Tag Archives: யுகபாரதி

Adada Adada Song Lyrics in Tamil

அடடா அடடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரீராம் பார்த்தசாரதி & ஸ்ரேயா கோஷல்டி. இமான்வீர சிவாஜி

Adada Adada Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…
அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே…
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே…

ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன்…
பிறவியின் பெறும் பயனே…

BGM

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

BGM

ஆண் : காலையும் மாலையும்…
கைகளை கோர்த்து திரிவோம்…
பேசியே பொழுதை கழிப்போம்…
புன்னகை மடியில் படுப்போம்…

பெண் : பாதி நீ பாதி நான்…
கூடலில் மீதி அறிவோம்…
தோளிலே சரிந்தே நடப்போம்…
தூங்கவும் மறவே மறப்போம்…

ஆண் : கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம்…
வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம்…

பெண் : நொடியும் விலகாமல்…
முடிவே தெரியாமல் விரும்புவோம்…

BGM

ஆண் : அடடா அடடா உனை போல் தேவதையே… ஹே…
இதுநாள் வரை என் இமைகள் காணலையே…

பெண் : ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே…
பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே…

ஆண் & பெண் : என் அன்பே நீ எந்தன்…
பிறவியின் பெறும் பயனே…

BGM


Notes : Adada Adada Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Yugabharathi. அடடா அடடா பாடல் வரிகள்.


தடக்கு தடக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்ஆதி

Thadakku Thadakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : தடக்கு தடக்கு என…
அடிக்க அடிக்க மழை…
இனிக்க இனிக்க உயிர் கேட்குது பாட்டு…

ஆண் : சொடக்கு சொடக்கு என…
தடுக்கி தடுக்கி விழ…
வெடிக்கும் வெடிக்கும் இசை தாளங்கள் போட்டு…

ஆண் : மலரோ நனையுது…
மனமோ குளிருது…
உலகோ கறையுது…
சுகமோ பெருகுது…
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பேசிட…
தகிட தகிட தகிட தகிட தம்…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

பெண் : இன்னும் கிட்ட கிட்ட கிட்ட…
கிட்ட வா மழையே…
என்னை தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு போ மழையே…

ஆண் : நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே…
பெண் : நீ காதல் கொண்டு வா துளி தூரயிலே…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச…
பெண் : நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

பெண் : இன்னும் கிட்ட கிட்ட கிட்ட…
கிட்ட வா மழையே…
என்னை தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு போ மழையே…

BGM

ஆண் : தோளை தொட்டு தூறல் மொட்டு…
சின்ன சின்ன ஆசை சொல்லுதே…

பெண் : தேகம் எங்கும் ஈரம் சொட்ட…
வெட்கம் வந்து ஊஞ்சலிட்டதே…

ஆண் : தத்தி தை தை தை…
வித்தை செய் செய் செய்…
முத்தம் வை வை வை முகிலே…

பெண் : அள்ளும் கை கை கை…
அன்பை மெய் மெய் மெய்…
என்னை மொய் மொய் மொய் தமிழே…

ஆண் : அழகிய துளி…
அதிசய துளி…
தொட தொட பரவசமே…

BGM

பெண் : என்னை கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

BGM

பெண் : வாசல் வந்து வாரித் தந்த…
வள்ளல் என்று பாடிச்செல்லவா…

ஆண் : மூடும் கண்ணை மோதும் உன்னை…
பிள்ளை என்று ஏந்திக்கொள்ளவா…

பெண் : என்னை நீ மீட்ட…
உன்னை நான் தூற்ற…
செல்லம் ஆவாயா துளியே…

ஆண் : வெள்ளை தீ போன்ற…
வெட்க பூ போலே…
என்னை சூழ்ந்தாயோ கிளியே…

பெண் : அழகிய துளி…
அதிசய துளி…
தொட தொட பரவசமே…

BGM

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச கொஞ்ச…
கொஞ்ச வா மழையே…
நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச கெஞ்ச…
கெஞ்ச தா மழையே…

பெண் : இன்னும் கிட்ட கிட்ட கிட்ட…
கிட்ட வா மழையே…
என்னை தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு போ மழையே…

ஆண் : நீ தோழி அல்லவா தொடும் வேளையிலே…
பெண் : நீ காதல் கொண்டு வா துளி தூரயிலே…

ஆண் : என்னை கொஞ்ச கொஞ்ச…
பெண் : நெஞ்சம் கெஞ்ச கெஞ்ச…


Notes : Thadakku Thadakku Song Lyrics in Tamil. This Song from Aadhi (2006). Song Lyrics penned by Yugabharathi. தடக்கு தடக்கு பாடல் வரிகள்.


