ஆண் : கண்ணே செல்லக் கண்ணே… தாயும் இனி நானே… கண்ணே எந்தன் கண்ணே… நெஞ்சில் என்றும் நீயே…
ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே… நம் வாழ்விலே மறைந்ததேன்… மூன்றாம் பிறை நாள் வருமா… எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
ஆண் : நீயே இனி வானம்… விண்மீனாக நானும்… காப்பேன் உனை நானும்… அன்பே அதில் நாளும்…
—BGM—
பெண் : கண்ணே எந்தன் கண்ணே… தாயும் இனி நீயே… கண்ணே எந்தன் கண்ணே… வாழ்வில் என்றும் நானே…
பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே… நம் வாழ்விலே மறைந்ததேன்… மூன்றாம் பிறை நாள் வருமா… எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
பெண் : நானே உந்தன் வானம்… விண்மீனாக நீயும்… காப்பாய் எனை நாளும்… அன்பே அங்கே வாழும்…
—BGM—
Notes : Kannae Chella Kannae Song Lyrics in Tamil. This Song from Mission Chapter 1 (2024). Song Lyrics penned by Vijay. கண்ணே செல்லக்கண்ணேபாடல் வரிகள்.
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்… அனலா கொதிக்குது மனசு… ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
ஆண் : இது யாரு செஞ்ச பாவமோ.. இல்ல யாரு தந்த சாபமோ… நீ ஒறவ நெனைச்சு உருகுன… நான் ஒன்ன நெனைச்சு கருகுறேன்…
ஆண் : நீ கனவ நெனைச்சு கலங்குன… நான் நெசமா இப்ப கதருறேன்… இது சோகம் இல்ல அதுக்கு மேலதான்…
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்… அனலா கொதிக்குது மனசு… ஒன் நெழலுக்கு தவிக்குது வயசு…
—BGM—
ஆண் : சின்னப்புள்ள நெஞ்சுக்குள்ள… சொல்ல ஒரு வார்த்தையில்ல… பொட்டப்புள்ள கண்ணுக்குள்ள… கொஞ்சங்கூட கண்ணீர் இல்ல…
ஆண் : சொந்தங்கள் எல்லாம் சோகத்தில் மூழ்க… பந்தங்கள் எல்லாம் பாசத்தில் ஏங்க…
—BGM—
ஆண் : தாயின் மடியில் இவ படுத்ததில்ல… தாயின் மொகத்த இவ பார்த்ததில்ல…
ஆண் : ஓ வயசே ஓ வயசே… வாழமுடியாம தவிச்சிருச்சே…
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
—BGM—
ஆண் : வெட்டி வச்ச வாழ இலை பந்தியில சேரவில்ல… கட்டி வச்ச கோட்டையில வாசனைய கானவில்ல…
ஆண் : கார்த்திகை மாசத்து மாடத்து விளக்கு… காத்துல அனையிற நெலையில கெடக்கு…
—BGM—
ஆண் : காதல் எப்பொழுதும் பரமபதம்… பாம்பும் ஏணியும் மாறிவரும்…
ஆண் : இவ மனசே இவ மனசே… சாகமுடியாம துடிச்சிருச்சே…
—BGM—
ஆண் : பார்வையிலே ஒரு ஏக்கம்… ஒம்மனசுக்குள்ள ஆயிரம் துக்கம்…
Notes : Paarvaile Oru Yekkam Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Na.Muthukumar. பார்வையிலே ஒரு ஏக்கம்பாடல் வரிகள்.
ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு… பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு… செலவுக்கு நோட்டு இருக்கு… சிந்தனைக்கு பாட்டிருக்கு… ஜல் ஜல் ஜல்சாதான்…
—BGM—
ஆண் : வானத்தை எவனும் அழக்கவும் இல்லை… வா இப்போதே அளப்போம்… வாழ்க்கையை எவனும் ரசிக்கவும் இல்லை… தா ராரரா தரா ரா…
ஆண் : பூக்களை எவனும் திறக்கவும் இல்லை… வா இப்போதே திறப்போம்… பூமியில் புதையலை எடுக்கவும் இல்லை… வா இப்போதே எடுப்போம்…
ஆண் : வாலிபம் ஒன்றுதான் வாழ்வின் இன்பமே… புன்னகை ஒன்றுதான் என்றும் என்றும் இளமையின் ரகசியம்…
{ ஆண் : பாலக் காட்டு மச்சானுக்கு பாட்டுன்னா உசுரு… பாட்டு சத்தம் கேட்டு புட்டா மத்ததெல்லாம் கொசுரு… செலவுக்கு நோட்டு இருக்கு… சிந்தனைக்கு பாட்டிருக்கு… ஜல் ஜல் ஜல்சாதான்… } * (2)
ஆண் : சிட்டு குருவி சிட்டு குருவி… சிரிக்கட்டுமே பொட்டை குருவி… ஆனது ஆகட்டும் ஆனந்தம் கூடுது… ஆஹா வாழ்வே சொர்க்கம்…
Notes : Palakkattu Machanukku Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. பாலக்காட்டு மச்சானுக்குபாடல் வரிகள்.
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்… மெரினாவில் வீடு கட்ட போறேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்… மெரினாவில் வீடு கட்ட போறேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
ஆண் : ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்… மெரினாவில் சுண்டல் வாங்கிதாரேன்… இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு… இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்… இதுதானே ரிப்பன் பில்டிங் பாரு… இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்…
—BGM—
பெண் : அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்… ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்… பாரின் சரக்கு பர்மா பஜார்… நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு…
—BGM—
பெண் : ஏ பொண்ணு ஏ பொண்ணு… இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு… ஏ பொண்ணு ஏ பொண்ணூ… என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு…
பெண் : மெட்ராஸின் ஹீரோ… ஆண் : அது மெட்ரோ வாட்டர்… பெண் : ஆனா ஸ்டைலுன்னா இப்போ… ஆண் : குடி மினரல் வாட்டர்…
பெண் : மெட்ராஸின் கீதம்… ஆண் : அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்… ஆண் : ஆல் இன் ஆல் கேட்டான்… ஒரு போட்டோ போட்டோ கையில்தான்…
ஆண் & பெண் : ஒன்னு மாமியார் தொல்லை… இல்ல முகமூடி கொள்ளை… ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்… இந்தியனாக வாழும் ஊரு…
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்… மெரினாவில் வீடு கட்ட போறேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
பெண் : பொண்ணு ஏ பொண்ணு… நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு… உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு… இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு… ஆஹான்… ஆஆ… ஏஹியின்…
பெண் : காலம் கெட்டு போச்சு மகராசி… சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி… மூத்தவ சொல்றேன் இதை யோசி… நான் மூனு தலைமுறையா மதராசி…
ஆண் : வெள்ளைக்காரன் கோட்டை… பெண் : அது பழைய மெட்ராஸ்… ஆண் : ராணியம்மா பேட்டை… பெண் : இது புதிய மெட்ராஸ்…
ஆண் : ஒன் வேயில் புகுந்து கூட… பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்… ஆண் : செண்ட்ரலையும் எக்மோரையும்… சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்…
ஆண் : சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்… காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்… இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி… ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி…
பெண் : மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்… மெரினாவில் வீடு கட்ட போறேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்… லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மங்காத்தா ராணி போல வாரேன்…
பெண் : லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்… நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்…
Notes : Madrasai Suthi Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மெட்ராஸை சுத்தி பார்க்கபாடல் வரிகள்.