்னை உடுத்திவிடு அன்பே…

பெண் : தப்பு தண்டா பன்னும் வயசு…
ஒப்புக்கொண்டா என்ன தவறு…
வயசுக்கு ஏத்த விளையாட்டு…

பெண் : தொட்டா மோகம் விட்டா போகும்…
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்…
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…

BGM

ஆண் : உதடு கேட்குது உனது மேனியில்…
ஈர ஓவியம் தீட்ட…
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்…

பெண் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்…
உன் எச்சில் கவிதைகள் ஊர…
எழுது காதலாய் எனக்கு சம்மதம்தான்…

ஆண் : என் தோழியே தோல்கள் இருக்கு நீ சாய…
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும் வியர்வைப் பாய… ஹோ…

BGM

ஆண் : உனது நூலிழை எனது நூலகம்…
எடுத்து வாசிப்பேன் அன்பே…
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ…

பெண் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்…
புறத்தில் வைத்திடு அன்பே…
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே…

ஆண் : நான் வாசிக்க நூறு இரவு போதாது…
என் செய்வது மீண்டும் படிக்கத்தூண்டும் மாது…
ஹோஹோ ஹோஹோ…

BGM

ஆண் : என் கண்ணில் எழுந்திடும் ரேகை முழுதும்…
உன் மெய்யில் இருக்கிறது…
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்…
இன்னும் பசிக்கிறதே…
உன் மின்னல் இடைகொடு வண்ண உடையென…
என்னை உடுத்திவிடு அன்பே…


Notes : Thappu Thanda Vayasu Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Vaali. தப்பு தண்டா பாடல் வரிகள்.


அரிதாரத்த

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜா & எஸ்.ஜானகிஇளையராஜாஅவதாரம்

Arithaaratha Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம்… அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
பொன்னம்மா பொன்னமாவ்…
பெண் : என்ன குப்புசாமி னை னைனுட்டு…

ஆண் : என்ன பொன்னம்மா…
நீயாவது வாத்தியாரு கிட்ட சொல்லி…
என்னை சேர்த்துக்க சொல்ல கூடாதா…

பெண் : எதுல சேர்க்க சொல்ல…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
பெண் : கூத்துலையா…
ஆண் : இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…
அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…
நம்ம வாத்தியாரு என்ன சொல்லுவாரோ…
இந்த ஏழை என்னை ஏத்துக்கொள்ளுவாரோ…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசைபட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : ஹான்…

பெண் : ஹேய்… குப்பண்ணா குப்பண்ணா…
ஆண் : ஆமா…
பெண் : ரொம்ப தப்பண்ணா தப்பண்ணா…
ஆண் : சரியா போச்சு போ…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…
இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : போ பொன்னம்மா…
ஒரு நல்ல விஷயத்தை பத்தி பேசும்போது…
இப்படி சொல்லிக்கிட்டு…
த பாரு நீயே என்ன பத்தி…
வாத்தியார்கிட்ட சொல்லலைன்னா…
வேற யாரு சொல்லுவாங்க…

ஆண் : நீ இப்ப அப்படி தான் பேசுவ…
அப்புறம் நான் அரிதாரம் பூசிகிட்டு…
கெந்தல கட்டிக்கிட்டு அப்படி மேடையில ஏறினா…

ஆண் : ஹா… என் பாட்ட எடுத்து உட்டா… ஹாஆஆ…
ஊரு சனம் எல்லாம் மெய் மறக்கும்…
அது உசுரோட போய் கலக்கும்…

பெண் : பாட்டுன்னு நினைப்பதெல்லாம்…
இங்கு பாட்டாக இருப்பதில்லை…
ஆண் : அது என் பாட்டு இல்ல…
பெண் : அது லேசான விஷயம் இல்ல…
ஆண் : அது யாரு இல்லைனா…