அடி ராங்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசந்தோஷ் ஹரிஹரன்டி. இமான்சாட்டை

Adi Raangi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…
அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…

ஆண் : உறங்காம கிடக்கேனே…
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச…
தவறேதும் புரியாம…
நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச…

ஆண் : அய்யோ பாடா படுத்துறியே…
பாயா சுருட்டுறியே…

BGM

ஆண் : என்னானதோ ஏதானதோ ஒன்னும் புரியாமலே…
அல்லாடுறேன் உன்னால நான் சொல்ல தெரியாமலே…
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா…
அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா…

ஆண் : அழகாலே நிதம் நீயே…
என்ன கட்டி வச்சு அடிக்கிறியே…
என்ன ஓடா உடைக்கிறியே…
காடா கொளுத்துறியே…

ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…

BGM

ஆண் : காப்பி தண்ணி போல என்ன…
கண்ணு ரெண்டும் ஆத்துதே…
மூடி வச்ச ஆசை எல்லாம்…
பொத்துகிட்டு ஊத்துதே…

ஆண் : மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற…
வெட்டி பய என்ன கூட புத்தகமா மாத்துற…
உறி போல குறி பாத்து…
என்ன சில்லு சில்லா உடைக்கிறியே…

ஆண் : என்ன நாரா கிழிக்கிறியே…
நல்லா குழப்புறியே…

ஆண் : அடி ராங்கி என் ராங்கி ராங்கி…
நீ போற என் உசுர வாங்கி…

ஆண் : உறங்காம கிடக்கேனே…
நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச…
தவறேதும் புரியாம…
நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச…

ஆண் : தானா நானானே நானே நானே…
தானா நானானே நானே நானே…


Notes : Adi Raangi Song Lyrics in Tamil. This Song from Saattai (2012). Song Lyrics penned by Yugabharathi. அடி ராங்கி பாடல் வரிகள்.


செவக்காட்டு சீமையெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஆர்.குரு அய்யாதுரைதிபு நின்னன் தாமஸ்நெஞ்சுக்கு நீதி

Sevakkaattu Seemaiellaam Song Lyrics in Tamil


ஆண் : அரிச்சந்திர மாமன்னர் ஆட்சியில் நடந்ததென்னவோ…
சத்தியமே சோதனையாய் சரிந்து கீழே விழுந்ததென்னவோ…
சகத்தோரே உணர்ந்திடுவீர்…
சகலரும் வந்து சேரும் இடுகாட்டு மத்தியிலே…
இருக்கின்றதோ ஐயோ எங்கே தேடுவேன்…

ஆண் : ஏறாத மலை ஏறி…
இறங்காத கடல் இறங்கி…
வடிக்காத கண்ணீர் விட்டு ஓடினேன்…
தேடினேன் ஓடினேன்…
கண்ணே மணியே என்று உன்னை நாடுவேன்…

BGM

ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திர ராசா…
அரசாண்ட நாட்ட விட்டே நகர்ந்தாரே செல்லா காசா…

ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல…
பொக பொகயா போனாரே…
எல்லாத்தையும் எழந்த பொறவு…
ஈம காட்ட சேந்தாரே…

ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…

BGM

ஆண் : பட்டாட குப்பையிலே…
பல்லாக்குமே வீதியிலே…
எட்டூரு சுத்தி வந்தோம் பட்டினிக்கு சோறுயில்லே…

BGM

ஆண் : கண் போக காட்சியில்லே…
கால் போக ஊருமில்லே…
மண்ணாகி போன பின்னே மானிடருக்கு சாதியில்லே…

ஆண் : பஞ்சாங்க நூலு தான் பள்ளம் தோண்டுதே…
அன்னாடங்காய்ச்சிய குத்தி சாய்க்குதே…

ஆண் : கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி…
கொட்டுன்னு தானே சொன்னாங்க…
கூரயுமில்லா வீட்டுல வாழும்…
எங்களை எதுக்கு கொன்னாங்க…

ஆண் : செவக்காட்டு சீமையெல்லாம்…
ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…

BGM

ஆண் : மும்மாரி பெய்யுதுங்க…
மூணு போகம் விளையுதுங்க…
ஒப்பாரி வைக்கும் சனம்…
ஒசர வழி தெரியலைங்க…

BGM

ஆண் : முள்ளோடு பூவிருக்கு…
முத்தத்துல நெலவிருக்கு…
கல்லான கடவுளுக்கே கருணை அது எங்கிருக்கு…

