Category Archives: 2005 Movies

2005 Movies

dhavanipotta-deepavali-song-lyrics-in-tamil

தாவணி போட்ட தீபாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிவிஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Dhavanipotta Deepavali Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாவணி போட்ட தீபாவளி…
வந்தது என் வீட்டுக்கு…
கை மொளச்சி கால் மொளச்சி…
ஆடுது என் பாட்டுக்கு…

ஆண் : கண்ணா கண்ணா மூச்சு…
என் கன்னா பின்னா பேச்சு…
பட்டாம் பட்டாம் பூச்சி…
என் பக்கம் வந்து போச்சு…

ஆண் : இரவும் வருது பகலும் வருது…
எனக்கு தெரியல…
இந்த அழகு சரிய…
மனசு எரிய கணக்கு புரியல…

பெண் : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது…
அவள கண்டாலே…
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது…
அருகில் நின்னாலே…
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு…
பொழச்சு போறான் ஆம்பள…

ஆண் : இரவும் வருது பகலும் வருது…
எனக்கு தெரியல…
இந்த அழகு சரிய மனசு எரிய…
கணக்கு புரியல…

BGM

ஆண் : ரெண்டு விழி ரெண்டு விழி…
சண்டையிடும் கோழியா…
பத்து விரல் பத்து விரல்…
பஞ்சு மெத்த கோழியா…

பெண் : பம்பரத்த போல நானும்…
ஆடுறேனே மார்க்கமா…
பச்ச தண்ணி நீ கொடுக்க…
ஆகி போகும் தீர்த்தமா

ஆண் : மகா மகா குலமே…
என் மனசு கேத்த முகமே…
நவா பழ நிறமே…
என்ன நறுக்கி போட்ட நகமே…
இதுக்கு மேல இதுக்கு மேல…
எனக்கு எதும் தோணல…

ஆண் : கிழக்கு மேல விளக்கு போல…
இருக்க வந்தாலே…
என்ன அடுக்கு பான முறுக்கு போல…
உடைச்சு தின்னாலே…

BGM

பெண் : கட்டழகு கட்டழகு…
கண்ணு பட கூடுமே…
எட்டியிரு எட்டியிரு…
இன்னும் வெகு தூரமே…

ஆண் : பாவாடை கட்டி நிற்கும்…
பாவலரு பாட்டு நீ…
பாதாதி கேசம் வர…
பாசத்தோட காட்டு நீ…

ஆண் : தேக்கு மர ஜன்னல்…
நீ தேவ லோக மின்னல்…
ஈச்ச மர தொட்டில்…
நீ இழந்த பழ கட்டில்…

ஆண் : அருந்த வாலு…
குறும்பு தேழு…
ஆனாலும் நீ ஏஞ்சலு…

பெண் : ஈரக்கொல குலுங்க குலுங்க…
சிரிச்சி நின்னாலே…
இவ ஓர விழி நடுங்க நடுங்க…
நெருப்பு வச்சானே…

ஆண் : தாவணி போட்ட தீபாவளி…
வந்தது என் வீட்டுக்கு…
கை மொளச்சி கால் மொளச்சி…
ஆடுது என் பாட்டுக்கு…

ஆண் : கண்ணா கண்ணா மூச்சு…
என் கன்னா பின்னா பேச்சு…
பட்டாம் பட்டாம் பூச்சி…
என் பக்கம் வந்து போச்சு…

பெண் : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது…
அவள கண்டாலே…
கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது…
அருகில் நின்னாலே…
விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு…
பொழச்சு போறான் ஆம்பள…

ஆண் & பெண் : இரவும் வருது பகலும் வருது…
எனக்கு தெரியல…
இந்த அழகு சரிய மனசு எரிய…
கணக்கு புரியல…

ஆண் & பெண் : இரவும் வருது பகலும் வருது…
எனக்கு தெரியல…
இந்த அழகு சரிய மனசு எரிய…
கணக்கு புரியல…


Notes : Dhavanipotta Deepavali Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Yugabharathi. தாவணி போட்ட தீபாவளி பாடல் வரிகள்.