ஆண் : அதுக்காகதான் இசை அவதாரமாய்…
நான் பொறந்தேன்னு பூலோகம் பாராட்டுமே…

பெண் : ராகூத்துல வரும் சாமி எல்லாம்…
நெச சாமின்னு பாக்காது ஊர் சனமே…

ஆண் : அட காசுக்கா பேருக்கா ஆச நான் பட்டது…
வேற எதும் சொல்ல வரல…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…
ஆண் : அப்போ ரெக்கமெண்டு பண்ணு…

BGM

பெண் : கூத்தாடி பொழப்பு எல்லாம்…
அந்த காத்தாடி படும் பாடு…
அடி ஆத்தாடி வெட்க கேடு…

ஆண் : ஹம்ம்… எல்லார்க்கும் உள்ள சுகம்…
அதில் எனக்கும் ஓர் பங்கு உண்டு…
அது எப்போதும் இங்கு உண்டு…

பெண் : கூத்தாடிக்கு சுகம் தூக்கத்தில்தான்…
உன் வாழ்நாள தூக்கத்தில் ஏன் போக்குற…

ஆண் : நம்ம முன்னோர்களின் கலை முன்னால் வைத்தால்…
சுகம் உண்டென்று அறியாமல் நீ பேசுற…

பெண் : ஊரெல்லாம் வேஷமே போடுது ஆடுது…
நீயும் ஏன்யா வேஷம் போடணும்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
நான் அடவு கட்டி ஆட்டம் போட ஆசை…

பெண் : அரிதாரத்தின் மேலே என்ன ஆசை…
நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : என் பொன்னம்மா பொன்னம்மா…
கொஞ்சம் ரெக்கமெண்டு பண்ணம்மா…

பெண் : இப்ப சிட்டு போல சுத்தும் சுகம் போதும்…
ஒரு கட்டுக்குள்ள சிக்கி கொள்ள வேணாம்…

ஆண் : அந்த சாமி நல்ல வரம் கொடுக்க போனா…
சின்ன பூசாரியே தட்டி விட வேணாம்…

ஆண் : அரிதாரத்த பூசி கொள்ள ஆசை…
பெண் : நீயும் ஆசை பட்டா நானும் என்ன பேச…

ஆண் : அப்படி ஒத்துக்க…


Notes : Arithaaratha Song Lyrics in Tamil. This Song from Avatharam (1995). Song Lyrics penned by Vaali. அரிதாரத்த பாடல் வரிகள்.


சாமியாரா போனவனுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஇளையராஜாஇளையராஜாஎதிர்காற்று

Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

BGM

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல… ஆ…
சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…

ஆண் : வாழ நெனைக்கும் மனுஷனுக்கு…
சாவு ஒரு கடைசியல்ல…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : சாக நெனச்சா அது கையில இல்லை…
இந்த வாழ்க்கையில எத்தனை தொல்லை…
குழு : ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஆத்தங்கரை ஓரம்…
நீ முதலில் குளிக்கும் தண்ணி…
அடுத்த மொற போனா…
அது வேற புதுத் தண்ணி…

ஆண் : பொறந்து பொறந்து சாகும்…
அது செத்து செத்து பொழைக்கும்…
தெனமும் தெனமும் நடந்தும்…
இது மறந்து மறந்து போகும்…
இந்த ஒலகத்திலே வாழ்வதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

BGM

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…

ஆண் : என்னத் திருத்த ஒன்னத் திருத்த…
எத்தனை பேர் பொறந்து வந்தான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : தத்துவங்கள எழுதி வச்சு…
அட விட்டு விட்டு ஓடி மறஞ்சான்…
குழு : ஆஅ ஹா ஹா ஹா…

ஆண் : முழிச்சிருக்கும் வாழ்க்க…
ஒரு கனவப் போல தம்பி…
இதில் தூக்கத்திலே சொர்க்கம்…
அது எங்க வரும் அம்பி…

ஆண் : உருட்டி உருட்டிப் பாரு…
இது நாய் கையில் தேங்கா…
உழுது பயிரப் போடு…
இது பாறை நெலத்துப் பூங்கா…
அதில் உழுவதிலே அழுவதிலே அர்த்தம் இல்லடா…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…