ஆண் : கற்பூரம் ஏத்தியும் கண்ண காட்டலே…
நெய் சோற போட்டுமே மண்ண காக்கல…

ஆண் : பொய்யில உண்ம பொசுங்கி போக…
எத்தன சட்டம் அம்மாடி…
நீதிய காசுக்கு வாங்குற மனுசன்…
நிக்கிறான் பாரு முன்னாடி…

BGM

ஆண் : செவக்காட்டு…
குழு : சீமையெல்லாம்…
ஆண் : ஆண்டாரே அரிச்சந்திரா ராசா…
குழு : அரிச்சந்திரா ராசா…
ஆண் : அரசாண்ட நாட்ட விட்டே…
குழு : நாட்ட விட்டே…
ஆண் : நகர்ந்தாரே செல்லா காசா…

ஆண் : பொட்டக்காட்டு புழுதி போல…
பொக பொகயா போனாரே…
எல்லாத்தையும் எழந்த பொறவு…
ஈம காட்ட சேந்தாரே…

BGM

ஆண் : அரிச்சந்திரா ராசா…

BGM


Notes : Sevakkaattu Seemaiellaam Song Lyrics in Tamil. This Song from Nenjuku Needhi (2022). Song Lyrics penned by Yugabharathi. செவக்காட்டு சீமையெல்லாம் பாடல் வரிகள்.


கனவிலே கனவிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்யன் & ஸ்வேதா மோகன்ஸ்ரீகாந்த் தேவாநேபாளி

Kanavilae Kanavilae Song Lyrics in Tamil


BGM

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

ஆண் : அவள் என் வாசமே என் சந்ததியாய்…
எட்டு திசைகளும் அதிருமே…

BGM

ஆண் : சிறு புன்னகையில் என்னை வென்றுவிடும்…
அவள் தென்றலே…
இரு கண்களையும் எழில் செய்துவிடும்…
அவள் மின்னலே…

பெண் : காலை மாலை யாவுமே…
காதல் கொள்ள வேணுமே…
தினம் பேசி போகிற ஜாடைகள்…
பல நூறு கவி சொல்லுதே…

ஆண் : இரவே பகலே இரவாய் தோன்றிடு…
இரவே இரவே பகலை நீங்கிடு…

பெண் : மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே…
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே…

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…

BGM

ஆண் : உடை தொட்ட இடம்…
விரல் தொட்டு விட உயிர் கெஞ்சுமே…
அடைபட்ட நதி உடைபட்டுவிட…
அலை பொங்குமே…

பெண் : வாசம் வீசும் பூவிலே…
நாளும் உந்தன் வாசனை…
மிதமான சூரிய தீபமாய்…
இமை நான்கு மொழி சொன்னதே…

ஆண் : எது நீ எது நான்…
இனிமேல் தேடுவோம்…
நதி நீ கரை நான்…
கலந்தே ஓடுவோம்…

பெண் : பூக்கள் முழுவதும் தீண்டும் விழியிலே…
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே…

ஆண் : கனவிலே கனவிலே பல நாள் கண்டது…
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது…
எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை…
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை…

ஆண் : அவள் என் வாசமே என் சந்ததியாய்…
எட்டு திசைகளும் அதிருமே…

BGM


Notes : Kanavilae Kanavilae Song Lyrics in Tamil. This Song from Nepali (2008). Song Lyrics penned by Yugabharathi. கனவிலே கனவிலே பாடல் வரிகள்.


குத்தீட்டி கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்ய பிரகாஷ்சி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Kutheeti Song Lyrics in Tamil


BGM

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…
குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

ஆண் : நீ பார்வையால என்ன ஏன்டி பங்கு போடுற…
சொல்லும் வார்த்தையால நெஞ்சுக்குள்ள சங்கு ஊதுற…

ஆண் : நான் உன்னப் பாக்கலேனா சாதா ஆளுடி…
உன் பார்வை பட்டதாலே தாதா தானடி…
நான் தாதா தானடி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

BGM

ஆண் : பொழுதும் நினைப்புல நீ புரட்டி எடுக்குற…
பதுங்கும் மனசையும்தான் விரட்டி புடிக்குற…
சீக்காளி போல என்ன சிரிப்பால சாய்க்குற…
மக்கானா கூட நீதான் மாமேதை ஆக்குற…

ஆண் : சோழியாக நீ என்ன அள்ளி வீசி ஏன் போற…
சாம்புராணி புகையாக சுத்தி சுத்தி ஏன் வாற…

ஆண் : பாக்காத பாக்காத இப்படி…
உன்ன பாத்து நான் தூங்குவது எப்படி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

