எங்கேயோ பார்த்த

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்உதித் நாராயண்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Enkeyoo Partha Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

ஆண் : இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்…
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்…
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்…
அறிவை மயக்கும் மாய தாகம்…
இவளைப் பார்த்த இன்பம் போதும்…
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்…

BGM

ஆண் : கனவுகளில் வாழ்ந்த நாளை…
கண் எதிரே பார்க்கிறேன்…
கதைகளிலே கேட்டப் பெண்ணா…
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்…

ஆண் : அங்கும் இங்கும் ஓடும் கால்கள்…
அசைய மறுத்து வேண்டுதே…
இந்த இடத்தில் இன்னும் நிற்க…
இதயம் கூட ஏங்குதே…

ஆண் : என்னானதோ ஏதானதோ…
கண்ணாடி போல் உடைந்திடும் மனது…
கவிதை ஒன்று பார்த்து போக…
கண்கள் கலங்கி நானும் ஏங்க…
மழையின் சாரல் என்னைத் தாக்க…
விடைகள் இல்லா கேள்வி கேட்க…

ஆண் : எங்கேயோ பார்த்த மயக்கம்…
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்…
தேவதை இந்த சாலை ஓரம்…
வருவது என்ன மாயம் மாயம்…
கண் திறந்து இவள் பார்க்கும் போது…
கடவுளை இன்று நம்பும் மனது…

BGM

ஆண் : ஆதி அந்தமும் மறந்து…
உன் அருகில் கரைந்து நான் போனேன்…
ஆண்கள் வெக்கபடும் தருணம்…
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்…

ஆண் : இடி விழுந்த வீட்டில் இன்று…
பூச்செடிகள் பூக்கிறதே…
இவள் தானே உந்தன் பாதி…
கடவுள் பதில் கேக்கிறதே…

ஆண் : வியந்து வியந்து…
உடைந்து உடைந்து…
சரிந்து சரிந்து…
மிரண்டு மிரண்டு…

ஆண் : இந்த நிமிடம் மீண்டும் பிறந்து…
உனக்குள் கலந்து…
தொலைந்து தொலைந்து…

BGM


Notes : Enkeyoo Partha Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. எங்கேயோ பார்த்த பாடல் வரிகள்.


Scroll to Top