ஆண் : ஆஹா… இக்கரைக்குத்தான் அந்த அக்கரை பச்சை…
அட அக்கரைக்கு இக்கரை பச்சை…
நாம இங்க இருந்தா அது அங்க இழுக்கும்…
அட எங்கேயுமே ஏதும் இல்லடா…

குழு : ஹே ஹே…
ஆண் : சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

ஆண் : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
குழு : ஹேய் ஹேய்…

குழு : ஹே ஹே… சாமியாரா போனவனுக்கு…
சம்சார நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹேய்…

குழு : சம்சாரியா வாழ்பவனுக்கு…
சன்னியாச நெனப்பெதுக்கு…
ஆண் : ஹேய் ஹோய் ஹோய்…


Notes : Saamiyaara Ponavanukku Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. சாமியாரா போனவனுக்கு பாடல் வரிகள்.


அட புதியது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன்இளையராஜாதேவர் மகன்

Ada Puthiyathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு…
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை…
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

குழு : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

BGM

ஆண் : ஹேய்… கூடாம நம்மத்தான் கூரு கட்டி…
சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி…
ஆத்தாடி அண்ணன்தான் தோளு தட்டி…
அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி…

ஆண் : உள்ளத் துணிவு உள்ளவரு…
ஊருக்குதவும் நம்மவரு…

ஆண் : வாத்தியத்த தொட்டுத்தான்…
குழு : கொட்டுத்தான் கொட்டுத்தான்…
ஆண் : ஓசையெல்லாம் எட்டெட்டும்…
குழு : திக்கெட்டும் எட்டெட்டும்…

ஆண் : அடி அம்மாடி எல்லோரும்…
ஆட்டம் போடும் நாள்தானோ…

ஆண் : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு…
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை…
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

குழு : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…
ஆண் : ஹே ஹே…

குழு : அற்புதமா அதிசயமா பூத்திருக்கு…
முத்து நகை ரத்தினமா கெடைச்சிருக்கு…
நிச்சயமா நம் பெருமைகாத்திருக்கும்…
பத்திரமா சக்தியவ துணையிருப்பா…

BGM

ஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி…
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி…
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி…
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி…

ஆண் : மண்ணின் பெருமை காத்திடணும்…
அண்ணன் மொழியை கேட்டிடணும்…

ஆண் : ஓர் இனத்து மக்கள் தான்…
குழு : நாமெல்லாம் கண்ணம்மா…
ஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்…
குழு : எல்லோரும் பொன்னம்மா…

ஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு…
பாட்டு பாடும் நாள்தானோ

ஆண் : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

ஆண் : ஒண்ணாச்சு பாரு இதுவரை ரெண்டான ஊரு…
ஹேய்… அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை…
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா…

குழு : அட புதியது பிறந்தது…
பழையது ஒதுங்குது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமே…

குழு : அட பைத்தியம் தெளிஞ்சது…
வைத்தியம் பளிச்சது…
ஹர ஹர சிவ சிவ பழைய பரமசிவமேஏய்…


Notes : Ada Puthiyathu Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. அட புதியது பாடல் வரிகள்.


உன்ன மாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஉத்தம ராசா

Unna Mathi Kaattama Song Lyrics in Tamil


BGM

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…

பெண் : உன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்…
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்…
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்…
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்…

பெண் : உன்ன மாத்தி…

ஆண் : அப்டியா… என்ன மாத்திக் காட்டத்தான்…
ஒன்னால ஆகாது மானே…
அடி ஆத்தி ரொம்பத்தான் ஆட்டாதே…
என் கிட்டதானே…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

ஆண் : என்ன மாத்திக் காட்டத்தான்…
ஒன்னால ஆகாது மானே…

BGM

பெண் : ஸ்டாரு டிவியிலே…
உன்ன ஸ்டாராக நான் பாக்கணும்…
சாரு யாருன்னுதான்…
இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்…

