Category Archives: 2008 Movies

2008 Movies

uyire-uyire-piriyadhey-song-lyrics

உயிரே உயிரே பிரியாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாகர்தேவி ஸ்ரீ பிரசாத்சந்தோஷ் சுப்ரமணியம்

Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

ஆண் : பெண்ணே நீ வரும் முன்னே…
ஒரு பொம்மை போலே இருந்தேன்…
புன்னகையாலே முகவரி தந்தாயே… ஓ ஓ ஓ…

ஆண் : ஆயுள் முழுதும் அன்பே…
உன் அருகில் வாழ்ந்திட நினைத்தேன்…
அரை நொடி மின்னல் போலே சென்றாயே…

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

BGM

ஆண் : புல் மேல் வாழும்…
பனி தான் காய்ந்தாலும்…
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்…
ஆனால் பொற்காலம்…

ஆண் : உன் அருகாமை…
அதை நான் இழந்தாலும்…
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
நினைவே சந்தோஷம்…

ஆண் : கடல் மூழ்கிய தீவுகளை…
கண் பார்வைகள் அறிவதில்லை…
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…

BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

BGM

ஆண் : உன் கை கோர்த்து…
அடி நான் சென்ற இடம்…
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்…
என்றே கேட்கிறதே…

ஆண் : உன் தோள் சாய்ந்து…
அடி நான் நின்ற மரம்…
நிழலை எல்லாம் சுருட்டிக் கொண்டு…
நெருப்பாய் எரிக்கிறதே…

ஆண் : நிழல் நம்பிடும் என் தனிமை…
உடல் நம்பிடும் உன் பிரிவை…
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…

BGM

ஆண் : உயிரே உயிரே பிரியாதே…
உயிரைத் தூக்கி எறியாதே…
உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…

ஆண் : கனவே கனவே கலையாதே…
கண்ணீா் துளியில் கரையாதே…
நீ இல்லாமல் இரவே விடியாதே… ஓஓஹோ…

BGM


Notes : Uyire Uyire Piriyadhey Song Lyrics in Tamil. This Song from Santhosh Subramaniam (2008). Song Lyrics penned by Na. Muthukumar. உயிரே உயிரே பிரியாதே பாடல் வரிகள்.


முழுமதி அவளது முகமாகும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்ஜோதா அக்பர்

Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil


BGM

ஆண் : முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மின்னல்கள் அவளது விழியாகும்…
மௌனங்கள் அவளது மொழியாகும்…

ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்…
இதயம் கொடு என வரம் கேட்டேன்…
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : கால்தடமே பதியாத…
கடல்தீவு அவள்தானே…
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்…

ஆண் : கேட்டதுமே மறக்காத…
மெல்லிசையும் அவள்தானே…
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்…

ஆண் : ஒரு கரையாக அவளிருக்க…
மறுகரையாக நான் இருக்க…
இடையில் தனிமை தளும்புதே நதியாய்…

ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க…
கைகள் நினைத்தால் முடிந்திடுமா…
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM

ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள்…
விரல்களை நான் பிடித்து கொண்டேன்…
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்…

ஆண் : உறக்கம் வந்தே தலைகோத…
மரத்தடியில் இளைப்பாறி…
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்…

ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம்…
தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்…
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்…

ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே…
திரையொன்று தெரிந்தது எதிரினிலே…
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா…

ஆண் : ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்…
மல்லிகை அவளது மணமாகும்…
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்…

BGM


Notes : Mulumathy Avalathu Mugamaagum Song Lyrics in Tamil. This Song from Jodhaa Akbar (2008). Song Lyrics penned by Na. Muthukumar. முழுமதி அவளது முகமாகும் பாடல் வரிகள்.


கண்கள் இரண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபெல்லி ராஜ் & தீபா மரியம்ஜேம்ஸ் வசந்தன்சுப்ரமணியபுரம்

Kangal Irandal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

பெண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

BGM

ஆண் : இரவும் அல்லாத பகலும் அல்லாத…
பொழுதுகள் உன்னோடு கழியுமா…
தொடவும் கூடாத படவும் கூடாத…
இடைவெளி அப்போது குறையுமா…

பெண் : மடியினில் சாய்ந்திட துடிக்குதே…
மறுபுறம் நாணமும் தடுக்குதே…
இது வரை யாரிடமும் சொல்லாதகதை…

ஆண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…

BGM

பெண் : கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத…
மனதிற்க்குள் எப்போது நுழைந்திட்டாய்…
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத…
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்…

ஆண் : உன்னை இன்றி வோ் ஒரு நினைவில்லை…
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை…
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர…

பெண் : கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்…
ஒரு வண்ணக் கவிதை காதல்தானா…
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே…
இதை இருளிலும் படித்திட முடிகிறதே…

ஆண் : பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்…
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தே நகர்வேனே…
மாற்றி…

பெண் : கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்…
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென…

ஆண் : சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்…
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…


Notes : Kangal Irandal Song Lyrics in Tamil. This Song from Subramaniapuram (2008). Song Lyrics penned by Thamarai. கண்கள் இரண்டால் பாடல் வரிகள்.