தச்சுக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனுராதா ஸ்ரீராம் & மாதங்கிவித்யாசாகர்பொன்னியின் செல்வன் (2005)

Thaachuko Song Lyrics in Tamil


BGM

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

பெண் : கண்களிலே தீ…
கன்னத்திலே பால்…
அங்கத்திலே பூ…
ஆடையிலே தாழ்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ கோ கோ கோ தச்சுக்கோ….
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

BGM

பெண் : கண்ணை பார் தக தக தக…
அங்கம் பார் பள பள பள…
தொட்டு பார் தல தல தல அள்ள வா…

பெண் : வாராயோ வர வர வர…
தாராயோ தர தர தர…

பெண் : பேரின்பம் பெற பெற பெற…
நீயும் வா…
சுமை நான் தாங்கதான்…
சுகம் நீ வாங்கதான்…

பெண் : சுமை நான் தாங்கதான்…
சுகம் நீ வாங்கதான்…
பொன் ஊஞ்சலில் ஆட வா…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
அனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

BGM

பெண் : கிருஷ்ணா…

—BGM—

பெண் : ஏய் கிருஷ்ணா…

—BGM—

பெண் : கொலுசெல்லாம் சல சல சல…
வளையல்கள் கல கல கல…
மஞ்சத்தில் பல பல பல ஆசைகள்…

பெண் : அங்கங்கள் சுட சுட சுட…
அங்கங்கே தொட தொட தொட…
வழியெங்கும் கட கட கட ஆசைகள்…

பெண் : விண்ணில் ஒற்றை நிலா…
மண்ணில் கூடல் விழா…
விண்ணில் ஒற்றை நிலா கூடல் விழா…
கொண்டாடும் நாள் இன்றுதான்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

பெண் : கண்களிலே தீ…
கன்னத்திலே பால்…
அங்கத்திலே பூ…
ஆடையிலே தாழ்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ…


Notes : Thaachuko Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan (2005). Song Lyrics penned by Pa Vijay. தச்சுக்கோ பாடல் வரிகள்.


அழகே பிரம்மனிடம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கங்கா & ஹரிஷ் ராகவேந்திராதேவாதேவதையை கண்டேன்

Azhage Bramhanidam Song Lyrics in Tamil


BGM

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…

பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

BGM

ஆண் : உன்னை நான் சுமப்பதினால்…
இதயமும் கருவறைதான்…
மனதால் நானும் அன்னையே…
மறவேன் என்றும் உன்னையே…

பெண் : நான் பாலைவனத்தின் விதை போல்…
நீ பருவம் தந்த மழை போல்…
என் காதல் செடியில் பூவும் பூத்ததே…

ஆண் : உன் விழி திறந்திருந்தால்…
விடியலே தேவை இல்லை…

பெண் : உன்னை நான் துறந்திருந்தால்…
உயிர் அது சொந்தம் இல்லை…

ஆண் : இத்தனையும் இனி கிடைக்குமா…
பெண் : கிடைக்கும் கிடைக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

BGM

ஆண் : ஏன் இந்த பிறவி என்று…
இது வரை நினைத்திருந்தேன்…
உயிரே உன்னை பார்த்ததும்…
உலகே புதியதானதே…

பெண் : என்னை படைத்த அந்த தெய்வம்…
என்னைசுமந்த அன்னை தெய்வம்…
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்…

ஆண் : பருவங்கள் ஓடி போகும்…
உருவங்கள் மாறி போகும்…

பெண் : உன் மீது கொண்ட காதல்…
உயிரையும் தாண்டி வாழும்…

ஆண் : சொன்னதெல்லாம் இனி நடக்குமா…

பெண் : நடக்கும் நடக்கும் நான்…
கூட சொல்கிறேன்…

ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…

ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…

ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…

பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…

BGM


Notes : Azhage Bramhanidam Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by . அழகே பிரம்மனிடம் பாடல் வரிகள்.


ஒரு மாலை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Oru Malai Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…

BGM

ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…

ஆண் : சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள்…
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்…
இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்…

ஆண் : அவள் நின்று பேசும் ஒரு தருணம்…
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்…
ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே…
கண்டேனே கண்டேனே…

ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

BGM

ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில்…
நடை உடை பாவணை மாற்றிவிட்டாள்…
சாலை முனைகளில் துாித உணவுகள்…
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாள்…