ஆண் : மாத்துற மாத்துற…
என்ன மாத்துற…
மாத்துற மாத்துற…
என்ன மாத்துற… ஹோய்…

BGM

ஆண் : அளவா சினுங்கி என்ன அழுத்தி மிதிக்குற…
அழகா நெருங்கி வந்து கழுத்த நொிக்கிற…
கழுத்த நொிக்கிற…

ஆண் : மாத்தோப்பு காத்து போல மனசோட வீசுற…
மாராப்பு சேலையால மருதாணி பூசுற…

ஆண் : கால நேரம் பாராம சொல்லுரேனே உன் பேர…
கூடிப் பேச எண்ணாம செய்வதென்ன கோளாற…

ஆண் : தாக்காத தாக்காத இப்படி…
உன்னத் தாண்டி நான் வாழ்வது எப்படி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…


Notes : Kutheeti Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. குத்தீட்டி கண்ணுல பாடல் வரிகள்.


தண்டோரா கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவி.வி. பிரசன்னாடி. இமான்கடைக்குட்டி சிங்கம்

Thandora Kannaala Song Lyrics in Tamil


BGM

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ…

ஆண் : எத்தனை மொற நான் பாத்தாலும்…
பத்தல என பேசும் வாயி…
சக்கரை மழை போல் உன் பேச்சு…
கொட்டிட தொலைவாச்சே பாயி…
உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி…

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ… ஓ…

BGM

ஆண் : பொட்டு வச்ச பொண்ணு…
சுத்தி அடிக்குது கொட்ட முத்து கண்ணு…
வட்டம் கட்டி நின்னு…
கும்மி அடிக்குது சொல்லு ரெண்டில் ஒன்னு…

ஆண் : கிழக்காலதானே வரும் சூரியன்…
என நானும் கூட நினைச்சேன்…
எகத்தாளம் பேசும் மகராசி உன் முகம்…
பார்க்க தூங்கி முழிச்சேன்…

ஆண் : என்னவோ போடி உன்னையே தாடி…
ரெக்க முளைக்குதடி…
நெஞ்சு பறக்குதடி…

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ…

BGM

ஆண் : செங்க கல்லும் உன்ன கண்ட நொடியில…
தங்க கல்லா மின்ன…
ரொட்டி துண்டா என்ன கன்ன குழியில…
மென்னு நல்ல தின்ன…

ஆண் : புலி மேல பாய துணிஞ்சாலுமே…
மெரளாத ஆள கவுத்த…
சிரிப்பால ஏன்டி மயில் தோகைய…
ஒயர் கொடையாட்டம் இழுத்த…

ஆண் : வள்ளலா வாடி அள்ளியே போடி…
வண்டி நொடிக்குதடி…
நொண்டி அடிக்குதடி…

ஆண் : தண்டோரா கண்ணால நித்தமும் படிச்ச ஆராரோ…
முண்டாசா என் வாழ்வ கட்டிட வரும் நீ பூந்தேரோ…

ஆண் : எத்தனை மொற நான் பாத்தாலும்…
பத்தல என பேசும் வாயி…
சக்கரை மழை போல் உன் பேச்சு…
கொட்டிட தொலைவாச்சே பாயி…
உள்ளந்துடிக்குதே உள்ளத வந்து ஆராயி…

ஆண் : தண்டோரா…


Notes : Thandora Kannaala Song Lyrics in Tamil. This Song from Kadaikutty Singam (2018). Song Lyrics penned by Yugabharathi. தண்டோரா கண்ணால பாடல் வரிகள்.


உன் நெஞ்சுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசின்மயிசந்தோஷ் தயாநிதிமதுரவீரன்

Un Nenjukulle Song Lyrics in Tamil


BGM

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…
உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

பெண் : ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில…
ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே…
எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல ஊருல…
காதல காட்டு டா கொஞ்சம் என் மேல…

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

BGM

பெண் : உன் மேல புள்ளி வச்சு சிக்கிக்கிட்டேன் கோலமா…
கையால மீன் குழம்பும் வச்சி தாரேன் போதுமா…
உன் பேர சொல்ல சொல்ல ஆனேனே காரமா…
சும்மா நீ என்னை தின்னு சூடான சாதமா…

பெண் : ஐயா நீ பார்த்தாலே பாலூத்து ஆகி விடும்…
பார்க்காம போனாலே தேகம் நோகும்…
எப்போதும் உன் வாசம் என் உடம்ப மூட வரும்…
அப்போது என்னோடு ஏக்கம் தீரும்…