ஆண் : சொப்பனத்து டிவியில ஸ்டாரா பாரு…
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா…

பெண் : குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆட்டம் போட்டு…
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா…

ஆண் : வெண்ண வெக்க அடி நானா கொக்கு…
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு…
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்கமாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்கமாட்டேன்…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…

BGM

ஆண் : வேட்டி உடுத்துறப்போ…
ஒரு மண் வாசம் இருக்குதடி…
கோடி பணம் இருந்தும்…
நான் மாறாத மனுசனடி…

பெண் : பட்டிக்காடு உன்ன எந்த பொண்ணு பாப்பா…
பட்டணம் நீ வந்தா ஏற்காது…

ஆண் : பட்டிக்காடு இல்லையின்னா ஏது சோறு…
அங்கதான் ஏர் ஓட்ட ஆள் ஏது…

பெண் : போயா நீதான் சுத்த வேப்பம் எண்ண…
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண…

ஆண் : எப்பவுமே இப்படித்தான் நானே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…
மேல ஏத்திப் பாக்காம…
மச்சானே பின் வாங்க மாட்டேன்…

ஆண் : ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே… ஹான்…
என் வேட்டி சேலைக்கு தோக்காதே… அஹா…
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே… ஹேய்…
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே…

பெண் : உன்ன மாத்திக் காட்டாம…
மச்சானே நான் தூங்க மாட்டேன்…


Notes : Unna Mathi Kaattama Song Lyrics in Tamil. This Song from Uthama Raasa (1993). Song Lyrics penned by Vaali. உன்ன மாத்தி பாடல் வரிகள்.


மாரிச்சம் யாதோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமுகமது அஸ்லாம், கிருஷ்ணா & கொரோலிசாஏ.ஆர்.ரகுமான்சில்லுனு ஒரு காதல்

Maaricham Song Lyrics in Tamil


BGM

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

பெண் : இணையாதோ… உடையாதோ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…
சூதோ வாதோ…

BGM

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : இணையாதோ… ஓஓஓஓ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : கௌதம் கௌதம்…
கௌதம் ஏய் கௌதம்…

BGM

ஆண் : யார் இது…
உன் பூர்வம் எது…
என்ன தீ இது…
புகை முடி நின்றது…

ஆண் : என் யாக்கை உயிர்…
வெளி நின்றதோ…
மின்னல் ஓர் ஆயிரம்…
உயிர் கொண்டதோ…
தேஜோ மாயம்…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : மாரிச்சம் யாதோ…
இந்த மாதோ…
காதல் தீதோ…

பெண் : இணையாதோ… ஓஓஓஓ…
உடையாதோ… ஓஓஓஓ…
பணியாதோ… ஓஓஓஓ…

பெண் : தேஜோ தேஜோ மாயம்…
தேஜோ மாயம்…
ஆண் : யாக மாயம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : ஜென்மாந்திரம்…

பெண் : தேஜோ மாயம்…
ஆண் : ஷாகுந்தலம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : மாயாசனம்…

பெண் : தேஜோ மாயம்…
ஆண் : பிரம்மாஸ்திரம்…
பெண் : தேஜோ மாயம்…
ஆண் : பிரம்மாஸ்திரம்…
பெண் : மாயம் மாயம்…


Notes : Maaricham Song Lyrics in Tamil. This Song from Sillunu Oru Kadhal (2006). Song Lyrics penned by Vaali. மாரிச்சம் யாதோ பாடல் வரிகள்.