ஆண் : கூச்சம் கொண்ட தென்றலா…

BGM

ஆண் : இவள் ஆயுள் நீண்ட மின்னலா…

BGM

ஆண் : உனக்கேற்ற ஆளாக…
என்னை மாற்றி கொண்டேனே…

ஆண் : அவ் ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

BGM

ஆண் : பேசும் அழகினை கேட்டு ரசித்திட…
பகல் நேரம் மொத்தமாய் கழித்தேனே…
தூங்கும் அழகினை பாா்த்து ரசித்திட…
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே…

ஆண் : பனியில் சென்றால் உன் முகம்…
என் மேலே நீராய் இறங்கும்…
ஓ… தலை சாய்த்து பாா்த்தாளே…
தடுமாறி போனேனே…

BGM

ஆண் : சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

BGM


Notes : Oru Malai Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Thamarai. ஒரு மாலை பாடல் வரிகள்.


சுற்றும் விழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரீராம் பார்த்தசாரதி & பாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Suttum Vizhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

ஆண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

ஆண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM

ஆண் : மெல்லினம் மாா்பில் கண்டேன்…
வல்லினம் விழியில் கண்டேன்…
இடையினம் தேடி இல்லை என்றேன்…

பெண் : தூக்கத்தில் உளறல் கொண்டேன்…
தூரலில் விரும்பி நின்றேன்…
தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்…

ஆண் : கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா…
உன் கண்ணில் நான் கண்டேன்…
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்…
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்…

பெண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

பெண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

பெண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM

பெண் : மரம்கொத்தி பறவை ஒன்று…
மனம் கொத்தி போனது இன்று…
உடல் முதல் உயிா் வரை தந்தேன்…

ஆண் : தீ இன்றி திாியும் இன்றி…
தேகங்கள் எாியும் என்று…
இன்றுதானே நானும் கண்டு கொண்டேன்…

பெண் : மழை அழகா… வெயில் அழகா…
கொஞ்சும் போது மழை அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு…
கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு…

ஆண் : சுற்றும் விழி சுடரே…
சுற்றும் விழி சுடரே…
என் உலகம் உன்னை சுற்றுதே…

ஆண் : சட்டை பையில் உன் படம்…
தொட்டு தொட்டு உரச…
என் இதயம் பற்றிக்கொல்லுதே…

பெண் : உன் விழியில் விழுந்தேன்…
விண்வெளியில் பறந்தேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
கண்விழித்து சொப்பணம் கண்டேன்…
உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்…

BGM


Notes : Suttum Vizhi Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Na. Muthukumar. சுற்றும் விழி பாடல் வரிகள்.


மயிலிறகே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர் & மதுஸ்ரீஏ.ஆர்.ரகுமான்அன்பே ஆருயிரே

Mayiliragae Song Lyrics in Tamil


BGM

பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கைஎழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

BGM

பெண் : மதுரை பதியை மறந்து…
உன் மடியினில் பாய்ந்தது வைகை…
மெதுவா மெதுவா மெதுவா…
இந்த வைகையில் வைத்திடு கை…

ஆண் : பொதிகை மலையை பிரிந்து…
என் பார்வையில் நீந்துது தென்றல்…
அதை நான் அதை நான் பிடித்து…
மெல்ல அடைத்தேன் மனசிறையில்…

பெண் : ஓர் இலக்கியம்…
நம் காதல்…

ஆண் : வான் உள்ள வரை…
வாழும் பாடல்…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவாய் மழை நிலவாய்…
விழியில் எல்லாம் உன் உலா…

ஆண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீ தானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

ஆண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

BGM

பெண் : தமிழா தமிழா தமிழா…
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா…
அமிர்தாய் அமிர்தாய் அமிர்தாய்…
கவி ஆற்றிட நீ வருவாய்…

ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்…
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்…
உனக்கும் எனக்கும் விருப்பம்…
அந்த மூன்றாம் பால் அல்லவா…

பெண் : பால் விளக்கங்கள்…
நீ கூறு…

ஆண் : ஊர் உறங்கட்டும்…
உரைப்பேன் கேளு…

ஆண் : மயிலிறகே மயிலிறகே…
வருடுகிறாய் மெல்ல…
மழை நிலவே மழை நிலவே…
விழியில் எல்லாம் உன் உலா…

பெண் : உயிரை தொடர்ந்து வரும்…
நீதானே மெய் எழுத்து…
நான் போடும் கை எழுத்து… அன்பே…

பெண் : உலக மொழியில் வரும்…
எல்லாமே நேர் எழுத்து…
காதல்தான் கள் எழுத்து… அன்பே…

பெண் : மயிலிறகாய் மயிலிறகாய்…
வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…

ஆண் : வருடுகிறாய் மெல்ல…

பெண் : வருடுகிறாய் மெல்ல…


Notes : Mayiliragae Song Lyrics in Tamil. This Song from Anbe Aaruyire (2005). Song Lyrics penned by Vaali. மயிலிறகே பாடல் வரிகள்.