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

BGM

பெண் : அஞ்சு ஆறு புள்ள குட்டி உன்னை ஒட்டு ஜாடையா…
அஞ்சாம பெத்து எடுக்க என்ன விட்டா யாருயா…
ஜில்லாவே கண்ணு வெக்க உன் கூட ஜோடியா…
பந்தாவா சுத்தி வந்து வாழ்வேனே ராணியா…

பெண் : அண்ணாந்து நான் பார்த்த ஆம்பளையும் யாரும் இல்ல…
உன்னாலே மல்லாந்து சாஞ்சிகிறேன் கீழ…
என்னானு கேட்காம நீ போனா நியாயம் இல்ல…
ஊர் தாண்டி போகாத கோயில் காளை…

பெண் : உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…
உன் நெஞ்சுக்குள்ளே வாழ நா ஏங்குறேன்…
நீ வந்து நின்னா மூச்சியே வாங்குறேன்…

பெண் : ராசாவே உன்னை கட்டி கொள்ள ஆசையில…
ஆளாகி நின்னேன் கண்ணு முன்னாலே…
எனக்கு ஏத்த ஆம்பள எவனும் இல்ல…
ஊருல காதல காட்டு டா கொஞ்சம் என் மேல…

BGM


Notes : Un Nenjukulle Song Lyrics in Tamil. This Song from Madura Veeran (2018). Song Lyrics penned by Yugabharathi. உன் நெஞ்சுக்குள்ளே பாடல் வரிகள்.


ஒரு ஓர ஓர பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபல்ராம்டி. இமான்தேசிங்கு ராஜா

Oru Ora Ora Parvai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

BGM

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்ன எப்போ சேர்வ…
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே…

ஆண் : இறுமாப்புல என்ன பேசுற களவாணியே…
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே… ஹே…

ஆண் : தட்டு கெட்டு போனேன் புள்ள…
முத்தம் ஒன்னு தாயேன்…
கட்டிக்கிட்டு காதல் பண்ண…
கம்மா கர வாயேன்…

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

BGM

ஆண் : ஒன்னே ஒன்னு சொல்லட்டுமா பிடிவாதமா…
என்னை மட்டும் கொல்லுறியே அநியாயமா…

ஆண் : பசிக்காம கூட போகுமானு நூறு யோசன…
படுத்தாலும் கூட பாதி ராவில் தேடுறேன் உன…

ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன நான்தான்…
உப்பு மூட்ட தூக்க வேணும்…
கொஞ்சம் கூட நோகாமலே…
மெத்த வேட்டையாடணும்…

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

BGM

ஆண் : தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும்…
அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கனும்…

ஆண் : உனக்காக நாளும் ஓடியாடி…
வேல பாக்கணும்…
உடல் வேர்வையால சேர்த்த காசில்…
சேலை வாங்கணும்…

ஆண் : செப்பு செல போல உன்ன…
மொத்தத்துல காக்க வேணும்…
செத்து விட சொன்னாலுமே…
உனக்காக சாகனும்…

BGM

ஆண் : ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்னை எப்போ சேர்வ…
உன்னாலே என் தூக்கம் போயிருச்சே…

ஆண் : இறுமாப்புல என்ன பேசுற களவாணியே…
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே… ஹே…

ஆண் : தட்டு கெட்டு போனேன் புள்ள…
முத்தம் ஒன்னு தாயேன்…
கட்டிக்கிட்டு காதல் பண்ண…
கம்மா கர வாயேன்…

ஆண் : வாயேன் வாயேன் வாயேன்…
வாயேன் வாயேன் வாயேன்…


Notes : Oru Ora Ora Parvai Song Lyrics in Tamil. This Song from Desingu Raja (2013). Song Lyrics penned by Yugabharathi. ஒரு ஓர ஓர பார்வை பாடல் வரிகள்.


மண்ணிலே ஈரமுண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவைக்கம் விஜயலட்சுமிசீன் ரோல்டன்ஜெய் பீம்

Manniley Eeramundu Song Lyrics in Tamil


BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…

BGM

பெண் : உள்ளுறுதி காண்பதுதான் பூமியிலே உன் உயரம்…
எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும்…
உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம்…
அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம்…

பெண் : தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா…
எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா…

BGM

பெண் : மண்ணிலே ஈரமுண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…

பெண் : எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு…
எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு…

பெண் : மண்ணிலே ஈரம் உண்டு…
முள்காட்டில் பூவும் உண்டு…
நம்பினால் நாளை உண்டு…
கை தாங்க ஜீவன் உண்டு…


Notes : Manniley Eeramundu Song Lyrics in Tamil. This Song from Jai Bhim (2021). Song Lyrics penned by Yugabharathi. மண்ணிலே ஈரமுண்டு பாடல் வரிகள்.