அனல் மேலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுதா ரகுநாதன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Annul Maelae Song Lyrics in Tamil


பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : எந்தக்காற்றின் அலாவளில்…
மலா் இதழ்கள் விரிந்திடுமோ…
எந்த தேவ வினாடியில்…
மன்னரைகள் திறந்திடுமோ…

பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : சந்தித்தோமே கனாக்களில்…
சில முறையா பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்…
அது உனக்கு நினைவில்லையா…

பெண் : இரு கரைகளை உடைத்திடவே…
பெருகிடுமா கடல் அலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்…
வழிசொல்லுமா கலங்கரையே…
உனதலைகள் எனை அடிக்க…
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM


Notes : Annul Maelae Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அனல் மேலே பாடல் வரிகள்.


அவ என்ன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & வி.வி. பிரசன்னாஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Ava Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

BGM

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… கொஞ்சம் கொஞ்சமாக…
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா…

ஆண் : அவ ஒத்த வார்த்த சொன்னா…
அது மின்னும் மின்னும் பொன்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

BGM

ஆண் : அடங்காக் குதிரைய போல…
அட அலஞ்சவன் நானே…
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே…
படுத்தா தூக்கமும் இல்ல…
என் கனவுல தொல்ல…
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால…

ஆண் : எதுவோ எங்கள சோ்க்க…
இருக்கே கயித்துல கோர்க்க…
ஓ… கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே…

ஆண் : துணியால் கண்ணையும் கட்டி…
கைய காத்துல நீட்டி…
இன்னும் தேடுறன் அவள…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

BGM

ஆண் : வாழ்க்க ராட்டினம் தான்டா…
தெனம் சுத்துது ஜோரா…
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா… ஹா…

ஆண் : மொத நாள் உச்சத்திலிருந்தேன்…
நான் பொத்துனு விழுந்தேன்…
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்…

ஆண் : யாரோ கூடவே வருவார்…
யாரோ பாதியில் போவார்…
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே…

ஆண் : வெளிச்சம் தந்தவ ஒருத்தி…
அவளே இருட்டுல நிறுத்தி…
ஜோரா பயணத்த கிளப்பி…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…
தனியா எங்கே போனாளோ…

ஆண் : அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல…
அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல…
அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல…
அவ இல்ல இல்ல நெருப்புதானே நெஞ்சில…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… கொஞ்சம் கொஞ்சமாக…
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா…

ஆண் : அவ ஒத்த வார்த்த சொன்னா…
அது மின்னும் மின்னும் பொன்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : ஓ… ஒண்ணுக்குள்ள ஒண்ணா…
என் நெஞ்சிக்குள்ள நின்னா…
ஓ… என்ன சொல்லி என்னா…
அவ மக்கி போனா மண்ணா…

ஆண் : அட தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னா தன்னே தானே…
தன்னன தந்தன தானே…
தன்னா தன்னே தானே…
தன்னன தந்தன தானே…


Notes : Ava Enna Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அவ என்ன பாடல் வரிகள்.


அன்பே என் அன்பே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராஹரிஸ் ஜெயராஜ்தாம் தூம்

Anbe En Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…

BGM

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

BGM

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

BGM

ஆண் : நீ நீ ஒரு நதி அலை ஆனாய்…
நான் நான் அதில் விழும் இலை ஆனேன்…
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ…
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ… ஓ…

ஆண் : மழையினிலே பிறக்கும் நதி…
கடலினிலே கலக்கும்…
மனதினிலே இருப்பதெல்லாம்…
மெளனத்திலே கலக்கும்…

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…
இத்தனை நாளாய் தவித்தேன்…
கனவே கனவே கண் உறங்காமல்…
உலகம் முழுதாய் மறந்தேன்…

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

BGM

ஆண் : நீ நீ புது கட்டளைகள் விதிக்க…
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க…
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே…
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே…

ஆண் : எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்…
தெரியவில்லை கணக்கு…
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்…
புரியவில்லை நமக்கு…

ஆண் : அன்பே என் அன்பே உன் விழி பார்க்க…

BGM

ஆண் : கனவே கனவே கண் உறங்காமல்…

BGM

ஆண் : கண்ணில் சுடும் வெயில் காலம்…
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்…
அன்பில் அடை மழைக்காலம்…
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்…

BGM


Notes : Anbe En Anbe Song Lyrics in Tamil. This Song from Dhaam Dhoom (2008). Song Lyrics penned by Na. Muthukumar. அன்பே என் அன்பே பாடல் வரிகள்.


வெண்மேகம் பெண்ணாக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Venmegam Pennaga Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM


Notes : Venmegam Pennaga Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்மேகம் பெண்ணாக பாடல் வரிகள்.