காதல் கீதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், ரஞ்சித் கோவிந்த், ரேஷ்மி & பிரேம்ஜி அமரன்ஸ்ரீகாந்த் தேவாசரவணா

Kaadhal Keedhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு…
ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு…
நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
குழு : யூ காட் டு லைவ் பார் பிரெண்ட்ஷிப்…
ஆண் : நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவறவிட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

BGM

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

BGM

ஆண் : நானும் நீயும் இளைய நதி…
குழு : ஆல் ரைட்…
ஆண் : நமக்கு ஏது அரசு விதி…
குழு : தட்ஸ் ரைட்…

ஆண் : போகலாமே நினைத்தபடி…
பூக்கள் கூட்டம் அணைத்த படி…

ஆண் : வேலி போட்டாலும் கூட காற்று…
உள்ளே நிக்காதுடா…
வலை வீசி பாத்தாலும் கூட விண்மீன்…
வலையில் சிக்காதுடா…

ஆண் : சுற்றும் மேகத்தின் வேகத்தை எண்ணியே…
குழு : எண்ணியே…
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்தான்…
வானத்தில் இல்லையே…
குழு : வானத்தில் இல்லையே…

ஆண் : வாலிபத்தின் வேகம் என்பது…
குழு : வாலிபத்தின் வேகம் என்பது…
ஆண் : அர்பஸ்சை கூட வென்று நிற்பது…

BGM

ஆண் : என்றும் இல்லை மன கவலை…
ஏது இங்க பண கவலை…
அந்த கவலை அப்பனுக்கு…
படிக்க வைக்கும் சுப்பனுக்கு…

ஆண் : மார்ச்சு போனாலும் கூட இங்கே…
மீண்டும் எக்ஸாம் வரும்…
நம் இளமை போனாலும் நண்பா இங்கே…
மீண்டும் எப்போ வரும்…

ஆண் : அட இன்றைக்கே ஒன்றாக சேரலாம்…
குழு : ஒன்றாக சேரலாம்…
ஆண் : இங்க நாளைக்கே நம் பாதை மாறலாம்…
குழு : பாதை பாதை பாதை பாதை பாதை…

ஆண் : காதல் என்றும் மாற கூடாது…
குழு : கூடாது…
ஆண் : அது கை மாறி போக கூடாது…
கை மாறி போக கூடாது…

ஆண் : காதல் கீதல் பண்ணி பாருடா…
நீ பண்ணா விட்டா காலேஜ்க்கு கெட்ட பேருடா…
காதலிக்க ஜொல்லு விடுடா…
நீ காதலிச்ச காதலிக்கு சொல்லி விடுடா…

ஆண் : பட்டம் விட்ட எத்தனையோ பட்டாம் பூச்சிதான்…
நம்ம கிட்ட வந்து காட்டுதடா கண்ணாமூச்சிதான்…

ஆண் : அட ஒன்னு ரெண்டு விட்டு பாரு ஏரோ லெட்டரு…
அத ஏத்துக்காத எந்த பொண்ணு நம்ம சிஸ்டரு…

ஆண் : காதல் இல்லாமலும் பிரண்ட்ஷிப் வாழுமடா…
நல்ல நட்பு தெய்வம் என்று…
வொர்க்ஷிப் பண்ணுங்கடா…
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப் மேன்…

பெண் : காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் ஆகணும்…

ஆண் : காதல் காதல் எக்ஸாமுந்தான்…
எழுதி நாங்க பாசாகனும்…
அதுல பாசதான் அதுல பாசதான்…
அதுல அதுல பாசதான் தவற விட்டா…
ஏன் தேவதாஸ் தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்…


Notes : Kaadhal Keedhal Song Lyrics in Tamil. This Song from Saravana (2006). Song Lyrics penned by Vaali. காதல் கீதல் பாடல் வரிகள்.


மதுரக்காரன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாதேவேந்திரன்ஆண்களை நம்பாதே

Madurakaaran Song Lyrics in Tamil


BGM

பெண் : மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…

ஆண் : மதுரக்காரன்தான்டி வாயேண்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…

குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்…

ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு…
உறுமி மேளம் அடிப்போம்…

பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்…
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்…

ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட…
சிட்டாட்டம் சிறகடிக்க…
பெண் : பரிசம் வைக்கும்…

ஆண் : மதுரக்காரன்தான்டி…
பெண் : ஹாங்…
ஆண் : வாயேன்டி…
பெண் : ஹாஹாங்…
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
பெண் : ஹோய்… மதுரக்காரன்தானா…

