அனல் மேலே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுதா ரகுநாதன்ஹாரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Annul Maelae Song Lyrics in Tamil


பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : எந்தக்காற்றின் அலாவளில்…
மலா் இதழ்கள் விரிந்திடுமோ…
எந்த தேவ வினாடியில்…
மன்னரைகள் திறந்திடுமோ…

பெண் : ஒரு சிறுவலி இருந்ததுவே…
இதயத்திலே இதயத்திலே…
உனது இருவிழி தடவியதால்…
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே…
உதிரட்டுமே உடலின் திரை…
அதுதானே இனி நிலாவின் கரை கரை…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM

பெண் : சந்தித்தோமே கனாக்களில்…
சில முறையா பல முறையா…
அந்தி வானில் உலாவினோம்…
அது உனக்கு நினைவில்லையா…

பெண் : இரு கரைகளை உடைத்திடவே…
பெருகிடுமா கடல் அலையே…
இரு இரு உயிர் தத்தளிக்கையில்…
வழிசொல்லுமா கலங்கரையே…
உனதலைகள் எனை அடிக்க…
கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட…

பெண் : அனல் மேலே பனித்துளி…
அலைபாயும் ஒரு கிளி…
மரம் தேடும் மழைத்துளி…
இவைதானே இவள்இனி…
இமை இரண்டும் தனித்தனி…
உறக்கங்கள் உறைபனி…
எதற்காக தடை இனி…

BGM


Notes : Annul Maelae Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. அனல் மேலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top