பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | கங்கா & ஹரிஷ் ராகவேந்திரா | தேவா | தேவதையை கண்டேன் |
Azhage Bramhanidam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…
ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…
பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…
ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
—BGM—
ஆண் : உன்னை நான் சுமப்பதினால்…
இதயமும் கருவறைதான்…
மனதால் நானும் அன்னையே…
மறவேன் என்றும் உன்னையே…
பெண் : நான் பாலைவனத்தின் விதை போல்…
நீ பருவம் தந்த மழை போல்…
என் காதல் செடியில் பூவும் பூத்ததே…
ஆண் : உன் விழி திறந்திருந்தால்…
விடியலே தேவை இல்லை…
பெண் : உன்னை நான் துறந்திருந்தால்…
உயிர் அது சொந்தம் இல்லை…
ஆண் : இத்தனையும் இனி கிடைக்குமா…
பெண் : கிடைக்கும் கிடைக்கும்…
நான் கூட சொல்கிறேன்…
ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
—BGM—
ஆண் : ஏன் இந்த பிறவி என்று…
இது வரை நினைத்திருந்தேன்…
உயிரே உன்னை பார்த்ததும்…
உலகே புதியதானதே…
பெண் : என்னை படைத்த அந்த தெய்வம்…
என்னைசுமந்த அன்னை தெய்வம்…
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்…
ஆண் : பருவங்கள் ஓடி போகும்…
உருவங்கள் மாறி போகும்…
பெண் : உன் மீது கொண்ட காதல்…
உயிரையும் தாண்டி வாழும்…
ஆண் : சொன்னதெல்லாம் இனி நடக்குமா…
பெண் : நடக்கும் நடக்கும் நான்…
கூட சொல்கிறேன்…
ஆண் : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்…
நீ என் மனைவியாக வேண்டும் என்று…
ஆண் : ஆண்டு பல காத்திருக்க வேண்டும்…
என்று அவன் சொன்னான்…
ஆயுள் வரை காத்திருப்பேன்…
என்று நானும் சொல்லி வந்தேன்…
ஆண் : என் ஆசை நிறைவேறுமா…
என் தோழி நீயும் சொல்லம்மா…
பெண் : நடக்கும் நடக்கும்…
நான் கூட சொல்கிறேன்…
—BGM—
Notes : Azhage Bramhanidam Song Lyrics in Tamil. This Song from Devathayai Kanden (2005). Song Lyrics penned by . அழகே பிரம்மனிடம் பாடல் வரிகள்.