டிங் டாங் கோவில் மணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மது பாலகிருஷ்ணன் & மதுஸ்ரீவித்யாசாகர்ஜி

Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil


BGM

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

ஆண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

பெண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

ஆண் : டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

பெண் : சொல்லாத காதல் சொல்ல…
சொல்லாகி வந்தேன்…
நீ பேச இது நீ பேச…

ஆண் : சொல் ஏது இனி நான் பேச…

பெண் : கனவுகளே கனவுகளே…
பகல் இரவு நீள்கிறதே…

ஆண் : இதயத்திலே உன்நினைவு…
இரவுபகல் ஆள்கிறதே…

பெண் : சற்று முன்பு நிலவரம்…
எந்தன் நெஞ்சில் கலவரம்… கலவரம்…

ஆண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

பெண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

BGM

ஆண் : புல் தூங்கும் பூவும் தூங்கும்…
புதுக்காற்றும் தூங்கும்…
தூங்காதே நம் கண்கள்தான்…

பெண் : ஏங்காதே இந்த காதல்தான்…

ஆண் : பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை…
பிடிக்கிறது உன் முகம்தான்…

பெண் : இனிக்கும் இசை இனிக்கவில்லை…
இனிக்கிறது உன் பெயர்தான்…

ஆண் : எழுதி வைத்த சித்திரம்…
எந்தன் நெஞ்சில் பத்திரம் பத்திரம்…

பெண் : ஆஆ… டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…

ஆண் : உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…

பெண் : நீ கேட்டது ஆசையின் எதிரொலி…

ஆண் : ஆஆ… நீ தந்தது காதலின் உயிர்வலி…

BGM


Notes : Ding Dong Kovil Mani Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Pa Vijay. டிங் டாங் கோவில் மணி பாடல் வரிகள்.


நெஞ்சம் எனும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கல்பனா & ஸ்ரீனிவாஸ்தேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Nenjam Ennum Song Lyrics in Tamil


BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

பெண் : வாழ்க்கை எனும் வானத்திலே…
மனசு எனும் மேகத்திலே…
ஆசை எனும் மழையினிலே…
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே…

ஆண் : நான் தனியாய் தனியாய் இருந்தேனே…
நீ துணையாய் துணையாய் வந்தாயே…
இன்று இதமாய் இதமாய் தொலைந்தேனே…
காதலே…

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

பெண் : ஹே… காத்துல ஏணி வச்சு…
உன் மூச்சுல இறங்கிடுவேன்…

ஆண் : நெருப்புல வீடு கட்டி…
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்…

பெண் : ஆஹா… பேனா எடுத்தா தானா கைகள்…
உன் பேரத்தான் எழுதியதே…

ஆண் : கோயில பாத்தா தானா கைகள்…
உனக்காகத்தான் கும்பிடுதே…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

BGM

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…

ஆண்: இந்த ரெண்டு பேருக்குள்ளேயும்…
டச்சிங்க் டச்சிங்க்…
அட எனிடைம் எனிவேர்…
கிஸ்ஸிங் கிஸ்ஸிங்…

BGM

பெண் : கண்ணுல கயுரு கட்டி…
உன் உருவத்த புடிச்சிக்குவேன்…

ஆண் : மண்ணுல நான் விழுந்து…
உன் நிழலையும் ஏந்திக்குவேன்…

பெண் : மழை வரும் போது நீ வந்து ஒதுங்க…
கூந்தல விரிச்சு குடை புடிப்பேன்…

ஆண் : நீ அழ வேண்டாம் இந்திய நாட்டில்…
வெங்காயத்தை தடை விதிப்பேன்…

BGM

ஆண் : நெஞ்சம் எனும் ஊரினிலே…
காதல் எனும் தெருவினிலே…
கனவு எனும் வாசலிலே…
என்னை கட்டி கொள்ள வந்தாயே…

ஆண் : பி.ஓ.ஒய். பாய் பாயின்னா பையன்…
கேர்ள் கேர்ள் கேர்ள்னா பொண்ணு…
திஸ் கேர்ள் இஸ் சோ ஹாட்…
தட் வில் மேக் ஹிம் கிரேசி…
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக்…
சோ டேக் இட் ஈசி…


Notes : Nenjam Ennum Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. நெஞ்சம் எனும் பாடல் வரிகள்.