எங்கேயோ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Enkeyoo Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

ஆண் : இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்…
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்…
இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்…

BGM

ஆண் : கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண் எதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்டப் பெண்ணா…
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : அங்கும் இங்கும் ஓடும் கால்கள்…
அசைய மறுத்து வேண்டுதே…
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…

ஆண் : என்னானதோ ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…
கவிதை ஒன்று பார்த்து போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
மழையின் சாரல் என்னைத் தாக்க…
விடைகள் இல்லா கேள்வி கேட்க…

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

BGM

ஆண் : ஆதி அந்தமும் மறந்து…
உன் அருகில் கரைந்து நான் போனேன்…
ஆண்கள் வெக்கபடும் தருணம்…
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…

ஆண் : இடி விழுந்த வீட்டில் இன்று…
பூச்செடிகள் பூக்கிறதே…
இவள் தானே உந்தன் பாதி…
கடவுள் பதில் கேக்கிறதே…

ஆண் : வியந்து வியந்து…
உடைந்து உடைந்து…
சரிந்து சரிந்து…
மிரண்டு மிரண்டு…

ஆண் : இந்த நிமிடம் மீண்டும் பிறந்து…
உனக்குள் கலந்து…
தொலைந்து தொலைந்து…

BGM


Notes : Enkeyoo Partha Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. எங்கேயோ பார்த்த பாடல் வரிகள்.


முன்தினம் பார்த்தேனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிரசாந்தினி & நரேஷ் ஐயர்ஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Mundhinam Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : ஹாய் மாலினி…
ஐ எம் கிருஷ்ணன்…
நான் இத சொல்லியே ஆகனும்…
நீ அவ்வளவு அழகு…
இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு…
இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க…
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

BGM

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

BGM

குழு (ஆண்கள்) : காதலே… சுவாசமே…

BGM

ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து…
நிகர் செய்ய பொன்னை வைத்தால்…
துலாபாரம் தோற்காதோ பேரழகே…

பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை…
முதல் காதல் சிந்தும் கண்ணை…
அணைக்காமல் போவேனோ… ஆருயிரே…

ஆண் : ஓ… நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி…
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி…
வினா நூறு கனாவும் நூறு…
விடை சொல்லடி…

பெண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
உள்ளமும் புண்ணானதே…

பெண் : இத்தனை நாளாக…

ஆண் : ஓ மை லவ்…

பெண் : உன்னை நான் பாராமல்…

ஆண் : எஸ் மை லவ்…

பெண் : எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

BGM

பெண் : கடல் நீலம் மங்கும் நேரம்…
அலைவந்து தீண்டும் தூரம்…
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே…

ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய்…
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்…
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே…

பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன்…
உறங்காமலே…
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்…
நெருங்காமலே…
உனையன்றி எனக்கு ஏது…
எதிர்காலமே…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

BGM

ஆண் : வெண்ணிலா…
வெண்ணிலா… வெண்ணிலா…

BGM


Notes : Mundhinam Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்.


மச்சான் மச்சான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜா & பெலா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Machaan Machaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

பெண் : மச்சான் மச்சான்…
என் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட என்னை தச்சான்…

ஆண் : ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்…
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே… ஏ…

பெண் : தாயாகி சில நேரம்…
சேயாகி சில நேரம்…
மடிமேல உன்னை சொமப்பேனே… ஏ…
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே… ஓஓ…

ஆண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

—BGM—

ஆண் : சொல்ல வந்த வார்த்தை…
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்…
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே… ஏ…

பெண் : என்னை என்ன கேட்ட…
என்ன சொன்ன என்ன ஆனேன்…
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே… ஏ…

ஆண் : பெண்ணே உந்தன் கொலுசு…
எந்தன் மனச மாட்டிப்போகுதே…
போகும் வழி எங்கும் வருவேனே… ஏ… ஏஹே…

பெண் : உன் பேரைத்தான் சொல்லிதினம்…
தாவணியப் போட்டேனே…

ஆண் : உசுரத்தான் விட்டாக்கூட…
உன்னைவிட மாட்டேனே…
மானே அடி மானே… ஏஏ…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

—BGM—

ஆண் : ஆசைவச்ச நெஞ்சு…
இலவம் பஞ்சுபோலத்தானே…
உன்னத்தேடி நாளும் பறக்குமே… ஏ…

பெண் : அம்மிக்கல்லு மேல…
கால வச்சு மெட்டிப்போடும்…
அந்த நாளை மனசும் நெனைக்குமே…

ஆண் : கண்ணைமூடி பாத்தா…
எங்கும் நீதான் வந்து போகுற…
உடல் பொருள் ஆவியும் நீதானே… ஏ… ஏஹே…

பெண் : என்ன வேணும் என்ன வேணும்…
சொல்லிப்புடு ராசாவே…

ஆண் : உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே…
தேனே… வந்தேனே… ஏ… ஏஹே…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…


Notes : Machaan Machaan Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. மச்சான் மச்சான் பாடல் வரிகள்.