BGM

பெண் : செந்தூரப் பொடித் தூவும் அங்கந்தான்…
சிவக்காதா சிலிர்க்காதா…

ஆண் : முத்தாரம் பதிக்காத கன்னந்தான்…
மினுக்காதா மயக்காதா…

பெண் : நெனச்சதும்தான் கெடச்சிடுமா…
வெதச்சதும்தான் மொளச்சிடுமா…

ஆண் : கண்டால் காதல் மயக்கம்…
தன்னால் ஏறும் பொன் மானே…

பெண் : மதுரக்காரன்தானா…
குழு : தீவானா ஆவானா…
பெண் : மனசு மாறுவானா…
ஆண் : நான் மதுரக்காரன்தான்டி…

BGM

ஆண் : வந்தாளே வடநாட்டு பொண்ணுதான்…
குழு : ஹோய்… எதுக்காக அதுக்காக…
பெண் : ஓஒ… முந்தான மூடும் வெட்கத்தால்…
குழு : சிரிப்பாலே எரித்தாளே…

ஆண் : அடிக்கரும்பா இனிக்கிறியே…
அணைச்சிடத்தான் தடுக்கிறியே…

பெண் : விட்டாப் போதும் மெதுவா…
கெட்டுப் போகும் பூமேனி…

பெண் : மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…

ஆண் : பரிசம் வைக்கும் மதுரக்காரன்தான்டி…
பெண் : ஹாங்…
ஆண் : வாயேன்டி…
பெண் : ஹாஹாங்…
ஆண் : நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி..

குழு : கும்மாளம் ஹோய் கொண்டாட்டாட்டம்…

ஆண் : பருவ பாட்டு படிப்போம் படிச்சிக்கிட்டு…
உறுமி மேளம் அடிப்போம்…

பெண் : அடிக்கடி விழியை காட்டி நடிப்போம்…
இளைய நெஞ்சை வலையை வீசிப் பிடிப்போம்…

ஆண் : சித்தாட கொத்தாக முன்னாடி சரிஞ்சிட…
சிட்டாட்டம் சிறகடிக்க…
பெண் : பரிசம் வைக்கும்…

ஆண் : மதுரக்காரன்தான்டி வாயேன்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
அடடடா மதுரக்காரன்தான்டி…

BGM


Notes : Madurakaaran Song Lyrics in Tamil. This Song from Aankalai Nambathey (1987). Song Lyrics penned by Vaali. மதுரக்காரன் பாடல் வரிகள்.


போற்றிப் பாடடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.கே.எஸ்.கலைவாணன் & மனோஇளையராஜாதேவர் மகன்

Potri Paadadi Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

BGM

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : மத்தவங்க கண்ணு படும்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்…
மத்தவங்க கண்ணு படும்…
அந்த கதை இப்ப உள்ள…
சந்ததிங்க கேட்க வேணும்…

ஆண் : நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை…
மானம் இழந்தாலே வாழ தெரியாதே…
பெரிசல்லாம் சொன்னாங்க…
சொன்னபடி நின்னாங்க…
குணத்தால் மனத்தால் கலைமான் ஆனாங்க…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…

BGM

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள…
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…
இன்னாருன்னு கண்டு கொள்ள…
ஏடெடுத்து எழுதி சொல்ல…
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல…

ஆண் : முக்குலத்தோர் கல்யானந்தேன்…
முத்து முத்து கம்பலந்தேன்…
எக்குலமும் வாழ்த்து சொல்லும்…
எங்களுக்கு எக்காளம்தேன்…

ஆண் : அழகான சரிஜோடி…
ஆணைமேல அம்பாரி…
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான்… ஹோய்…
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான்… ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே…


Notes : Potri Paadadi Penne Song Lyrics in Tamil. This Song from Thevar Magan (1992). Song Lyrics penned by Vaali. போற்றிப் பாடடி பாடல் வரிகள்.