பாக்காத என்ன பாக்காத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுமங்கலி & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

ஆண் : கொடுத்தத திருப்பி நீ கேட்க…
காதலும் கடனுமில்ல…
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள…
நடப்பது கூத்துமில்ல…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

ஆண் : வேணா வேணாணு நான் இருந்தேன்…
நீதானே என்ன இழுத்துவிட்ட…
போடி போடின்னு நான் துரத்த…
வம்புல நீதானே மாட்டிவிட்ட…

ஆண் : நல்லா இருந்த என் மனச…
நாராக கிழிச்சிப்புட்ட…
கறுப்பா இருந்த என் இரவ…
கலரா மாத்திப்புட்ட…

ஆண் : என்னுடன் நடந்த என் நிழல…
தனியா நடக்கவிட்ட…
உள்ள இருந்த என் உசுர…
வெளிய மிதக்கவிட்ட…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

பெண் : வேணா வேணாண்ணு நினைக்கலையே…
நானும் உன்ன வெறுக்கலையே…
காணும் காணும்ணு நீ தேட…
காதல் ஒன்னும் தொலையலையே…

பெண் : ஒன்னா இருந்த ஞாபகத்த…
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்…
தனியா இருக்கும் வலிய மட்டும்…
தனியா அனுபவிச்சேன்…

பெண் : பறவையின் சிறகுகள் விரிஞ்சால்தான்…
வானத்தில் அது பறக்கும்…
காத்திருந்தால்தான் இருவருக்கும்…
காதல் அதிகரிக்கும்…

பெண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

பெண் : கொடுத்தத திருப்பி நான் கேட்க…
கடனா கொடுக்கலையே…
உனக்குள்ளதானே நான் இருக்கேன்…
உனக்கது புரியலையே…

BGM


Notes : Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. பாக்காத என்ன பாக்காத பாடல் வரிகள்.


மேற்கே மேற்கே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசாதனா சர்கம் & சங்கர் மகாதேவன்யுவன் சங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Merke Merke Song Lyrics in Tamil


BGM

ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லாஹிலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…

பெண் : சுடும் வெயில் கோடைக்காலம்…
கடும் பனி வாடைக்காலம்…
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா…

பெண் : இலையுதிர் காலம் தீர்ந்து…
எழுந்திடும் மண்ணின் வாசம்…
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே…

ஆண் : ஓ… மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத்தானோ…

ஆண் : லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…

BGM

ஆண் : கோபம் கொள்ளும் நேரம்…
வானம் எல்லாம் மேகம்…
காணாமலே போகும் ஒரே நிலா… ஓ…
கோபம் தீரும் நேரம்…
மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய் தோன்றும் அதே நிலா…

பெண் : இனி எதிரிகள் என்றே எவருமில்லை…
பூக்களை விரும்பா வேர்களில்லை…
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே…
இது நீரின் தோளில் கைபோடும்…
ஒரு சின்னத் தீயின் கதையாகும்…
திரைகள் இனிமேல் தேவையில்லையே…

ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
லாஹி லாஹி லைலைலே…

BGM

ஆண் : வாசல் கதவை யாரோ…
தட்டும் ஓசை கேட்டால்…
நீதான் என்று பார்த்தேன் அடி சகி…
பெண்கள் கூட்டம் வந்தால்…
எங்கே நீயும் என்றே…
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி…

பெண் : இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ…
காற்றே சிறகாய் விரிந்திடுமோ…
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ…
அட தேவைகள் இல்லை என்றாலும்…
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்…
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ…

ஆண் : மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
சூரியன்கள் உதித்திடுமே…
மின்னலும் மின்னலும்…
நேற்று வரை பிரிந்தது ஏனோ…
பின்னலாய் பின்னலாய்…
இன்றுடன் பிணைந்திடத் தானோ…

BGM


Notes : Merke Merke Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. மேற்கே மேற்கே பாடல் வரிகள்.